Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குருஜி ரவிசங்கரின் வன்னி பயணத்திற்கு அரசு ஹெலி வழங்கியது ஏன்

Featured Replies

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மனதில் யுத்த மனோபாவம் நீங்கி அமைதி ஏற்படட்டும் என்பதற்காகவே விசேட ஹெலிகொப்டரை வழங்கி ஸ்ரீஸ்ரீ ரவி ரவிசங்கர் குருஜியை வன்னிக்கு அனுப்பி வைத்தோம் எனத் தெரிவிக்கும் அமைச்சரும் பாதுகாப்புத்துறை பேச்சாளருமான கெஹலிய ரம்புக்வெல பேச்சுக்கான பிரபாகரனின் நேரடி உறுதிமொழியை பெற்றுக் கொள்வதற்காகவே நோர்வே தூதுவருக்கு வன்னி செல்ல வசதி செய்து கொடுத்தோமென்று தெரிவித்தார்.

இது தொடர்பாக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல மேலும் கருத்து தெரிவிக்கையில்;

உலகில், சாந்தி சமாதானத்தை ஏற்படுத்துவதற்காக பாடுபட்டு வரும் ரவிசங்கர் குருஜி வன்னிக்கு சென்று புலிகளை சந்தித்து ஆசீர்வாதம் வழங்க அனுமதியை இலங்கை அரசாங்கத்திடம் கேட்டிருந்தார்.

கேட்டவுடன் அவருக்கு ஹெலிகொப்டர் வசதியை வழங்கி வன்னிக்கு அனுப்பி வைத்தோம்.

இது அரசாங்கத்தின் நட்புறவை வெளிப்படுத்துகிறது. நாம் எப்போதும் சமாதான பேச்சுவார்த்தைகளை நடத்த தயாராகவே இருக்கின்றோம். இதன் மூலமாவது பிரபாகரனின் யுத்த மனோபாவம் நீங்கி அமைதியான மனோபாவம் ஏற்படட்டும் என்பதே எமது எண்ணமாகும்.

நோர்வேயுடன் இலங்கை நீண்ட காலமாக இராஜதந்திர உறவுகளை வைத்துக் கொண்டுள்ளது. இதனை கைவிடுவதென்பது முடியாத காரியம்.

அதேவேளை, எமது அனுசரணையாளராக நோர்வே செயற்பட்டு வருகிறது.

அதிலிருந்து வெளியேறுவதா இல்லையா என்பது நோர்வே எடுக்க வேண்டிய தீர்மானம். அதில் நாம் தலையிடுவது அவசியமற்றது.

பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதற்கான பிரபாகரனின் நேரடியான உறுதி மொழியை வெற்றி கொள்வதற்காகவே நோர்வே தூதுவர் ஹான்ஸ்பிரட்ஸ்கார் வன்னி சென்றார். அதற்கு அரசாங்கம் வசதிகளை செய்து கொடுத்தது.

அரசாங்கம் தாக்குதல்களை நடத்தவில்லை. விடுதலைப் புலிகளின் தாக்குதல்களுக்கு பதில் தாக்குதலையே நடத்துகிறது. எனவே, முதலில் புலிகள் தமது தாக்குதல்களை நிறுத்தட்டுமென்றும் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

http://www.thinakkural.com/news/2006/9/24/...s_page11494.htm

  • தொடங்கியவர்

குருஜி ரவிசங்கர் வன்னிக்குச் செல்ல அரசு ஹெலி வழங்கியமைக்கு ஹெல உறுமய கடும் கண்டனம்

இலங்கை `விபசார விடுதியல்ல'வென சீறுகிறார் மேதானந்த தேரர்

இலங்கைக்குள் எந்த நோக்கத்தோடு வருகிறார்கள்? வன்னிக்கு ஏன் செல்கிறார்கள்? என்பது தொடர்பாக ஆராயாமல் எவருக்கும் ஹெலிகொப்டர் வசதிகளை வழங்குவதை வன்மையாக கண்டிப்பதாக தெரிவிக்கும் ஜாதிக ஹெல உறுமயவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான எல்லாவெல மேதானந்த தேரர் இவ்வாறு வந்து போவதற்கு இலங்கை `விபசார விடுதியல்ல' கௌரவமிக்க இறைமையுள்ள நாடென்றும் தெரிவித்தார்.

இந்தியாவிலிருந்து இலங்கை வந்த ரவிசங்கர் குருஜிக்கு அரசாங்கம் ஹெலிகொப்டர் வசதி வழங்கி வன்னிக்கு அனுப்பியது தொடர்பாக கருத்துத் தெரிவிக்கையிலேயே எல்லாவெல மேதானந்த தேரர் இதனைத் தெரிவித்தார்.

எமது நாடு பயங்கரவாதப் பிரச்சினைக்கு முகம் கொடுத்துள்ள சூழ்நிலையில் வெளிநாடுகளிலிருந்து வருவோரை எதுவித விசாரணையும் செய்யாது அவர்களது நோக்கங்களை அறியாது வன்னிக்கு சென்று புலிகளை சந்திப்பதற்கு வசதிகளை அரசாங்கம் செய்து கொடுப்பதை ஹெல உறுமய எதிர்ப்பதோடு வன்மையாகக் கண்டிக்கின்றது. எதிர்காலங்களில் அரசாங்கம் இந்தத் தவறை செய்யக்கூடாது.

இவ்வாறான நடவடிக்கைகளால் நாட்டின் நெருக்கடி நிலை அதிகரித்துக் கொண்டே போகும். பிரச்சினையை தீர்ப்பதற்கான வாய்ப்புக்கள் நழுவிப் போகும்.

எமது நாட்டுக்கென்று நிர்வாகம், சுதந்திரம், கௌரவம் இருக்கின்றது. இங்கு வருவோர் போவோர் தொடர்பாக ஆராய வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பு. அதைவிடுத்து எவரையும் இங்கு வந்து போக அனுமதிப்பதற்கு எமது நாடொன்றும் விபசார விடுதியல்ல.

வரலாற்று யுத்தங்களின் போது உளவாளிகளாக செயற்பட்டவர்கள் சாதுக்களே ஆவார்கள். எனவே, வெளிநாடுகளிலிருந்து வன்னிக்கு செல்ல அனுமதி கோரும் சாதுக்களுக்கு இடமளிக்கக் கூடாதென்றும் எல்லாவெல மேதானந்த தேரர் தெரிவித்தார்.

http://www.thinakkural.com/news/2006/9/26/...s_page11606.htm

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.