Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'போலி பாஸ்போர்ட்' தயாரித்து புலிகளை தப்ப வைத்த கும்பல் கைது: மத்திய குற்றப்பிரிவு போலீசார் அதிரடி

Featured Replies

Tamil_News_large_100541220140624021324.j

 

சென்னை: போலி பாஸ்போர்ட் தயாரித்து, விடுதலை புலிகள் உள்ளிட்ட இலங்கை தமிழர்களை, பல நாடுகளுக்கு தப்ப வைத்து, பல கோடி ரூபாய் சம்பாதித்த கும்பலை, மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

இலங்கையை சேர்ந்தவர்கள், சென்னையில் போலி பாஸ்போர்ட் தயாரித்து, மோசடியில் ஈடுபடுவதாக, போலீஸ் கமிஷனர் ஜார்ஜுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதுபற்றி விசாரிக்குமாறு, மத்திய குற்றப்பிரிவுக்கு உத்தரவிட்டார். துணை போலீஸ் கமிஷனர் ஜெயகுமார் தலைமையில், ஐந்துக்கும் மேற்பட்டோர் அடங்கிய தனிப்படையினர் விசாரணையை துவக்கினர். போலி பாஸ்போர்ட் கும்பலை சேர்ந்த ராஜன், 42, என்பவர், சென்னை, ஆலப்பாக்கம், பாக்யலட்சுமி நகரில் பதுங்கியிருப்பது தெரிய வந்தது. ராஜனை, வாடிக்கையாளர் போர்வையில், போலீசார் அணுகினர். போலீசாரிடம் அவர், 30 ஆயிரம் ரூபாய் கொடுத்தால், போலி பாஸ்போர்ட் தயாரித்து தருவதாக தெரிவித்து உள்ளார். அவர் குறிப்பிட்ட இடத்தில், நேற்று முன்தினம், பணத்துடன் போலீசார் காத்து இருந்தனர். அவர் வந்த உடன், சுற்றி வளைத்து கைது செய்தனர்.

 

சிக்கினான் தலைவன்:

 

அவர் கொடுத்த தகவலின் பேரில், சென்னையில், மதுரவாயல், ஆலப்பாக்கம் என, பல இடங்களில் பதுங்கி இருந்த, இக்கும்பல் தலைவன் மூர்த்தி என்ற கிருஷ்ணமூர்த்தி, தேவசகாயம் பேட்ரிக் ஸ்ரீதர், 48, ஜெயராஜசேகரன் என்ற ஜூலி, சிவரங்கன், 55, புரசை வாக்கத்தைச் சேர்ந்த முகமது அபுபக்கர் சித்திக், 29, ஆகியோரையும், போலீசார் கைது செய்தனர்.

 

கம்ப்யூட்டர் கில்லாடி:

 

இதில், கிருஷ்ணமூர்த்தி, பிளஸ் 2 வரை படித்து உள்ளார். கம்ப்யூட்டரை கையாளுவதில் கில்லாடி. கம்ப்யூட்டர் பொறியாளர் ஜூலியின் நட்பு கிடைத்ததும், 2002ல், போலி பாஸ்போர்ட் தயாரிப்பு தொழிலில் இறங்கினார். மற்றவர்கள், ரகசியமாக ஆட்களை தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

 

போலியே மூலதனம்:

 

இந்த கும்பல், பயன்படுத்தப்படாத, காலாவதி என, குப்பையில் வீசப்பட்ட பாஸ்போர்ட்டுகள் கிடைத்தால், அதை அப்படியே பத்திரப்படுத்திக் கொள்வர். மேலும், வெளிநாடு வேலைக்கு என, சென்னைக்கு அழைத்து வந்து, டிராவல்ஸ் ஏஜன்ட்களால் நடுத்தெருவில் விடப்பட்டவர்களின் பாஸ்போர்ட்களை, குறைந்த விலைக்கு வாங்கி கொள்வர். பின், அந்த பாஸ்போர்ட்டில், இலங்கையில் கிடைக்கும், பல்வேறு நாடுகளுக்கான போலி விசாவை, குறிப்பிட்ட நபர் செல்ல இருக்கும் நாட்டின், அசல் விசா போல் தயாரித்து இணைத்து விடுவர். அதன் உட்பகுதியில், சம்பந்தப்பட்டவர், பலமுறை அந்த நாட்டிற்கு சென்று வந்தது போல் முத்திரை பதித்து, அதை வைத்து, அசல் விசாவும் வாங்கி விடுவர். விமான நிலையங்களில், தங்கள் ஆதரவு குடியுரிமை அதிகாரிகள் பணியில் இருக்கும் போது, அந்த நபரை வெளிநாட்டிற்கு அனுப்பி விடுவர். அதற்கு அவர்கள், ஒரு போலி பாஸ்போர்ட் தயாரிக்க, 30 ஆயிரம் ரூபாய்; விசா பெற்று தர, நான்கு லட்சம் ரூபாய் வரை வசூலித்து உள்ளனர். இப்படியே அவர்கள் சுருட்டிய தொகை, பல கோடி ரூபாய் தொடும்.

 

விடுதலை புலிகள்:

 

அவ்வாறு அனுப்பி வைக்கப்பட்டவர்கள், 92 சதவீதம் பேர், இலங்கை தமிழர்கள். இலங்கையில், 2009ல், போர் உச்சத்தில் இருந்த போது, ஏராளமானோரை இவர்கள் தப்பிக்க வைத்துள்ளனர். அதில், விடுதலைப்புலிகளே அதிகம் என, கூறப்படுகிறது.

ஐரோப்பிய நாடுகள்: ஐரோப்பிய யூனியனில், 26 நாடுகள் இடம் பெற்றுள்ளன. இந்த நாடுகளுக்கு செல்லும் போது, தனித்தனியாக விசா எடுக்க வேண்டியதில்லை. ஒரே ஒரு விசா பெற்றால், அதை வைத்து கொண்டு, மற்ற ஐரோப்பிய நாடுகளுக்கும் சென்று விடலாம். சுற்றுலாவை மேம்படுத்த, இந்த திட்டம் கொண்டு வரப்பட்டு உள்ளது. இவ்வகை விசாவுக்கு, 'செங்கன் விசா' என்று பெயரிடப்பட்டு உள்ளது. சென்னையில் செயல்பட்ட கும்பல், போலி, 'செங்கன் விசா'வை தான், அதிகமாக தயாரித்து உள்ளது. இத்துடன், மலேசியா, சிங்கப்பூர், கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் அரபு நாடுகளுக்கும், இந்த கும்பல் ஆட்களை அனுப்பி வைத்துள்ளது. இந்த கும்பலிடம் இருந்து, 110 போலி பாஸ்போர்ட்கள், விசா, கம்ப்யூட்டர், பல நாட்டு குடியுரிமை முத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.

 

பழைய குற்றவாளிகள்:

 

கைது செய்யப்பட்டுள்ள மூர்த்தி என்ற கிருஷ்ணமூர்த்தியை, கடந்த, 2003 மற்றும் 2005ல், போலி பாஸ்போர்ட் தயாரித்ததாக, மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். அதுபோல், இதே குற்றத்திற்காக, தேவசகாயம் பேட்ரிக் ஸ்ரீதரையும், 2006ல், சி.பி.ஐ., கைது செய்துள்ளது. கிரெடிட் கார்டு மோசடியில், ஜூலி ஏற்கனவே கைது செய்யப்பட்டு உள்ளார்.

 

சான்றிதழும் தயாரிப்பு:

 

போலி மதிப்பெண் மற்றும் பட்டப் படிப்பு சான்றிதழ் தயாரிப்பையும், விட்டு வைக்கவில்லை. சில நாடுகளில், விசாவிற்கு விண்ணப்பிக்கும் போது, புகைப் படத்தில், 'டை' கட்டி இருந்தால் தான் விசா கிடைக்கும். சாதரணமாக எடுக்கப்பட்ட புகைப்படத்திற்கு, கிருஷ்ணமூர்த்தி, கோட் சூட் அணிவிக்கும் தொழில்நுட்பத்திலும் வல்லவர். அவர் தான், சான்றிதழ்கள் தயாரித்தும், பல லட்சங்களை குவித்து உள்ளார்.

 

யார் யார், எங்கு எங்கு:

 

இந்த கும்பலிடம் போலி பாஸ்போர்ட் பெற்றவர்கள், எந்த நாடுகளில் பதுங்கி உள்ளனர் என்ற தகவல் திரட்டப்படுகிறது. இந்த மோசடி கும்பலுக்கு உதவிய, குடியுரிமை அதிகாரிகள் பட்டியலும் தயாரிக்கப்பட்டு வருகிறது. குற்றம் நிருபணமானால், அவர்களை கைது செய்யவும், போலீசார் முடிவு செய்து உள்ளனர்.

 

http://www.dinamalar.com/news_detail.asp?id=1005412

கொத்தி கருணா அம்மானை பொம்பிளை பாஸ்போர்டில் இங்கிலாந்து அனுப்பினார்.

கொத்திக்கும் இந்த கும்பலுக்கும் தொடர்பு கட்டாயம் இருக்கும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.