Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆட்கடத்தல் மற்றும் கொலைகள் பாரியளவில் அதிகரிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆட்கடத்தல் மற்றும் கொலைகள் பாரியளவில் அதிகரிப்பு - ஆசிய மனித உரிமைகள் ஆணையகம்

அடையாளம் தெரியாதவர்களினால் வெள்ளை வானில் வருகை தந்து ஆட்களை கடத்துதல் மற்றும் கொலை செய்தல் போன்ற சம்பவங்கள் பாரிய அளவில் அதிகரித்து வருவதாக ஆசிய மனித உரிமைகள் ஆணையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அமைப்பின் தலைவர் பசில் பர்ணாண்டோ எமது செய்திச் சேவைக்கு மேலதிக விபரம் தெரிவிக்கையில், வெள்ளை வான் கடத்தல் சம்பவங்கள் வட கிழக்கில் மட்டுமல்லாமல், தென்பகுதியிலும் நடைபெறுவதாக கூறினார்.

இப்படியான சட்டவிரோதமான நடவடிக்கைகள் சட்டம் ஓழுங்கு மற்றும் ஜனநாயகத்தை மதிக்கும் அனைவரையும் அச்சத்திற்கு உள்ளாக்குவதுடன், நாட்டின் ஸ்திரத் தன்மையை பெரிதும் பாதிக்கும் விடயம் எனவும் தெரிவித்தார்.

தென்பகுதியில் 1987 ம் ஆண்டு காலப்பகுதியில், இடம்பெற்ற சம்பவங்கள் தற்சமயம், வட கிழக்கு பிரதேசங்களில் இடம்பெறுகின்றது.

அதேபோல, அந்த காலப் பகுதியினில் தென் பகுதியில் இடம்பெற்ற சம்பவங்கள், தற்சமயம், வட கிழக்கு பகுதிகளிலும் இடம்பெறுகின்றது.

இப்படியான சம்பவங்கள் தொடரும் பட்சத்தில், நாட்டின், ஸ்திரத் தன்மையும், மனித வர்க்கத்தின் நாகரீகமும் பாழ்பட்டு போகும் எனவும், ஆசிய மனித உரிமைகள் ஆணையகத்தின் தலைவர் கவலை வெளியிட்டுள்ளார்.

அன்புடன்

யாழ்குரு

http://www.pathivu.com/index.php?subaction...t_from=&ucat=2&

திருகோணமலையின் நிலமையைப் பாருங்கோ.........அண்மையில் சுங்கவீதியில் கருணாப் பார்ட்டியின் அலுவலகம் திறக்கப்பட்டபின்னர் நிறைய இளம் பெடியங்கள் பயத்தால் கொழும்புக்கு போய் விட்டார்கள்........... அப்பிடியிருந்தும் சென்ற சனிக்கிழமை 5 இளம் பராயத்தினரை இவர்கள் பிடித்து வைத்திருப்பதாகவும் பெற்றோர்கள் கேட்கப் போண இடத்தில் அடித்து விரட்டியிருக்கிறார்கள் இதுக்கு அந்த றோட்டின் இரு வாயில்களிலும் பொலிஸ் காவல் நிலைகள்.... அதை விட நேற்று தொலைத் தொடர்பு நிலையத்தில் வேலை செய்யும் இளைஞர் ஒருவர் இரவு 11மணியளவில் ஆயுததாரிகளால் தொலைத் தொடர்பு அலுவலகத்தில் வைத்து கடத்தப் பட்டிருக்கிறார்... திருகோணமலை நிலமை எல்லோருக்கும் தெரியும் இரவு 7மணிக்குப் பின் சன நடமாட்டமே இராது.....இந்த நேரத்தில் ஆயுதபாணிகள் வருவதென்பது இதில் அரசாங்கத்தின் பங்கு எவ்வளவு தூரம் இருக்கிறது என்பதை காட்டுகிறது........ ஆனால் தொலைதொடர்பு ஊழியர்கள் பெரியஅளவிலான பணிப்புறக்கணிப்பை செய்ததின் மூலம் இங்குள்ள பாதுகாப்பு பிரிவு கலக்கம் கண்டு 24மணித்தியாலத்தில் அவரின் நிலையைத் தெரிவிப்பதாக கூறிய உறுதிமொழியின் பின் வேலைகள் நடை பெற்றன........ஆனால் அந்த உறுதிமொழிகள் எந்த அளவு உண்மை என்பதை பொறுத்திருந்துதான் பாக்கவேணும் .........போராட்ட வாழ்க்கையில் மிகவும் பயங்கரமான நிலையில் இங்குள்ளவர்கள் வாழ்த்து கொண்டு இருக்கிறார்கள் இன்று தமிழனைக் கண்டே பயப்பட வேண்டிய நிலை???????????????

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.