Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வரலாற்றைத் தொலைத்த தமிழர் - கோசல்யா சொர்ணலிங்கம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

திருமதி கோசல்யா சொர்ணலிங்கம் அவர்களின் பார்வையில் வரலாற்றைத் தொலைத்த தமிழர்

எங்கிருந்து எது வரை பார்க்கலாம்

தலைப்பினைப் பார்க்கையில் வேறு உணர்வு ஏற்பட்டது .
உள்ளே நுளைந்து பார்க்கையில் இன்னோர் உணர்வு ஏற்படும்.
வரலாற்றைத் தொலைத்த தமிழர் வாணாள் பூராவும் அலைந்து உலைந்து அவர்களுக்கென்றிருந்த ஆற்றலையும் அதோடு தொலைத்தார்களா ?என்பதை நூலினுள் நுழைந்து பாருங்கள் .ஆழமாக சுவைத்துப் பாருங்கள்.
வரலாறு என்றால் என்ன ?அதற்கான விளக்கம் தருகிறார் ஆக்கதாரர்..
இதுவொரு துணிகரத் தேடல் பாராட்ட வேண்டியது ..பல பெரும் முனைப்பின் தேடல் கள் ..இதன் தகவல் சேமிப்பும் சிரமங்களும் ..தொடர்புகள் மூலம் பெறத்துடித்த ஆவணங்களும் படைப்பாளியின் பாரிய முயற்சிகள் .
இக்காலப் பாட நூல்களி -சிற்சில பாகமாக மெல்ல மெல்ல பாடமாக சேர்த்து வந்துள்ளார்கள்.சுமேரியர் வாழ்வியல் பக்கம் .
இங்கே மொத்தத்தில் வரலாறு என்றதுமே சலிப்புத் தோன்றுவது வழக்கம் சொல்ல வந்த விடயத்தை சுருக்கமாக சான்றுகளுடன் அதற்கான உருவங்களோடு பிரித்துப் பிரித்து குறுகிய பக்கங்களோடு விளக்கிப் போகும் பக்குவம் படிப்பவரை ஆவல் படுத்தும் ஒரு தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளது .நூலின் உள்ளக வெளியகத் தோற்றம் .
காலத்தால் அழியாத சரிதங்களை கறந்தெடுத்த கச்சிதம் அலாதி .
மாந்த வரலாறு மூத்த குடி என வார்த்தையாடும் எம்மினம் தொன்மையை நிலைநாட்டவோ .. ஆராயவோ பின்நிற்பது பெருங் குறை என்பது மாந்த வரலாறு பக்கத்தில் குறிப்பிட்டது சிறப்பு.
ஞானப்பிரகாசம் அவர்கள் தேவநேயப்பாவாணர் இழுத்து வரப்பட்டு அவர்கள் பக்கமான நியாயமான கருத்துக்களை விதைத்து விரைவும் பக்கமும் தெரிகிறது .
தேவநேயப்பாவாணர் தமிழ் மொழிக்காக பெரும் பணியாற்றியவர் நினைவு படுத்தலாம்.
பனிக்கால நேரங்களில் மனிதன் தன் உணர்வுகளை >உடலைச் சமப்படுத்த இடப்பெயர்வின் போது தேர்ந்த இடங்களும் -அவன் எப்படி பெயரால் அழைக்கப்பெற்றான் என்பதும் அறியலாம் .குளிரோடு போராடி தன் இரையை எப்படி பெற்று வாழ்வியலை நகர்த்தினான் -----பின்னால் மெசொபொத்தேமியா அமைப்பும் இசைவாக்கத்திற்கு வாழப்பழகிப்பின்னால் படிப்படியாக மனிதன் ஆங்காங்கே கிடைத்தவற்றைக் கொண்டு வாழப்பழகினான் என்பதை தொடுகிறார்..
சுமேரியரை விவசாயம்- எப்படி மனுக்குலத்தை உயர்த்தியது காட்டினை களனியாக்கிய சேதிகள் அறியலாம்..நதியின் சீற்றமும் தம்மைக்காக் அவர்கள் செய்து கொண்ட யுத்திகளும் பார்க்கலாம் வாசகர்.
அத்தோடு பொறிநுட்பக்கலையும் புத்திக் கூர்மையும் கட்டடக் கலையும் படங்களோடு பகிர்ந்தது இந்நூலுக்கு வளம் தருகிறது.
சீகுராட் சிந்திக்கவும்> கூனிபோம் > சுவையான கணித முறை விடயங்களும் கச்சிமான கணக்கு லாபகத்தை கண்டு கொள்ளலாம் களிமண்ணோடான கணக்கு வழக்கும் கவரப்படும் தேடலிது. --
இசைக்கருவிகள் தோற்றம் இதன் வடிவங்கள் இயற்கை வழிபாடு ..படிப்படியாக அறிவு வளர விவாதங்கள் வளர்ச்சியடைந்த புதினங்களும் ..
நாகரீகத்தின் முகடாக பண்பாடுகள் பழக்கவழக்கங்கள் பெண்சுதந்திரமும் உறவுகளின் உன்னத தொடர்புகளும் சிறப்புற வாழ்ந்தது என்பது காட்டியுள்ளார் நூலாசிரியர் தன் தேடல் மூலம்.
சுமேரியரின் உணவு முறையால் சில வேளைகளில் நாடோடிகளிடமிருந்து எதிர்க்கும் வலுவை இழந்ததிருந்தனர் ---இயற்றையை தாக்குப்பிடிக்க இயலாது இவர்களின் இடப்பெயர் வும்.....இருட்டடிப்பான மேற்குலகின் மேலாண்மையும் .....சிந்து வெளி நாகரிகம் அதற்கான மெய்ப்பாடான வரை படங்களும் இனங்காட்டுகிறது.
அறிவார்ந்த தமிழர்களே சுய சிந்தனையற்று தாழ்வு மனப்பான்மையால் பல விடயங்களை வரலாற்றில் முன் கொணராமையை சுட்டிக்காட்டியது சிறப்பாகிறது.

இறுதியில் சுமேரியர்தான் தமிழர் என்று நிறுவிநிற்கும் இந்த ஆதாரங்கள் வரைபடங்கள் பல பக்கமாக பார்க்கப்பட்டும் .
இதற்கான சிலவற்றை பெறத் துடித்த கல்விசார் பக்கம் அவை பெற ஒத்தழைப்புத் தராது போன நிகழ்வுகளையும் ஆசிரியர் ஆங்காங்கே வெளிப்படுத்தியுள்ளார்...
இங்கே யான் முழுதுமாக எடுத்துரைக்க விரும்பவில்லை. அது வாசிப்பவரை நுடங்கச் செய்யும். கட்டாயமாக எல்லோரும் இந்நூல் பார்க்க மட்டுமல்ல படித்துணர வேண்டிய நூல் .இது ஆவலை த்தூண்டும் அழகான வரலாற்றுப் பதியம் இலகுவானதும் புரிந்துணரக்கூடியதும் .
தவறாமல் உங்கள் கைகளில் வர வேணும் -நிவேதா உதயராயன் முயற்சியும் இவருக்கு பக்க பலமாக நின்று உழைத்தவர்களுக்கும் பாராட்டுக்கள்-வாழ்த்துக்கள் !
-ஒரு பார்வை கோசல்யா சொர்ணலிங்கம் - 4-7-14

  • கருத்துக்கள உறவுகள்

தவறாமல் உங்கள் கைகளில் வர வேணும் 

 

சுமே

யாழில் ஒரு விளம்பரம் கொடுக்கலாமே....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.