Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

TNA வசமுள்ள நல்லூர் பிரதேச சபையில் கழிவகற்றும் நடவடிக்கையில் உள்ளக முரண்பாடு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

TNA வசமுள்ள நல்லூர் பிரதேச சபையில் கழிவகற்றும் நடவடிக்கையில் உள்ளக முரண்பாடு:-

 

இராணுவத்தினர் பணியினை பொறுப்பேற்றனர்:-

nallur_CI.jpg

 கூட்டமைப்பு வசமுள்ள நல்லூர் பிரதேச சபையினர் கழிவகற்றும் நடவடிக்கையை உள்ளக  முரண்பாடுகளால் இடைநிறுத்தியுள்ளதால் இராணுவத்தினர் அப்பணியினை மேற்கொள்ள தொடங்கியுள்ளனர். நல்லூர் பிரதேச சபையினர் கழிவுகளை கொட்டுவதற்கு இடம் இல்லை என கூறி கடந்த புதன்கிழமை தொடக்கம் கழிவகற்றும் பணியினை இடைநிறுத்தி உள்ளனர். அதனை அடுத்து திருநெல்வேலி இராணுவத்தினர் நல்லூர் பிரதேச சபைக்கு உட்பட்ட திருநெல்வேலி சந்தையினை துப்பரவு செய்யும் பணியில் இன்று ஞாயிற்றுகிழமை ஈடுபட்டனர்.அதற்கு பிரதேச சபை வாகனங்களை அவர்கள் பயன்படுத்தினர்.

கூட்டமைப்பின் முன்னேற்பாடற்ற உள்ளக முரண்பாடுகளை தூண்டிவி;ட்டு அதன் மூலம் தமிழ் மக்களது மனங்களை வெல்லும் யாழ்.மாவட்ட இராணுவத்தளபதி உதய பெரேராவின் நடவடிக்கைகளின் ஒன்றாக இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பினில் மேலும் தெரியவருகையினில் யாழ் கண்டி நெடுஞ்சாலையில் நாவற்குழி பாலத்திற்கும் யாழ்.வளைவுக்கும் இடையில் உள்ள நன்னீர் தேங்கும் வயல் காணிக்குள் கழிவுகளை கொட்டுவதற்கு நல்லூர் பிரதேச சபை கடந்த வாரம் முயற்சியினை மேற்கொண்டது. அவ் முயற்சிக்கு கமநல சேவைகள் திணைக்களமும் வடமாகாண விவசாய அமைச்சும் கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன், மீறி கழிவுகள் அங்கு கொட்டப்பட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்தது. அதனை அடுத்து நல்லூர் பிரதேச சபையினால் அவ் முயற்சி கைவிடப்பட்டது.

 

நல்லூர் பிரதேச சபை கழிவுகளை கொண்டுவதற்கு முனைந்த காணி தனியார் ஒருவரினால் அன்பளிப்பாக கொடுக்கப்பட்ட 2 ஏக்கர் காணியாகும். குறித்த தனியாருக்கு அப்பிரதேசத்தில் 14 ஏக்கர் காணி உள்ளது ஆனால் அக்hணிகளுக்கு வயல் வரம்புகளே பாதையாக காணப்படுகின்றது. தனது காணிக்கு பாதையினை போடுவதற்காக அவர் பல தடவைகள் முயற்சித்த போதிலும் வயல் காணிக்குள் பாதை போடுவதற்கு கமநல சேவைகள் திணைக்களம் அனுமதி அளிக்கவில்லை

 

அதனை அடுத்து குறித்த தனி நபர் நல்லூர் பிரதேச சபைக்கு தனது 14 ஏக்கர் காணியின் முடிவில் உள்ள 2ஏக்கர் காணியினை நன்கொடையாக கொடுத்து அக் காணியை பிரதேச சபை பயன்படுத்துமாறு கூறினார். அக் காணியை நன்கொடையாக பெற்றுக்கொண்ட நல்லூர் பிரதேச சபை அக் காணிக்கு 2 மில்லியன் ரூபாய் செலவில் பாதை அமைத்துள்ளது. வயல் காணிக்குள் பாதை அமைக்க கமநல சேவைகள் திணைக்களம் அனுமதி அளிக்காத போதிலும் அதனையும் மீறி நல்லூர் பிரதேச சபை வயல் காணிக்குள் பாதையினை அமைத்தது

 

2 மில்லியன் ரூபாயில் அமைக்கப்பட்ட அப்பாதையானது கட்டட இடிபாடுகளை கொண்டே அமைக்கப்பட்டுள்ளது அப் பாதைக்கே 2 மில்லியன் ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளதாக நல்லூர் பிரதேச சபை கூறுகின்றது.

இந் நிலையில் கடந்த 26ம் திகதி செவ்வாய்க்கிழமை அக் காணிக்குள் கழிவுகளை கொட்டுவதற்காக நல்லூர் பிரதேச சபை முயற்சிகளை மேற்கொண்ட வேளை அவ் முயற்சியினை உடனடியாக கைவிடும் மாறு கமநல சேவைகள் திணைக்களமும் வடமாகாண விவசாய அமைச்சும் உத்தரவு இட்டது.

 

உத்தரவை மீறி அவ் வயல் காணிக்குள் கழிவுகளை கொட்டினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்தது அதனை அடுத்து நல்லூர் பிரதேச சபை அவ் முயற்சியை கைவிட்டதுடன் கழிவுகளை கொட்டுவதற்கு இடம் இல்லை என காரணம் கூறி நல்லூர் பிரதேச சபைக்கு உட்பட பிரதேசத்தில் கழிவகற்றும் நடவடிக்கையையும் கைவிட்டது.

 

கடந்த ஒரு வார காலமாக நல்லூர் பிரதேச சபை கழிவகற்றல் நடவடிக்கையில் ஈடுபடாததால் நேற்றைய தினம்  சனிக்கிழமை நல்லூர் பிரதேச சபையிடம் திருநெல்வேலி இராணுவ முகாமை சேர்ந்த இராணுவத்தினர் தாம் கழிவகற்றும் பணியில் ஈடுபடுவதகாவும் அதற்காக நல்லூர் பிரதேச சபையின் வாகனத்தை தரும்மாரும் கோரியிருந்தனர்.

 

அதற்கு நல்லூர் பிரதேச சபை தவிசாளர் கழிவுகளை கொட்டுவதற்கு இடம் இல்லாமையால் தான் தாம் கழிவகற்றும் பணியை இடைநிறுத்தி உள்ளதாகவும் தமக்கு இடம் கிடைத்தும் அப் பணியை மீள தொடருவோம் என கூறியிருந்தார்.

அதற்கு இராணுவத்தினர் உங்களுக்கு இடம் கிடைக்கும் வரை நாம் அந்த பணியை செய்கின்றோம் எமக்கு கழிவுகளை கொட்டுவதற்கு இடம் உள்ளது நாம் அங்கே இவ் கழிவுகளை கொட்டுகின்றோம் என கூறி இன்று (30) ஞாயிற்றுக்கிழமை மாலை நல்லூர் பிரதேச சபையின் வாகனத்தை தருமாறு கோரி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/111120/language/ta-IN/TNA------.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.