Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கூகுள் செய்து முடித்த மெய் சிலிர்க்கும் சாதனை!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சி.ஐ.ஏ. காரியாலயத்தில் இரகசியமான ஆய்வுகூடத்தில் முடுக்கிவிடப்பட்டன பணிகள்..
உலகத்தை தனது ஒற்றை விரலில் வைத்து சுற்றுவதற்கான இரகசிய பணிகளில் கூகுள் முன்னேறுகிறது... 
இந்த உண்மையை அறிய வேண்டியது இந்தக் கற்பனைகளுக்கு சொந்தமான தமிழினத்தின் கடமையாகும். 
goo3.jpgதமிழனும் கூகுளுமா..? மொட்டந்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சா..? என்று சிந்திக்காதீர்கள்.. முதலில் பின்வரும் பக்கச் செய்திகளை அறிந்து கொண்டால் இந்தக் கட்டுரை நீங்கள் படித்த சுவாரஸ்யமான படைப்பாக மாறிவிடும்.
” உலகத்தை ஆளும் அரசு ஒன்றுதான்..” என்ற கொள்கைக்கான உயிர் விதைகளை கவிதை வரிகளில் தூவியவன் தமிழகத்தின் பூங்குன்றம் என்ற ஊரில் பிறந்த கணியன்..
யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற அவனுடைய வாசகத்திற்கு “ஒன்றே உலகம்” என்ற புது விளக்கம் கொடுத்து உலகத்தமிழாராய்ச்சி மாநாட்டை நடத்தியவர் தவத்திரு. தனிநாயகம் அடிகளார்.
உலக மக்கள் எல்லோருமே ஒருவருக்கு மற்றவர் உறவினர் என்று கணியன் சொன்ன கருத்தின் உட்பொருள் யாது..? 
” ஒன்றே உலகம் என்ற கொள்கையை அமல்படுத்த உலகில் யார் முயன்றாலும் அதை நாம் செய்யவில்லை என்று பேதம் காணக்கூடாது அச்செயலானது நமது உறவுகளின் செயலே..” என்று பொதுமைப்படுத்திப் பார்ப்பது நமது கடமை என்கிறார் அவர்.
கணியன் வழியில் அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு என்றான் வள்ளுவன், உலகெல்லாம் உணர்ந்தோதற்கு அரியவன் என்று முதற் பாடலிலேயே உலகத்தைப் பாடினார் சேக்கிழார்.. அவர்கள் கருத்தை இணையம் சிரமேற்கொண்டு, இணைய முகவரிகள் டபிள்யூ என்ற எழுத்தில் உலகத்தை முதலாவதாகக் கொண்டு ஆரம்பித்தன.. இது பழைய கதை.
இனி வரப்போவது புதிய கதை..
ஒன்றே உலகம் என்ற கருத்தை நிறைவேற்றும் உலக அரசாக மாறிக்கொண்டிருக்கிறது இணையம், இந்த இணைய உலகில் மாபெரும் சக்தியாக இருப்பதுதான் கூகுள் நிறுவனம்.
சேர்ஜி பிறின்ற், லரி பேஜ் என்ற இரண்டு இளைஞர்களும் சுமார் 20 வருடங்களுக்கு முன் ஆரம்பித்த நவீன கற்பனையே இன்று கூகுளாக மலர்ந்து நிற்கிறது.
1995ல் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிறுவனம் 2000 ம் ஆண்டில் ஒரு பில்லியன் மக்களால் பாவிக்கப்படும் தேடல் இயந்திரமாக உருவெடுத்தபோது உலகம் அதன் காலடியில் சுழன்றது.

goo2-150x150.jpg2006ல் உலகப் பிரசித்தி பெற்ற காணொளி ஊடகமான யூருப்பை விலைக்கு வாங்கியது, 2012ம் ஆண்டில் 50.000 பேர் பணியாற்றும் நிறுவனமாக மாறியது, 2014ல் கூகுள் கிளாஸ் என்ற புதிய கண்ணாடியை அறிமுகம் செய்தது, 2015ல் உலகம் முழுவதிற்குமான காற்றலை மின்சாரம் வழங்கும் கேபிளை அறிமுகம் செய்யவுள்ளது, சாரதி இல்லாமல் ஓடும் கார், பறக்கும் பலூனில் சற்லைற் 2019ல் சர்க்கரை வியாதியை அளவிடும் கண்களில் மாட்டும் கூகுள் கொன்ராக்ற் லென்ஸ், 3 டி கைத்தொலைபேசி என்று அசுர வேகத்தில் முன்னேறிச் செல்கிறது.
இணையத்தால் இணைவோம் இந்த யுகத்தை வெல்வோம் என்ற தாரக மந்திரத்திற்கு அமைவாக ஒவ்வொரு நாளும் ஒரு புதிய விடயத்தை அறிமுகம் செய்யும் புதுமைத்தாபனமாக ஒளி வீசுகிறது கூகுள்.
இதுதவிர பல தொழில்களிலும் பெரு முதலீடு செய்து வருகிறது.. உதாரணமாக 2011ம் ஆண்டு 168 மில்லியன் டாலரில் சூரிய ஒளி மூலம் சக்தியை உருவாக்கும் ஒளித்தோட்டத்தை கலிபோர்ணியாவில் உருவாக்கியது, அதே நேரம் 100 மில்லியன் டாலரில் காற்றாடி மின்சாரம் உருவாக்கும் பண்ணையை உருவாக்கியது. 2015ல் அதிசிறந்த புதுவகை மின் காற்றாடியை அறிமுகம் செய்யவுள்ளது.
உலகத்தின் அதிசிறந்த றோபோக்களை உருவாக்கும் தொழில் நுட்பத்தையும் கூகுள் வாங்கிவிட்டது, எக்ஸ்புளோருக்கு போட்டியாக முன்னேறிவிட்டது.. இப்படி அதன் வளர்ச்சியை அடுக்கிக் கொண்டே போகலாம்..

இருப்பினும் இந்தப் பீடிகைகளை எல்லாம் தாண்டி இப்போது கூகுள் வைத்துள்ள புதிய காலடிதான் நம்மை வெகுவாகச் சிந்திக்க வைக்கின்றன.
goo6.jpgஅமெரிக்காவின் கலிபோர்ணியாவில் உள்ள சி.ஐ.ஏ உளவுப்பிரிவு கட்டிடத்தின் நடுப்பகுதியில் உலகத்தில் யாருமே நெருங்க முடியாத பாதுகாப்புப் பகுதியில் பில்லியன் கணக்கில் டாலர்களை கொட்டியிறைத்து மிகமிக இரகசியமான ஆய்வு கூடம் ஒன்றை கூகுள் அமைத்துள்ளது.
பெயர் குறிப்பிடாத விஞ்ஞானி ஒருவர் தரும் தகவல்களின்படி.. இங்கு உலகப் புகழ் பெற்ற விஞ்ஞானிகள் பலரை பணிக்கு அமர்த்தி சுமார் 100 க்கும் மேற்பட்ட புதுவகையான ஆய்வுகளை கூகுள் செய்து கொண்டிருக்கிறது.
புதுமைப் பொருளாதாரம்.. அறிவால் உலகத்தை ஆட்சி செய்யும் புதுமை வலு.. என்று கூகுள் எடுத்துள்ள முயற்சிகள் வெற்றிபெற்றால் நிச்சயமாக எதிர்கால உலகத்தை வெற்றி கொள்ளப்போகும் புதிய அரசு இணையம்தான்.. அதன் சக்கரவர்த்தியாக முடிசூடப்போவது கூகுள்தான் என்று இலகுவாகக் கூறிவிட முடியும்.
சூரிய ஒளியிலும், காற்றிலும் உலகத்தின் சக்திவள தேவையை பூர்த்தி செய்ய கூகுள் முயல்கிறது.. வெற்றி கிட்டினால் எண்ணெய்வள நாடுகளின் முதன்மை தானாகவே மறைந்து போய்விடும்.
இதுதவிர மிகவும் அபார சக்தி கொண்ட ரோபோக்களை உருவாக்கும் பணிகள் இன்னோரிடத்தில் நடக்கின்றன.. உதாரணம் 150 கிலோ எடையைத் தூக்கி பணிபுரியும் புதுவகை ரோபோக்கள் தொழிற்கூடங்களில் குவிந்து மனிதனால் முடியாத பணிகளை செய்யப்போகின்றன… போர்க்களத்திற்கும் ரோபோக்கள் வரும்..
goo4.jpgஎல்லாவற்றையும் விட முக்கியம் மரபணு மாற்றம் மூலமாக மனிதர்கள் அனைவரையும் நூறாண்டு காலம் வாழவைக்கும் புதுவகை ஜீன் தொழில் நுட்பத்தை கூகுள் உருவாக்கிக் கொண்டிருக்கிறது… புற்றுநோய் வந்தவர்கள் கூட உயிர் தப்பி நூறாண்டு காலம் வாழ வழிசெய்யப்போகிறது கூகுள்.. இதனால் கிடைக்கும் வருமானம் சொல்லி முடியாத தொகை...

சென்ற ஆண்டே கூகுள் எக்ஸ் வேலைத்திட்டத்திற்காக ஒரு பாரிய (கொன்ரேனர்) கொள்கலத்தில் மிகவும் இரகசியமான அதிக விலை கூடிய பொருட்களை கூகுள் இறக்குமதி செய்துள்ளது, இதில் இருப்பது யாருக்குமே தெரியாத மர்மமாக உள்ளது.
இந்த ஆண்டு 2.1 பில்லியன் டாலர் செலவில் சிந்தனையின் ஆழம் என்ற கண்டு பிடிப்பை விலைக்கு வாங்கியுள்ளது, இதை ஆதாரமாக வைத்து மனிதனின் மூளையை 2029ம் ஆண்டில் உருவாக்கிவிட முயற்சி எடுத்துள்ளது. இந்த மனித மூளைத் தேடல் இயந்திரம் அசப்பில் மனித மூளையாகவே இருக்கும்.
goo5.jpgமேலும் என்னென்ன காரியங்களை எல்லாம் கூகுள் ஆய்வு செய்கிறது என்று தெரியவில்லை விஞ்ஞானி அஸ்ரோ ரெலர் தலைமையில் பல நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானிகள் இணைந்து கூகுள் எக்ஸ் என்ற இப்பணியை முன்னெடுத்துள்ளார்கள்.
அமெரிக்க அரசு இதற்குத் துணையாக இருக்கிறது.
உலகத்தை வெற்றிகொள்ள சீனர்களும், ரஸ்யர்களும், ஐரோப்பிய ஒன்றியமும் ஓடிக்கொண்டிருக்கும் ஓட்டத்தை கனவேகத்தில் முந்திவிட கூகுள் இரகசியமாக முயற்சித்துக் கொண்டிருக்கிறது.
இரண்டாம் உலகயுத்த காலத்தில் அணு குண்டை உருவாக்க நடந்த போட்டியில் ஜேர்மனியை அமெரிக்கா வெற்றி கொண்டு முதலாவது அணு குண்டை உருவாக்கியது போன்ற அறிவியல் போட்டி இதுவாகும்.
அரசியல், பொருளாதாரம், சமுதாயம், போர், மதம் என்று அலைக்கழியும் இன்றைய உலகம் ஒரு கட்டத்தில் மறைந்துவிட முழு உலக உருண்டையையும் ஒன்றாக்கி இயக்கும் ஒரேயொரு இணைய யுகம் மலரும் நாள் மிகவும் அண்மையில் தெரிகிறது.

யாதும் ஊரே யாவரும் கேளிர்...
ஒன்றே உலகம்…
அன்று ஆதித் தமிழன் கண்ட கனவுகளை நனவாக்கிக் கொண்டிருக்கிறது கூகுள்..
கூகுள் எக்ஸ் உலகத்தை வெல்லுமா..? கூகுளை வெல்லக்கூடிய பலமுள்ள இன்னொன்று அப்பிள் நிறுவனம் அதுவும், கூகுள் அளவுக்கு தன்னை விஸ்த்தரிக்கவில்லை.
21ம் நூற்றாண்டின் மிகப்பெரிய பாய்ச்சலில் கூகுள் நிற்கிறது இதை அவதானிப்பது தமிழர் அறிவியல் கடமையாகும்.

http://anthimaalai.blogspot.co.uk/2014/08/blog-post_86.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.