Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊரிக்கிராம பாலியல் துஷ்பிரயோகக் குற்றவாளிகளை நீதிமன்றில் முன்னிவைப்படுத்த கடற்படை மறுப்பு- கொதிப்பு

Featured Replies

GTN%20Flash%20News_CI.jpg

 ஊரிக்கிராம பாலியல் துஷ்பிரயோகக் குற்றவாளிகளை நீதிமன்றில் முன்னிவைப்படுத்த கடற்படை அதிகாரி மறுப்பு - நீதவான் கொதிப்பு:- 

 

காரைநகர் ஊரிக் கிராமத்தில் இரு சிறுமிகள் கடற்படையினரால் தொடர்ச்சியாக பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டனர் எனக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் நீதிமன்றில் ஆஜர்படுத்த கோரிய ஏனைய இரு கடற்படை சிப்பாய்கள் இன்றும் ஆஜர்படுத்தப்படவில்லை. 

இதனால் கோபமடைந்த நீதிபதி காவல்துறையை திட்டிதீர்த்த சம்பவம் இன்று நடந்துள்ளது. குறித்த கடற்படையினரை ஒப்படைக்க கடற்படை கட்டளை தளபதி மறுதலித்து வருவதாக மற்றொரு தகவல் தெரிவிக்கின்றது.

இதனிடையே கைதாகி பிணையில் விடுவிக்கப்பட்ட கடற்படை சிப்பாய்களுக்கு எதிரான பூர்வாங்க சாட்சிகள், சத்தியக்கடதாசி மூலமாக வழங்கிய சாட்சியங்களைக் கொண்ட அறிக்கை இன்று செவ்வாய்க்கிழமை யாழ்.குருநகர் பெண்கள், சிறுவர் நீதிமன்றில் ஊர்காவற்துறை பொலிஸாரால் சமர்பிக்கப்பட்டுள்ளது. 

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, மன்றில் ஆஜரான ஊர்காவற்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சந்தேக நபர்களான கடற்படை சிப்பாய்கள் ஏழு பேருக்கு எதிரான சான்று அறிக்கைகளை மன்றில் சமர்பித்தார். அத்துடன், மேலதிக அறிக்கையையும் தாக்கல் செய்தார்.

இதேவேளை, கடந்த வழக்கு தவணையின் போது விடுமுறையில் சென்றனர் எனத் தெரிவித்து தொடர்ந்து மன்றில் ஆஜராகாமல் இருக்கும் சந்தேகநபர்களான இரு கடற்படை சிப்பாய்களையும் மன்றில் ஆஜர்படுத்துமாறு நீதவான் கறுப்பையா ஜீவராணி பொலிஸாருக்கு கடுமையான உத்தரவு பிறப்பித்திருந்தார். 

எனினும் அவர்கள் இருவரும் இன்றும் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவில்லை. சந்தேக நபர்களான கடற்படை சிப்பாய்களின் தொலைபேசிகள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டு நேற்று நீதிமன்றில் பொலிஸாரால் ஒப்படைக்கப்பட்டன. அத்துடன் குறித்த கடற்படை சிப்பாய்களின் தொலைபேசியில் சம்பவம் இடம்பெற்ற காலப்பகுதியில், உள்வந்த மற்றும் வெளிச் சென்ற அழைப்புக்கள் தொடர்பான அறிக்கையும் மன்றில் சமர்பிக்கப்பட்டது.

இதேவேளை, சந்தேக நபர்கள் ஏழு பேரின் கையடக்கத் தொலைபேசியில் சம்பவம் இடம்பெற்ற காலப்பகுதிக்கு முன்னர் ஆபாசப்படங்கள் இருந்தனவா என்பது தொடர்பில் தேசிய தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு மூலம் கண்டு அறிந்து அறிக்கை சமர்பிக்குமாறு பொலிஸாருக்கு நீதிவான் உத்தரவிட்டார். 

மேலும், சந்தேக நபர்களின் 2014 ஆண்டு ஏப்ரல் தொடக்கம் ஜூன் மாதம் 15ஆம் திகதி வரையான காலப்பகுதியின் விடுமுறை பதிவேட்டு அறிக்கையும் சான்றுப்பொருட்களாக மன்றில் பாரப்படுத்தப்பட்டது. அத்துடன் பாதிக்கப்பட்ட இரு சிறுமிகளின் பாடசாலை தினவரவு அறிக்கையையும் சான்றுப் பொருளாக மன்றில் ஊர்காவற்றுறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சமர்பித்தார். மேலும், சம்பவம் இடம்பெற்ற காலப்பகுதியில் சிறுமிகள் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டனர் எனக் கூறப்படும், அக் காவலரணில் கடமையாற்றிய கடற்படை சிப்பாய்களின் வரவு பதிவேட்டு அறிக்கையும் சாட்சிகளுக்கு எதிரான சான்றுப் பொருளாக மன்றில் சேர்த்துக் கொள்ளப்பட்டது.

கடந்த வழக்குத் தவணையின்போது பாதிக்கப்பட்ட சிறுமியின் இரத்தமாதிரியையும், கடற்படை சிப்பாய்கள் ஏழு பேரின் இரத்தமாதிரிகளையும் ராகம இரசாயனப் பகுப்பாய்வுத் திணைக்களத்திற்கு அனுப்பி வைப்பதற்குரிய உத்தியோகபூர்வமான அனுமதியையும் பொலிஸாருக்கு நீதவான் வழங்கியிருந்தார்.

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/111690/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

 

GTN%20Flash%20News_CI.jpg

 ஊரிக்கிராம பாலியல் துஷ்பிரயோகக் குற்றவாளிகளை நீதிமன்றில் முன்னிவைப்படுத்த கடற்படை அதிகாரி மறுப்பு - நீதவான் கொதிப்பு:- 

 

காரைநகர் ஊரிக் கிராமத்தில் இரு சிறுமிகள் கடற்படையினரால் தொடர்ச்சியாக பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டனர் எனக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் நீதிமன்றில் ஆஜர்படுத்த கோரிய ஏனைய இரு கடற்படை சிப்பாய்கள் இன்றும் ஆஜர்படுத்தப்படவில்லை. 

இதனால் கோபமடைந்த நீதிபதி காவல்துறையை திட்டிதீர்த்த சம்பவம் இன்று நடந்துள்ளது. குறித்த கடற்படையினரை ஒப்படைக்க கடற்படை கட்டளை தளபதி மறுதலித்து வருவதாக மற்றொரு தகவல் தெரிவிக்கின்றது.

இதனிடையே கைதாகி பிணையில் விடுவிக்கப்பட்ட கடற்படை சிப்பாய்களுக்கு எதிரான பூர்வாங்க சாட்சிகள், சத்தியக்கடதாசி மூலமாக வழங்கிய சாட்சியங்களைக் கொண்ட அறிக்கை இன்று செவ்வாய்க்கிழமை யாழ்.குருநகர் பெண்கள், சிறுவர் நீதிமன்றில் ஊர்காவற்துறை பொலிஸாரால் சமர்பிக்கப்பட்டுள்ளது. 

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, மன்றில் ஆஜரான ஊர்காவற்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சந்தேக நபர்களான கடற்படை சிப்பாய்கள் ஏழு பேருக்கு எதிரான சான்று அறிக்கைகளை மன்றில் சமர்பித்தார். அத்துடன், மேலதிக அறிக்கையையும் தாக்கல் செய்தார்.

இதேவேளை, கடந்த வழக்கு தவணையின் போது விடுமுறையில் சென்றனர் எனத் தெரிவித்து தொடர்ந்து மன்றில் ஆஜராகாமல் இருக்கும் சந்தேகநபர்களான இரு கடற்படை சிப்பாய்களையும் மன்றில் ஆஜர்படுத்துமாறு நீதவான் கறுப்பையா ஜீவராணி பொலிஸாருக்கு கடுமையான உத்தரவு பிறப்பித்திருந்தார். 

எனினும் அவர்கள் இருவரும் இன்றும் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவில்லை. சந்தேக நபர்களான கடற்படை சிப்பாய்களின் தொலைபேசிகள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டு நேற்று நீதிமன்றில் பொலிஸாரால் ஒப்படைக்கப்பட்டன. அத்துடன் குறித்த கடற்படை சிப்பாய்களின் தொலைபேசியில் சம்பவம் இடம்பெற்ற காலப்பகுதியில், உள்வந்த மற்றும் வெளிச் சென்ற அழைப்புக்கள் தொடர்பான அறிக்கையும் மன்றில் சமர்பிக்கப்பட்டது.

இதேவேளை, சந்தேக நபர்கள் ஏழு பேரின் கையடக்கத் தொலைபேசியில் சம்பவம் இடம்பெற்ற காலப்பகுதிக்கு முன்னர் ஆபாசப்படங்கள் இருந்தனவா என்பது தொடர்பில் தேசிய தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு மூலம் கண்டு அறிந்து அறிக்கை சமர்பிக்குமாறு பொலிஸாருக்கு நீதிவான் உத்தரவிட்டார். 

மேலும், சந்தேக நபர்களின் 2014 ஆண்டு ஏப்ரல் தொடக்கம் ஜூன் மாதம் 15ஆம் திகதி வரையான காலப்பகுதியின் விடுமுறை பதிவேட்டு அறிக்கையும் சான்றுப்பொருட்களாக மன்றில் பாரப்படுத்தப்பட்டது. அத்துடன் பாதிக்கப்பட்ட இரு சிறுமிகளின் பாடசாலை தினவரவு அறிக்கையையும் சான்றுப் பொருளாக மன்றில் ஊர்காவற்றுறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சமர்பித்தார். மேலும், சம்பவம் இடம்பெற்ற காலப்பகுதியில் சிறுமிகள் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டனர் எனக் கூறப்படும், அக் காவலரணில் கடமையாற்றிய கடற்படை சிப்பாய்களின் வரவு பதிவேட்டு அறிக்கையும் சாட்சிகளுக்கு எதிரான சான்றுப் பொருளாக மன்றில் சேர்த்துக் கொள்ளப்பட்டது.

கடந்த வழக்குத் தவணையின்போது பாதிக்கப்பட்ட சிறுமியின் இரத்தமாதிரியையும், கடற்படை சிப்பாய்கள் ஏழு பேரின் இரத்தமாதிரிகளையும் ராகம இரசாயனப் பகுப்பாய்வுத் திணைக்களத்திற்கு அனுப்பி வைப்பதற்குரிய உத்தியோகபூர்வமான அனுமதியையும் பொலிஸாருக்கு நீதவான் வழங்கியிருந்தார்.

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/111690/language/ta-IN/article.aspx

 

 

அடெங் கொக்க மக்கா,
 
ராகமையில எல்லாத்தையும் மாத்திபுடும் வரைக்கும் வெயிடிங்கு !
 
அப்புறம் ஜாலியா வந்து, ரத்த மாதிரி அவங்களது இல்லை என்னுட்டு கிளம்புவாய்ங்க.
 
இது புரியாம ஜட்ஜ் அம்மா கொதிக்கிறாகளா ?
 
ஐயோ, ஐயோ...  :o  :icon_idea:

Edited by Nathamuni

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.