Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்ப்பாணத்திலிருந்து புறப்பட்ட கப்பல் பயணிகள் பட்ட அவலம்

Featured Replies

யாழ்ப்பாணத்திலிருந்து திருகோணமலைக்கு கப்பலில் புறப்பட்ட பயணிகள் திருகோணமலை துறைமுகத்திலிருந்து கொழும்பு, வவுனியா போன்ற இடங்களுக்குச் செல்லும்போது இடைவழியில் பெரும் அவலங்களையும் மிரட்டல்களையும் எதிர்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது. பயணிகள் இது தொடர்பில் கூறியதாவது: வியாழக்கிழமை அதிகாலை காங்கேசன்துறை துறைமுகத்திலிருந்து புறப்பட்ட நாம் 3.45 மணியளவில் திருகோணமலை துறைமுகத்தைச் சென்றடைந்தோம். பின்னர் 5.30 மணிக்கு துறைமுகத்திலிருந்து வெளியேற நாம் அனுமதிக்கப்பட்டோம். திருமலை துறைமுகத்தில் எம்மைச் சந்தித்த பாதுகாப்புத் தரப்பினர் நீங்கள் பயணம் செய்யவேண்டிய பஸ்கள் தயாராக உள்ளன. அனைத்துப் பஸ்களிலும் பாதுகாப்புப் படையினரால் உறுதிப்படுத்தப்பட்ட ஸ்ரிக்கர்கள் ஒட்டப்பட்டுள்ளன. பயணிகள் எங்கும் இறக்கப்படவோ சோதனை செய்யப்படவோ மாட்டார்கள் என உறுதிமொழி வழங்கினர். எனினும், ஹபரண வரையே பாதுகாப்பு வழங்கப்பட்டது. இதன் காரணமாக அச்சத்தின் மத்தியிலேயே சிறுவர்கள், பெண்கள் உள்ளிட்ட அனைவரும் பயணம் செய்ய வேண்டியேற்பட்டது. இதன் பின்னர் சாரதிகள், நடத்துநர்கள் தாங்கள் நினைத்தபடி செயற்பட ஆரம்பித்தனர்.

ஹபரணையில் வைத்து வவுனியா செல்லும் பயணிகள் அனைவரும் தலா 450 ரூபா வீதம் வழங்குமாறு பஸ் நடத்துநர் கோரினார். வேறு வழியின்றி அனைவரும் 450 ரூபா வீதம் கொடுத்தே பயணத்தைத் தொடர்ந்தோம். தொடர்ந்து வவுனியா மதவாச்சி வரை வந்த பஸ் மதவாச்சி பொலிஸ் நிலையத்துக்கு அண்மையில் நிறுத்தப்பட்டது. மதவாச்சிக்கு அப்பால் பஸ் செல்லாது எனவும், வேறு பஸ்களிலேயே பயணிகள் செல்லவேண்டுமெனவும் நடத்துநர் தெரிவித்தார். இது தொடர்பாக மதவாச்சி பொலிஸ் நிலையத்தில் பயணிகளாகிய நாம் முறைப்பாடு செய்தபோதும், மதவாச்சிக்கு அப்பால் பாதுகாப்பு இல்லையென பொலிஸார் தெரிவித்தனர்.

வேறு வழியின்றி மதவாச்சி பஸ் நிலையத்தில் வவுனியா, மன்னார் செல்ல வேண்டிய பயணிகள் அனைவரும் காத்திருந்தோம். அந்தவேளை, மோட்டார் சைக்கிளொன்றில் வந்த இரண்டு இளைஞர்கள் எம்மை அச்சுறுத்தும் பாணியில் நடந்து கொண்டனர். மேலும், சிலரது அடையாள அட்டைகளையும் அவர்கள் பரிசோதித்தனர். இதனால் பயணிகள் அனைவரும் அச்சமடைந்த நிலையில் காணப்பட்டனர்.

பின்னர் பொலிஸார் வரவே அவர்கள் அங்கிருந்து சென்றுவிட்டனர். இந்த நிலையில், அவ்வீதியூடாக கொழும்பிலிருந்து வந்த பஸ் ஒன்றில் ஏறி வவுனியா நோக்கிப் பயணம் செய்தோம். வவுனியா ஈரற்பெரிய குளத்தில் அனைத்துப் பயணிகளும் இறக்கப்பட்டு படையினரால் தீவிர சோதனைக்குட்படுத்தப்பட்டனர். 3.45 மணிவரை இந்த சோதனை இடம்பெற்றது. இதன் பின்னரே அனைவரும் ஒருவாறு சொந்த இடங்களுச்குச் செல்ல முடிந்தது. இதுபோலவே ஏனைய இடங்களுச்குச் சென்ற பயணிகளும் பல்வேறு இன்னல்களை அனுபவித்தனர்.

http://nitharsanam.com/?art=20372

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.