Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முதல் ஒருநாள் போட்டியில் இலங்கையை வென்றது பாகிஸ்தான்

Featured Replies

முதல் ஒருநாள் போட்டியில் இலங்கையை வென்றது பாகிஸ்தான்

2014-08-23 19:01:13

இலங்கை அணியுடனான முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி 4 விக்கெட்களால் வெற்றியீட்டியுள்ளது.

ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச கிரிக்கெட் அரங்கில் நடைபெற்ற இப்போட்டியில்முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 45 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 275 ஓட்டங்களைப் பெற்றது.

அணித்தலைவர் ஏஞ்சலோ மெத்யூஸ் 65 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 9 பெண்டரிகள் உட்பட 89ஓட்டங்களைம் மஹேல ஜயவர்தன 66 பந்துகளில் 63 ஓட்டங்களையும் பெற்றனர். அஷான் பிரியஞ்சன் அதிரடியாக துடுப்பெடுத்தாடி 15 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 39 ஓட்டங்களையும் குமார் சங்கக்கார 40 பந்துகளில் 25 ஓட்டங்களையும் பெற்றனர்.

பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களில் வஹாப் ரியாஸ் 50 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களை வீழ்த்தினார்.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 44.5 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 277 ஓட்டங்களைப் பெற்று வெற்றி இலக்கை அடைந்தது.

பாகிஸ்தான் அணி 23 ஆவது ஓவரில் 106 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் 5 ஆவது விக்கெட்டையும் இழந்தது. எனினும் 7 ஆவது வரசை வீரர் சொஹைப் மெக்சூத் 73 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 89 ஓட்டங்களையும் 6 ஆவது வரிசை வீரர் பவாட் அலாம் 61 பந்துகளில் 63 ஓட்டங்களையும் பெற்று அணியை பலப்படுத்தினர்.

இலங்கை அணியின் பந்துவீச்சாளர்களில் திசர பெரேரா 43 ஓட்டங்களுக்கு 2விக்கெட்களையும் ஏஞ்சலே மெத்யூஸ் 48ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

இப்போட்டியின் சிறப்பாட்டக்காரராக சொஹைப் மெக்சூத் தெரிவானார்.

இதேவேளை 5 போட்டிகள் கொண்ட இத்தொடரின் 2 ஆவது போட்டி எதிர்வரும் 27 ஆம் திகதி ஆர்.பிரேமதாச அரங்கில் நடைபெறவிருந்த 2 ஆவது ஒருநாள் போட்டி எதிர்வரும் சீரற்ற காலநிலை காரணமாக 26 ஆம் திகதி ஹம்பாந்தோட்டையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=6590#sthash.MZ8aBLlD.dpuf

  • தொடங்கியவர்

இலங்கைக்கு அதிர்ச்சி அளித்த சோகைப் மக்சூத், ஃபவாத் ஆலம்: பாகிஸ்தான் அபார வெற்றி
 

 

ஹம்பண்டோட்டாவில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் சர்வதேசப் போட்டியில் பாகிஸ்தான் அணி இலங்கையை வீழ்த்தி 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்று முன்னிலை வகிக்கிறது.

 

முதலில் பேட் செய்ய அழைக்கப்பட்ட இலங்கை 45 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 275 ரன்கள் எடுத்தது, இன்னிங்ஸின் இடையில் மழை பெய்ததன் காரணமாக ஆட்டம் 45 ஓவர்களாகக் குறைக்கப்பட்டது. இதனையடுத்து டக்வொர்த் கணக்கீட்டின் படி பாகிஸ்தான் அணியும் இதே 45 ஓவர்களில் 275 எடுத்தால் வெற்றி என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. 44.5 ஓவர்களில் ஒருபந்து மீதமிருக்கும் போது பாகிஸ்தான் வெற்றி பெற்றது.

 

இலக்கைத் துரத்திய பாகிஸ்தான் அணி கேப்டன் மிஸ்பா உல் ஹக்கின் விக்கெட்டை ரங்கனா ஹெராத்திடம் இழந்த போது 23 ஓவர்களில் 108/5 என்று சரியும் நிலையில் இருந்தது.

22 ஓவர்களில் தேவை 167 ரன்கள். அப்போதுதான் ஃபவாத் ஆலம், சோஹைப் மக்சூத் இணைந்து அரிய வெற்றியைச் சாதித்தனர். 35 ஓவர்களில் 185/5 என்ற நிலையிலும் கூட 10 ஓவர்களில் 91 ரன்கள் தேவை என்ற கடினமான நிலையே இருந்தது. ஆனால் பவர் பிளேயில் 46 ரன்கள் விளாசப்பட்டது. ஆனால் விக்கெட்டுகளை இழக்கவில்லை. அடுத்த 5 ஓவர்களில் 45 ரன்கள் தேவை என்ற நிலையிலும் பாகிஸ்தான் தோற்கவே வாய்ப்பு அதிகம் இருந்தது, காரணம் ஒரு விக்கெட் அவுட் ஆனால் கூட இலங்கை பாகிஸ்தானை கட்டுப்படுத்தியிருக்கும், ஆனால் லஷித் மலிங்காவின் யார்க்கர்கள் சரியாக விழாத காரணத்தினால் அவரது பந்துகள் பவுண்டரிக்கு விரட்டப்பட்டன. குறிப்பாக மக்சூத், மலிங்காவை சிறப்பாக ஆடினார்.

 

மக்சூத், பவாத் ஆலம் ஜோடி 147 ரன்களை விரைவில் சேர்த்தனர். மக்சூத் 73 பந்துகளில் 89 ரன்களை விளாசி நாட் அவுட்டாக இருந்தார். ஃபவாத் ஆலம் 62 ரன்களுக்கு மலிங்காவிடம் ஆட்டமிழந்த போது கூட கடைசி 3 ஓவர்களில் 22 ரன்கள் தேவையாக இருந்தது. இன்றைய கிரிக்கெட்டில் இதுபோன்ற துரத்தல்கள் சகஜம் என்றாலும் மலிங்கா இருக்கும் போது கடினமே.

கடைசி ஓவரின் 5வது பந்தில் வெற்றியை சாதித்த போது மக்சூத் 89 ரன்களையும் ஷாகித் அப்ரீடி 14 ரன்களையும் எடுத்திருந்தனர்.

துவக்க வீரர் அகமது ஷேஜாத் 49 ரன்களை எடுத்த பிறகு பாகிஸ்தானின் மற்ற பேட்ஸ்மென்கள் சோபிக்கவில்லை.

 

முன்னதாக பாகிஸ்தானால் பேட் செய்ய அழைக்கப்பட்ட இலங்கை அணியினர் 7 அடி உயர பாக்.பவுலர் மொகமது இர்ஃபானின் எகிறும் பந்துகளுக்கு திக்கித் திணறினர். மீண்டும் மகேலா ஜெயவர்தனேயும் கேப்டன் ஆஞ்சேலோ மேத்யூஸும் இலங்கை மீட்சிக்குக் கை கொடுத்தனர். கேப்டன் மேத்யூஸ் 85 பந்துகளில் 89 ரன்களை விளாசினார். ஜெயவர்தனே 66 பந்துகளில் 8 பவுண்டரிகளுடன் 63 ரன்கள் எடுத்து ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 73வது அரைசதம் எடுத்தார்.

அனைவரையும் விட கடைசியில் இறங்கிய பிரியரஞ்சன் என்ற வீரர் 15 பந்துகளில் 8 பவுண்டரிகளுடன் 39 ரன்களை விளாசியதால் இலங்கை 45 ஓவர்களில் 275 ரன்களை எட்டியது. பாகிஸ்தான் தரப்பில் மொகமது இர்பான் 2 விக்கெட்டுகளையும் வகாப் ரியாச் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்ற ஜுனைத் கான் 9 ஓவர்களில் 75 ரன்கள் விளாசப்பட்டார். அப்ரீடி 9 ஓவர்களில் 50 ரன்களை விட்டுக் கொடுத்தார்.

ஆட்ட நாயகனாக மக்சூத் தேர்வு செய்யப்பட்டார். அடுத்த ஒருநாள் போட்டி இதே மைதானத்தில் வரும் செவ்வாய்க் கிழமை நடைபெறுகிறது.

 

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF/article6345260.ece

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் 4 போட்டிகள் இருக்குது.எப்படியும் இலங்கை தான் வெல்லும்.தொடர்நதும் விளையாட்டு தொடர்பான செய்திகளை சளைக்காமல் இணைக்கும் நவீனனுக்கு மனமார்ந்த நன்றி

  • தொடங்கியவர்

பாக்., தோல்வி
ஆகஸ்ட் 26, 2014.

 

அம்பாந்தோட்டை: இலங்கைக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில், பாகிஸ்தான் அணி, 77 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தது.

இலங்கை, பாகிஸ்தான் அணிகள் மோதிய இரண்டாவது ஒருநாள் போட்டி, அம்பாந்தோட்டையில் நடந்தது.

‘டாஸ்’ வென்று முதலில் ‘பேட்’ செய்த இலங்கை அணிக்கு, கேப்டன் மாத்யூஸ் (93), ஜெயவர்தனா (67), பெரேரா (65) கைகொடுத்தனர். இலங்கை அணி 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 310 ரன்கள் குவித்தது.

 

கடின இலக்கை துரத்திய பாகிஸ்தான், 12.4 ஓவர்களில் ஒரு விக்கெட்டுக்கு 100 ரன்களை கடந்தது. பின், ஹபீஸ் (62), கேப்டன் மிஸ்பா (36), பவத் ஆலம் (30), அப்ரிதி (17) என, வரிசையாக  அவுட்டாகினர். பாகிஸ்தான் அணி 43.5 ஓவரில் 233 ரன்னுக்கு ஆல் அவுட்டாகி, 77 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தது.

இதையடுத்து, ஒருநாள் தொடரில் 1–1 என, சமனில் உள்ளது. இரு அணிகள் மோதும் 3வது மற்றும் கடைசி போட்டி, ஆக., 30ல் தம்புலாவில் நடக்கிறது.

 

http://sports.dinamalar.com/2014/08/1409073339/ThisaraPereracricket.html

  • தொடங்கியவர்

பாகிஸ்தானை வீழ்த்தியது இலங்கை

இலங்கை - பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 77 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.


பாகிஸ்தான் அணி இலங்கை கிரிக்கெட் சுற்றுப்பயணம் மோற்கொண்டு விளையாடி வருகிறது. இதன் டெஸ்ட் தொடரில் சிறப்பாக விளையாடிய இலங்கை, 2-0 என்ற கணக்கில் தொடரை வென்றது.

இதைத் தொடர்ந்து இரு அணிகளுக்குமிடையிலான 3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடர் ஆரம்பமானது. இதன் முதல் ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி, இலங்கையை வீழ்த்தி தொடரில் முன்னிலை பெற்றிருந்தது.

இந்நிலையில் இரு அணிகளுக்குமிடையேயான 2ஆவது ஒருநாள் போட்டி நேற்று ஹம்பாந்தோட்டை மைதானத்தில் நடைபெற்றது.

இப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது.

இதன்படி இலங்கை அணி சார்பாக ஆரம்ப ஆட்டக்காரர்களாக தரங்க, டில்ஷான்ஆகியோர் களமிறங்கினர். டில்ஷான் 13 ஓட்டங்களில் ஜுனைட் கான் பந்து வீச்சில் ஆட்டமிழக்க, சங்கக்காரா அடுத்து களமிறங்கினார். இவர் 11 ஓட்டங்கள் எடுத்த நிலையில் வஹாப் ரியாஸ் பந்து வீச்சில் பிடி கொடுத்து வெளியேறினார். அடுத்து தரங்க 27 ஓட்டங்கள் எடுத்த நிலையில் வெளியேறினார்.

10 ஓவர்கள் நிறைவில் இலங்கை அணி 62 ஓட்டங்களுக்கு 3 விக்கெட் இழந்து திணறி கொண்டிருந்தது. இதையடுத்து கைகோர்த்த ஜெயவர்தன, மெத்தியூஸ் ஜோடி சிறப்பாக விளையாடி அணியின் ஓட்டங்களை உயர்த்தியது.

ஜெயவர்தன 67 ஓட்டங்களும், அணித்தலைவர் மெத்தியூஸ் 93 ஓட்டங்களும் குவித்து ஆட்டமிழந்தார். பிரசன்ன(1), பிரியன்ஞன்(3) அடுத்தடுத்து ஹபீஸ் பந்தில் வெளியேறினர்.

இந்நிலையில் இறுதி நேரத்தில் திஸர பெரேரா அதிரடி காட்டினார். பாகிஸ்தான் அணி வீரர்களின் பந்து வீச்சை சிக்ஸர்களாக பறக்கவிட்டார். இவர் 36 பந்துகளில் 65 ஓட்டங்கள்( 5 பவுண்டரி, 4 சிக்ஸர்) அடித்து ரண்அவுட் முறையில் ஆட்டமிழந்தார்.

சிறப்பாக விளையாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 9 விக்கெட்டுகளை இழந்து 310 ஓட்டங்கள் எடுத்தது.


இதையடுத்து 311 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்கை நோக்கி களமிறங்கிய பாகிஸ்தான் 12.4 ஓவர்களில் ஒரு விக்கெட்டுக்கு 100 ஓட்டங்களை கடந்தது, பின் ஹபீஸ் (62) அணித்தலைவர் மிஸ்பா (36 ), பவத் ஆலம் (30), அப்ரிடி  (17) என வரிசையாக ஆட்டமிழந்தனர். ஏனைய வீரர்கள் தாக்குப்பிடிக்கவில்லை.

இறுதியில் பாகிஸ்தான் அணி 43.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 233 ஓட்டங்களைப் பெற்று 77 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. துடுப்பாட்டத்திலும் பந்துவீச்சிலும் சாதித்த திஸர பெரேரா ஆட்டநாயகனாக தெரிவு செய்யப்பட்டார்.

இதனால் 3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரில் இரு அணிகளும் 1-1 என்ற கணக்கில் சமநிலை பெற்றுள்ளது. இரு அணிகளுக்குமிடையிலான இறுதியும் முக்கியமானதுமான ஒரு நாள் போட்டி எதிர்வரும் 30 ஆம் திகதி தம்புள்ளயில் இடம்பெறவுள்ளது.
 

http://www.virakesari.lk/articles/2014/08/27/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88

  • தொடங்கியவர்

102 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி பாகிஸ்தான் படுதோல்வி: தொடரை வென்றது இலங்கை
 

 

தம்புல்லாவில் நடைபெற்ற இறுதி ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணியை 104 ரன்களுக்குச் சுருட்டிய இலங்கை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஒருநாள் தொடரைக் கைப்பற்றியது.

 

ஏற்கனவே டெஸ்ட் தொடரை இழந்த பாகிஸ்தான், ஒருநாள் தொடரில் முதல் போட்டியில் ஒரு அபார வெற்றியப் பெற்று பிறகு நடந்த 2 ஒருநாள் போட்டிகளிலும் தோல்வி கண்டு தொடரை இழந்தது.

முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 102 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஒருநாள் போட்டிகளில் அந்த அணி எடுக்கும் 9வது ஆகக்குறைந்த ரன் எண்ணிக்கை இதுவே. தொடர்ந்து ஆடிய இலங்கை தில்ஷனின் அரைசதத்துடன் 104/3 என்று வெற்றி பெற்றது.

டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்தது. சயீத் அஜ்மல் அணிக்கு மீண்டும் திரும்பியது பாகிஸ்தானை உற்சாகப்படுத்தியது.ஆனால் பேட்ஸ்மென்களின் ஆட்டம் அதிர்ச்சியளிக்கும் விதமாக அமைந்தது.

 

துவக்கத்தில் மலிங்காவும், தம்மிக பிரசாத்தும் பந்தை நன்றாக ஸ்விங் செய்தனர். தம்புல்லாவில் எப்போதும் பந்துகள் டென்னிஸ் பந்து போல் பவுன்ஸ் ஆகும்.

முதல் 5 ஓவர்களில் தட்டுத் தடுமாறிய பாகிஸ்தான் 6 ரன்களையே எடுத்தது. அதற்குள் தொடக்க வீரர் ஷர்ஜீல் கான் விக்கெட்டை பிரசாத்திடம் இழந்தது. அதன் பிறகு பாகிஸ்தான் 81/8 என்று ஆனபோது மழை குறுக்கிட்டது. ஆட்டம் 48 ஓவர் ஆட்டமாகக் குறைக்கப்பட்டது.

அகமட் ஷேஜாத், அப்ரீடி, உமர் அக்மல் ஆகியோர் மோசமான ஷாட் தேர்வில் அவுட் ஆயினர். ஃபவாத் ஆலம் மட்டுமே அதிகபட்சமாக 38 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். ஆனால் 8 பேட்ஸ்மென்கள் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்தனர்.

 

மலிங்காவிடம் எல்.பி. ஆனார் மொகமது ஹபீஸ், மிஸ்பா உல் ஹக் ரன் அவுட் ஆனார். 7 இன்னிங்ஸ்களில் 4வது முறையாக ரன் அவுட் ஆனார். இலங்கை வேகப்பந்து வீச்சாளர் திசர பெரேரா மிடில் ஆர்டர், மற்றும் பின்கள வீரர்களை ஆட்டமிழக்கச் செய்தார். பாகிஸ்தான் 32.1 ஓவரில் 102 ரன்களுக்குச் சுருண்டது.

 

தொடர்ந்து ஆடிய உபுல் தரங்கா 14 ரன்களில் மொகமது இர்பான் பந்தில் பவுல்டு ஆனார். சங்கக்காரா தொடர்ந்து 3வது முறையாக குறைவான ரன்களில் வெளியேறினார்.

மகேலா ஜெயவர்தனே 26 ரன்களை எடுக்க, வெற்றிக்குத் தேவையான ரன்களை பவுண்டரி மூலம் அடித்த தில்ஷன் 50 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாக இருந்தார்.

ஆட்ட நாயகனாகவும் தொடர் நாயகனாகவும் திசர பெரேரா தேர்வு செய்யப்பட்டார்.

 

 

 

http://tamil.thehindu.com/sports/102-%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%86%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/article6365135.ece

  • தொடங்கியவர்

ஒருநாள் தொடரைக் கைப்பற்றியது இலங்கை

பாக்கிஸ்தானுக்கு எதிரான மூன்றாவதும் இறுதியுமான போட்டியில் இலங்கை அணி டக்வேர்த் லூயிஸ் முறையில் 7 விக்கெட்டுகளால் வெற்றி பெற்று தொடரை 2-1 என கைப்பற்றியது.


இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடியது.

இதில் இடம்பெற்ற முதலிரு போட்டிகளிலும் இரு அணிகளும் தலா ஒவ்வொரு போட்டியில் வெற்றி பெற்று 1-1 என சமநிலையில் இருந்தன.

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவதும் இறுதியுமான முக்கிய போட்டி தம்புள்ளை ரங்கிரி மைதானத்தில் இன்று இடம்பெற்றது. குறித்த போட்டி மழைகாரணமாக 48 ஒவர்களால் குறைக்கப்பட்டது.

இப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது. அதன்படி துடுப்பெடுத்தாட களமிறங்கிய பாகிஸ்தான் அணி வீரர்களுக்கு இலங்கை அணியின் பந்து வீச்சாளர்கள் சிம்செப்பனமாக திகழ்ந்தனர்.

பாகிஸ்தான் அணியின் விக்கெட்டுகள் அனைத்தும் சீரான இடைவெளியில் சரியத் தொடங்க 32.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 102 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

பாகிஸ்தான் அணி சார்பாக பர்வட் ஆலம் 38 ஓட்டங்களையும் மிஸ்பா உல்ஹக் 18 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர். ஏனையோர் சொற்ப ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து அரங்கு திரும்பினர்.

பந்து வீச்சில் இலங்கை அணி சார்பாக திஸர பெரேரா 4 விக்கெட்டுகளையும் பிரசாத் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இந்நிலையில் மழை காரணமாக டக்வேர்த் லூயிஸ் முறையில் 48 ஓவர்களுக்கு 101 ஓட்டங்கள் வெற்றி இலக்காக இலங்கை அணிக்கு நிர்ணயிக்கப்பட்டது.

101 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய இலங்கை அணிக்கு டில்சான் நல்ல ஆரம்பத்தினை வழங்க 18.2 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 7 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றது. இந்நிலையில் மூன்று போட்டிகளைக் கொண்ட தொடரை இலங்கை அணி 2-1 என கைப்பற்றியது.

இலங்கை அணி சார்பாக துடுப்பாட்டத்தில் ஆட்டமிழக்காது டில்சான் 50 ஓட்டங்களையும் ஜயவர்தன 26 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். பந்துவீச்சில் பாகிஸ்தான் அணி சார்பாக இர்பான், அஜ்மல் மற்றும் வஹாப் ரியாஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

இப் போட்டியின் ஆட்டநாயகனாகவும் தொடரின் ஆட்டநாயகனாகவும் இலங்கை அணியின் திஸர பெரேரா தெரிவு செய்யப்பட்டார்.

 

 

http://www.virakesari.lk/articles/2014/08/30/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.