Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இந்தியாவில் பிறந்த 21வயதுக்கு மேற்பட்டோருக்கு இலங்கை பிரஜா உரிமை பெற 25000.00 அபராதம் - பலர் தவிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவில் பிறந்த 21வயதுக்கு மேற்பட்டோருக்கு இலங்கை பிரஜா உரிமை பெற 25000.00 அபராதம் - பலர் தவிப்பு

 

குளோபல் தமிழ்ச் செய்தியாளர் வவுனியா:-

sl%20cit1_CI.JPG

யுத்தத்தினால் இடம்பெயர்ந்து சென்று பின்னர் நாடு திரும்பியுள்ள குடும்பங்களில், இந்தியாவில் பிறந்த 21 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இலங்கை பிரஜா உரிமை பெறுவதற்கு அபராதமாக 25 ஆயிரம் ரூபா செலுத்த வேண்டும் என்று குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.

தாம் கிரமமான நிரந்தர வருமானத்தி;ற்கு வழியற்ற நி;லையில் இருக்கும்போது, தமது வளர்ந்த பிள்ளைகளுக்குப் பிரஜா உரிமை பெறுவதற்கான அபராதத்தைச் செலுத்த முடியாதிருப்பதாக நாடு திரும்பியுள்ள குடும்பங்கள் கூறுகின்றன.

அத்துடன் கடவுச்சீட்டு பெறுவதற்கு இந்தியாவில் பிறந்த பிள்ளைகளுக்குப் பிரஜாவுரிமை எடுத்திருக்க வேண்டும் என்ற தகவலும் தங்களுக்குத் தெரிந்திருக்கவில்லை என்றும் அந்தக் குடும்பங்கள் கூறுகின்றன.

நாடு திரும்பியுள்ள குடும்பங்களைச் சேர்ந்த இந்தியாவில் பிறந்த குழந்தைகளுக்கு குடியுரிமை வழங்குவதற்கான நடமாடும் சேவையொன்று வெள்ளியன்று வவுனியா அரச செயலகத்தில் நடைபெற்றது.

இலங்கை சட்ட உதவி ஆணைக்குழு இதற்கான அனுசரணை வழங்கி ஏற்பாடுகளைச் செய்திருந்தது. குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் பதில் கட்டுப்பாட்டாளர் ஐ.எஸ்.எச்.ஜே.இலுக்பிட்டிய தலைமையிலான அதிகாரிகளும் சட்ட உதவி ஆணைக்குழுவின் அதிகாரிகளும் கலந்து கொண்டிருந்தனர்.

இதில் கலந்து கொண்டிருந்த செட்டிகுளத்தைச் சேர்ந்த ஜெயந்திமாலா என்ற தாயார், தனது மகனுக்கு 23 வயதாகிய போதிலும், இன்னும் பிரஜா உரிமை எடுக்கவில்லை என தெரிவித்தார்.

இந்தியாவில் பிறந்த தனது மகனுக்கு இலங்கையில் பிறப்புச் சான்றிதழ் பெற்று பாடசாலைகளில் அனுமதி பெற்று அவர் கல்வியைத் தொடர்ந்தார். தேசிய அடையாள அட்டையையும் எடுத்திருந்தோம். ஆனால், அவர் இப்போது வேலை வாய்ப்பு தேடி வெளிநாடு ஒன்றிற்குச் செல்வதற்காக பாஸ்போட் எடுக்கச் சென்றபோதே, இந்தியாவில் பிறந்துள்ள அவருக்கு இலங்கை பிரஜா உரிமை இல்லாமல் பாஸ்போட்டுக்காக விண்ணப்பிக்க முடியாது என்றார்கள்.

பிரஜா உரிமையை முதலில் எடுத்து வாருங்கள் அதன் பின்னர் பாஸ்போட் தருவோம் என்று அவர்கள் கூறினார்கள். அதன் பி;ன்னர்தான் நாங்கள் இந்த நடமடும் சேவையில் பிரஜா உரிமை எடுப்பதற்காக வந்திருக்கின்றோம் என்றார்.

இந்த விடயம் குறித்து கருத்து வெளியிட்ட இலங்கை சட்ட உதவி ஆணைக்குழுவின் வடமாகாணத்திற்கான நிகழ்ச்சித் திட்ட அதிகாரி மகாலிங்கம் ஜெயந்தன், இந்தியாவில் பிறந்தவர்கள் அனைவரும் இலங்கையில் பிறப்புச் சான்றிதழ் பெற்றிருப்பதுடன், பிரஜா உரிமையும் பெற்றிருக்க வேண்டும். இது கட்டாயத் தேவையாகும்.

பிறந்த குழந்தை முதல் அனைவரும் பிரஜா உரிமைக்கு விண்ணப்பிக்க முடியும். ஆனால், 21 வயதை அடைந்த ஒருவர் பிரஜா உரிமைக்கு விண்ணப்பிக்கும்போது, கால தாமதித்து பிரஜா உரிமைக்காக விண்ணப்பிப்பதற்காக அபராதமாக 25 ஆயிரம் ரூபா செலுத்த வேண்டும் என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் விதித்திருக்கின்றது.

இந்தியாவில் பிறந்த குழந்தைகளுக்கு பிறப்புச் சான்றிதழ் பெறுவது பிரஜா உரிமை பெறுவது உள்ளிட்ட தேவைகளுக்கான அடிப்படையில் அவசியமான ஆவணங்களைத் தயார் செய்வது அதற்கான வழிகாட்டல்கள் என்பவற்றை நாங்கள் வழங்கி வருகின்றோம்.

ஆனால் 21 வயதை எட்டியுள்ள இளைஞர் யுவதிகள் பிரஜா உரிமை பெறுவதற்காக செலுத்த வேண்டிய 25 ஆயிரம் ரூபா பணத்தை அவர்களுக்காக எம்மால் செலுத்த முடியாது.

பெரும் எண்ணிக்கையில் தாயகம் திரும்பியுள்ள குடும்பங்களில் பலர் 21 வயதை அடைந்திருக்கின்றார்கள். இதேபோன்று அத்தகையோர் இன்னும் தாயகம் திரும்பவுள்ளார்கள். எனவே, இடம்பெயர்ந்து அவலப்பட்டுள்ள வறியவர்களாகிய இந்த இளைஞர் யுவதிகளுக்கு  இந்த விடயத்தில் கொள்கை வகுப்பாளர்களும், உரிய மட்டத்தில் உள்ள அரசியல்வாதிகளும் சரியான நடவடிக்கை எடுத்து உதவ முன்வரவேண்டும் என தெரிவித்தார்.

  

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/111061/language/ta-IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.