Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜே.என்.டிக்சிட் போல் செயற்பட்டால் மீண்டும் பிரச்சனை ஏற்படும்

Featured Replies

ஜே.என்.டிக்சிட் போல் செயற்பட்டால் மீண்டும் பிரச்சனை ஏற்படும்: இந்தியாவுக்கு அனுரா எச்சரிக்கை

[திங்கட்கிழமை, 18 செப்ரெம்பர் 2006, 05:36 ஈழம்] [ம.சேரமான்]

ராஜீவ் ஆட்சிக்காலத்தில் சிறிலங்காவுக்கான முன்னால் இந்தியத் தூதுவராக இருந்த ஜே.என்.டிக்சிட் போல் இந்தியத் தூதுவர்கள் செயற்பட்டால் சிறிலங்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையே மீண்டும் பிரச்சனை ஏற்படும் என்று சிறிலங்கா சுற்றுலாத்துறை அமைச்சர் அனுரா பண்டாரநாயக்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் அவர் கூறியுள்ளதாவது:

தேசிய அரசாங்கம் அமைக்கப்பட வேண்டும் என்று 1980-களிலிருந்தே குரல் கொடுத்து வருகிறேன். தேசிய அரசாங்கம் அமைக்கப்படும் போது இனப்பிரச்சனை, வாழ்க்கைச் செலவீனப் பிரச்சனை உள்ளிட்டவைகளுக்கு முகம் கொடுக்கலாம்.

யாழ்ப்பாணத்தை எனது சகோதரி சந்திரிகா கைப்பற்றிய பின்னர் விடுதலைப் புலிகள் இல்லாமல் போய்விடவில்லை. சம்பூரைக் கைப்பற்றிய பிறகும் விடுதலைப் புலிகள் இல்லாமல் இல்லை.

உலகத்திலே மிகவும் அர்ப்பணிப்புடன் இயங்கக் கூடிய தீவிரவாதிகள் விடுதலைப் புலிகள்.

பயங்கரவாதப் பிரச்சனையை அணுகும்போது தமிழர்களின் பிரச்சனையையும் பார்க்க வேண்டும். பயங்கரவாதம் நிறுத்தப்பட்டு விட்டாலும் ஒரு கூட்டரசுக்குள் தீர்வு அளிக்கப்பட வேண்டும். இதைத்தான் 1938 ஆம் ஆண்டே எனது தந்தையார் வலியுறுத்தினார். அவர்தான் பண்டா-செல்வா என்று முதலாவது ஒப்பந்தத்தை ஏற்படுத்தினார். ஆனால் அதன் பின்னர் இருதரப்பினரும் அரசியல் லாபங்களுக்காக விளையாட்டுகளை நடத்தினர்.

இது இப்போதும் நிறுத்தப்பட வேண்டும். அதற்கு நாம் பாரிய விலை கொடுக்க நேரிடும். இராணுவமும் புலிகளும் மக்களை இழக்க நேரிடும். விடுதலைப் புலிகளால் மரணத்தை ஏற்படுத்துகிற தன்மை குறித்து குறைத்து மதிப்பிடமுடியாது. அவர்கள் எதனையும் எந்த நேரத்திலும் செய்யக் கூடிய வலிமை உள்ளவர்கள்.

அதிகபட்சமாக கூட்டரசு முறைக்குள் அதாவது இந்தியா போன்ற ஒரு அமைப்பு முறைக்குள் செல்லலாம்.

22 ஆண்டுகாலமான யுத்தம் போதுமானது. நாமும் விடுதலைப் புலிகளும் நிறைய இழந்துவிட்டோம். 2 இலட்சம் பேர் அகதிகளாக உள்ளனர். யாரும் அவர்கள் பற்றி பேசுவதில்லை. பேச்சுக்கள் நடத்தப்பட்டால் வெற்றி பெற்றால் நன்மைதான். ஆனால் நடத்தப்பட்ட பேச்சுக்கள் அனைத்துமே தோல்வியடைந்துள்ளன.

ஒரு நாளிரவிலேயே தீர்வை உருவாக்கிவிட முடியாது. கூட்டரசு முறைக்கு விடுதலைப் புலிகள் இணங்க வேண்டும். இதற்கு இணைத் தலைமை நாடுகளும் நோர்வேயும் அழுத்தம் கொடுக்க வேண்டும். இதுவிடயத்தை அரசாங்கம் பரிசீலிக்க வேண்டும்.

ஓஸ்லோவில் நிபந்தனையற்ற பேச்சு நடத்த மகிந்த ஒப்புக்கொண்டதாக எரிக் சொல்ஹெய்ம் சொல்கிறார்.

ஆனால் மகிந்தவோ அப்படிச் சொல்லவில்லை என்கிறார். கேகலிய ரம்புக்வெலவும் அப்படிச் சொல்லவில்லை என்கிறார். அப்படியானால் யார் உண்மையை பேசுகிறார்கள் என்று புரியவில்லை.

எரிக் சொல்ஹெய்ம் சொல்வது உண்மையில்லை எனில் அது குறித்து உரிய விளக்கத்தை எரிக் சொல்ஹெய்மிடம் அரசாங்கம் அளிக்க வேண்டும்.

நிபந்தனையற்ற பேச்சுக்கு சிறிலங்கா அரசாங்கம் சென்றால் அரசாங்கத்திலிருந்து ஜே.வி.பி. வெளியேறிவிடும். ஐக்கிய தேசியக் கட்சி ஆதரிக்காத நிலையில் அரசாங்கம் கவிழ்ந்தும் விடும்.

விடுதலைப் புலிகள் ஆயுதங்களைக் கீழே போட வேண்டும் என்ற ஜே.வி.பி. யின் நிபந்தனைகள் விவாதிக்கப்படுகிறது. ஆனால் அவர்கள் ஆயுதங்களைக் கீழே போடுவார்கள் என்று நான் நினைக்கவில்லை. ஜே.வி.பி.யின் நிலைப்பாடு சாத்தியமானது அல்ல.

நோர்வேயை வெளியேற்ற வேண்டும் என்று ஜே.வி.பி. கூறுகிறது. நோர்வே வெளியேற்றப்பட்டால் இந்தியாதான் அதனைச் செய்ய வேண்டும். ஆனால் இந்தியாவை ஜே.வி.பி.யின் சோமவன்ச விமர்சிக்கிறார். நான் ஒருபோதும் இந்தியாவை விமர்சிக்கவில்லை. இந்தியத் தூதுவரைத்தான் விமர்சித்தேன்.

அர்த்தமற்ற நிபந்தனைகளுக்கு நாம் பணியவேண்டியதில்லை. ஆனால் அவர்கள் சிறிலங்காவின் இறைமையை ஏற்க வேண்டும்.

பங்குச் சந்தையில் அப்பல்லோ மருத்துவமனையின் பங்குகளை ஹரி ஜயர்வர்த்தன மட்டுமல்ல எவர் வேண்டுமானாலும் வாங்கலாம் என்பதே என் கருத்து. இது விடயத்தில் மட்டுமல்ல பல காரணங்களுக்காக இந்தியத் தூதுவராக இருந்த நிருபமா ராவ் மீது விமர்சனங்களை முன்வைத்தேன்.

அவரை தனிப்பட்ட முறையில் விமர்சிக்கவில்லை. ஆனால் அவரது செயற்பாடுகள் தொடர்பில் எனக்கு விமர்சனம் உண்டு. குறிப்பாக நான் வெளிவிவகார அமைச்சராக இருந்தபோதும் அதற்குப் பின்னரும் அவரது செயற்பாடுகள் குறித்து விமர்சனங்கள் உண்டு.

1980-களில் ஜே.என்.டிக்சிட் எப்படிச் செயற்பட்டார் என்பதும் அதன் விளைவாக ராஜீவ் கொல்லப்பட்டதையும் நாம் அறிவோம். டிக்சிட் பாணியை நிருபமா ராவ் பின்பற்றினால் சிறிலங்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையே பிரச்சனை மீண்டும் உருவாகும். இது ஒரு எச்சரிக்கைக்கான கருத்து.

இலங்கை விடயத்தில் கடந்த அனுபவத்திற்குப் பின்னர் இந்தியா தலையிட விரும்பவில்லை. ஆனால் சிறிலங்காவின் பிரதேச ஒற்றுமைக்கு பாரிய ஆபத்து ஏற்பட்டால் அவர்கள் உதவுவார்கள். ஆனால் இந்திய அதிகாரிகளோ சென்னைக்கு சென்று உதவ மாட்டோம் என்கிறார்கள். இந்தியாவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையே இராணுவ ஒப்பந்தம் இல்லை. ஆகையால்தான் நாம் பாகிஸ்தானுக்குச் செல்கிறோம்.

இராணுவ ரீதியாக எங்களுக்கு இந்தியா உதவவில்லை. எமக்கு உதவுகிறவர்கள் யாரோ அவர்களிடம் செல்கிறோம். அது இந்தியாவுக்கு எதிரானது அல்ல. இந்தியா எமக்கு ஆதரவளித்தால் நாம் யாரிடமும் போக வேண்டியதில்லை. எமது நாட்டைப் பாதுகாக்க எந்த நாட்டுக்கு நாங்கள் போக வேண்டும் என்பது விவாதிக்கப்பட வேண்டியது இல்லை.

நாங்கள் இந்தியாவுக்குச் சென்றோம். அவர்கள் இல்லை என்றனர். ஆகையால் பாகிஸ்தானுக்கு சென்றுள்ளோம். அமைதி முயற்சிகளில் பாரிய பங்காற்றுமாறு இந்தியாவுக்கு மகிந்த ராஜபக்ச வேண்டுகோள் விடுத்தார். ஆனால் மறுத்துவிட்டனர் என்றார் அனுரா பண்டாரநாயக்க.

http://www.eelampage.com/?cn=28825

ஜே.என்.டிக்சிட் போல் செயற்பட்டால் மீண்டும் பிரச்சனை ஏற்படும்: இந்தியாவுக்கு அனுரா எச்சரிக்கை

[திங்கட்கிழமை, 18 செப்ரெம்பர் 2006, 05:36 ஈழம்] [ம.சேரமான்]

ராஜீவ் ஆட்சிக்காலத்தில் சிறிலங்காவுக்கான முன்னால் இந்தியத் தூதுவராக இருந்த ஜே.என்.டிக்சிட் போல் இந்தியத் தூதுவர்கள் செயற்பட்டால் சிறிலங்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையே மீண்டும் பிரச்சனை ஏற்படும் என்று சிறிலங்கா சுற்றுலாத்துறை அமைச்சர் அனுரா பண்டாரநாயக்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் அவர் கூறியுள்ளதாவது:

தேசிய அரசாங்கம் அமைக்கப்பட வேண்டும் என்று 1980-களிலிருந்தே குரல் கொடுத்து வருகிறேன். தேசிய அரசாங்கம் அமைக்கப்படும் போது இனப்பிரச்சனை, வாழ்க்கைச் செலவீனப் பிரச்சனை உள்ளிட்டவைகளுக்கு முகம் கொடுக்கலாம்.

யாழ்ப்பாணத்தை எனது சகோதரி சந்திரிகா கைப்பற்றிய பின்னர் விடுதலைப் புலிகள் இல்லாமல் போய்விடவில்லை. சம்பூரைக் கைப்பற்றிய பிறகும் விடுதலைப் புலிகள் இல்லாமல் இல்லை.

உலகத்திலே மிகவும் அர்ப்பணிப்புடன் இயங்கக் கூடிய தீவிரவாதிகள் விடுதலைப் புலிகள்.

பயங்கரவாதப் பிரச்சனையை அணுகும்போது தமிழர்களின் பிரச்சனையையும் பார்க்க வேண்டும். பயங்கரவாதம் நிறுத்தப்பட்டு விட்டாலும் ஒரு கூட்டரசுக்குள் தீர்வு அளிக்கப்பட வேண்டும். இதைத்தான் 1938 ஆம் ஆண்டே எனது தந்தையார் வலியுறுத்தினார். அவர்தான் பண்டா-செல்வா என்று முதலாவது ஒப்பந்தத்தை ஏற்படுத்தினார். ஆனால் அதன் பின்னர் இருதரப்பினரும் அரசியல் லாபங்களுக்காக விளையாட்டுகளை நடத்தினர்.

இது இப்போதும் நிறுத்தப்பட வேண்டும். அதற்கு நாம் பாரிய விலை கொடுக்க நேரிடும். இராணுவமும் புலிகளும் மக்களை இழக்க நேரிடும். விடுதலைப் புலிகளால் மரணத்தை ஏற்படுத்துகிற தன்மை குறித்து குறைத்து மதிப்பிடமுடியாது. அவர்கள் எதனையும் எந்த நேரத்திலும் செய்யக் கூடிய வலிமை உள்ளவர்கள்.

அதிகபட்சமாக கூட்டரசு முறைக்குள் அதாவது இந்தியா போன்ற ஒரு அமைப்பு முறைக்குள் செல்லலாம்.

22 ஆண்டுகாலமான யுத்தம் போதுமானது. நாமும் விடுதலைப் புலிகளும் நிறைய இழந்துவிட்டோம். 2 இலட்சம் பேர் அகதிகளாக உள்ளனர். யாரும் அவர்கள் பற்றி பேசுவதில்லை. பேச்சுக்கள் நடத்தப்பட்டால் வெற்றி பெற்றால் நன்மைதான். ஆனால் நடத்தப்பட்ட பேச்சுக்கள் அனைத்துமே தோல்வியடைந்துள்ளன.

ஒரு நாளிரவிலேயே தீர்வை உருவாக்கிவிட முடியாது. கூட்டரசு முறைக்கு விடுதலைப் புலிகள் இணங்க வேண்டும். இதற்கு இணைத் தலைமை நாடுகளும் நோர்வேயும் அழுத்தம் கொடுக்க வேண்டும். இதுவிடயத்தை அரசாங்கம் பரிசீலிக்க வேண்டும்.

ஓஸ்லோவில் நிபந்தனையற்ற பேச்சு நடத்த மகிந்த ஒப்புக்கொண்டதாக எரிக் சொல்ஹெய்ம் சொல்கிறார்.

ஆனால் மகிந்தவோ அப்படிச் சொல்லவில்லை என்கிறார். கேகலிய ரம்புக்வெலவும் அப்படிச் சொல்லவில்லை என்கிறார். அப்படியானால் யார் உண்மையை பேசுகிறார்கள் என்று புரியவில்லை.

எரிக் சொல்ஹெய்ம் சொல்வது உண்மையில்லை எனில் அது குறித்து உரிய விளக்கத்தை எரிக் சொல்ஹெய்மிடம் அரசாங்கம் அளிக்க வேண்டும்.

நிபந்தனையற்ற பேச்சுக்கு சிறிலங்கா அரசாங்கம் சென்றால் அரசாங்கத்திலிருந்து ஜே.வி.பி. வெளியேறிவிடும். ஐக்கிய தேசியக் கட்சி ஆதரிக்காத நிலையில் அரசாங்கம் கவிழ்ந்தும் விடும்.

விடுதலைப் புலிகள் ஆயுதங்களைக் கீழே போட வேண்டும் என்ற ஜே.வி.பி. யின் நிபந்தனைகள் விவாதிக்கப்படுகிறது. ஆனால் அவர்கள் ஆயுதங்களைக் கீழே போடுவார்கள் என்று நான் நினைக்கவில்லை. ஜே.வி.பி.யின் நிலைப்பாடு சாத்தியமானது அல்ல.

நோர்வேயை வெளியேற்ற வேண்டும் என்று ஜே.வி.பி. கூறுகிறது. நோர்வே வெளியேற்றப்பட்டால் இந்தியாதான் அதனைச் செய்ய வேண்டும். ஆனால் இந்தியாவை ஜே.வி.பி.யின் சோமவன்ச விமர்சிக்கிறார். நான் ஒருபோதும் இந்தியாவை விமர்சிக்கவில்லை. இந்தியத் தூதுவரைத்தான் விமர்சித்தேன்.

அர்த்தமற்ற நிபந்தனைகளுக்கு நாம் பணியவேண்டியதில்லை. ஆனால் அவர்கள் சிறிலங்காவின் இறைமையை ஏற்க வேண்டும்.

பங்குச் சந்தையில் அப்பல்லோ மருத்துவமனையின் பங்குகளை ஹரி ஜயர்வர்த்தன மட்டுமல்ல எவர் வேண்டுமானாலும் வாங்கலாம் என்பதே என் கருத்து. இது விடயத்தில் மட்டுமல்ல பல காரணங்களுக்காக இந்தியத் தூதுவராக இருந்த நிருபமா ராவ் மீது விமர்சனங்களை முன்வைத்தேன்.

அவரை தனிப்பட்ட முறையில் விமர்சிக்கவில்லை. ஆனால் அவரது செயற்பாடுகள் தொடர்பில் எனக்கு விமர்சனம் உண்டு. குறிப்பாக நான் வெளிவிவகார அமைச்சராக இருந்தபோதும் அதற்குப் பின்னரும் அவரது செயற்பாடுகள் குறித்து விமர்சனங்கள் உண்டு.

1980-களில் ஜே.என்.டிக்சிட் எப்படிச் செயற்பட்டார் என்பதும் அதன் விளைவாக ராஜீவ் கொல்லப்பட்டதையும் நாம் அறிவோம். டிக்சிட் பாணியை நிருபமா ராவ் பின்பற்றினால் சிறிலங்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையே பிரச்சனை மீண்டும் உருவாகும். இது ஒரு எச்சரிக்கைக்கான கருத்து.

இலங்கை விடயத்தில் கடந்த அனுபவத்திற்குப் பின்னர் இந்தியா தலையிட விரும்பவில்லை. ஆனால் சிறிலங்காவின் பிரதேச ஒற்றுமைக்கு பாரிய ஆபத்து ஏற்பட்டால் அவர்கள் உதவுவார்கள். ஆனால் இந்திய அதிகாரிகளோ சென்னைக்கு சென்று உதவ மாட்டோம் என்கிறார்கள். இந்தியாவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையே இராணுவ ஒப்பந்தம் இல்லை. ஆகையால்தான் நாம் பாகிஸ்தானுக்குச் செல்கிறோம்.

இராணுவ ரீதியாக எங்களுக்கு இந்தியா உதவவில்லை. எமக்கு உதவுகிறவர்கள் யாரோ அவர்களிடம் செல்கிறோம். அது இந்தியாவுக்கு எதிரானது அல்ல. இந்தியா எமக்கு ஆதரவளித்தால் நாம் யாரிடமும் போக வேண்டியதில்லை. எமது நாட்டைப் பாதுகாக்க எந்த நாட்டுக்கு நாங்கள் போக வேண்டும் என்பது விவாதிக்கப்பட வேண்டியது இல்லை.

நாங்கள் இந்தியாவுக்குச் சென்றோம். அவர்கள் இல்லை என்றனர். ஆகையால் பாகிஸ்தானுக்கு சென்றுள்ளோம். அமைதி முயற்சிகளில் பாரிய பங்காற்றுமாறு இந்தியாவுக்கு மகிந்த ராஜபக்ச வேண்டுகோள் விடுத்தார். ஆனால் மறுத்துவிட்டனர் என்றார் அனுரா பண்டாரநாயக்க.

http://www.eelampage.com/?cn=28825

ஆக மொத்தத்தில் உண்மையை ஒப்புக்கொண்டுட்டார் இனியாவது உணருமா இந்தியா இலங்கையின் சந்தர்ப்பவாதத்தை :?: :?:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.