Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆயுதக் கடத்தல்களை தடுக்க சர்வதேச சமூகம் தீவிரமாக செயற்பட வேண

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆயுதக் கடத்தல்களை தடுக்க சர்வதேச சமூகம் தீவிரமாக செயற்பட வேண்டும்: மகிந்த ராஜபக்ச

சிறியரக மற்றும் இலகுரக ஆயுதக் கடத்தல்கள் மூலம் அரசாங்கம் அல்லாத சக்திகளுக்கு எளிதில் ஆயுதங்கள் கிடைத்து விடுவதால் உள்நாட்டுப் பிரச்சனைகள் அதிகரிக்கின்றன. இதனைத் தடுக்க சர்வதேச சமூகம் தீவிரமாக செயற்பட வேண்டும் என்று சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் 61 ஆம் ஆண்டுக் கூட்டத்தில் மகிந்த ராஜபக்ச பேசியதாவது:

தமிழீழ விடுதலைப் புலிகளால் முன்வைக்கப்படும் எந்த ஒரு நல்லெண்ண நடவடிக்கைக்கும் சிறிலங்கா அரசாங்கம் நல்ல பதில் அளிக்க தயாராக உள்ளது.

பயங்கரவாத இயக்கம் என்ற தன்மையிலிருந்து மாறி பேச்சுவார்த்தை, ஜனநாயக முறைக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் மாறுவார்கள் என்பது எமது நம்பிக்கை.

இராணுவ நடவடிக்கைகளின் மூலமாக மட்டுமே சில காரணங்களுக்காக பயங்கரவாதத்தை அழிக்க முடியாது போயினும் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் நேரடியாகவோ அல்லது அனுசரனையாளர்களுடன் பேசுவதில் நாம் ஈடுபாட்டுடன் உள்ளோம்.

தமிழீழ விடுதலைப் புலிகள் தாக்குதல்கள் இருந்தபோதும் மனிதாபிமான நடவடிக்கைகளை தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களுக்கும் செயற்படுத்தியிருக்கிறோம்.

ஒரு பொறுப்புள்ள அரசாங்கம் என்கிற வகையில் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் ஐ.நா. உள்ளிட்ட மனிதாபிமான செயற்பாடுகளை மேற்கொள்ளும் இதர நிறுவனங்கள் பிரச்சனைக்குரிய பகுதிகளுக்குச் செல்வதற்கான ஏற்பாடுகளை தொடர்ந்து செய்வோம்.

அண்மைய தமிழீழ விடுதலைப் புலிகளின் வன்முறையால் 53 ஆயிரம் முஸ்லிகள் தங்களது வீடுகளிலிருந்து இடம்பெயர்ந்துள்ளனர். ஆனால் அரசாங்கத்தின் பதில் நடவடிக்கையில் அவர்களில் மிகப் பெரும்பான்மையோர் தற்போது தங்களது வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர்.

பிரச்சனைக்குரிய பகுதிகளில் இடம்பெயர்ந்து வாழும் மக்களுக்கான மருந்து பொருட்கள், உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களை அளிப்பதில் அரசாங்கம் ஈடுபாட்டுடன் உள்ளது.

சட்டவிரோத வர்த்தகங்கள், சிறு மற்றும் இலகுரக ஆயுதக் கடத்தல்கள் மூலம் அரசாங்கம் அல்லாத சக்திகளுக்கு எளிதில் ஆயுதங்கள் கிடைத்துவிடுவதால் உள்நாட்டுப் பிரச்சனைகள் தீவிரத்தன்மையாகுவது கவலைக்குரியது.

இந்த அச்சுறுத்தலை அகற்றுவதற்கான சர்வதேச சமூகத்தின் செயற்பாடுகள் குறித்து கவலை கொள்கிறோம். உலகம் முழுமைக்கும் சிறிய அளவில்தான் இந்தச் செயற்பாடு உள்ளது. இதுவிடயத்தில் ஐக்கிய நாடுகள் சபையானது செயற்திட்டம் ஒன்றை உருவாக்கி எதிர்காலத்தில் இது விரிவடையாது தடுக்க முழு அளவில் செயற்படுத்த வேண்டும்.

சிறிலங்காவின் பொருளாதாரமானது பாராட்டத்தக்க அளவிலான வளர்ச்சியைக் கொண்டுள்ளது. கடந்த 28 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 8.1 விழுக்காடு வளர்ச்சியை எட்டியுள்ளோம் என்றார் மகிந்த ராஜபக்ச.

அன்புடன்

யாழ்குரு

www.eelampage.com

தங்களுக்கு வேண்டியது எல்லாத்தயும் சர்வதேச சமூகம் செய்ய வேணும்...! ஆனால் சர்வதேசம் சொல்லுறதை செய்ய மாட்டினமாக்கும்...!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.