Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஆணைக் குழுவில் நம்பிக்கையில்லை; மன்னார் ஆயர் நேரடியாகவே குற்றச்சாட்டு! (வீடியோ) -

Featured Replies

mannar%20bishop%206854566.jpg

 

எனக்கு இந்த ஆணைக் குழுவில் நம்பிக்கையில்லை. இது அரசாங்கத்தின் வற்புறுத்தலின் பெயரில் நடைபெறும் கண்துடைப்பு வேலையே. எனவே இத்தகைய ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளிப்பதற்கு நான் விரும்பவில்லை. பதிலாக ஓர் அறிக்கையை மாத்திரம் உங்களிடம் சமர்ப்பிக்கிறேன். - இவ்வாறு காணாமற்போனோர் தொடர்பான விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் தெரிவித்திருக்கிறார் மன்னார் மறை மாவட்ட ஆயர் வண. இராயப்பு ஜோசப்.
 
ஆணைக் குழுவின் ஆறாவது அமர்வு மன்னாரில் இன்று மூன்றாவது நாளாக மன்னார் பிரதேச செயலகத்தில் நடைபெறுகிறது. இதன்போது ஆயருக்கும் சாட்சியமளிக்க அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதன்படி இன்று முற்பகல் 10.30 மணிக்கு மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இராயப்பு ஜேசப் ஆண்டகையும் மன்னார் மறை மாவட்ட குரு முதல்வர் அன்ரனி விக்டர் சோசை அடிகளாரும் ஆணைக்குழுவின் முன் சமூகமளித்தனர். ஆணைக்குழு முன் சாட்சியமளிக்க ஆயர் அழைக்கப்பட்டார். அந்த நேரம் அவர் 7 பக்கங்கள் கொண்ட மனு ஒன்றை ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்து அதனை ஆணைக்குழு முன் வாசித்துக்காட்டினார். அந்த மனுவில் முதல் இரண்டு பக்கங்கள் ஆணைக் குழுவுக்கு தெரிவிக்கும் கருத்துக்களையும், ஏனைய பக்கங்கள் ஏற்கனவே ஜனாதிபதிக்கு வழங்கப்பட்ட 14 அம்சக் கோரிக்கைகளும் அடங்கியிருந்தன. சுமார் 45 நிமிடங்கள் ஆணைக்குழு முன் அவர் விளக்கமளித்தார்.
 
இதனைத் தொடர்ந்து ஆணைக்குழுவின் தலைவர் ஆயருக்கு விளக்கமளித்தார். அதில், இந்த ஆணைக்குழு காணாமற்போனவர்கள் சம்பந்தமாகவே விசாரணைகளை மேற்கொள்ள கூடியிருக்கிறது. வரையறுக்கப்பட்ட தன்மையில் நாம் இருப்பதால் அதற்கு அப்பால் நாங்கள் செயற்பட முடியாது. ஆகவே காணாமற்போனவர்கள் தொடர்பாக தங்களால் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டால் அவற்றை ஏற்று நாங்கள் நடவடிக்கைகளை மேற்கொள்வோம். - என்றார். சாட்சியம் அளித்ததன் பின்னர் ஆயர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தார். அவர் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு:-
 
இலங்கையில் காலத்துக்கு காலம் பல ஆணைக் குழுக்கள் உருவாக்கப்பட்டு அவை சாட்சியங்களை பதிவு செய்திருந்தன. ஆனால் இவற்றின்மூலம் தமிழ் மக்களுக்கு பலன் எதுவும் இதுவரையில் கிடைக்கவில்லை. இந்த ஆணைக்குழுவும் அரசாங்கத்தினால் கட்டாயப்படுத்தப்பட்டு ஏற்படுத்தப்பட்டதே. நீங்கள் சாட்சியங்களை பதிவு செய்யும் முறையை நாம் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. மக்கள் தங்களது ஆதங்கங்களை வெளிப்படுத்த உங்கள் ஆணைக்குழுவை ஒரு களமாக பயன்படுத்துகின்றனர் என்று மட்டுமே உணரமுடிகிறது. ஓர் உதாரணத்தை மட்டும் நான் சொல்ல விரும்புகின்றேன்.
 
கடந்த 2012 ஆம் ஆண்டு ஆவணி மாதம் கௌரவ ஜனாதிபதி அவர்கள், கொழும்பு அதிமேதகு கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை ஊடாக எனக்கு செய்தி ஒன்றை அனுப்பி வைத்திருந்தார். உங்கள் ஆதங்கங்களை வரிசைப்படுத்தி தனக்கு அனுப்பிவையுங்கள் என்று அதில் அவர் குறிப்பிட்டிருந்தார். நானும் எனது ஆதங்கங்களை கர்தினால் ஊடாக தெரிவித்தேன். அதன் பிற்பாடு கொழும்பு மறை மாவட்ட பேராயரின் இல்லத்தில் இடம்பெற்ற விசேட கூட்டம் ஒன்றுக்கு, ஜனாதிபதி அவரது செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் ஆகியோரை அனுப்பிவைத்திருந்தார். அந்தக் கூட்டத்தில் ஏற்கனவே நான் கொடுத்த 14 விடயங்கள் தொடர்பில் அவர்கள் எந்தப் பதிலும் கூறவில்லை. எல்லாவற்றுக்கும் ஆதாரம் தேவை என்றனர். ஒவ்வொன்றுக்கும் தரவுகள் தேவை என்று சொல்கிறீர்கள். மக்கள் மத்தியில் நான் சென்று பேச முடியாத நிலையே வடக்கு, கிழக்கில் ஏற்பட்டுள்ளது.
 
சி.ஐ.டி மற்றும் ஏனைய கண்காணிப்பாளர்களும் மக்களிடம் சென்று ஆயர் என்ன பேசினார் என்று கேட்பார்கள். அதனை சென்னால் மக்களுக்கு நெருக்கடி கொடுப்பார்கள், காணாமல் போகச் செய்வார்கள். எனவே நான் மக்களை துன்பப்படுத்த விரும்பவில்லை. துன்பத்துக்கு இட்டுச்செல்வதையும் நான் விரும்பவில்லை. நீங்கள் தேடுங்கள் தரவுகளை. எங்கெங்கு சரியான தகவல் இருக்கிறது, தேடினால் கிடைக்கும் என்பதை நான் சொல்கிறேன் என்று அவர்களுக்கு விளக்கினேன். தாம் நடவடிக்கை எடுப்போம் என்று தெரிவித்தனர். அதற்கு பிற்பாடு இரண்டு மூன்று கூட்டங்கள் நடைபெற்றன. எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இன்று இரண்டு வருடங்கள் ஆகிவிட்டன. நாங்கள் வானத்தை அண்ணார்ந்து பார்க்கும் நிலைதான் ஏற்பட்டுள்ளது. இப்படித்தான் எல்லா முயற்சிகளையும் அரசாங்கம் ஒரு கண்துடைப்புக்காக செய்கின்றது. உண்மையும் நீதியும் இல்லாத இடத்தில் நல்லிணக்கம் ஏற்படப்பேவதில்லை.
 
உண்மையாக மக்களுக்கு விடுதலையை கொடுக்க வேண்டும். நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும். இப்படியான ஒரு நிலைமை ஏற்பட வேண்டும் என்று நாங்கள் முயற்சிக்கின்றோம். ஆனால் அரசாங்கமும், அரசுடன் ஈடுபடக்கூடிய அரசியல் வாதிகளும் இணைந்து இப்படிப்பட்ட ஒரு முயற்சியை, நல்ல நோக்கத்தை வேறு திசைக்கு கொண்டு சென்று தமது அரசியலுக்காக பயன்படுத்துகின்றனர். இது மிகவும் கவலையளிக்கிறது. நிரந்தரமாக தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு கிடைக்க வேண்டும். இதுவே எனது வேண்டுகோள். காணாமற்போனவர்கள் தொடர்பாக விசாரணைக் குழுவின் முன்னிலையில் எனது ஆதங்கத்தை வெளிப்படுத்துவதற்காகவே வந்தேன்- என மன்னார் மறைமாவட்ட ஆயர் தெரிவித்தார்.
mannar%20bishop%206854567.jpg
 
mannar%20bishop%206854565.jpg
 
 
 
 

ஆயர் உண்மையிலேயே போற்றுதற்கு உரியவர். எந்த இடத்திலும் எம் மக்களை கைவிடாத ,உண்மையை சமரசம் செய்யாத போக்கு.
இன்னும் சில - - - குருமார்களும் இருக்கிறார்களே..
பூனை கண்ணை மூடிய கதையாய். இருக்கும் இடமே தெரியாமல்.இவர்கள் எல்லாம் உண்மையிலேயே தமிழர்களா? அல்லது
கலப்பா..?

  • கருத்துக்கள உறவுகள்
ஆணைக்குழு கண்துடைப்பு நடவடிக்கையே – நேரில் தெரிவித்தார் மன்னார் ஆயர்!

 

rayappu-300x168.jpgஇலங்கையில் காணாமல்போனோர் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் மன்னார் மாவட்டத்திற்கான விசாரணைகள் ஞாயிறன்று மன்னார் பிரதேச செயலகத்தில் நடைபெற்றபோது, மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை ஆணைக்குழுவின் முன் தோன்றி, அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்டுள்ள இந்த ஆணைக்குழுவின் மீது நம்பிக்கை இல்லையென்ற போதிலும், காணாமல்போனவர்கள் தொடர்பிலான விடயங்கள் பற்றிய தமது ஆதங்கத்தைத் தெரிவிப்பதற்காக சாட்சியம் வழங்குவதாகக் கூறியுள்ளார்.

காணாமல்போனவர்கள் பற்றிய விடயங்கள் மட்டுமல்லாமல், இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்திற்கு அடிப்படையாக கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவினால் பரிந்துரைக்கப்பட்ட பல விடயங்கள் நடைமுறைப்படுத்தப்படவில்லை எனவும் தனது சாட்சியத்தில் அவர் குறிப்பிட்டார்.

யுத்தத்திற்குப் பின்னர் நாட்டில் நல்லிணக்கம், அமைதி ஏற்படுவதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாகவும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அநேகமான சிபாரிசுகள் நடைமுறைப்படுத்தப்பட்டிருப்பதாகவும் அரசாங்கம் கூறி வருவதை அவர் இந்த ஆணைக்குழுவின் முன்னால் மறுத்துரைத்தார்.

யுத்தத்திற்குப் பின்னரான நிலைமைகளில் முன்னேற்றத்திற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய முக்கிய விடயங்கள் குறித்து அரசாங்கம் தன்னிடம் கேட்டிருந்தபோது, அது தொடர்பில் 14 விடயங்கள் தொடர்பாக அறிக்கை சமர்ப்பித்து, அதுபற்றி அரச உயர் மட்டத்தில் மூன்று கூட்டங்கள் நடைபெற்று, அவைகள் தொடர்பாக கவனம் செலுத்தப்படும், நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டிருந்த போதிலும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் அவர் ஆணைக்குழு முன்னிலையில் சுட்டிக்காட்டினார்.

பலவிதமாகக் காணாமல் போயிருப்பவர்கள். உழைப்பாளிகளின்றி தனிமையில் வாடுகின்ற காணாமல் போனவர்களின் குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவிகள், உரிய விசாரணைகளின்றி நீண்டகாலமாக சிறைச்சாலைகளில் வாடுகின்ற தமிழ் அரசியல் கைதிகள், வவுனியா சிறைச்சாலையில் கலகம் மூண்டதாகக் கூறி தமிழ் கைதிகள் மீது தாக்குதல் நடத்தி இரு தமிழ் கைதிகள் கொல்லப்பட்ட சம்பவம் உள்ளிட்ட சிறைக்கைதிகள் மீதான தாக்குதல்கள், மதங்களுக்கிடையில் குரோதங்களை உருவாக்கும் நடவடிக்கைகள் குறித்து கவனம் செலுத்தப்படாமை உள்ளிட்ட 14 விடயங்கள் குறித்து உரிய கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும் மன்னார் ஆயர் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையிலான தமது சாட்சியத்தின்போது வலியுறுத்தினார்.

அவருடைய சாட்சியம் குறித்து பதிலளித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வெல் பரணகம, இந்த ஆணைக்குழுவிற்கு குறித்தொதுக்கப்பட்ட கடமைகள் தொடர்பில் உரிய கவனம் செலுத்தி ஆணைக்குழு செயற்பட்டு வருவதாகவும், அதேநேரம் ஆயரின் சாட்சியத்தில் குறிப்பிடப்பட்ட தமது கடமை எல்லைக்கு அப்பாற்பட்ட விடயங்கள் குறித்து ஆணைக்குழு நடவடிக்கை எடுக்க முடியாதிருப்பதாகவும் கூறினார்.

வெள்ளிக்கிழமை முதல் நான்கு தினங்களுக்கு நடைபெறுகின்ற மன்னார் மாவட்டத்திற்கான ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகள் நாளை திங்கட்கிழமை இறுதி நாளன்று மடு பிரதேச செயலகத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

http://tamilleader.com/?p=39070

  • கருத்துக்கள உறவுகள்

ஆணைக்­கு­ழு­வில் நம்­பிக்­கை­யில்­லை

 
 
எனக்கு இந்த ஆணைக் குழுவில் நம்­பிக்­கை­யில்லை. இது அர­சாங்­கத்தின் வற்­பு­றுத்­தலின் பெயரில் நடை­பெறும் கண்­து­டைப்பு வேலையாகும். எனவே இத்­த­கைய ஆணைக்­குழு முன்­னி­லையில் சாட்­சி­ய­ம­ளிப்­ப­தற்கு நான் விரும்­ப­வில்லை. பதி­லாக ஓர் அறிக்­கையை மாத்­திரம் உங்­க­ளிடம் சமர்ப்­பிக்­கிறேன் என்று காணா­மல்­போனோர் தொடர்­பான விசா­ரணை நடத்தும் ஜனா­தி­பதி ஆணைக்­குழு முன்­னி­லையில் மன்னார் மறை மாவட்ட ஆயர் இரா­யப்பு ஜோசப் ஆண்­டகை தெரி­வித்­துள்­ளார்.
Untitled-1eeee.jpg
 
ஆணைக் குழுவின் ஆறா­வது அமர்வு மன்­னாரில் நேற்று மூன்­றா­வது நாளாக மன்னார் பிர­தேச செய­ல­கத்தில் நடை­பெற்­ற­து. இதன்­போது ஆய­ருக்கும் சாட்­சி­ய­ம­ளிக்க அழைப்பு விடுக்­கப்­பட்­டி­ருந்­தது. இதன்­படி நேற்று முற்­பகல் 10.30 மணிக்கு மன்னார் மறை­மா­வட்ட ஆயர் இரா­யப்பு ஜோசப் ஆண்­ட­கையும் மன்னார் மறை மாவட்ட குரு முதல்வர் அன்­ரனி விக்டர் சோசை அடி­க­ளாரும் ஆணைக்­கு­ழுவின் முன் சமு­க­ம­ளித்­தனர்.
 
ஆணைக்­குழு முன் சாட்­சி­ய­ம­ளிக்க ஆயர் அழைக்­கப்­பட்டார். அந்த நேரம் அவர் 7 பக்­கங்கள் கொண்ட மனு ஒன்றை ஆணைக்­கு­ழு­விடம் சமர்ப்­பித்து அதனை ஆணைக்­குழு முன் வாசித்­துக்­காட்­டினார். அந்த மனுவில் முதல் இரண்டு பக்­கங்கள் ஆணைக் குழு­வுக்கு தெரி­விக்கும் கருத்­துக்­க­ளையும், ஏனைய பக்­கங்கள் ஏற்­க­னவே ஜனா­தி­ப­திக்கு வழங்­கப்­பட்ட 14 அம்சக் கோரிக்­கை­களும் அடங்­கி­யி­ருந்­தன.
 
சுமார் 45 நிமி­டங்கள் ஆணைக்­குழு முன் அவர் விளக்­க­ம­ளித்தார். இதனைத் தொடர்ந்து ஆணைக்­கு­ழுவின் தலைவர் ஆய­ருக்கு விளக்­க­ம­ளித்தார்.
 
அதில், இந்த ஆணைக்­குழு காணா­மற்­போ­ன­வர்கள் சம்­பந்­த­மா­கவே விசா­ர­ணை­களை மேற்­கொள்ள கூடி­யி­ருக்­கி­றது. வரை­ய­றுக்­கப்­பட்ட தன்­மையில் நாம் இருப்­பதால் அதற்கு அப்பால் நாங்கள் செயற்­பட முடி­யாது. ஆகவே காணா­மற்­போ­ன­வர்கள் தொடர்­பாக தங்­களால் கருத்­துக்கள் முன்­வைக்­கப்­பட்டால் அவற்றை ஏற்று நாங்கள் நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்வோம் என்றார்.
 
சாட்­சியம் அளித்­ததன் பின்னர் ஆயர் ஊட­கங்­க­ளுக்குக் கருத்துத் தெரி­வித்தார். அவர் தெரி­வித்த கருத்­துக்கள் வரு­மாறு:-
 
இலங்­கையில் காலத்­துக்கு காலம் பல ஆணைக் குழுக்கள் உரு­வாக்­கப்­பட்டு அவை சாட்­சி­யங்­களை பதிவு செய்­தி­ருந்­தன. ஆனால் இவற்­றின்­மூலம் தமிழ் மக்­க­ளுக்கு பலன் எதுவும் இது­வ­ரையில் கிடைக்­க­வில்லை. இந்த ஆணைக்­கு­ழுவும் அர­சாங்­கத்­தினால் கட்­டா­யப்­ப­டுத்­தப்­பட்டு ஏற்­ப­டுத்­தப்­பட்­டதே. நீங்கள் சாட்­சி­யங்­களை பதிவு செய்யும் முறையை நாம் ஏற்­றுக்­கொள்­ளப்­போ­வ­தில்லை.
 
மக்கள் தங்­க­ளது ஆதங்­கங்­களை வெளிப்­ப­டுத்த உங்கள் ஆணைக்­கு­ழுவை ஒரு கள­மாக பயன்­ப­டுத்­து­கின்­றனர் என்று மட்­டுமே உண­ர­மு­டி­கி­றது. ஓர் உதா­ர­ணத்தை மட்டும் நான் சொல்ல விரும்­பு­கின்றேன். கடந்த 2012 ஆம் ஆண்டு ஆவணி மாதம் கௌரவ ஜனா­தி­பதி அவர்கள், கொழும்பு அதி­மே­தகு கர்­தினால் மல்கம் ரஞ்சித் ஆண்­டகை ஊடாக எனக்கு செய்தி ஒன்றை அனுப்பி வைத்­தி­ருந்தார். உங்கள் ஆதங்­கங்­களை வரி­சைப்­ப­டுத்தி தனக்கு அனுப்­பி­வை­யுங்கள் என்று அதில் அவர் குறிப்­பிட்­டி­ருந்தார்.
 
நானும் எனது ஆதங்­கங்­களை கர்­தினால் ஊடாக தெரி­வித்தேன். அதன் பிற்­பாடு கொழும்பு மறை மாவட்ட பேரா­யரின் இல்­லத்தில் இடம்­பெற்ற விசேட கூட்டம் ஒன்­றுக்கு, ஜனா­தி­பதி அவ­ரது செய­லாளர் லலித் வீர­துங்க மற்றும் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் ஆகி­யோரை அனுப்­பி­வைத்­தி­ருந்தார். அந்தக் கூட்­டத்தில் ஏற்­க­னவே நான் கொடுத்த 14 விட­யங்கள் தொடர்பில் அவர்கள் எந்தப் பதிலும் கூற­வில்லை. எல்­லா­வற்­றுக்கும் ஆதாரம் தேவை என்­றனர். ஒவ்­வொன்­றுக்கும் தர­வுகள் தேவை என்று சொல்­கி­றீர்கள்.
 
மக்கள் மத்­தியில் நான் சென்று பேச முடி­யாத நிலையே வடக்கு, கிழக்கில் ஏற்­பட்­டுள்­ளது. சி.ஐ.டி மற்றும் ஏனைய கண்­கா­ணிப்­பா­ளர்­களும் மக்­க­ளிடம் சென்று ஆயர் என்ன பேசினார் என்று கேட்­பார்கள். அதனை சென்னால் மக்­க­ளுக்கு நெருக்­கடி கொடுப்­பார்கள், காணாமல் போகச் செய்­வார்கள். எனவே நான் மக்­களை துன்­பப்­ப­டுத்த விரும்­ப­வில்லை. துன்­பத்­துக்கு இட்­டுச்­செல்­வ­தையும் நான் விரும்­ப­வில்லை. நீங்கள் தேடுங்கள் தர­வு­களை.
 
எங்­கெங்கு சரி­யான தகவல் இருக்­கி­றது, தேடினால் கிடைக்கும் என்­பதை நான் சொல்­கிறேன் என்று அவர்­க­ளுக்கு விளக்­கினேன். தாம் நட­வ­டிக்கை எடுப்போம் என்று தெரி­வித்­தனர். அதற்கு பிற்­பாடு இரண்டு மூன்று கூட்­டங்கள் நடை­பெற்­றன. எந்த முன்­னேற்­றமும் ஏற்­ப­ட­வில்லை. இன்று இரண்டு வரு­டங்கள் ஆகி­விட்­டன. நாங்கள் வானத்தை அண்­ணார்ந்து பார்க்கும் நிலைதான் ஏற்­பட்­டுள்­ளது. இப்­ப­டித்தான் எல்லா முயற்­சி­க­ளையும் அர­சாங்கம் ஒரு கண்­து­டைப்­புக்­காக செய்­கின்­றது. உண்­மையும் நீதியும் இல்­லாத இடத்தில் நல்­லி­ணக்கம் ஏற்­ப­டப்­பே­வ­தில்லை.
 
உண்­மை­யாக மக்­க­ளுக்கு விடு­த­லையை கொடுக்க வேண்டும். நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்த வேண்டும். இப்­ப­டி­யான ஒரு நிலைமை ஏற்­பட வேண்டும் என்று நாங்கள் முயற்­சிக்­கின்றோம். ஆனால் அர­சாங்­கமும், அர­சுடன் ஈடு­ப­டக்­கூ­டிய அரசியல் வாதிகளும் இணைந்து இப்படிப்பட்ட ஒரு முயற்சியை, நல்ல நோக்கத்தை வேறு திசைக்கு கொண்டு சென்று தமது அரசியலுக்காக பயன்படுத்துகின்றனர். இது மிகவும் கவலையளிக்கிறது. நிரந்தரமாக தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு கிடைக்க வேண்டும். இதுவே எனது வேண்டுகோள். காணாமற்போனவர்கள் தொடர்பாக விசாரணைக் குழுவின் முன்னிலையில் எனது ஆதங்கத்தை வெளிப்படுத்துவதற்காகவே வந்தேன்- என மன்னார் மறைமாவட்ட ஆயர் தெரிவித்தார். 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.