Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அனைத்து அமைச்சகங்களிலும் உளவாளிகளை வைத்திருந்தார் சோனியா காந்தி: நட்வர் சிங்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புதுடெல்லி: ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் அனைத்து அமைச்சகங்களிலும் தனக்கான உளவாளிகளை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வைத்திருந்ததாக முன்னாள் மத்திய அமைச்சர் நட்வர் சிங், தனது சுயசரிதை புத்தகத்தில் தெரிவித்துள்ளார்.

இந்திரா, ராஜீவ் காந்தி குடும்பத்தினருக்கு ஒரு நேரத்தில் மிகவும் நெருக்கமாக இருந்த முன்னாள் மத்திய அமைச்சர் நட்வர்சிங், தனது அரசியல் அனுபவங்களை தொகுத்து ‘ஒன் லைப் இஸ் நாட் எனஃப்' ( One life is not enough - ஒரு வாழ்க்கை போதுமானதல்ல) என்ற தலைப்பில் சுயசரிதை புத்தகம் ஒன்றை எழுதி உள்ளார். இதில் அவர் பல்வேறு சர்ச்சைக்குரிய தகவல்களை சேர்த்துள்ளார்.

அவ்வாறு இடம்பெற்றுள்ள பல்வேறு தகவல்களை கடந்த இரு தினங்களாக ஆங்கில செய்தி சேனல்களுக்கு பேட்டியாகவும் அளித்து வருகிறார் நட்வர் சிங். அதில் ஒன்றாக
சோனியா காந்தி 2004 ஆம் ஆண்டு பிரதமர் பதவியை ஏற்காததின் ரகசியம் என்ன என்பதை அம்பலப்படுத்தினார்.

அப்போது அவர், “தனது உள்மனம் கூறுவதால் பிரதமர் பதவியை ஏற்கப்போவதில்லை என சோனியா காந்தி அறிவித்தார். ஆனால் அதில் உண்மையில்லை. எங்கே தனது  தந்தை ராஜீவ் காந்தியைப் போன்று தாயாரும் கொல்லப்பட்டு விடுவாரோ என்ற பயத்தில் ராகுல் காந்தி தடுத்ததின் பேரில்தான் சோனியா காந்தி பிரதமர் பதவி ஏற்கவில்லை” என தெரிவித்திருந்தார். மேலும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது, அரசாங்க கோப்புகள் சோனியா காந்தியின் பார்வைக்கு சென்றதாகவும் அவர் கூறியிருந்தார்.

இதனையடுத்து இரண்டாவது நாளாக நேற்று அளித்த பேட்டியில், இலங்கை தமிழர் பிரச்னையை natwar%20sing%20height.jpgமுன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி சரியாக கையாளவில்லை என்றும், மத்திய அமைச்சரவைக்கு கூட தெரிவிக்காமலும், யாருடனும் கலந்தாலோசிக்காமலும் தன்னிச்சையாக இந்திய அமைதிப்படையை இலங்கைக்கு அனுப்பி வைக்கும் உத்தரவை பிறப்பித்ததாகவும் நட்வர் சிங் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் நட்வர் சிங்கின் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள மேலும் சில தகவல்களும் வெளியாகி உள்ளது. அதில், கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில்  அனைத்து அமைச்சகங்களிலும் தனது உளவாளிகளை வைத்திருந்ததாகவும் நட்வர் சிங் தெரிவித்துள்ளார்.

மேலும் முன்னாள் பிரதமர்களான நரசிம்ம ராவ் மற்றும் மன்மோகன் சிங் ஆகிய இருவரையுமே சோனியா காந்தி விளிம்பு நிலையிலேயே வைத்திருந்ததாகவும், இருவருமே சோனியாவின் அணுகுமுறை குறித்து தம்மிடம் புலம்பியுள்ளதாகவும், அதிலும் சோனியாவின் அணுகுமுறை காரணமாகவே தனது உடல் நிலை பாதிக்கப்பட்டதாக நரசிம்ம ராவ் தம்மிடம் குறைபட்டுக்கொண்டதாகவும் எழுதியுள்ள நட்வர் சிங், ராகுல் காந்தியை பற்றியும் தலைவருக்கான தகுதி இல்லாதவராக உள்ளார் என்றும் எழுதியுள்ளார்.

" ராகுல் காந்தி நல்லவர்தான்; ஆனால் ஒரு முழு நேர அரசியல்வாதியாக திகழ்வதற்கு தேவையான ஒரு தீ ( fire )
அவரிடம் இல்லை" என்றும் நட்வர் சிங் குறிப்பிட்டுள்ளார்.

 

http://news.vikatan.com/article.php?module=news&aid=30854

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.