Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியாவை கைப்பற்ற ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாதிகள் திட்டம்

Featured Replies

Tamil_News_large_1009495.jpg

 

பாக்தாத் :ஈராக் முழுவதையும், தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த பின், இந்தியாவை கைப்பற்றும், ஐ.எஸ்.ஐ.எஸ்.,சின், ஐந்தாண்டு சதித் திட்டம் வெளியானதால், பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

ஐ.எஸ்.ஐ.எஸ்., அமைப்பு

மேற்காசிய நாடுகளில் ஒன்றான ஈராக்கில், 25 ஆண்டுகளுக்கும் மேலாக, அதிபராக இருந்த சதாம் உசேன், 2006ம் ஆண்டு தூக்கிலிடப்பட்டு கொல்லப்பட்ட பிறகு, அந்நாட்டில் மக்களாட்சி மலர்ந்து, ஜலால் தலாபானி அதிபராகவும், நூரி அல் மாலிக் பிரதமராகவும் பதவியேற்றனர்.கடந்த 2002ம் ஆண்டு முதல், அந்நாட்டில் பயங்கரவாத தாக்குதல்களும், உள்நாட்டு கலவரங்களும் நடைபெற்று வருகின்றன. சன்னி முஸ்லிம் பிரிவை சேர்ந்த, சதாம் உசேனின் ஆதரவாளர்களான, 'இஸ்லாமிக் ஸ்டேட் இன் ஈராக் அண்ட் அல்ஷாம் - ஐ.எஸ்.ஐ.எஸ்.,' அமைப்பை சேர்ந்த பயங்கரவாதிகள், வெளிநாட்டு பயங்கரவாத அமைப்புகளின் உதவியுடன் வன்முறையில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில், ஈராக்கில் உள்ள பலுஜா மற்றும் மொகல் உள்ளிட்ட, 10க்கும் மேற்பட்ட நகரங்களை, அவர்கள் கைப்பற்றினர். பயங்கரவாதிகளின் பிடியில் சிக்கியுள்ள நகரங்களை மீட்பதற்காக நடந்த சண்டையில், ஈராக் ராணுவம் தோல்வி அடைந்தது.கடந்த சில தினங்களுக்கு முன், சிரியாவுக்கு அருகில் உள்ள ஈராக்கின் ராணுவ மையத்தை அழித்த பயங்கரவாதிகள், பாக்தாத் நகருக்கு அருகில், யூப்ரடிஸ் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள, ஹதிதா அணையை நோக்கி படையெடுத்துள்ளனர்.இந்த அணையின் மீது அவர்கள் தாக்குதல் நடத்தினால், சுற்றுப்பகுதியில் உள்ள பல ஊர்கள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் உள்ளதால், அணைப்பகுதியை தீவிரவாதிகள் நெருங்கவிடாமல் தடுக்க, ஈராக் ராணுவம் தயாராக உள்ளது.பயங்கரவாதிகளை ஒடுக்கவும், அவர்கள் வசம் உள்ள நகரங்களை மீட்பதற்கும், அமெரிக்காவின் உதவியை, ஈராக் நாடியுள்ளது. ஆனால், ஷியா, சன்னி மற்றும் குர்து இன பிரதிநிதிகள் அடங்கிய அரசை அமைப்பதில், அமெரிக்கா தீவிரமாக உள்ளது.

 

5 ஆண்டு திட்டம்

இந்நிலையில், 'டுவிட்டர்' சமூக வலைத்தள பக்கத்தில், ஐ.எஸ்.ஐ.எஸ்., அமைப்பை சேர்ந்த, அய்மன் மொகைல்தின் என்பவர், ஒரு வரைபடம் மற்றும் திட்டத்தை வெளியிட்டுள்ளார்.இந்த வரைபடத்தில், ஈராக் மட்டுமல்லாமல், ஆப்பிரிக்க நாட்டின் ஒரு பகுதி, இஸ்ரேல் உள்ளிட்ட அனைத்து மத்திய கிழக்கு நாடுகள், துருக்கி, இந்தியா, வங்கதேசம் மற்றும் இந்தோனேஷிய நாடுகள், கருப்பு வண்ணத்தில் காட்டப்பட்டுள்ளன. மேலும் மியான்மர் மற்றும் ஆஸ்திரேலிய நாடுகளும், இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளன.கருப்பு வண்ணமிட்ட பகுதிகளை கைப்பற்ற திட்டமிட்டுள்ளதாக, பயங்கரவாத அமைப்பு குறிப்பிட்டு உள்ளது.மேலும், ஈராக் முழுவதையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த பின், அடுத்த ஐந்தாண்டுகளில், இந்தியாவை கைப்பற்றுவதற்கான திட்டங்கள் தயாராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.உலகம் முழுவதும், சன்னி முஸ்லிம்களின் ஆட்சியை கொண்டு வருவதே, இந்த பயங்கரவாத அமைப்பின் திட்டமாக உள்ளது.

 

 

Edited by Athavan CH

  • கருத்துக்கள உறவுகள்

அடப்பாவமே.. இலங்கையும் இவங்கட ஆட்சிக்குள் வரும் என்கிறார்களே.. பொதுபலசேனாவை இதுக்காகத்தான் உருவாக்கினார்களா?? :huh::D

அடுத்த ஐந்தாட்டுக்குள் அமைதிக்கு வாய்ப்பில்லை அதுக்குப்பிற சுத்தமா இல்லவே இல்லை.

இராக்கில் இந்த சண்டைகளில் அகபட்டு கொல்லப்பட இருக்கும் 100000+ அப்பாவி மக்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்

அடப்பாவமே.. இலங்கையும் இவங்கட ஆட்சிக்குள் வரும் என்கிறார்களே.. பொதுபலசேனாவை இதுக்காகத்தான் உருவாக்கினார்களா?? :huh::D

 

இங்கதான் நம்ம இஸ்லாமிய சகோதரர்கள் உதவிட இருக்காங்க...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.