Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விடுதலை"க் கனவு

Featured Replies

புலிகளின் "விடுதலை"க் கனவு என்பது கனவாகத்தான் இருக்கும்: பாலித கோகென்ன ஞாயிற்றுக்கிழமை 1 ஒக்ரொபர் 2006இ 19:32 ஈழம்ஸ ஜச.விமலராஜாஸ

தமிழீழ விடுதலைப் புலிகளின் "விடுதலை" கனவு என்பது கனவாகத்தான் இருக்கும் என்று சிறிலங்கா சமாதான செயலகப் பணிப்பாளர் பாலித கோகென்ன கூறியுள்ளார்.

ஏ.பி. செய்தி நிறுவனத்துக்கு பாலித கோகென்ன அளித்த நேர்காணல்:

பேச்சு மேசைக்குத் திரும்புவதாக அரசாங்கம் தொடர்ந்து கூறிவருகிறது.

ஒக்ரோபர் ஓஸ்லோப் பேச்சுக்களை நடத்துவது தொடர்பில் நோர்வே அணுசரணையாளர்களுடன் ஈடுபாட்டுடன் செயற்பட்டு வருகிறோம். ஆகையால் நிச்சயமாக பேச்சுக்கள் நடைபெறும்.

ஆனால் ஒரே வருத்தம்... இந்த சமாதான காலத்தைப் பயன்படுத்தி போர் நடவடிக்கைகள் மற்றும் ஆட்சேர்ப்பு- ஆயுதக்குவிப்பு ஆகியவற்றில் விடுதலைப் புலிகள் ஈடுபடக்கூடாது. இதைத்தான் கடந்த காலங்களில் அவர்கள் செய்தனர்.

ஜெனீவாவில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் பேச்சுக்களை நாம் நடத்தியிருந்தோம். ஏப்ரல் பேச்சுக்கான நாளும் குறிக்கப்பட்டது. ஆனால் விடுதலைப் புலிகள்தான் பேச்சு மேசைக்கு வரவில்லை. பேச்சு மேசைக்குத் திரும்பாமல் இருப்பதற்கு காரணங்களைக் கூறிக் கொண்டிருக்கின்றனர்.

இலங்கையில் நிச்சயமற்ற நிலைமை இப்போது உள்ளது. அனைத்து இலங்கையினரது உரிமைகளுக்கான உத்திரவாதத்துடனான தீர்வை பேச்சு மூலம் ஏற்படுத்த அரசாங்கம் விரும்புகிறது. ஆகையால் விடுதலைப் புலிகள் தங்களது பயங்கரவாதத்தையும் வன்முறையையும் கைவிட்டுவிட்டு பேச்சு மேசைக்கு விரும்பில் திரும்ப வேண்டும்.

பிளவுபடாத ஒரே நாட்டுக்குள் மேலதிக அதிகாரத்தை பகிர்ந்து கொள்வதை நாம் பரிசீலிக்கிறோம். ஆனால் வன்முறை மற்றும் பயங்கரவாதத்தின் மூலமாக தங்களது இலக்கை அடைய அவர்கள் நினைக்கலாம். தங்களது கனவை கைவிட்டுவிட்டு பேச்சு மேசைக்கு அவர்கள் திரும்புவார்கள் என்று நம்புகிறோம். இதைத்தான் உலகமெங்கும் நாம் பார்க்கிறோம்.

இந்தோனேசியாவின் ஆச்சேஇ அயர்லாந்துஇ ஸ்பெய்னின் பாஸ்கியூ பிரச்சனைகளில் ஒருகாலத்தில் பயங்கரவாத அமைப்புக்களாக இருந்தவர்கள் அதன் பின்னர் அமைதி வழியில் அரசியல் ரீதியாக இலக்கை அடைந்தனர்.

என்னைப் பொறுத்தவரை விடுதலைப் புலிகளின் சுதந்திரக் கனவு என்பது கனவாகத்தான் இருக்கும் என்றார் பாலித கோகென்ன.

http://www.eelampage.com/?cn=29071

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.