Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குடும்ப அரசியல் கோவலனே! கொஞ்சம் சிந்திப்பீரா?

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் உலகத் தமிழர்களுக்கு தலைவன். தமிழகம் எனது கோட்டை. அரச பணத்தை வேட்டையாடி வேட்டையாடி நான் உழைத்ததோ, சண் ரீ.வி. தற்போது என் பெயரில் வர இருப்பதோ, ரூயாட்ட கொம்பனி. மக்களுக்கு கலர் ரீவி. கேபிள் பாசு என் கெட்டிக்கு. ஆனாலும் தமிழ் நாட்டில் நல்லாட்சி. நல்லவர் ஆளும் காலம் தமிழகத்துக்கு எப்போது வரும்?

அன்பிற்கினிய கலைஞர் அவர்களே!

உங்களுக்கு ஆலோசனை சொல்லும் அளவுக்கு நான் சிறியவன் அல்ல. ஏனெனில் சிறு குழந்தை கூட உங்களிலுமு் நன்றாகவே சிந்திக்கும் ஆற்றல் கொண்டது. நீங்கள் சிந்திக்கும் விடையங்கள் எல்லாம் நன்றே. ஆனால் சொந்த சகோதரர் வாழ்வில் தீயேறிகையில், எரியும் வீட்டுக்கு விலை பேசும் குணம் எப்போது உங்களோடு ஒட்டிக்கொண்டது.? வைகோவிற்கெதிரான அரசியல் செய்வதாக சொல்லும் உங்கள் குடும்ப அரசியலுக்குள் ஏமாற்றப்படுவது ஈழத்தமிழனமல்லவா? சத்தியமாய் எமது பொராட்டம் உங்கள் காலடியில் மண்டியிடவில்லை. மண்டியிடப்போவதுமில்லை. ஆனாலும் எங்கள் மக்கள் தாய் தமிழகத்தை தலை நிமிர்த்த பார்க்கின்றது. ஏன் தெரியுமா? அங்கே தமிழர்கள் ஆட்சி நடக்கின்றது தமிழ் தலைவர்கள் இருக்கின்றனர் எனவே அவர்கள் எங்கள் சாவுகளுக்காய், எங்கள் அழிவுக்கு எதிராக குரல் கொடுப்பார்கள் என்ற நம்பிக்கை. அந்த நம்பிக்கையை உடைத்தெறிந்த உங்கள் உள்ளுர் அரசியல் பிரச்சினையால் நீங்கள் ஒரு உணர்வுள்ள தமிழினத்தின் தலைவர் என்ற தரத்திலிருந்து கீழிறங்கி ஒரு அரசியல் வெறி பிடித்த, பதவி வெறியன் அல்லது உங்கள் குடும்பமே, தமிழ் நாட்டை ஆழ வேண்டும் என்ற ஆழமான சிந்தை கொண்டவராக தமிழ் மக்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.

ஒரு இனம் தனது இனத்தின் சொந்தங்கள் தமக்காக, இருக்கின்றனர் என்ற நம்பிக்கையில் தான் அவர்களை எதிர்த்தவனை எதிர்க்க முற்ப்படுகின்றனர். அந்த வகையில் தமிழகம் எங்களை பாவித்து தனது தேவைகளை பூர்த்தி செய்ததை எண்ணி நாங்கள் வெட்கப்படுகின்றோம். 30 வருட போராட்டத்தில், குறைந்தது 5 வருடங்கள் இந்திய அரசியல் தலமைகளால் நாம் பட்ட வேதனைக்கு அப்பால் நிமிர்ந்து நிற்க்கிறது ஈழம்.

ஹஸ்புல்லாக்களுக்கெதிரான இஸ்ரேலிய போரில் ஹஸ்புல்லா என்ற அமைப்புக்கு ஆதரவாக அந்த இனத்து நாடுகள் ஆதரவழித்ததன் பயனாய் இஸ்ரேல் வரலாறு காணத ஒரு போரியல் தோல்வியைக்கண்டது. அப்படி போரியல் உதவிகளையா நாம் உங்களிடம் கேட்டோம்? ஆயதம் வாங்க அன்பளிப்பு செய்யுங்கள் என்றா கேட்டோம்? எத்தனை கோடி வேண்டும் கேளுங்கள்? எமக்காக, எமது உரிமைக்காக, உங்கள் சகோதரார்களின் கண்ணீருக்காக ஒரு முறை உங்கள் நடுவன் அரசின் கொள்கையில் மாற்றம் கொண்டு வாருங்கள்.

297230karunanithi_Valthu.jpg

அன்புள்ளவரே பதவிகள் பட்டங்களா வாழ்வில் நிலைக்க போகின்றது? பாடையில் நீங்கள் போகும் போது முதல்வர் கருணா நிதி சாவடைந்தார் என்றா? சொல்வார்கள்? ஒரு மனிதன் சாவடைந்தான் என்று சொல்வார்கள். அந்த மனிதனாகவே ஈழத்தமிழர்கள் உங்களை காண விரும்புகின்றன. மண் மீட்புக்காய் சிங்கள படைகளோடு நாம் பேரிட்டுக்கொண்டிருக்கும் போதும் பல சிங்கள தலைவர்கள், எமக்கு ஆதரவழித்தார்கள் எங்களுக்காய் குரல்கொடுத்தனர். ஆனால் நீங்கள்? சொஞ்சோலையில் பிஞ்சுகள் மாண்ட வேலை ஏதோ எல்லோரும் அறிக்கை விடுகின்றனர் என்பதற்காக ஒரு அறிக்கையை விட்டீர்கள். நாமும் உங்களில் ஒரு மாற்றம் வந்து விட்டதாகவே மகிழ்தோம். புலிகள் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளனர் என்று சொன்னீர்கள், ஆனால் தமிழ் மக்களின் பிரநிதிகளாய், வட கிழக்கு தமிழ் மக்களால் தெரிவுசெய்யப்பட்டுள்ள, சிறிலங்காவின் நான்காவது பெரும் அரசியல் பலம் பொருந்திய கட்சியாய் இருக்கும், தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களை, சந்தகிகாமைக்கான காரணம் என்ன? ஸ்டாலின் என்ற உங்கள் குடும்பத்தவரின் எதிர்கால அரசியலை எண்ணியா? அல்லது எங்கள் மீதுள்ள வெறுப்பை காட்ட கிடைந்தை சந்தர்ப்பத்தை பயன்படுத்தவா? எமக்கு தெரியும் நீங்கள்ஒரு பெருமை பிடித்தவர் என்பது. உங்களை எல்லாவற்றிற்க்கும் முன்னிலையில் வைத்து செயற்ப்படவேண்டும் என்ற ஆசை கொண்டவர். ஆனால் நீங்கள் எங்களை முன்னிலையில் வைத்தீர்களா? எங்களைப்பற்றி கதைக்க ஒரு சில நிமிடங்கள் எடுத்தீர்களா? அப்படியிருக்கையில் உங்களை நம்பி எப்படி ஐயா நாங்கள் வரமுடியும்.

வைகோ என்ற தனி மனிதன் ஏன் எமக்காக குரல் கொடுக்க வேண்டும்? அவரும் உங்களை போல இருந்தால் உங்களிலும் பெரிய அரசியல் வாதியாய் வந்திருப்பார். ஆனால் அவரால் அவரது மனச்சாட்சியை கொன்று வாழ முடியாது. திராவிட முன்னேற்றக்கழகம் என்று பெயர் கொண்ட கட்சி திண்ண வழியற்ற தமிழ் நாட்டு மக்களை பற்றி கவலைப்படவுமில்லை. கதியற்று வரும் ஈழத்தவர்களைப்பற்றியும் கவலைப்படவில்லை. கண்துடைப்புக்கள் உங்கள் குடும்ப தொலைக்காட்சிமூலம் நிகழ்ந்தாலும் உண்மைகளை உலகெங்கும் வாழும் ஈழத்தமிழர் உள்ளங்கள் அறியும்.

அன்பானவரே, குடும்ப அரசியலிருந்து வெளியே வாருங்கள். தாய்தமிழகம் எமக்கான, ஆதரவை தந்திருக்கின்ற வேளை அதை ஆளும் நீங்கள் என்ன செய்ய வேண்டும்? மத்திய அரசுக்கு அழைத்து தமிழ் தேசியக்கூட்டமைப்பு பிரதிநிதிகளைச் சந்திக்க வேண்டாம் என்று சொல்ல வேண்டும். இது தான் உங்களை தெரிவு செய்ய கோடிக்கணக்கான தமிழக மக்களுக்கு நீங்கள் செய்யும் நன்றிக்கடன்.

மதிப்புக்குரிய தமிழ் நாட்டின் குடும்ப அரசியல் தலைவரே, கலைஞரே, கவிஞரே வெளியே வாருங்கள், குடும்பஅரசியல் என்ற கிணற்றிலிருந்து வெளியே வாருங்கள், உலகம் மிகப்பெரியது தமிழீழம் உங்களை தாங்க வேண்டிய சூழல் கூட வரலாம். சொல்ல முடியாதல்லவா? எனவே தமிழ் சொல்லி வாழ்வதை விட்டு தமிழுக்காய் வாழ்நது மக்கள் தொண்டு செய்ய சிந்திப்பீரா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நிதர்சன்

நீங்கள் பலவிடயங்களில் அடிக்கடி அவசரப்படுகின்றீர்கள். கொட்டிய நெல்லைப் பொறுக்கிவிடலாம். ஆனால் கொட்டிய சொற்களைப் பொறுக்கி விடமுடியாது.

தினக்குரல் செய்தியை மட்டும் வைத்து எந்தவித முடிவையும் எடுக்க முடியாது. ஏன் இவ்விடயம் மற்றைய பத்திரிகைகளில் வரவில்லை. எத்தனையோ முறை முயற்சித்ததாக சொல்பவர்கள் ஏன் இராமதாஸ்,வீரமணி போன்ற கலைஞருக்கு நெருக்கமானவர்கள் மூலம் முயற்சிக்கவில்லை. எவர் உண்மைகளை மறைக்க முயன்றாலும் அது எப்படியும் வெளிவராமல் போகாது.

ஒருவரை கேவலமாக விமர்சித்தக் கொண்டே அவரிடமே பிச்சை கேட்பது உங்களுக்கு வாடிக்கையாக இருக்கலாம். ஆனால் பார்ப்பவர்களுக்கு இது வேடிக்கை மட்டுமே.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.