Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காரைநகரில் சிறுமிகளை வன்புணர்வுக்குட்படுத்திய கடற்படையினருக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்க வேண்டாம்! - ஜனாதிபதி சார்பில் உத்தரவு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
 
காரைநகரில் சிறுமிகளை வன்புணர்வுக்குட்படுத்திய கடற்படையினருக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்க வேண்டாம்! - ஜனாதிபதி சார்பில் உத்தரவு 
[Monday 2014-07-21 07:00]
karainagar-abuse-id-parade-200-news.jpg

காரைநகரில் 11 வயது மற்றும் 9 வயது சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய கடற்படையினருக்கு எதிராக கடுமையான சட்டத்தை அமுல்படுத்த வேண்டாம் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளதாக லங்கா ஈ நியூஸ் இணைய தளம் செய்தி வெளியிட்டுள்ளது. ஜனாதிபதியின் உத்தரவிற்கு அமைய அவரது பாராளுமன்ற விவகார இணைப்புச் செயலாளர்களில் ஒருவரான குமாரசிறி ஹெட்டிகே, காவல்துறையினருக்கு இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார். கடற்படை வீரர்கள் கைது செய்யப்பட்ட பின்னர் இரண்டு தடவைகள் குமாரசிறி ஹெட்டிகெ நெடுந்தீவு காவல் நிலையத்திற்கு தொலைபேசி அழைப்புக்களை எடுத்துள்ளார்.

  

குறித்த கடற்படை வீரர்களை விளக்க மறியலில் வைத்தால் படையினரின் மனோ திடத்திற்கு களங்கம் ஏற்படக் கூடுமெனத் தெரிவித்து அவர்களை விடுதலை செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார். யாழ்ப்பாண பிராந்தியத்திற்கு பொறுப்பான காவல்துறை அத்தியட்சகர் ஆர்.டி.பீ. விமலசேன மற்றும் நெடுந்தீவிற்குப் பொறுப்பான கவால்துறை அத்தியட்சகர் எஸ்.பீ.சேனாநாயக்க ஆகியோருக்கும் இது தொடர்பில் உத்தரவிட்டுள்ளார். காவல்துறை அத்தியட்சகர்களின் உத்தரவிற்கு அமைய நெடுந்தீவு காவல்நிலையத்தின் குற்றப் பிரிவு பொறுப்பாளர் ஆர்.கே.பீ. சேனாரட்ன குறித்த கடற்படை வீரர்கள் ஏழு பேரையும் விடுதலை செய்துள்ளார்.

2014ம் ஆண்டு ஜூலை மாதம் 18ம் திகதி 18-2014 என்ற முறைப்பாட்டு இலக்கத்தில் சம்பவம் தொடர்பில் நெடுந்தீவு காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. 'சிறுமியைக் கடத்திச் சென்று, கூட்டாக பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தினர்' என முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறான சம்பவங்களின் போது சிறுமியை வைத்தியசாலைக்கு அனுப்பி சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கை பெற்றுக் கொள்ள வேண்டியது அவசியமானது என்ற போதிலும் அவ்வாறான அறிக்கை எதுவும் பெற்றுக்கொள்ளப்படவில்லை.

11 வயது சிறுமியை பாலியல் ரீதியாக வன்கொடுமைக்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட ஏழு கடற்படை உத்தியோகத்தர்களும் காரைநகர் கடற்படை முகாமைச் சேர்ந்தவர்களாகும். 1. அஜித் குமார 2. ருபசிங்க ஆராச்சிலாகே சாமர இந்திக்க 3. நதீர தில்சான் ரத்நாயக்க 4. குடாபாலகே ஜயவீர 5. இந்திக்க குமார விதானாரச்சி 6. ரணசிங்க சுமித் சுபாஸ் 7. விகும் சேனாக பியசிறி திசாநாயக்க ஆகியோருக்கு எதிராகவே குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியதாக சிறுமி செய்த முறைப்பாட்டை கருத்திற் கொண்டு சந்தேக நபர்களை கைது செய்து நீதிமன்றில் ஆஜர் செய்வதாக நெடுந்தீவு காவல் நிலையத்தின் குற்றப் பிரிவு பொறுப்பதிகாரி சேனாரட்ன நீதிமன்றிற்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளார். பீ-64-2014 என்ற இலக்கத்தைக் கொண்ட அறிக்கையே இவ்வாறு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. சிறுமியின் வாக்கு மூலத்தைக் கருத்திற் கொண்டு சந்தேகத்தின் பேரில் கடற்படை வீரர்களை கைது செய்வதாக பொறுப்பதிகாரி குறிப்பிட்டுள்ளார்.குறித்த கடற்படை வீரர்களை இலகுவில் விடுதலை செய்யும் நோக்கில் இவ்வாறு முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட கடற்படை வீரர்களின் தலைகளை மறைத்து, சீருடை அணிந்த நிலையில் அடையாள அணிவகுப்பில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளனர், இவ்வாறான ஓர் நிலையில் சிறுமியினால் குற்றவாளிகளை அடையாளம் காண முடியவில்லை. குறித்த சிறுமி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இந்த அச்சுறுத்தல் காரணமாகவும் சிறுமி எவரையும் அடையாளம் காட்டவில்லை.

படையினரை யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேற்ற இவ்வாறான பொய் குற்றச்சாட்டு சுமத்தப்படுவதாக படையினர் தெரிவித்துள்ளனர். எவ்வாறெனினும், சந்தேக நபர்களை பிரதான நீதவான் விளக்க மறியலில் வைக்க உத்தரவிட்ட போதிலும், பதில் நீதவான் ஒருவரின் ஊடாக பிணை வழங்கப்பட்டுள்ளது. சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய பாரதூரமான குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட கடற்படைவீரர்களுக்கு வெறும் 250 ரூபா ரொக்கப் பிணையிலும், 5000 ரூபா சரீரப் பிணை அடிப்படையில் பிணை வழங்கப்பட்டுள்ளது.

11 வயதான சிறுமியின் பாலியல் வன்கொடுமை தொடர்பில் ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்பட்டது என்ற போதிலும் 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இவ்வாறான குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட படைவீரர்களின் பணி விசாரணைகள் முடிவடையும் வரையில் இடைநிறுத்தப்படுவது வழமையானது என்ற போதிலும், தமது பிள்ளைகளை அருகில் வைத்துக் கொண்டு அண்மையில் கடற்படைத் தளபதியாக பதவிப் பிரமாணம் செய்து கொண்ட வைஸ்ட் அட்மிரல் ஜயந்த பெரேரா, இந்த சந்தேக நபர்களை காலி கடற்படை முகாமிற்கு இடமாற்றம் செய்துள்ளார்.

http://www.seithy.com/breifNews.php?newsID=113499&category=TamilNews&language=tamil

குளோபல் தமிழ் செய்திகள் தளத்தில் இருந்து அப்பட்டமாக கொப்பி அடித்து Seythi.com தன் செய்தியாக இதனை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் :http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/109627/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

உலகம் அறியாத... 11 வயதில் உள்ள தமிழ்ச் சிறுமியை.... ஏழு ஸ்ரீலங்கா கடற்படை மிருகங்கள் கடத்திச் சென்று, கூட்டாக பாலியல் வன்கொடுமைக்கு  உட்படுத்தியுள்ளனர். இதற்கு நியாயம் பெற்றுக் கொடுப்பதை விடுத்து.... ஒரு நாட்டின் ஜனாதிபதி செய்யும் செயலா இது? :o

 

கடற்படையினரின் மனோதிடம் பாதிக்கப் படும் என்றால், அந்தச் சிறுமியின் மன நிலை பாதிக்கப் படாதா?

தமிழனுக்கு எது நடந்தாலும், கேட்க  நாதியற்ற இனம் என்னும் துணிவில் தானே..... இப்படியெல்லாம் செய்கிறார்கள். :huh:

 

புலி இருந்திருந்தால்..... இப்படிச் செய்யவோ., பேசவோ.... துணிவு  வந்திருக்குமா?

  • கருத்துக்கள உறவுகள்
காரைநகர் பாலியல் வல்லுறவு 7 சிறீலங்கா கடற்படையினரும் காலிக்கு இடமாற்றம்!
ஜூலை 22, 2014
 
யாழ் காரைநகர் பகுதியில் சிறுமிகளை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட 7 கடற்படை வீரர்களும் பாதுகாப்பாக காலி கடற்படை தளத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர்.
 
பிணையில் விடுவிப்பதற்கான அனுமதி கடந்த வெள்ளிக்கிழமை நீதிமன்றில் வழங்கப்பட்டிருந்த நிலையில், சனி ஞாயிறு விடுமுறை தினமாகையால் கடற்படை வீரர்களின் உறவினர்கள், தங்கள் பகுதி கிராம அலுவலரின் கடிதங்கள் பெற்று நேற்று மன்றில் சமர்ப்பித்து அவர்களை பிணையில் எடுத்துள்ளனர்.
 
மேற்படி வழக்கு கடந்த வெள்ளிக்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, ஏலாரைக் கடற்படை முகாமிலிருந்த கடற்படைச் சிப்பாய்கள் அடையாள அணி வகுப்பிற்கு உட்படுத்தப்பட்டனர்.
 
எனினும், இதன்போது சிறுமி எவரையும் அடையாளம் காட்டவில்லை. இதனால், அன்றைய தினம் 7 கடற்படைச் சிப்பாய்களையும் பிணையில் செல்ல நீதவான் உத்தரவிட்டிருந்தார்.
 
பாடசாலை செல்லும் இச்சிறுமியினை ஏலாரை கடற்படை முகாமிற்குள் அழைத்துச் சென்று 11 நாட்களாக பாலியல் துஸ்பிரயோகம் செய்துள்ளதாக சிறுமியின் பெற்றோர் கடந்த செவ்வாய்க்கிழமை ஊர்காவற்றுறைப் காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்திருந்தனர்.
 
எனினும் இவ்விடயத்தினில் பாதுகாப்பு செயலாளரது ஆலோசனையின் பேரில் ஜனாதிபதி மட்டத்தில் தலையீடுகள் செய்யப்பட்டு விடுவிப்பு இடம்பெற்றதாக கூறப்படுகின்றது.
 
இந்தநிலையில் குறித்த சிப்பாய்கள் ஏழு பேரும் பாதுகாப்பாக காலியில் உள்ள கடற்படை தளத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.