Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

லண்டன் பொருளியல் கல்லூரி விரிவுரையாளர் கலாநிதி ராஜேஷ் வேணுகோபால் கட்டுநாயக்கவில் கைது!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

லண்டன் பொருளியல் கல்லூரி விரிவுரையாளர் கலாநிதி ராஜேஷ் வேணுகோபால் கட்டுநாயக்கவில் கைது! 

[sunday 2014-08-31 08:00]
rajesh-venugopal-150-news.jpg

லண்டன் பொருளியல் கல்லூரியில் சர்வதேச அபிவிருத்தி மற்றும் அவசர மனிதாபிமான நலன்புரி பிரிவின் சிரேஸ்ட விரிவுரையாளரான கலாநிதி ராஜேஷ் வேணுகோபால் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். வியாழக்கிழமை முற்பகல் 11.35 அளவில் இலங்கைக்கு வந்தபோது பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டமை தொடர்பாக எந்த விளக்கங்களையும் தெரிவிக்காத பயங்கரவாத தடுப்பு பிரிவினர் நேற்றுமுன்தினம் இரவு 7 மணி வரை அவரிடம் விரிவாக விசாரணை நடத்தியுள்ளனர்.

  

இதனையடுத்து கலாநிதி வேணுகோபால் மிரிஹானவில் உள்ள குடிவரவு, குடியகல்வு முகாமுக்கு பயங்கரவாத விசாரணைப் பிரிவு அதிகாரிகளினால் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். மிரிஹான முகாமுக்கு சென்று அவரை, பயங்கரவாத விசாரணைப் பிரிவின் பணிப்பாளரிடம் ஒப்படைத்துள்ளனர். இந்நிலையில், குறித்த பணிப்பாளர் கலாநிதி வேணுகோபாலிடம் விசாரணை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது. கலாநிதி ராஜேஷ் வேணுகோபால், இலங்கையில் மேற்கொள்ளும் ஆய்வுகள், அவரது மேற்பார்வையில் இடம்பெறும் வேலைத்திட்டங்கள் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்படுவதாக கூறப்படுகிறது.

லண்டன் பொருளியல் கல்லூரியின் சர்வதேச அபிவிருத்தி பிரிவும் இந்திய அரசாங்கமும் அவரது கைது குறித்து விசேட கவனம் செலுத்தியுள்ளன. இந்த நிலையில், அவரை உடனடியாக விடுதலை செய்யுமாறு பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

 

நன்றி - செய்தியிணையம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இராணுவம் பற்றிய தகவல்களை சேகரித்தாராம் விரிவுரையாளர் ராஜேஸ் வேணுகோபால்! - விசாரணையை நியாயப்படுத்துகிறார் பொலிஸ் பேச்சாளர் 

[Monday 2014-09-01 07:00]
rajesh-venugopal-150-news.jpg

இலங்கையின் குடிவரவு-குடியகல்வு சட்டத்தை மீறும் வகையில், இலங்கை இராணுவம் தொடர்பான தகவல்களை சேகரித்த முயன்ற இந்தியரான- பிரித்தானிய பல்கலைக்கழக விரிவுரையாளரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் எஸ்எஸ்பி அஜித் ரோகண பிபிசியிடம் கூறியுள்ளார். எல்எஸ்ஈ என்ற லண்டன் ஸ்கூல் ஆஃப் எகானமிக்ஸ்- பிரிட்டிஷ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விரிவுரையாளரான டாக்டர் ராஜேஷ் வேணுகோபால் குடிவரவு குடியகல்வுதுறை அதிகாரிகளால் தடுத்துவைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் எஸ்எஸ்பி அஜித் ரோகண கூறினார்.

  

இலங்கையில் நடக்கும் ஒரு கருத்தரங்கில் கலந்து கொள்வதற்கான வீசாவுடன் தான் அவர் இங்கு வந்திருக்கிறார். ஆனால் அவர் மட்டக்களப்பு பிரதேசத்துக்குச் சென்று, சிலரை ஓரிடத்துக்கு அழைத்து இராணுவத்தினர் தொடர்பான சில தகவல்களை கேட்டிருக்கின்றார். அங்கு இராணுவ கெடுபிடிகள் எப்படி இருக்கின்றன என்றெல்லாம் அவர் கேட்டிருக்கின்றார்.அவர் வந்திருக்கின்ற வீசாவின்படி, அவருக்கு அதற்கான அனுமதி கிடையாது. குடிவரவு அதிகாரிகளின் விசாரணைக்குப் பின்னர் குறித்த கருத்தரங்கில் கலந்துகொள்ள அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

டாக்டர் வேணுகோபால் க இலங்கைக்கு அவர் வந்திருந்தபோது, கட்டுநாயக்க விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாக ஊடகங்களில் வெளியான செய்தியையும் பொலிஸ் பேச்சாளர் மறுத்தார்.

தெற்காசிய அரசியல் விவகாரம், அபிவிருத்தி, மோதல் நிவர்த்தி உள்ளிட்ட விடயங்களே டாக்டர் ராஜேஷ் வேணுகோபால் தேர்ச்சி பெற்ற பாடப்பரப்புகள் என்று அவரது டுவிட்டர் தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. விசாரணை முடிந்து விடுவிக்கப்பட்ட பிரிட்டிஷ் பல்கலைக்கழக விரிவுரையாளர் ராஜேஷ் வேணுகோபால், வறுமை ஒழிப்பு ஆய்வு தொடர்பான சீபா (CEPA) என்ற இலங்கை நிறுவனத்தின் கொழும்பில் நடக்கும் வருடாந்த மாநாட்டில் மோதல் நிவர்த்தி தொடர்பில் இன்று உரையாற்றவுள்ளது குறிப்பிடத்தக்கது.

http://www.seithy.com/breifNews.php?newsID=115968&category=TamilNews&language=tamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.