Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகளின் முதல் பகிரங்க எச்சரிக்கை............

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

'இலங்கை ராணுவம் சம்பூரை விட்டு உடனடியாக வெளியேறவேண்டும். மறுத்தால் அதற்கான விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும்.' _முதல் முறையாக, பகிரங்கமாக இலங்கை அரசை எச்சரித்திருக்கிறார்கள் புலிகள். 'சம்பூரில் ஊடுருவி, அங்குள்ள ஆயிரக்கணக்கான தமிழர்களை வெளியேற்றியது, சந்தேகமேயில்லாமல் அரசு பயங்கரவாதச் செயல்தான்' என்று அழுத்தம் திருத்தமாகக் குற்றம் சாட்டியிருக்கிறார் புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன்.

‘அதெல்லாம் முடியாது, சம்பூரை விட்டுத்தரமாட்டோம்’ என்று இலங்கை அரசு திட்டவட்டமாக மறுத்துவிட்டாலும், உள்ளுக்குள் அவர்களுக்கு ஒரு பயம். திரிகோணமலை எண்ணெய்க் கிணறுகளை புலிகள் குறி வைத்துவிட்டால் என்ன செய்வது?

இந்தப் பயத்தின் பின்னணியை ஆராய்வோம். இரண்டாம் உலகப் போரின்போது, திரிகோணமலையில் உள்ள சீனன்குடா (சிலீவீஸீணீ ஙிணீஹ்) என்னும் பகுதியில், சும்மா இருந்த இடத்தில் பெரிய பெரிய எண்ணெய்க் கிணறுகளை வெட்டி வைத்தது இங்கிலாந்து. போர் முடிவடைந்ததும், தனது கூடாரத்தைக் கலைத்துவிட்டு ஊருக்குப் போய்விட்டது. அப்போதைய இலங்கைக்கு இந்தக் கிணறுகளை வைத்து என்ன செய்வதென்றே தெரியவில்லை. எண்ணெய்க் கிணறுகளும் பயன்படுத்தப்படாமல் நாதியற்று அப்படியே கிடந்தன.

1980_களின் தொடக்கத்தில் உலகக் காவலன், ஆபத்பாந்தவன், அநாதரட்சகன் அமெரிக்காவின் கழுகுப்பார்வையில், திரிகோணமலை கிணறுகள் சிக்கின. சும்மா இருக்குமா அமெரிக்கா? இந்தக் கிணறுகளை வைத்து இரண்டு பெண்டகன் கட்டலாமே என்று கணக்குப் போட ஆரம்பித்துவிட்டது. அமெரிக்கா இலங்கையைக் கண்காணிக்கிறது என்பது தெரிந்ததுமே இந்தியாவும் சுறுசுறுப்பானது. திரிகோணமலையை எப்படியாவது சுவீகாரம் செய்துகொள்ளவேண்டும் என்று இரண்டு நாடுகளும் தனித்தனியாகத் திட்டம் போடத் தொடங்கின. நீயா, நானா போட்டியும் தொடங்கியது.

இலங்கை யோசித்தது. வெட்டியாக இருக்கும் கிணறுகளை அப்படியே வைத்திருப்பதைவிட, நல்ல விலைக்கு விற்றுவிட்டால் காசு பார்க்கலாம் அல்லவா? பேசிப்பார்த்தது. வேண்டும் பணத்தைக் கொடுக்க இந்தியா, அமெரிக்கா இரண்டு நாடுகளுமே தயாராக இருப்பதைக் கண்டுகொண்டது. பூவா தலையா போட்டுப் பார்த்ததா அல்லது உட்கார்ந்து யோசித்து முடிவெடுத்ததா என்று தெரியவில்லை. அமெரிக்க நிறுவனங்கள் இலங்கையில் கால் பதிக்க ஒப்புக்கொண்டன.

இலங்கை அமெரிக்காவுக்குப் பச்சைக் கொடி காட்டியதை இந்தியா விரும்பவில்லை. ‘‘இப்படித் தான்தோன்றித்தனமாக இயங்குவது சரியல்ல’’ என்று நாடாளுமன்றத்தில் பகிரங்கமாக இலங்கையைக் கண்டனம் செய்தார் அப்போதைய இந்தியப் பிரதமர் இந்திராகாந்தி.

இலங்கைக்கு அமெரிக்க ஒட்டகத்தைப் பற்றி அதிகம் தெரிந்திருக்கவில்லை. காதை மட்டும் வைத்துக்கொள்கிறேன் என்று சொல்லும். காதுக்கு இடம் கொடுத்தால், கால் வலிக்கிறது கொஞ்சம் நீட்டிக்கொள்கிறேனே என்று கேட்கும். அதற்கும் தலையை ஆட்டினால் பிறகு அடாவடித்தனமாக மொத்த கூடாரத்தையும் பிடித்துவைத்துக்கொள்ளும்.

‘உள்ளே வராதே’ என்று ஒட்டகத்தைத் தடுக்க முடியாது. ஆனால் ‘அனுமதிக்காதே’ என்று கூடாரத்தை எச்சரிக்கை செய்ய முடியும். அதைத்தான் செய்தது இந்தியா. 1987_ம் ஆண்டு ராஜீவ் காந்தி காலத்தில் இந்திய_இலங்கை ஒப்பந்தம் கையெழுத்தானது. அந்த ஒப்பந்தத்தின் சாராம்சம் இதுதான். ‘திரிகோணமலை துறைமுகத்தை இந்தியாவின் அனுமதியின்றி வேறு எந்த நாடும் பயன்படுத்த முடியாது. ஒட்டகம், குள்ளநரி எது வந்து கேட்டாலும் இந்தியாவைக் கேட்டுக்கொள் எனக்குத் தெரியாது என்று நிர்த்தாட்சண்யமாகச் சொல்லிவிடவேண்டும்.’ 'அப்படியே செய்கிறேன்!' என்று தலையைத் தலையை ஆட்டியது இலங்கை.

சரியாகப் பத்து ஆண்டுகள் கழித்து, 1997_ல் ஒட்டகம் சூட்கேஸோடு இலங்கை வீட்டுக் கதவைத் தட்டியது. கதவைத் திறந்தவுடன் உள்ளே நுழைந்தது. உட்கார்ந்து பேசியது. சகாய விலையில் திரிகோணமலை துறைமுகத்தில் 300 ஏக்கர் நிலத்தை வாங்கிப்போட்டது. விஷயத்தைக் கேள்விப்பட்ட இந்தியா, ‘இனி என்னிடம் பேசாதே’ என்று இலங்கைக்கு டூ விட்டது. இரு நாடுகளுக்கும் 'முறுகல்நிலை' ஏற்பட்டது.

இந்தியாவைச் சமாதானப்படுத்துவதற்கு இலங்கைக்கு அவகாசம் இல்லை. அப்போது புலிகளுக்கும் இலங்கை ராணுவத்துக்கும் ஒரு நாள் விட்டு ஒரு நாள் மோதல்கள் வெடித்துக்கொண்டிருந்தன. ஒரு வழியாக, 2002_ல் புலிகளும் இலங்கை அரசும் போர் நிறுத்த ஒப்பந்தம் செய்துகொண்டன. அதேசமயம், இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் மறைமுகப் போர் தொடங்கியது. இந்தப் போர், திரிகோணமலை எண்ணெய்க் கிணறுகளுக்காக.

இப்போது ஒட்டகத்தின் தேவை விரிவடைந்துவிட்டது. தெற்காசியாவில் அவர்களுக்கு ஒரு பாதுகாப்பான கூடாரம் தேவைப்பட்டது. காரணம், அப்போது அமெரிக்கா, ஆப்கனிஸ்தானில் தீவிரவாதத்துக்கு எதிரான யுத்தத்தை நடத்திக்கொண்டிருந்தது. தளவாடங்களை இறக்கவும் பிற ராணுவத் தேவைகளுக்கும் திரிகோணமலை தோதான இடமாக அவர்களுக்குக் காட்சியளித்தது. தவிரவும், ஆசியாவுக்கும், மத்தியக் கிழக்குக்கும் இடையே கடல்வழிப் போக்குவரத்து ஏற்படுத்தவும் திரிகோணமலைதான் சரியான இடம்.

இந்தியாவின் எதிர்பார்ப்பு வேறு. இந்திய பெட்ரோல் கூட்டு ஸ்தாபனத்துடன் இலங்கை, ஒப்பந்தம் செய்துகொள்ளவேண்டும் என்று இந்தியா இலங்கையை நெருக்கடி செய்துகொண்டிருந்தது.

ஒருமுறை தி.மு.க., அடுத்த முறை அ.தி.மு.க. என்று ஒருவருக்கும் வஞ்சனை செய்யாத தமிழக வாக்காளர்களைப்போல், போன முறை ஒட்டகத்துக்கு வாக்களித்த இலங்கை, இந்த முறை இந்தியாவை ஆதரித்தது. 2003_ம் ஆண்டு பிப்ரவரியில் இலங்கை அரசு, இலங்கை பெட்ரோலிய கூட்டு ஸ்தாபனம், இந்திய பெட்ரோலிய கூட்டு ஸ்தாபனம் மூன்றும் இணைந்து, ஓர் ஒப்பந்தம் செய்துகொண்டது. அப்பாடா என்று நிம்மதிப் பெருமூச்சு விட்டது இந்தியா.

ஆனால், 2005_ம் ஆண்டு பதவியில் அமர்ந்த மகிந்த ராஜபக்சேவுக்கு ஒட்டகத்தைப் பிடித்த அளவுக்கு இந்தியாவைப் பிடிக்கவில்லை. இந்தியாவுக்கு அளிக்கப்பட்ட எண்ணெய்க் கிணறுகளைப் பறித்துக்கொள்ள முயற்சிகள் தொடங்கப்பட்டன. இந்தியாவுக்குக் கொடுக்கவேண்டிய மானியத் தொகையான 78 மில்லியன் டாலரை உடனடியாக நிறுத்தினார். ‘இந்திய எண்ணெய் நிறுவனத்தைக் கைப்பற்றுவோம்’ என்று இலங்கை பெட்ரோலியத்துறை அமைச்சர் ஏ.எச்.எம். பௌசி, இரண்டு மாதங்களுக்கு முன்பு தெரிவித்தார். இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இன்னமும் லடாய் தொடர்ந்துகொண்டிருக்கிறது.

நிற்க. விடுதலைப் புலிகளைத் தீவிரவாத இயக்கமாக அறிவித்து இலங்கை அரசின் மதிப்பை பெற்றுக்கொண்டுள்ளது அமெரிக்க ஒட்டகம். இலங்கை அரசுக்கு ஆதரவளித்து அதன் மூலம் சிங்கள ஆதரவாளர் என்னும் பெயரையும் உள்நாட்டு அதிருப்தியையும் சம்பாதித்துக்கொள்ள விரும்பாத இந்தியா, மௌனம் காக்கிறது.

திரிகோணமலை எண்ணெய்க் கிணறுகளின் பின்புலத்தில் இந்த யுத்தத்தை ஆராயும்போதுதான், நமது பார்வை மேலும் விசாலமாகிறது!

மருதன்

Thanks:Kumudam..............

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.