Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழில் வெறிச்சோடிய பாடசாலைகள்

Featured Replies

யாழ்ப்பாணத்தில் மகிந்த ராஜபக்ச உத்தரவின்படி பாடசாலைகள் திறக்கப்பட்ட போதும் ஆசிரியர்களும் மாணவர்களும் செல்லவில்லை.

சிறிலங்கா ஆசிரியர்கள் சங்கத்தின் தலைவர் ஜோசெப் ஸ்ராலின் கூறியதாவது:

யாழ்ப்பாணத்தின் பாதுகாப்பு நிலைமைகளால் மாணவர்களால் பாடசாலைகளுக்குச் செல்ல முடியாது.

யாழ். நிலைமைகளில் வீதிகளில் நடமாடக்கூட அவர்கள் அஞ்சுகின்றனர். தற்போதைய நிலைமைகளால் பாடசாலை மாணவர்கள் அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்காக யாழில் வரிசையில் காத்து நிற்கின்றனர்.

சிறிலங்கா இராணுவ ஆக்கிரமிப்புப் பகுதிகளில் பாடசாலைகளைத் திறப்பதை தமிழீழ விடுதலைப் புலிகள் தடுப்பதாகக் கூறி மகிந்த ராஜபக்ச இந்த உத்தரவைப் பிறப்பித்ததாக ஊடகச் செய்திகள் தெரிவித்தன.

ஆனால் முகமாலை மற்றும் ஓமந்தை சோதனைச் சாவடிகள் நீண்ட காலம் மூடப்பட்டுள்ளமையால் ஆசிரியர்கள் கூட பாடசாலைகளுக்குச் செல்வது கடினமானது என்றார் ஜோசப் ஸ்ராலின்.

http://www.eelampage.com

யாழ்ப்பாணத்தில் மகிந்த ராஜபக்ச உத்தரவின்படி பாடசாலைகள் திறக்கப்பட்ட போதும் ஆசிரியர்களும் மாணவர்களும் செல்லவில்லை.

............................http://www.eelampage.com

இனியும் காலத்தைத் தாழ்த்தாது மாணவர் பகிஷ்கரிப்பை கைவிடுக யாழ்.ஆயர் அவசர வேண்டுகோள்

யாழ்ப்பாணம்,ஒக்.2

தமிழ் மக்கள் வேறு எந்த நலன்களுக்காகவும் கல்வியைப் பேரம் பேசியவர்கள் அல்லர்.

எனவே இனியும் காலந் தாழ்த்தாது மாண வர்களின் பகிஷ்கரிப்பை உடன் நிறுத்தும் படி சம்பந்தப்பட்டவர்களை வேண்டுகிறோம்.

இவ்வாறு யாழ்.ஆயர் மேதகு தோமஸ் சவுந்தரநாயகம் மாணவர்களுக்கு அவசர வேண்டுகோள் விடுத்துள்ளார்.

யாழ்.மாவட்டத்தில் நடைபெற்றுவரும் பாடசாலை பகிஷ்கரிப்பைக் கைவிடக் கோரி நேற்று விடுத்த அறிக்கை ஒன்றிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டிருக்கிறார்.

இடம்பெயர்ந்து பாடசாலைகளில் இருப்போர் அவற்றை விட்டு விலக உரிய ஏற்பாடுகளைச் செய்தும், போதுமான போக்குவரத்து சேவை, தடையற்ற மின்சாரம், ஊரடங்கு தளர்வு மற்றும் வசதிகளை வழங்கி இயல்பு நிலையைத் தோற்றுவித்து கல்விச் சேவை தொடர்வதற்கு சம்பந்தப்பட்ட அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றும் ஆயரின் அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

அறிக்கையின் முழு விவரமும் வருமாறு:

நடைபெற்றுக்கொண்டிருக்கும் கொடிய போரினால் நாம் எமது நிலத்தை, வீடுகளை, செல்வத்தை, சேமிப்புக்களை, கல்விமான்களை, பெற்றோரை, இளையோரை, ஏன் எமது மனித மாண்பையும், சிந்திக்கின்ற கருத்து வெளியிடுகின்ற சுதந்திரத்தையும் இழந்துள் ளோம்.

ஒரு பானை கஞ்சிக்காக அரச நிவாரணத்தை நம்பி அனைத்தையுமே இழந்து விட்டோம்.

இந்த அனைத்து இழப்புக்களுக்கும் மத்தியிலும் தமிழ் மக்கள் தமது பிள்ளைகளின் பொன்னான கல்வியை ஒரு போதும் மறந்தவர்கள் அல்லர்.

கல்விக்காக எதையும் சமரசம் செய்தவர்களும் அல்லர். அரசியல் பொருளாதார அல்லது வேறு எந்த நலன்களுக்காகவும் கல்வியை பேரம் பேசியவர்கள் அல்லர்.

வருந்தத்தக்கது

மாணவர்களின் கல்வியையும் முன்னேற்றத்தையும் பேணிப் பாதுகாக்க வேண்டிய மதிப்பான கடமையைக் கொண்டுள்ள மாணவர் அமைப்பின் ஒரு பகுதியினர், மாணவர்களைப் பாடசாலைக்குச் செல்ல வேண்டாம் எனத் தெரிவிக்கும் ஒரு நிலை தோன்றி இருப்பது வருந்தத்தக்கது.

இனப் பிரச்சினை வட பகுதியினரின் கல்வித் தரத்தையே வெகுவாகத் தாக்கியுள்ளதென கல்விமான்கள் கவலையடைத்துள்ளனர்.

ஜீ.சி.ஈ. சாதாரண தரப் பரீட்சை மிகவிரை வில் நடத்தப்படவிருக்கிறது. வருடாந்தப் பரீட்சைகளுக்கு இன்னும் சில வாரங்களே உள்ளன. எனவே இனியும் காலந்தாழ்த்தாது மாணவர்களின் பகிஷ்கரிப்பை உடன்நிறுத்தும்படி சம்பந்தப்பட்டவர்களை வேண்டுகிறோம்.

இயல்பு நிலையைத் தோற்றுவிக்குக

இடம்பெயர்ந்து பாடசாலைகளில் இருப்போர் பாடசாலைகளை விட்டு விலகியும், போதுமான போக்குவரத்துச் சேவை, தடையற்ற மின்சாரம், ஊரடங்கு தளர்வு மற்றும் வசதிகளை வழங்கி இயல்பு நிலையைத் தோற்றுவித்து கல்விச் சேவை தொடர ஒத்துழைக்கும்படி சம்பந்தப்பட்ட அனைவருக்கும் வேண்டுகோள் விடுக்கிறோம் என்றுள்ளது.

http://www.uthayan.com/pages/news/061002/04.htm

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.