Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சென்னை போரூர் அருகே 11 மாடி கட்டடம் இடிந்து விபத்து: ஒருவர் பலி; 10 பேர் மீட்பு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சென்னை: சென்னை போரூர் அருகே உள்ள , மவுலிவாக்கத்தில் 11 மாடி கட்டடம் ஒன்று இடிந்து விழுந்த விபத்தில், 10 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும், அதில் ஒருவர் இறந்து விட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

collapse%201%281%29.jpg

சென்னை, போரூர் அருகே உள்ள மவுலிவாக்கத்தில் புதியதாக 11 மாடி கட்டடம் ஒன்று கட்டப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று மாலை திடீரென பெய்த பலத்த மழை காரணமாக அந்த கட்டடம் இடிந்து விழுந்தது.

இடிந்து விழுந்த கட்டட இடிபாடுகளில் சுமார் 40  பணியாளர்கள் வரை சிக்கியிருக்கலாம் என கூறப்படுகிறது.இவர்களில் பெரும்பாலானோர் ஆந்திராவை சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது.

collapse%202%281%29.jpg

இது குறித்து தகவல் அறிந்ததும் இடிபாடுகளில் சிக்கி தவிப்பவர்களை மீட்பதற்காக தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதில், ஒருவர் மீட்கப்பட்ட நிலையில் மற்றவர்களையும் மீட்கும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதேபோல், ஆம்புலன்ஸ்களும் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

collapse%203%281%29.jpg

சென்னை மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் இன்று மாலை 4 மணி அளவில் திடீரென கன மழை பெய்த நிலையில், கட்டடத்தின் வலுத்தன்மை மோசமாக இருந்ததால், இந்த கட்டடம் இடிந்து விழுந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

எரிவாயு சிலிண்டர் விபத்து

இந்நிலையில், இடிந்து விழுந்த கட்டடத்தின் மீட்பு பணி நடந்து கொண்டிருக்கும்போது, கட்டடத்திற்குள் இருந்த ஒரு எரிவாயு சிலிண்டரில் இருந்து திடீரென கேஸ் கசிவு ஏற்பட்டது. இதில் ஒருவருக்கு காயம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

தேசிய பேரிடர் மீட்பு குழு விரைவு

இந்நிலையில், அரக்கோணத்தில் இருந்து  தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் 260 பேர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். இவர்கள் அனைவரும் இரவு சுமார் 8.30 மணியளவில் சம்பவ இடத்திற்கு வந்து சேர்ந்தனர். இதையடுத்து, அவர்களும் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

போக்குவரத்து நெரிசல்

சம்பவ இடத்தில் பொதுமக்கள் பெருமளவில் குவிந்துள்ளதால், போரூர் பகுதில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

10 பேர் மீட்பு

இதற்கிடையே, கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த 10 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் அனைவரும் போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

ஒருவர் பலி

மேலும், சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டவர்களில் மருதுபாண்டி என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

 

http://news.vikatan.com/article.php?module=news&aid=29568

 

  • கருத்துக்கள உறவுகள்

அவசரகோலத்தில் கட்டப்படும் இவைகளை வாங்குகிறவர்கள் பாவம். ஆழ்ந்ந இரங்கல்கள்..!

  • கருத்துக்கள உறவுகள்

சென்னையில் 11 மாடி கட்டிடம் இடிந்து பயங்கர விபத்து ( படங்கள் )

சென்னை போரூரை அடுத்த மவுலிவாக்கத்தில் 11 மாடி புதிய கட்டிடம் இடிந்து விழுந்து தரைமட்டமானது. 

இந்த இடிபாடுகளூக்கு இடையில் தொழிலாளர்கள் சிக்கியுள்ளனர். 


தீயணைப்பு வீரர்கள், பேரிடர் மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்து தீவிரமாக மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 250க்கும் மேற்பட்டோர் இப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு மெட்ரோ ரெயில் பணியாளர்களும் உதவி செய்து வருகின்றனர். சம்பவ இடத்திற்கு மோப்ப நாய்களும் வரவழைக்கப்பட்டன.

 

10க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தனர். அவர்களில் 3 பேர் சிகிச்சை பலனின்றி இறந்தனர். அவர்களின் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

இந்த விபத்து தொடர்பாக கட்டிட நிறுவன இயக்குனர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

 

chennai%20accident.jpg

நக்கீரன்

 

இன்னும் 30 பேரின் நிலைமை... தெரியவில்லை என்று, ஒரு இணையச் செய்தி தெரிவிக்கின்றது.
கட்டிட்ட பொறியியலாளர், கட்டிட ஒப்பந்தக்காரர் அனைவரின் உரிமங்களையும் ரத்து செய்ய வேண்டும்

 

  • கருத்துக்கள உறவுகள்

'இடி’ தான் விபத்திற்குக் காரணம்... நாங்கள் பொறுப்பல்ல: கட்டுமான நிறுவனம் ‘திமிர்’ விளக்கம்.

 

சென்னை: இதுவரை 11 பேரின் உயிரைப் பலி வாங்கியுள்ள சென்னைப் போரூர் 11 மாடி கட்டிட விபத்திற்கு இடி விழுந்ததுதான் காரணம் என கட்டுமான நிறுவனம் ‘பிரைம் சிருஷ்டி'யின் இயக்குனர் பாலகுரு விளக்கமளித்துள்ளார்.

 

நேற்று மாலை சென்னையில் திடீரென இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதில், சென்னையை அடுத்த போரூர் அருகே மவுலிவாக்கத்தில் கட்டுமானம் நடந்து கொண்டிருந்த 11 மாடி கட்டிடம் திடீரென இடிந்து விழுந்ததில் 11 பேர் பலியாகியுள்ளனர்.

 

இடிபாடுகளில் சிக்கியுள்ள மீதமுள்ள 40 பேரை மீட்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக கட்டுமானப் பணிகளை மேற்கொண்ட நிறுவனத்தின் உரிமையாளர் மற்றும் அவரது மகன் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள தெரிவிக்கின்றன.

 

29-chennai-building-collapse23-600.jpg

 

இந்நிலையில், இந்தக் கோர கட்டிட விபத்திற்கு கட்டிடத்தின் மீது இடி விழுந்தது தான் காரணம் என விபத்துக்குள்ளான கட்டிடத்தைக் கட்டிவரும் கட்டுமான நிறுவனமான பிரைம் சிருஷ்டியின் இயக்குநர் பாலகுரு தெரிவித்துள்ளார்.

 

இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

‘11 மாடி கட்டிடம் முறையான அனுமதி பெற்றே கட்டப்பட்டு வந்தது. எந்த விதி மீறலும் கிடையாது. இடி விழுந்ததுதான் கட்டிடம் இடிந்து விழுந்ததற்கு காரணம். எனவே கட்டிடம் இடிந்து விழுந்ததற்கு பொறுப்பு ஏற்க முடியாது.

 

கட்டிடத்தின் கட்டுமானப் பணி முடிந்தபிறகுதான் வழக்கமாக இடிதாங்கும் கருவி பொருத்தப்படுவது வழக்கம். கட்டிடம் இப்போதுதான் நிறைவு கட்டத்தை எட்டி வந்தது. விபத்தின்போது 50 பேர் கட்டிடத்தில் இருந்தனர். சம்பவத்தின்போது பலத்த மழை பெய்தது' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

 

-தற்ஸ் தமிழ்-

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.