Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மகிந்த ராஜபக்சவின் ஆலோசகர் இயக்குனரின் மனைவியை பாலியல் துஸ்பிரயோகம்!

Featured Replies

ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் கலாச்சாரம் மற்றும் சங்கீதம் தொடர்பான ஆலோசகர் சமன் திஸாநாயக்க பிரபல தொலைக்காட்சி நாடக இயக்குனர் நாலக வெதமுல்ல என்பவரின் மனைவி சந்தி ரணதுங்கவை  பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்படுத்தினார்.

என்று  நுகேகொட சிறுவர் பெண்கள் விசாரணை பிரிவில் முறைப்பாடு செய்துள்ளார்.
அவரது முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.

எனது பெயர் சந்தி ரணதுங்க தொலைக்காட்சி நாடக இயக்குனரின் மனைவி திருமணம் முடித்து ஒரு குழந்தையும் உள்ளது.

நான் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்னர் கலாச்சார அமைச்சில் சங்கீத ஒருங்கிணைப்பாளராக பணியாற்றி வந்தேன். கடமையாற்றிய காலத்தில் ஜனாதிபதி ஆலோசகர் சமன் திஸா நாயக்கவே ஜனாதிபதியின் சங்கீத மற்றும் கலாச்சார ஆலோசகராக கடமையாற்றினார் இதன் காரணமாக நான் அவருடன் இணைந்து சில பணிகளை மேற்கொள்ள எனது பணிப்பாளர் நியமித்தார்.

ஒரு மாதத்திற்கு ஒருமுறை அவரது அலுவலகத்திற்கு சென்று நான் அவரை சந்திக்க வேண்டி நேர்ந்தது.என்னை கண்ட அவர் எனது பணிப்பாளரிடன் தனது செயலாளராக பணியாற்ற நியமிக்கும் படி கேட்டுக்கொண்டார்.

பணிப்பாளரின் உத்தரவுக்கமைய நான் அவரது செயலாளராக பணியில் சேர்ந்து இரண்டு நாட்களில் அவர் என்மீது பாலியல் தொந்தரவுகள் செய்தார் நான் அதற்கு அனுமதிமறுக்கவே அவரது செயலாளர் பதிவியில் இருந்து நீக்கி வரவேற்று பணியாளராக நியமித்தார்.

நாளடைவில் அவரது அலுவலக அறைக்குள் அழைத்து உடலுறவு கொள்ள சம்மதிக்க வேண்டும் இல்லையேல் உனது கணவரை கொலை செய்வேன் என்று மிரட்டினார்.

கொலை அச்சுறுத்தல் விடுத்து இரண்டாவது நாளில் எனது கணவர் கார் விபத்தில் மரணமானார்.பின்னர் எனக்கு கிடைத்த தகவலின் படி இந்த ஆலோசகரின் சூழ்ச்சியே எனது கணவரின் கார் விபத்திற்கும் இறப்புக்கும் காரணம் என்று தெரிந்து கொண்டேன்.

இச் சம்பவங்களுக்கு பின்னர் நான் அனைத்து கடமைகளிலில் இருந்து விலகினேன்.அதற்கு பின்னரும் அவரது அச்சுறுத்தல் தொர்ந்தது. நேற்று முந்தினம் நான் பத்திரமுல்லையில் உள்ள புத்தக கடையில் நின்றபோது தகவலறிந்து அவ்விடத்திற்கு வந்த ஆலோசர் பலவந்தமாக என்னை அவரது காருக்குள் தூக்கி இருக்ககையில் அமர்த்தி ஆள்நடமாட்டம் அற்ற பகுதிக்குள் காரை கொண்டு சென்று நிறுத்தி ககல கார்கதவுகள் யன்னல் கண்ணாடிகளை மூடி என்னனை உடலுறவுக்கு சம்மதிக்கும் படி வற்புறுத்தினார்.இல்லையேல் கொலை செய்யபோவதாக அச்சுறுத்தினார்.

நான் அதற்கும் மறுக்கவே எனது கன்னத்தில் அறைந்து கார் திறப்பினால் எனது தலையில் தாக்கினார் அதற்கு பிறகு எனக்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை கண் விழித்து பார்த்தபோது மிரிஹான பொலிஸ் நிலையத்தில் இருந்தேன்.அத்துடன் திரளான சனக்கூட்டாகவும் பொலிஸ் நிலைய பகுதியில் இருந்தது. நான் நினைக்கிறேன் அவ்வழியால் வந்தவர்கள் தான் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்திருக்கலாம் என்று.

மிரிஹான பொலிஸ் நிலைய பொலிஸ் அதிகாரி ஆலோசகருக்கு நெருக்கமானவர் என்பதால் பொலிஸ் அதிகாரி நீ அவரோட இருந்து எல்லாம் முடித்து விட்டு அவரை அவமானப்படுத்தவா இவ்வளவு நாடகம் ஆடியுள்ளாய் என்று கடுந்தொனியில் மிரட்டி என்னை கூண்டில் அடைத்தார்.பின்னர் எனது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்து சட்டத்தரணி ஊடாக பிணையில் விடுதலை செய்யப்பட்டு பின்னர் உங்களிடம் முறைப்பாடு தெரிவிக்கவந்ததாக அவர் நுஹேகொட சிறுவர் பெண்கள் விசாரணைப்பிரிவில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.http://www.pathivu.com/news/33336/57//d,article_full.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.