Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொள்ளாச்சியில் விடுதிக்குள் புகுந்து 2 மாணவிகள் பாலியல் பலாத்காரம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கோவை: பொள்ளாச்சியில் பள்ளி விடுதி ஒன்றில் தங்கி படித்து வந்த இரண்டு மாணவிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ள சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம், பொள்ளாச்சி பேருந்து நிலையம் அருகே டி.இ.எல்.சி. தேவாலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் சார்பில் விடுதி ஒன்றும் ஆலய வளாகத்தில் செயல்பட்டு வருகிறது. இதில், 3 மாணவிகள் உட்பட 20 மாணவர்கள் தங்கி இருக்கின்றனர். மலை வாழ் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களாகிய இவர்கள் ஆதரவற்ற நிலையில் இங்கு தங்கி, அரசு பள்ளிகளில் படித்து வருகின்றனர்.

நேற்று வழக்கம் போல் இரவு மாணவர்கள் அனைவரும் படித்து முடிந்ததும் தூங்கச் சென்று விட்டனர். இரவு திடீரென மாணவிகளின் அலறல் சத்தம் கேட்டிருக்கிறது. உடனே விடுதியில் சோதனை செய்யப்பட்டதில் மாணவிகள் இருவர் காணாமல் போயிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே அந்த மாணவிகளை தேடி பார்த்தபோது, விடுதிக்கு அருகில் இருந்த கட்டடத்தின் மேல் தளத்தில் மாணவிகள் இருவரும் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு,  ரத்தம் பெருமளவு வெளியேறிய நிலையில்  அங்கு மயங்கி கிடந்துள்ளனர்.

இதையடுத்து, அந்த இரண்டு மாணவிகளும் சிகிச்சைக்காக உடனே பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.  இரண்டு மாணவிகளையும் பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர்கள் இருவரும் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருப்பதை உறுதி செய்து அந்த மாணவிகளுக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்தது யார் என்பது உறுதிப்படுத்தப்படாத நிலையில், போலீசார், விடுதிக்கு அருகில் உள்ள ஓட்டலில் வேலை பார்த்து வரும் குரு என்பவர் மீது சந்தேகம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல், விடுதியில் உள்ளவர்கள் யாராவது இதுபோல் செய்திருக்க கூடும் என்றும் அவர்கள் சந்தேகித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தனியார் பள்ளி விடுதியில் தங்கியிருந்த 2 பள்ளி மாணவிகள் நள்ளிரவில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பொள்ளாச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

துணை கலெக்டர், காவல்துறை அதிகாரிகள் விசாரணை

இதனிடையே விடுதியில் தங்கியிருந்த மாணவிகள் 2 பேர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட தகவல் அறிந்ததும் பொள்ளாச்சி துணை கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே, இன்று காலை 9.30 மணி அளவில் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு  சென்றார்.

குழந்தைகள் சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட 2 மாணவிகளுக்கும் அவர் ஆறுதல் கூறிய அவர்,  மாணவி களின் நிலைமையைப்பார்த்து அப்படியே மயங்கி விழுந்தார். உடனடியாக அங்கு நின்று கொண்டிருந்த டாக்டர்கள் அவரை ஆசுவாசப்படுத்தினர். அதன் பின்னர் அவர் நடந்த சம்பவம் குறித்து கேட்டறிந்தார்.

பின்னர் அவர் மருத்துவர்களிடம் 2 மாணவிகளுக்கும் உரிய சிகிச்சை அளிக்குமாறு கேட்டுக்கொண்டார்.  அதைத்தொடர்ந்து மேற்கு மண்டல ஐ.ஜி டேவிட்சன் தேவாசீர்வாதம், கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுதாகர், மாவட்ட கல்வித் துறை அதிகாரி ஆகியோரும்  மாணவிகளிடம் விசாரித்து, உரிய சிகிச்சை அளிக்குமாறு மருத்துவர்களை கேட்டுக்கொண்டனர்.

ச.ஜெ.ரவி

 

http://news.vikatan.com/article.php?module=news&aid=28922

  • கருத்துக்கள உறவுகள்

பள்ளிக்குள் நுழைந்து செய்ய முடியும் என்றால் என்ன நிர்வாகம் நடக்கிறது அங்கு?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.