Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

13 திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக TNAயுடன் பேச்சுக்களை நடத்த தயாராக இருக்கிராராம் மகிந்த:-

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
13 திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக TNAயுடன் பேச்சுக்களை நடத்த தயாராக இருக்கிராராம் மகிந்த:-
11 செப்டம்பர் 2014
 

பாலசந்திரனின் மரணத்திற்கு யார் காரணம் என்பது பற்றி விசாரணை - தமிழில் - குளோபல் தமிழ்ச் செய்திகள்:-

13nth_CI.jpg

தமிழ் தேசியகூட்டமைப்புடன் 13 திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான பேச்சுக்களை மேற்கொள்வதற்க்கு தயாராகயிருப்பதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஜனவரி மாதம் ஜனாதிபதி தேர்தல் நடைபெறுவதற்கான சாத்தியக்கூறுகளை அவர் நிராகரிக்க தவறியுள்ளார்.

இந்தியாவின் இந்து நாளிதழிற்க்கு அளித்துள்ள பேட்டியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பினரை இந்திய பிரதமர் சந்தித்தது குறித்து தான் சீற்றமடைந்ததாக வெளியான கருத்துக்களையும் நிராகரித்துள்ள ஜனாதிபதி ஜனநாயகத்தில் எவரையும் சந்திப்பதற்கான உரிமை உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் கூட்டத்தொடரின் போது இந்திய பிரதமரை சந்திப்பதற்க்கு விருப்பம் கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ள இலங்கை ஜனாதிபதி ஐக்கிய நாடுகள் மனித உரிமை கவுன்சிலின் வாக்கெடுப்பின் போது இந்தியா எடுத்த நிலைப்பாட்டிற்க்கு தான் நன்றியுடையவன் எனவும் தெரிவித்துள்ளார்.

எங்களது அரசாங்கம் யுத்த குற்றச்சாட்டுக்கள் குறித்து உள்ளுர் விசாரணையை முன்னெடுக்கிறது, நாங்கள் அதனை அவர்கள் சர்வதேசமயப்படுத்த விடமாட்டோம், என தெரிவித்துள்ள மகிந்த ராஜபக்ச அடுத்த முறை ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழு காஷ்மீர் தொடர்பாக சர்வதேச விசாரணை அவசியம் என தெரிவிக்கும் அவ்வேளை எங்களது நிலைப்பாடு என்னவாகயிருக்கும், இந்தியாவோ இலங்கை எதுவாக இருந்தாலும் நாங்கள்வெளிநாட்டு விசாரணைகளை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என தெரிவித்துள்ளார்.


காணமற்போனவர்கள் 20,000 பேர் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து இடம்பெறுகின்றன, பிரபாகரனின் மகன் பாலசந்திரனின் மரணத்திற்க்கு யார் காரணம் என்பது குறித்து இன்னமும் தெரியவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


இந்த சம்பவம் குறித்து நாங்கள் விசாரணை செய்து வருகிறோம்,இராணுவம் இதனை செய்திருக்கும் என நான் கருதவில்லை, எனினும் இது உண்மையா என எனக்கு தெரியவேண்டும் அதன்காரணமாக விசாரிக்கிறோம், யுத்தத்தில் இரு தரப்பும் மோதலில் ஈடுபடும்போது யார் சுட்டிருப்பார்கள் என எப்படி தெரிவிப்பது?    ஏன அவர் கேள்வி எழுப்பியுள்ளார்


இலங்கை சீனா உறவுகள் குறித்து அச்சம் கொள்ளவேண்டிய தேவை இந்தியாவிற்க்கு இல்லை, என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பிரபாகரனின் புதல்வர் பாலசந்திரனின் மரணத்திற்கு யார் காரணம் என்பது பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும்

13ம் திருத்தச் சட்டம் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடாத்தத் தயார் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ வழமை போன்றே இந்திய ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.


13ம் திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்த முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்திய தலைவர்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் சந்தித்தமைக்கு தாம் எதிர்ப்பு வெளியிடவில்லை எனவும், அது அவரவர் ஜனநாயக உரிமை எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.


ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இந்தியா இலங்கைக்கு ஆதரவாக செயற்பட்டமைக்கு நன்றி பாராட்டுவதாகத் தெரிவித்துள்ளார்.


ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் வைத்து இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க விரும்புவதாகக் குறிப்பிட்டுள்ளார்.


யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் உள்நாட்டு விசாரணைகள் நடத்தப்படும் எனவும், விசாரணைகளை சர்வதேச மயப்படுத்த இடமளிக்கப்பட மாட்டாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


அடுத்த மனித உரிமைப் பேரவை அமர்வுகளின் போது காஸ்மீர் பிரச்சினை குறித்து சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றப்படலாம் எனவும், இலங்கை இந்தியா எந்த நாடு என்றாலும் உள்விவகாரங்களில் வெளிநாடுகள் தலையீடு செய்வதனை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.


பிரபாகரனின் புதல்வர் பாலசந்திரனின் மரணத்திற்கு யார் காரணம் என்பது பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் இன்னமும் விசாரணைகள் பூர்த்தியாகவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


இராணுவத்தினர் பாலசந்திரனை கொன்றிருக்க முடியாது எனவும், யுத்தத்தின் போது யார் யார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினார்கள் என துல்லியமாக எப்படிக் கூறுவது எகன அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.


இந்த விடயங்கள் குறித்து விசாரணை நடத்தி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.


முன்கூட்டியே ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படக் கூடிய சாத்தியங்கள் உண்டு எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையிலான உறவுகள் தொடர்பில் இந்தியா எவ்வித கவலையும் கொள்ள வேண்டிய அவசியமில்லை என அவர் சுட்டிக்காட்யுள்ளார்.

தாம் ஜனாதிபதியாக பதவி வகிக்கும் வரையில் இந்தியாவிற்கு எதிராக எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்பட மாட்டாது என அவர் உறுதியளித்துள்ளார்.

அத்து மீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் விடுதலை செய்யப்படலாம் என்ற போதிலும் படகுகளை விடுவிக்க சாத்தியம் குறைவு என அவர் தெரிவித்துள்ளார்.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/111461/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

தாம் ஜனாதிபதியாக பதவி வகிக்கும் வரையில் இந்தியாவிற்கு எதிராக எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்பட மாட்டாது என அவர் உறுதியளித்துள்ளார்.

நாமல் ராஜபக்ச ஜனாதிபதியாக வந்தால் இந்தியாவுக்கு அடி இருக்கு......என்றீயள்...:D

Edited by putthan

 நீங்கள் பேச்சு வார்த்தைக்கு தற்சமயம் போவீர்களானால் வெளி நாடுகளால் மேற்கொள்ளப்படும் போர்குற்ற விசாரணை ஸ்தம்பிதம் அடையும்.போற்குற்ற விசாரணையில் மக்கள் ஆர்வம் காட்டமாட்டார்கள்

Edited by BLUE BIRD

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.