Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

--சமாதான முயற்சிகளிலிருந்து நிரந்தரமாக விலகல்--

Featured Replies

thamilselvan.jpg

தமிழர் தாயகத்தில் வலிந்த தாக்குதலைத் தொடங்கி தமிழ் மக்கள் மீது இனியும் யுத்தத்தை ஏவினால் சமாதான முயற்சிகளிலிருந்து நிரந்தரமாக விலக வேண்டியதிருக்கும் என்று நோர்வேத் தரப்பிடம் தெரிவித்துள்ளதாக தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் சு.ப.தமிழ்ச்செல்வனை இலங்கைக்கான நோர்வே சிறப்புத் தூதுவர் ஜோன் ஹன்சன் பௌயர் இன்று செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினார்.

இச்சந்திப்புக்குப் பின்னர் ஊடகவியலாளர்களிடம் சு.ப. தமிழ்ச்செல்வன் கூறியதாவது:

நோர்வே சிறப்புத் தூதுவர் மற்றும் நோர்வே தூதுவரைக் கொண்ட குழுவினரை இன்று சந்தித்து நாங்கள் விரிவாகக் கலந்துரையாடினோம்.

இன்றுள்ள நிலைமைகள் மற்றும் சர்வதேச கரிசனைகள் பற்றி கூடுதலாக கலந்துரையாடப்பட்டது.

நோர்வேத் தரப்பினரின் பயண நோக்கம்

இருதரப்பினரையும் சந்தித்து மோதல்களை நிறுத்த வைக்க வேண்டும் என்பதுதான் ஜோன் ஹன்சன் பௌயரின் முயற்சியாக இருக்கிறது. அந்த முயற்சியின் விளைவாகத்தான் இந்த பயணம்.

இருதரப்பும் மோதல்களை நிறுத்தி பேச்சுக்களை நடத்த வேண்டும் என்பதுதான் சர்வதேச சமூகத்தின் கோரிக்கை.

இதைத்தான் நோர்வேத் தூதுவரும் எங்களிடம் இன்று முன்வைத்தார்.

சிறிலங்கா அரசாங்கத்தின் நிலைப்பாடாக தெரிவிக்கப்பட்டவை

- சர்வதேச சமூகத்தினது குறிப்பாக இணைத் தலைமை நாடுகளினது வேண்டுகோளை தாங்கள் ஏற்றுக்கொண்டிருப்பதாகவும்

- நிபந்தனையற்ற வகையில் இருதரப்பும் சந்திப்பதற்கும்

- மோதல்களை நிறுத்துவதற்கும்

தாங்களும் தயாராக இருப்பதான ஒரு நிலைப்பாடு சிறிலங்கா அரசாங்கத்திடம் இருக்கிறது என்று கூறினார்களே தவிர சிறிலங்கா அரசாங்கத்திடமிருந்து எந்த உத்தரவாதங்களும் எங்களுக்குத் தரப்படவில்லை.

ஆகவே நாங்கள் கூறியிருக்கிறோம்-

எமது நிலைப்பாட்டை சர்வதேச சமூகத்தை நம்பித்தான் நாங்கள் தெரிவித்திருக்கிறோம்- சிறிலங்கா அரசாங்கத்தை நம்பி அல்ல.

சர்வதேச சமூகத்தினது முயற்சிக்கு இறுதிச் சந்தர்ப்பமாக நாங்கள் எங்களது இணக்கப்பாட்டை ஏற்கெனவே தெரிவித்திருந்தோம். எனவே இது சீர்குலையுமா? சீர்குலையாதா? என்பது எங்களைப் பொறுத்தது அல்ல. சிறிலங்கா அரசாங்கத்தையும் இராணுவத்தையும் பொறுத்தது.

நிபந்தனைகள் குறித்து எதுவும் எங்களுக்குத் தெரிவிக்கப்படவில்லை.

சிறிலங்காவில் உள்ள பேச்சாளர், அமைச்சர் மற்றும் மகிந்த ராஜபக்ச ஆகியோர் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான கருத்தை வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.

நோர்வேத் தரப்பினர் எம்மிடம் கூறியது என்னவெனில்,

உத்தியோகப்பூர்வமாக நாங்கள் உங்களிடம் பரிமாறிக் கொள்கிற விடயங்கள்தான் உண்மையானவையே தவிர ஊடகங்கள் மற்றும் அமைச்சர்கள் நாளுக்கு நாள் தெரிவிக்கின்ற கருத்துகள் ஆகியவற்றை வைத்து நீங்கள் எந்த ஒரு முடிவையும் எடுக்க வேண்டாம். அனுசரணையாளர்கள் என்கிற வகையில் எங்களினூடாக பரிமாறப்படுகிற விடயங்களை மட்டும் வைத்துக் கொண்டு முடிவெடுங்கள் என்று அவர்கள் இன்று ஒரு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த அடிப்படையில் அவர்கள் வெளியிடுகிற அறிக்கைகளை கோமாளித்தனமான அறிக்கைகளாகத்தான் பார்க்கிறோம்.

விடுதலைப் புலிகள் தெரிவித்தவை

அ. நடைமுறையில் யுத்த நிறுத்த ஒப்பந்தம்

சமரச முயற்சிகளுக்கு நாங்கள் தயார்- யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை நாங்கள் மதிக்கிறோம் என்று சிறிலங்கா அரசாங்கம் கூறிக் கொண்டு அதற்கு விரோதமாக எமது மக்கள் மீது பாரிய யுத்தத்தை தொடர்ந்து கொண்டிருக்கிறது. எங்கள் மக்களைப் படுகொலை செய்வது, இடம்பெயர செய்ய வைப்பது, காணாமல் போகச் செய்தல் மற்றும் எமது தாயகத்தை ஆக்கிரமித்தல் என்கிற வகையில் ஒரு முழு அளவிலான யுத்தத்தையே சிறிலங்கா அரசு கட்டவிழ்த்துவிட்டுள்ளது. இதைச் சர்வதேச சமூகம் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதை விரிவாக விளக்கியிருக்கிறோம்.

இன்றைய சந்திப்பில் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் இருக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தோம்.

- யுத்த நிறுத்த ஒப்பந்தம் நடைமுறையில் உள்ளதா?

- யுத்த நிறுத்த கண்காணிப்புக் குழுவினரின் செயற்பாடுகள் தொடர்ந்து நடைபெறுகின்றனவா?

என்பது குறித்து கேட்டோம்.

ஏ-9 பாதை திறக்கப்பட வேண்டும் என்பதும்

ஏ-9 பாதையை திறந்து எங்களது மக்களினது மனிதாபிமான உதவிகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும் என்பதும்

யுத்த நிறுத்த ஒப்பந்தத்தின் அடிப்படை விதி.

இதனை நடைமுறைப்படுத்தி இங்கு ஒரு இயல்பு நிலைமையை உருவாக்குவது என்பது யுத்த நிறுத்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் அவசியமானது.

இது உட்பட ஒட்டுமொத்தமாக யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை உறுதி செய்வதற்கான நடவடிக்கை குறித்து இன்று நாங்கள் நோர்வே தரப்பினருக்கு வலியுறுத்தியிருக்கிறோம்.

இருதரப்பினரும் சந்தித்துப் பேசும்போது நீங்கள் இதனை வலியுறுத்துங்கள் என்று நோர்வேத் தரப்பினர் எம்மிடம் கூறியுள்ளனர்.

ஆ. சிறிலங்காவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கையும் மனித அவலங்களும்

அண்மையில் இணைத் தலைமை நாடுகள் கூடி இருதரப்பினரும் சந்தித்துப் பேச வேண்டும் என்றும் தாக்குதல்களை நிறுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தன.

சர்வதேச சமூகத்தின் கோரிக்கையை மதித்து எங்களுடைய தலைமைப் பீடம் எமது இணக்கப்பாட்டை வெளிப்படுத்தியிருந்தது.

இருப்பினும் சிறிலங்கா இராணுவத்தினர் எமது மக்கள் மீது கொடூரமான தாக்குதல்களைத் தொடர்ந்தும் நடத்தி வருகின்றனர்.

- பாரிய மனித அவலங்களை உருவாக்கி வருகின்றனர்.

- சர்வதேச மனிதாபிமான பணியாளர்களை கொன்றுள்ளனர்-

- காணாமல் போகச் செய்துள்ளனர்.

- போக்குவரத்து பாதையை மூடியுள்ளனர். ஏ-9 பாதையை மூடி பல இலட்சம் மக்கள் உணவின்றி தவிக்கின்ற நிலையை ஏற்படுத்தியிருக்கின்றனர்.

- பொருளாதாரத் தடையை உருவாக்கியிருக்கின்றனர்.

யுத்த நிறுத்த ஒப்பந்தத்துக்கு விரோதமான இத்தகைய மனிதாபிமானமற்ற செயற்பாடுகளில் சிறிலங்கா இராணுவம் தீவிரமாக இறங்கியிருக்கிறது. இது முழு அளவிலான யுத்த நிறுத்த மீறலும் மனித உரிமை மீறலுமாகும் என்பதையும் இன்றைக்கு நாங்கள் சுட்டிக்காட்டியிருக்கிறோம்.

இப்படியாக யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை சிறிலங்கா அரசாங்கம் முற்றாக மதிக்கவில்லை. கண்காணிப்புக் குழுவினரது நடவடிக்கையையும் கூட முடக்கி வைத்துக் கொண்டிருக்கின்றனர்.

யுத்தத்தை ஏவினால் சமாதானத்திலிருந்து விலகல்

சர்வதேச சமூகத்தின் வேண்டுகோளை ஏற்று எங்களுடைய தலைமைப்பீடம் சாதகமான முடிவைத் தெரிவித்திருக்கும் நிலையில்,

- தொடர்ந்தும் எங்கள் பகுதிகளை ஆக்கிரமிக்கும் நடவடிக்கையை சிறிலங்கா இராணுவம் தொடருமேயானால் நிச்சயம் மாற்றம் ஏற்படும்.

- இனியும் எமது பிரதேசத்தை ஆக்கிரமிக்கிற யுத்தத்தை எம் மக்கள் மீது ஏவிவிடுவார்களேயானால் நாங்கள் நிரந்தரமாகவே இந்த சமரச முயற்சிகளிலிருந்து விலகிக் கொண்டு நாங்கள் எங்களுடைய தாயகப் பிரதேசத்தில் உள்ள ஆக்கிரமிப்பு இராணுவம் முழுமையாக வெளியேற்றப்படும் வரை நாங்கள் சமரச முயற்சிகளுக்கு போகக் கூடிய வாய்ப்பு இருக்காது என்பதையும் நாங்கள் இன்றைக்கு நோர்வே அனுசரணையாளர்களிடம் தெளிவுபடுத்தியிருக்கிறோம்.

ஆகவே சர்வதேச சமூகம் தெரிவித்த கோரிக்கைக்கும் நாங்கள் தெரிவித்த இணக்கப்பாட்டுக்கும் இனிவரும் காலத்தில் நல்ல முடிவு வர வேண்டுமானால் அது எங்கள் கைகளில் இல்லை- சிறிலங்கா அரசாங்கத்தின் கைகளில்தான் உள்ளது என்பதையும் நாங்கள் தெளிவுபடுத்தியிருக்கிறோம்.

சர்வதேச சமூகத்தின் வேண்டுகோளை நாங்கள் ஏற்றுக்கொண்டு எங்கள் இணக்கப்பாட்டை தெரிவித்துள்ளோம். ஆனால் சிறிலங்கா இராணுவம் தொடர்ந்தும் வலிந்த தாக்குதல்களைச் செய்து எங்களுடைய பிரதேசங்களைக் கைப்பற்றும் நடவடிக்கையை தொடருவார்களேயானால் நிச்சயமாக இனி நாங்கள் சமரச முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபடக்கூடிய வாய்ப்பு இருக்காது. பகிரங்கமாகவே அறிவித்துவிட்டு எங்களுடைய தாயகப் பிரதேசத்திலிருந்து இந்த ஆக்கிரமிப்பு இராணுவத்தினரை வெளியேற்றுவதற்கான முழு அளவிலான நடவடிக்கைக்குள் நாங்கள் இறங்குவோம். அது தவிர்க்க முடியாததாக இருக்கும் என்பதைத் தெரிவித்துள்ளோம்.

எமது நிலைப்பாட்டுக்கான கால வரையறை என்பது எப்போது சிறிலங்கா இராணுவத்தினர் தங்களது வலிந்த தாக்குதலைத் தொடங்குகிறார்களோ அப்போதே எமது நடவடிக்கைகள் தீவிரமடையும்.

சிறிலங்கா தரப்பினர் இங்கே பாரிய மனித அவலத்தை உருவாக்கியுள்ளனர். மனித உரிமை மீறல்களை ஏற்படுத்தியிருக்கின்றனர். எங்கள் மக்கள் மட்டுமல்ல இப்போது சர்வதேச சமூகமும் கூட இதனை அனுபவிக்கிறது. சர்வதேச நிவாரணப் பணியாளர்களைக் கூட அந்த அலுவலகத்திற்குள் வைத்து கொன்று தள்ளியிருக்கிறார்கள். இப்போது முஸ்லிம் மக்களை படுகொலை செய்து கொண்டிருக்கிறார்கள். எல்லா வகையிலும் தீவிரமாக கடத்தல்- படுகொலைகள் என்று சொல்லி எங்களுடைய தாயகத்திலே பாரிய அளவிலே மனித உரிமை மீறல்களை சிறிலங்கா இராணுவத்தினர் கட்டவிழ்த்துவிட்டிருக்கின்

  • தொடங்கியவர்

newsPoster5643.jpg

The Sinhala poster says `The first step towards Peace and Democracy is the end (death?) of Prabhakaran`

The English one has a more diluted version of the same message.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.