Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விடுதலைப் புலிகளும் அரசும் மீண்டும் பேச்சு வார்தைக்கு.......

Featured Replies

புலிகள் பேச்சுவார்த்தைக்கு வருவார்கள்; நார்வே நம்பிக்கை

20060420134129norwaytigers203.jpg

தமிழ்ச் செல்வனுடன் ஜான் ஹான்சன் பவர்

விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தமிழ்ச்செல்வனிடமிருந்து எங்களுக்குக் கிடைத்த தகவல் மற்றும் அவர் செவ்வாய்க்கிழமை ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு தெரிவித்த தகவல் எல்லாமே அவர்கள் பேச்சுவார்த்தைக்கு வரத் தயாராக இருக்கிறார்கள் என்ற ஒரே விஷயத்தைத் தெளிவுபடுத்துவதாக இலங்கை சமாதான நடைமுறைகளுக்கான நார்வே நாட்டின் சிறப்புத் தூதர் ஜான் ஹான்சன் பவர் தெரிவித்தார்.

அதே சமயம் புலிகள் அரசு தனது தாக்குதலை நிறுத்தினால் இந்தப் பேச்சுவார்த்தைகள் நடத்துவது எளிதாக இருக்கும் என்றார்கள், ஆனால் வேறு எந்த நிபந்தனைகளையும் விதிக்கவில்லை என்று அவர் கூறினார்.

ஆனால், அரசு இன்று விடுதலைப்புலிகள் தலைவரிடமிருந்து ஒரு முழுமையான, சரிபார்க்கக்கூடிய மோதல் நிறுத்தம் குறித்த அறிவிப்பை தாங்கள் எதிர்பார்ப்பதாக கூறுகிறதே இது குறித்து என்ன கூறுகிறீர்கள் என்று கேட்டதற்கு பதிலளித்த பவர், இந்த அறிக்கையைப் தானும் படித்தாகவும், இப்போது நாங்கள் இந்தப் பேச்சுவார்த்தைகளை ஏற்பாடு செய்வதில் முதல் கட்டத்தில் இருக்கிறோம். அடுத்த கட்டத்தில் என்ன நடக்கும் என்பதைப் பற்றி சொல்வது இப்போது பொருத்தமாக இருக்காது என்று அவர் தெரிவித்தார்.

______________________________________________

பேச்சுவார்த்தைக்கு தயார் என இலங்கை அரசு அறிவிப்பு

20060423134729palitha-kohona.jpg

கலாநிதி பாலித கொஹன்ன

விடுதலைப் புலிகள் சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்கு வருவதானால் நாங்களும் பேசத் தயார் என்று இலங்கை அரசு தொடர்ந்து கூறி வந்துள்ளது என்று தெரிவித்த இலங்கை சமாதானச் செயலகத்தின் செயலாளர் நாயகம் கலாநிதி பாலித கோஹன்ன, அதே சமயத்தில் விடுதலைப் புலிகள் முன்பு செய்தது போல போர் நிறுத்த சூழலை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி தங்கள் ஆயுத பலத்தையும் ஆள் பலத்தையும் அதிகரிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட மாட்டார்கள் என்றும் தாங்கள் நம்புவதாகத் தெரிவித்தார்.

விடுதலைப் புலிகள் நாட்டில் உள்ள பிரச்சனைகளை தீர்க்க வேண்டும் என்ற ஒரு உண்மையாக நோக்குடன் பேச்சுவார்த்தைகளுக்கு வருவார்கள் என்று இலங்கை அரசு நம்புவதாக அவர் குறிப்பிட்டார்.

பேச்சுவார்த்தைகளுக்கு நிபந்தனைகள் ஏதும் விதிக்கப்படவில்லை என்று கூறிய கொஹன்ன, பேச்சுவார்த்தைக்கான இடம் குறித்த இறுதி முடிவு இன்னமும் எடுக்கப்படவில்லை என்றார்.

- பீபீசீ தமிழ்

http://www.bbc.co.uk/tamil/news/story/2004...ntaffairs.shtml

எதைப் பற்றி பேசப்போகின்றார்கள் அஜீவன் :):(:(

-எல்லாள மஹாராஜா-

  • தொடங்கியவர்

எதைப் பற்றி பேசப்போகின்றார்கள் அஜீவன் :D:):lol:

-எல்லாள மஹாராஜா-

நோர்வேக்கு போய் என்ன பேசுறது எண்டு எல்லாரும்

இப்ப பேசிக் கொண்டிருக்கிறாங்க.

பேசி முடிச்சதும் சொல்வாங்க..........! :shock:

அப்ப சொல்றன் எல்லாளன். :P

இப்பிடி எழுதும் போது

முன்ன நடந்த ஒரு நிகழ்வு நினைவலைக்கு வருகுது.

அதை பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைக்கிறன்.

சுவிஸில பேச்சு வார்த்தைக்கு

இரண்டு பகுதியும் வரப் போறாங்க என்ற போது

ஏதோ ஒரு நல்ல முடிவு வரும் போல தெரியுது என்று என் நண்பனிடம் சொன்னேன்.

"ஐயோ

நீங்க வேற புரியாம பேசுறீங்க அஜீவன்

அவங்க வாரதே பேச்சு வார்த்தையை குழப்புறதுக்கு என்டு உங்களுக்கு தெரியாதே" என்றான்.

நான் நல்லது நடக்கும் என்று வாதாடினேன்.

கடைசியில் அவன் சொன்னதுதான் நடந்தது.

இப்ப கூட என்ன நடக்குமோ தெரியாது?

என்ன இருந்தாலும்

பலமா இருக்கும் போது கேட்டா பலன் இருக்கும்?

  • தொடங்கியவர்

அரசும்புலிகளும் சமாதான பேச்சை ஆரம்பிக்க வேண்டுமென இணைத்தலைமை நாடுகள் ஆலோசனை வழங்கியிருந்தன திகதி இன்னும் தீர்மானிக்கப்படவில்லை என்கிறார் தூதுவர் ஹன்சன் பௌயர்

hansenboyer.jpg

அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் இடையில் விரைவில் பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டுமென்று இணைத்தலைமை நாடுகள் ஆலோசனை வழங்கியிருந்தன. பேச்சுக்கான திகதி, இடம் என்பன குறித்து இன்னமும் முடிவெடுக்கப்படவில்லை என்று நோர்வேயின் விசேட சமாதான தூதுவர் ஹன்சன் பௌயர் தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு செய்தி நிறுவனமொன்றுக்கு வழங்கியுள்ள விசேட செவ்வியிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் அதில் மேலும் கூறுகையில்,

இலங்கைக்கு உதவி வழங்கும் இணைத்தலைமை நாடுகள் நடத்திய கூட்டத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக தமிழீழ விடுதலைப்புலிகளிடமிருந்து தகவல் வந்தது. இருதரப்பினரும் பேச்சு மேசைக்கு வருவதற்குத் தெரிவித்த கருத்துக்களை இணைத்தலைமை நாடுகள் வரவேற்றன. விரைவாக பேச்சுவார்த்தைக்கு இருதரப்பினரும் வரவேண்டும் என்பதையும் அந்நாடுகள் வலியுறுத்தின. புலிகளும் அரசாங்கமும் அனைத்து வன்முறைகளையும் நிறுத்த வேண்டும். ஒஸ்லோவில் விரைவாக முடிந்தால், ஒக்டோபர் முதல் வாரத்தி÷ லயே இருதரப்பினரும் கூடி பேச்சுவார்த்தை நடத்த முடியும் என்றும் இணைத்தலைமை நாடுகள் ஆலோசனைகள் கூறியுள்ளன.

எனினும் பேச்சுவார்த்தை நடத்தப்படும் திகதி, இடம் குறித்து இருதரப்பினரும் சமாதான ஏற்பாட்டாளர்களான நோர்வேயும் உடன்பட வேண்டும். இவை குறித்து இன்னும் முழுமையõக விவாதிக்கப்படவில்லை.

விரைவில் முடிவெடுக்கப்படும் எனவே திகதி மற்றும் இடம்தொடர்பில் இன்னமும் முடிவெடுக்கப்படவில்லை என்பதே சரியானது.

பேச்சுவார்த்தைக்கு தாம் தயார் என்று திரும்பத்திரும்ப அரசாங்கம் கூறிவந்துள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் எவ்வித நிபந்தனைகளும் இன்றி பேச்சுவார்த்தைகளுக்கு வருமாறும் பிரச்சினைகள் யுத்தம் மூலம் அல்லாது பேச்சுமூலம் தீர்க்குமாறும் புலிகளை வலியுறுத்துங்கள் என்று எம்மிடம் (நோர்வேயிடம்) கூறிவந்துள்ளார். பேச்சுவார்த்தைக்கு தயார் என்பதே இலங்கை அரசாங்கத்தின் நீண்டகால நிலைப்பாடாக இருந்துவந்துள்ளது. புலிகள் பேச்சுக்குத் தயார் என்று அறிவித்திருப்பதுதான் இப்போது புதிய விடயம்.

எனவே இதுவொரு சந்தர்ப்பம். இணைத்தலைமை நாடுகள், இருதரப்பினரையும் இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள், நழுவவிடவேண்டாம். பிரச்சினைகளை பேச்சுமூலம் தீர்த்துக்கொள்ளுங்கள் என்று கோரியுள்ளன.

தமிழீழ விடுதலைப்புலிகளிடமிருந்து எமக்குக்கிடைத்த தகவல் மற்றும் சு.ப.தமிழ்ச்செல்வன் ராய்ட்டர் செய்திச்சேவைக்கு வழங்கிய தகவல் அனைத்தும், தாம் பேச்சுவார்த்தைக்கு வரத்தயாராக உள்ளோம் என்பது மட்டும்தான்.

அரசு தாக்குதல்களை நிறுத்தினால் பேச்சுநடத்துவது எளிது என்றும் புலிகள் கூறியுள்ளனர். ஆனால் வேறெந்த நிபந்தனைகளையும் விதிக்கவில்லை என்றார்.

-வீரகேசரி 14.09.2006

  • தொடங்கியவர்

பேச்சுவார்த்தையை ஆரம்பிக்கும் அறிவிப்பை அமைச்சர் கெஹெலிய நிராகரிக்க முடியாது தமிழ் தேசியக் கூட்டமைப்பு

நிபந்தனையற்ற பேச்சுவார்த்தைக்கு இரு தரப்பினரும் இணங்கியுள்ளதாக இணைத்தலைமை நாடுகள் தெரிவித்துள்ளன. இந்நிலையில் இதனை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல நிராகரிக்க முடியாது என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுத்தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார்.

ஒக்டோபர் மாதம் முதல்வாரத்தில் ஒஸ்லோவில் அரசாங்கத்துக்கும் புலிகளுக்குமிடையில் பேச்சுவார்த்தை இடம்பெறும் என்றும் இதற்கு இரு தரப்பினரும் இணங்கியுள்ளதாகவும் நோர்வேயின் அபிவிருத்தி அமைச்சர் எரிக்சொல்ஹெய்ம் தெரிவித்திருந்தார். இதனை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல மறுத்துள்ளதுடன் பேச்சுவார்த்தை குறித்து அரசாங்கத்துடன் கலந்துரையாடாமல் எரிக் சொல்ஹெய்ம் கருத்து தெரிவித்தமை தவறு என்றும் தெரிவித்துள்ளார்.

சென்னையில் தங்கியுள்ள இரா. சம்பந்தனிடம் இது குறித்து கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அரசாங்கமும் விடுதலைப்புலிகளும் நிபந்தனையற்ற பேச்சுக்கு இணங்கியிருப்பதாக இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகளின் இணைத்தலைமைநாடுகளின் பிரதி நிதிகள் தெரிவித்துள்ளமை மகிழ்ச்சிக்குரியது.

ஏனெனில் மேற்படி இருதரப்பினரினதும் சம்மதம் இன்றி அந்த அறிக்கையை அவர்கள் வெளியிட்டிருக்க முடியாது.

வெள்ளை அறிக்கையல்ல

அரசாங்கத்தோடும் புலிகளுடனும் கலந்துரையாடிய பின்னர் தான் நோர்பேயின் சர்வதேச விவகாரங்களுக்கான அமைச்சர் எரிக்செல்ஹெய்ம், ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிவிவகார ஆணையாளர் பெனிட்டோ பெரிரோ, பாலிட்னெர், ஜப்பானிய சிறப்பு தூதுவர் யசூசி அகாசி ஆகியோர் பிரஸல்ஸில் நடைபெற்ற உதவி வழங்கும் நாடுகளின் மாநாட்டின் போது அக்டோபர் மாத முதல் வாரத்தில் பேச்சுக்கள் ஆரம்பமாகும் என்ற நம்பிக்கையை வெளியிட்டிருக்க வேண்டும். வெறுமனே அது வெள்ளை அறிக்கை அல்ல

நிராகரிக்க முடியாது

எனவேதான் அரசாங்கம் அதனை நிராகரிக்க முடியாது. குறிப்பாக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல நோர்வேயை எச்சரிக்கை செய்திருக்கின்றமையானது ஏற்புடையதல்ல. ஆகவே பேச்சுக்கான ஏற்பாடுகளை அரசு மேற்கொள்ள வேண்டும்.

சுரேஷ் பிரேமச் சந்திரன் எம்.பி.

கூட்டமைப்பின் இணைப்பாளரும் யாழ். மாவட்ட எம்.பியுமான சுரேஷ் பிரேமச்சந்திரன் கேசரிக்கு தெரிவித்ததாவது:

இணைத்தலைமை நாடுகளின் அறிக்கையை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தனிப்பட்ட முறையில் நிராகரிக்க முடியாது.

அரசாங்க சமாதான செயலகமே அவ்வாறான கருத்துக்களை வெளியிட வேண்டும். அரசாங்கத்தின் இணக்கப்பõடு இன்றி அவ்வாறான அறிக்கையை இணைத்தலைமை நாடுகள் வெளியிட்டிருக்க முடியாது. ஆகவே அறிக்கை வெளியான பின்னர் நிபந்தனையுடனேயே பேச வேண்டும் அல்லது நோர்வேக்கு அவ்வாறு கூற அதிகாரம் , உரிமை இல்லையென அமைச்சர் கூறுவது யதார்த்தமற்ற செயலாகும்.

- வீரகேசரி 14.09.2006

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.