Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொழும்பில் கடத்தப்பட்ட கணவனுக்காக போராடும் தமிழ்ப் பெண்

Featured Replies

கொழும்பில் கடத்தப்பட்ட கணவனுக்காக போராடும் தமிழ்ப் பெண் சிறிலங்கா தலைநகர் கொழும்பில் தமிழர்களை அடையாளம் தெரியாத குழுவினர் கடத்தி பணம் பறிப்பதும் கொலை செய்வதுமான சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில் கடத்தப்பட்ட புதிதாக திருமணமான கணவனை மீட்க கிளிநொச்சியைச் சேர்ந்த பெண் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்.

கடந்த மே 26 ஆம் நாளன்று புதிதாக திருமணமான கிளிநொச்சியைச் சேர்ந்த இருதயசாமி பிரான்சிஸ் (வயது 34) என்பவரை அடையாளம் தெரியாத குழு கடத்திச் சென்றுள்ளனர்.

அவருக்கு பெப்ரவரியில் திருமணம் நடந்ததாகவும் கனடா செல்ல இருந்த நிலையில் கடத்தப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

கனடா செல்வதற்கு சில நாட்கள் முன்பாக தனது மனைவியுடன் கொட்டாஞ்சேனை பகுதியில் விடுதி ஒன்றில் அவர் தங்கியிருந்த போது இருதயசாமி பிரான்சிஸ் கடத்தப்பட்டுள்ளார்.

இருதயசாமி பிரான்சிசின் மனைவி இது குறித்து கூறியுள்ளதாவது:

கனடா செல்வதற்கு முதல் நாள் இருவரும் கோவிலுக்குச் சென்று திரும்பினோம். அதன் பின்னர் விமான டிக்கெட்டுக்களை வாங்குவதற்காக அவர் முச்சக்கர வாகனத்தில் சென்றார். அதன் பின்னர் அவரைக் காணவில்லை. இது குறித்து கொட்டாஞ்சேனை காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்தோம். ஆனால் காவல்துறையினரால் கண்டுபிடிக்கமுடியவில்லை.

சில வாரங்களுக்கு முன்பாக எனது கணவர் கடைசியாக சென்ற முச்சக்கர வாகனமானது கொழும்பு கோட்டை முன்பாக நிறுத்தப்பட்டிருப்பதையும் பார்த்தோம். அது தொடர்பில் ஓட்டுநரிடம் கேட்டபோதுதான் அடையாளம் தெரியாத நபர்களால் கடத்தப்பட்டதாக கூறினார் என்றார்.

இந்நிலையில் கணவனை தேடிக் கொண்டிருந்த அப்பெண்ணை விடுதலைப் புலி உறுப்பினர் என்று கூறி கைது செய்து 14 நாள் நீதிமன்றக் காவலில் சிறிலங்கா காவல்துறையினர் அடைத்துள்ளனர்.

அதன் பின்னர் அப்பெண்ணுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் எதுவித தொடர்பும் இல்லை என்று கூறி அவர் விடுவிக்கப்பட்டார். அப்போது அடையாளம் தெரியாத குழுவினர் அப்பெண்ணை சந்தித்து கணவரை விடுவிப்பதாகவும் நீதிமன்ற செலவீனங்களுக்காக ரூ.1 இலட்சத்து 50 ஆயிரம் கொடுக்க வேண்டும் என்று கூறி எடுத்துச் சென்றுள்ளனர்.

இந்த விடயத்தை வெளிப்படுத்தக் கூடாது என்றும் எச்சரித்துள்ளனர். இருந்தபோதும் இருதயசாமியின் மனைவி இது குறித்து காவல்துறையிடம் தெரிவித்து விட்டார். இதுவரை இருதயசாமி பிரான்சிஸ் நிலை குறித்து எதுவும் தெரியவில்லை.

கொழும்பில் நிகழ்ந்த அண்மைய கடத்தல்கள்:

- முன்னாள் காவல்துறை ஆய்வாள எஸ்.எஸ்.சந்தியாகோ பிள்ளையின் மகன் கடத்தப்பட்ட நிலையில் கொல்லப்பட்டார். களனி ஆற்றுப் பகுதியில் அவரது சடலத்தை கிராண்ட்பாஸ் காவல்துறையினர் கண்டெடுத்தனர். கொல்லப்பட்ட நபரின் தாயார் அடையாளம் காட்டினார்.

- ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தியாகராசா மகேஸ்வரனின் மருமகள் தவராஜா தவமணி கடத்தப்பட்டு மறுநாள் விடுவிக்கப்பட்டார். அவரை 6 பேர் கடத்தியுள்ளார். ஆனால் கடத்தல் குழுவை அவரால் அடையாளம் காட்ட முடியவில்லை.

- ஓகஸ்ட் 22ஆம் நாளன்று ஏரோ லங்காவின் நிர்வாக இயக்குநர் உட்பட மூன்று பணியாளர்கள் கடத்தப்பட்டனர். இக்கடத்தலுக்கு சிறிலங்கா காவல்துறையினரே காரணம் என்று அந்நிறுவனத்தின் தலைவர் குற்றசாட்டியுள்ளார். வெள்ளவத்தை காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டும் எதுவித தகவலும் தெரிவிக்கப்படவில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.