Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சு.க- ஐ.தே.க. உடன்பாடு ஏற்பட்டது

Featured Replies

சிறீலங்கா சுதந்திரக் கட்சியும் ஐக்கிய தேசியக் கட்சியும் இடையில் இம்மாதம் 15ம் நாளுக்கு முன்னர் புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக முடிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த மூன்று வாரங்களாக இரு கட்சிகள் இடையே நடைபெற்ற பேச்சுக்களின் பயனாக புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இனநெருக்கடிக்கான தீர்வு முயற்சிகள், தேர்தல் முறைமையை மாற்றியமைத்தல், சிறந்த ஆட்சி முறை உட்பட ஆறு விடயங்களில் இரு தரப்பினரிடையே இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

http://www.pathivu.com/index.php?subaction...t_from=&ucat=1&

  • தொடங்கியவர்

முக்கிய பிரச்சினைகளில் ஆளும்கட்சி- ஐ.தே.க புரிந்துணர்வுடன் செயற்பட முடிவு

இலங்கையின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக்கட்சி நாட்டின் இனப்பிரச்சனைக்கான தீர்வு உட்பட, நாட்டின் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் முகமாக அரசாங்கத்துடன் பொது உடன்பாடொன்றை எட்ட இன்று முடிவு செய்திருக்கிறது.

இது தொடர்பாக இரு கட்சிகளுக்கும் இடையில் இடம்பெற்ற மூன்று சுற்றுப் பேச்சுக்கள் இன்று சாதகமாக முடிவுற்றதாக இருகட்சிகளும் இன்று கூட்டாக அறிவித்திருக்கின்றன.

இது குறித்து கருத்து வெளியிட்ட சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன, இருகட்சிகளும் நாட்டின் தேசிய நலன்கருதி பாராளுமன்றத்திற்கு உள்ளேயும், வெளியேயும் ஒன்றாக இணைந்து செயற்படுவது என்று உடன்பாடு கண்டிருக்கின்றன என்றும், இன்று உடன்பட்ட விடயங்கள் குறித்து எதிர்வரும் 15 ம் திகதிக்கும் முன்பாக இருகட்சிகளின் தலைவர்களும் பொது உடன்படிக்கையொன்றில் கைச்சாத்திடவிருப்பதாகவும் தெரிவித்தார்.

இந்த சந்திப்புக் குறித்து பி.பி.சி தமிழோசையிடம் கருத்து வெளியிட்ட ஐக்கிய தேசியக்கட்சியின் சார்பில் இந்த சந்திப்புக்களில் கலந்து கொண்ட, கட்சியின் மூத்த உறுப்பினரும், கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய, ரவி கருணாநாயக்க, இன்று காணப்பட்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த உடன்பாட்டில் எட்டப்பட்ட முடிவுகள் குறித்து தமது உபகுழு கட்சியின் பாராளுமன்றக் குழுவுடனும், அரசியல் குழுவுடனும் மிகவிரைவில் கலந்துரையாட விருக்கிறது என்று தெரிவித்தார்.

http://www.bbc.co.uk/tamil/news/story/2004...sbulletin.shtml

  • தொடங்கியவர்

எதிரும் உதிருமானவர்கள் ஒன்ரு செர்ந்து விட்டனர் அதுவும் மலையகத்தமிழர் தலைவர்களையும் தங்களுடன் சேர்த்துவிட்டு எமக்குள் ஒர்றுமையின்மை எமக்கான ஒரு சாபக்கேடு.என்னதான் சிங்களவன் சண்டைபிடித்தாலும் ஒரு துரோகச்செயலை அவன் தனது இனத்துக்கு செய்யவில்லை எம் சமூகமும் துரோக கும்பல்களும் யோசிக்குமா இதை

  • தொடங்கியவர்

சு.க- ஐ.தே.க. உடன்பாடு ஏற்பட்டது

[வெள்ளிக்கிழமை, 6 ஒக்ரொபர் 2006, 06:17 ஈழம்] [தெ.சந்திரநாதன்]

ஆறு அம்ச திட்டத்தின் கீழான சிறிலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி இடையேயான பேச்சுக்களில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது.

இரு கட்சிகளிடையே நேற்று வியாழக்கிழமை பேச்சுவார்த்தை நடைபெற்றது.

சிறிலங்காவின் பிரதான பிரச்சனைகளில் ஒருமித்த கருத்துடன் இணைந்து செயற்படுவது குறித்து விவாதிக்க துணைக் குழுக்கள் அமைக்கப்பட்டிருந்தன.

இருதரப்பு இணக்கப்பாடு குறித்து சிறிலங்கா பிரதமரும் சுதந்திரக் கட்சிக் குழுத் தலைவருமான ரட்ணசிறீ விக்கிரமநாயக்க கூறியதாவது:

இந்த நாட்டின் அரசியல் வரலாற்றில் புதிய அத்தியாயம் உருவாக்கப்பட்டுள்ளது.

ஆறு அம்ச செயற்திட்டத்தைச் செயற்படுத்துவது குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம் விரைவில் கைச்சாத்திடப்பட உள்ளது.

நாடாளுமன்றத்துக்கு வெளியேயும் இந்த ஆறு அம்ச திட்டத்தை நிறைவேற்ற இணைந்து செயற்படுவோம் என்றார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் குழுவுக்குத் தலைமை வகித்த பிரதித் தலைவர் கரு ஜயசூர்ய கூறியதாவது:

கடந்த 58 ஆண்டுகால முரண்பட்ட அரசியல் சூழ்நிலைகளில் இது வரலாற்றுச் சாதனை.

எதிர்வரும் ஒக்ரோபர் 15 ஆம் நாளுக்கு முன்பாக 4 மகாநாயக்க தேரர்கள், இந்து, கிறித்துவ, முஸ்லிம் மத பிரதிநிதிகள் சாட்சியாக இரு கட்சிகளிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் என்றார்.

பேச்சுக்கள் முடிவடைந்த பின்னர் இருதரப்பினரும் கைகுலுக்கி மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர்.

சுதந்திரக் கட்சி குழுவில் டபிள்யூ.டி.ஜோன் செனிவிரட்ன, மைத்திரிபால சிறிசேன, நிமல் சிறிபால டி சில்வா ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். ஐக்கிய தேசியக் கட்சிக் குழுவில் ஜி.எல்.பீரிஸ், ரவி கருணாநாயக்க, மிலிந்த மொறகொட, ருக்மன் சேனநாயக்க, ஜோன் அமரதுங்க மற்றும் மாலிக் சமரவிக்கிரம ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

http://www.eelampage.com/?cn=29175

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.