Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"நானும் சுயசரிதை புத்தகம் எழுதுவேன்; அப்போது உண்மை தெரியும்!"- நட்வர் சிங்கிற்கு சோனியா காந்தி பதிலடி!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புதுடெல்லி: உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்பதால், சோனியா காந்தியை பிரதமர் பதவியை ஏற்கவேண்டாம் என தடுத்தவர் அவரது மகன் ராகுல் காந்திதான் என முன்னாள் மத்திய அமைச்சர் நட்வர் சிங் தெரிவித்துள்ள நிலையில், தானும் சுயசரிதை புத்தகம் எழுதப்போவதாகவும், அப்போது உண்மை என்னவென்று அனைவருக்கும் தெரியவரும் என்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கூறியுள்ளார்.

கடந்த 2004 ஆம் ஆண்டு மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியை பிடித்தபோது, பிரதமர் பதவியை சோனியா ஏற்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் வெளிநாட்டவர் என்ற அடிப்படையில் பா.ஜனதா தரப்பில் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் பிரதமர் பதவியை தாம் ஏற்கப்போவதில்லை என அறிவித்த சோனியா, மன்மோகன் சிங்கை அப்பதவியில் அமர்த்தினார்.

தனது உள்மனது கூறியதாலேயே தாம் பிரதமர் பதவியை ஏற்கவில்லை என சோனியா காந்தி அப்போது கூறியிருந்தார். ஆனால்  ஒரு காலத்தில் இந்திரா - சோனியா குடும்பத்தினருக்கு மிகவும் நெருக்கமாக இருந்த முன்னாள் மத்திய அமைச்சர் நட்வர் சிங், 'ஒரு வாழ்க்கை போதாது: ஒரு சுயசரிதை' ( 'One Life is Not Enough: An Autobiography') என்ற தலைப்பில் என்ற புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார்.

இதில் தனது அரசியல் வாழ்க்கையில் தான் சந்தித்த அனுபவங்கள் மற்றும் சம்பவங்களை தொகுத்து அவர் எழுதியுள்ள அந்த புத்தகத்தில், வெளியில் தெரியாமல் இருந்துவந்த பல்வேறு அரசியல் ரகசியங்கள் வெளியாகும் எனக் கூறப்படுகிறது. குறிப்பாக காங்கிரஸ் கட்சி குறித்தும், முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, சோனியா காந்தி உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்த தகவல்கள் இதில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்த தகவல் அறிந்ததாலோ என்னவோ, சோனியா காந்தியும், பிரியங்கா வதேராவும் அண்மையில்natwar.jpg நட்வர் சிங்கை சந்தித்து, இந்த புத்தகத்தை வெளியிட வேண்டாம் என்றும், ஒருவேளை வெளியிட்டாலும், தங்களது குடும்பத்தினர் பற்றிய தகவல்களை வெளியிட வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டதாக கடந்த வாரம் செய்திகள் வெளியானது.

இந்நிலையில் தனது புத்தகம் வெளியாக இருப்பதையொட்டி தொலைக்காட்சி ஒன்றுக்கு நேற்று பேட்டியளித்த நட்வர் சிங்,  2004 ஆம் ஆண்டு மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியை பிடித்தபோது, சோனியா காந்தியை பிரதமர் பதவியை ஏற்கவேண்டாம் என தடுத்தவர் அவரது மகன் ராகுல் காந்திதான் எனக் கூறினார். அவரது இந்த கூற்று, தனது உள்மனது கூறியதாலேயே தாம் பிரதமர் பதவியை ஏற்கவில்லை என சோனியா காந்தி தெரிவித்ததற்கு மாறாக உள்ளது.

மேலும் சோனியா காந்தி ஒரு சூப்பர் பிரதமர் போல் செயல்பட்டதாகவும், அவரது இல்லத்திற்கு அரசாங்கத்தின் முக்கிய கோப்புகள் அனுப்பிவைக்கபட்டதாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் ஊடக ஆலோசகராக செயல்பட்ட சஞ்சய் பாரு கூறிய குற்றச்சாட்டு உண்மைதான் என்றும் நட்வர் சிங் அந்த பேட்டியில் கூறியிருந்தார். மேலும் இதுபோன்ற மேலும் பல தகவல்கள் அந்த புத்தகத்தில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

இதனிடையே நட்வர் சிங்கின் மேற்கூறிய பேட்டி மற்றும் சுயசரிதை புத்தகம் ஆகியவற்றினால் அவர் மீது கடும் கோபமடைந்துள்ளார் சோனியா காந்தி.

இந்நிலையில் நட்வர் சிங்கின் பேட்டி குறித்து ஆங்கில செய்தி சேனல் ஒன்று, சோனியாவிடம் இன்று கருத்து கேட்டபோது, " நானும் எனது சுயசரிதையை எழுதி புத்தகமாக வெளியிடுவேன். அப்போது உண்மை என்னவென்று அனைவருக்கும் தெரியும்.

இதுபோன்ற தாக்குதல்களால் நான் வேதனையடைந்துவிட மாட்டேன். எனது மாமியார் துப்பாக்கி தோட்டாக்களால் துளைக்கப்பட்டதையும், எனது கணவர் இறந்ததையுமே நான் பார்த்துவிட்டேன். அப்படி இருக்க இதுபோன்ற விஷயங்களால் என்னை காயப்படுத்திவிட முடியாது. அவர்கள் தொடர்ந்து இதுபோன்று செயல்படட்டும். அவை என்னை பாதிக்காது" என்று பதிலளித்தார். 
  

http://news.vikatan.com/article.php?module=news&aid=30803

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.