Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜெயலலிதாவுக்கு நான்கு வருடங்கள் சிறை; நடந்தது என்ன?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஜெயலலிதாவுக்கு நான்கு வருடங்கள் சிறை
நடந்தது என்ன?
 

922013109Untitled-1.jpg

சொத்துக் குவிப்பு வழக்கில், ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதித்து பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என தமிழகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இதன்படி அவர் தமிழக முதல்வர் பதவியை இழப்பார் எனத் தெரியவருகிறது.

வழக்கின் பிண்ணனி

கடந்த 1996-ம் ஆண்டு ஜூன் 16-ந் திகதி சென்னை செசன்சு கோர்ட்டில் சுப்பிரமணியசாமி (தற்போது பா.ஜனதா மூத்த தலைவர்) ஒரு புகார் மனு தாக்கல் செய்தார். அதில், 1991-ம் ஆண்டு முதல் 1996-ம் ஆண்டு வரை தமிழக முதலமைச்சராக பதவியில் இருந்த காலத்தில் ஜெயலலிதா வருமானத்திற்கு அதிகமாக சொத்துகளை வாங்கி குவித்ததாகவும், அதனால் ஜெயலலிதா மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறப்பட்டது.

இதுகுறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யும்படி 27.6.1996-ம் திகதி தமிழக இலஞ்ச ஒழிப்பு பிரிவு பொலிசாருக்கு நீதிபதி உத்தரவிட்டார். அதன் பேரில் பொலிசார் விசாரணையை தொடங்கினர்.

இந்த நிலையில் தன் மீதான விசாரணைக்கு தடை விதிக்கக் கோரி ஜெயலலிதா சார்பில் 14.8.1996-ம் திகதி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதற்கிடையே 07.9.1996-ம் திகதி இந்த வழக்கு விசாரணை அதிகாரியாக நல்லமநாயுடு நியமிக்கப்பட்டார்.

விசாரணை அதிகாரி நல்லமநாயுடு உத்தரவின் பேரில் 18.9.1996-ம் திகதி ஜெயலலிதா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து மறுநாள் ஜெயலலிதாவுக்கு சொந்தமான வீடுகளில் சோதனை செய்யப்பட்டன. சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் வீடுகளிலும் பொலிசார் சோதனை நடத்தினர்.

இந்த வழக்கில் 07.12.1996-ம் திகதி அன்று ஜெயலலிதா கைது செய்யப்பட்டார். அவர் மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து அவரது வீட்டில் இலஞ்ச ஒழிப்பு பொலிசார் சோதனை நடத்தினர். 19 வாகனங்கள், 7,109 சேலைகள், 389 ஜோடி செருப்பு, 214 சூட்கேஸ், 26© கிலோ தங்க-வைர நகைக 1,116 கிலோ வெள்ளி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த பொருட்கள் அனைத்தும் வழக்கில் சேர்க்கப்பட்டன. ஜெயலலிதா தனது வருமானத்தை விட ரூ.66 கோடியே 64 இலட்சத்து 42 ஆயிரத்து 318 மதிப்புள்ள சொத்துகளை வாங்கி குவித்தார் என்று குற்றம் சாட்டப்பட்டது.

3.1.1997-ம் திகதி ஜெயலலிதா பிணையில் விடுதலை செய்யப்பட்டார். இந்த வழக்கை விசாரிக்க சென்னையில் தனிக்கோர்ட்டு அமைக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து அந்த கோர்ட்டில் விசாரணை தொடங்கியது.

19.11.1999 ம் திகதி தொடங்கிய விசாரணை 18.7.2001ம் திகதி வரை நடைபெற்றது. மொத்தம் 259 சாட்சிகளின் வாக்குமூலம் பதிவு செய்யபட்டன. அவர்களிடம் குறுக்கு விசாரணையும் நடத்தப்பட்டது. இந்த நிலையில் 2001-ம் ஆண்டு தமிழகத்தில் மீண்டும் ஜெயலலிதா தலைமையில் புதிய ஆட்சி அமைந்தது. அதைத்தொடர்ந்து 79 சாட்சிகளிடம் மறு விசாரணை நடந்தது. இந்த நிலையில் தி.மு.க. பொதுச்செயலாளர் க.அன்பழகன் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில் குற்றம் சாட்டப்பட்டு உள்ளவர்களில் முதல் நபர் (ஜெயலலிதா) முதலமைச்சராக பதவி ஏற்றுள்ளதால் இந்த வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.

அந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட அப்போதைய நீதிபதிகள் எஸ்.என்.வரியவா, எச்.கே.சீமா அடங்கிய டிவிஷன் பெஞ்ச், ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கை கர்நாடக மாநிலத்திற்கு மாற்றி உத்தரவிட்டது. அதைத்தொடர்ந்து கர்நாடக அரசு 27.12.2003-ம் திகதி அன்று ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு விசாரணைக்கு தனிக்கோர்ட்டு அமைத்து உத்தரவிட்டது. ஏ.எஸ்.பச்சாபுரே நீதிபதியாக நியமிக்கப்பட்டார். அரசு சிறப்பு வக்கீலாக ஆச்சார்யா நியமனம் செய்யப்பட்டார்.

09.5.2005-ம் திகதி அன்று ஜெயலலிதா சார்பில் பெங்களூர் தனிக்கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் லண்டன் ஓட்டல் மற்றும் சொத்து குவிப்பு ஆகிய 2 வழக்குகளையும் ஒன்றாக சேர்த்து விசாரிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது. அவரது கோரிக்கையை ஏற்று 2 வழக்குகளையும் ஒன்றாக சேர்த்து விசாரிக்க பெங்களூர் தனிக்கோர்ட்டு உத்தரவிட்டது.

இதை எதிர்த்து 14.7.2005-ம் ஆண்டு தி.மு.க. பொதுச்செயலாளர் க.அன்பழகன் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து லண்டன் ஓட்டல் வழக்கு வாபஸ் பெறப்பட்டது. 2010-ம் ஆண்டு வரை தமிழில் இருந்த வழக்கு ஆவணங்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டன. இந்த வழக்கு தொடர்புடைய ஆவணங்கள் 88 ஆயிரம் பக்கங்கள் ஆகும். குற்றப்பத்திரிகை மட்டும் 13 ஆயிரத்து 600 பக்கங்களை கொண்டுள்ளது.

பெங்களூர் தனிக்கோர்ட்டில் 252 அரசு தரப்பு சாட்சிகளும், 99 எதிர்தரப்பு சாட்சிகளின் வாக்குமூலங்களும் பதிவு செய்யப்பட்டன. சாட்சிகளிடம் வாக்குமூலம் பெறப்பட்டதை அடுத்து கடந்த 2011-ம் ஆண்டு அரசு சிறப்பு வக்கீல் ஆச்சார்யா குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் வாக்குமூலம் பெறுமாறு கோரி மனு செய்தார்.

அதைத்தொடர்ந்து அப்போதைய தனிக்கோர்ட்டு நீதிபதி மல்லிகார்ஜுனய்யா உத்தரவின் பேரில் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா 2011-ம் ஆண்டு அக்டோபர் 20, 21 மற்றும் நவம்பர் 21, 22 ஆகிய திகதிகளில் நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார். அதைத்தொடர்ந்து சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோரிடம் வாக்குமூலம் பெறப்பட்டது.

2012-ம் ஆண்டு அக்டோபர் 12-ம் திகதி அரசு சார்பில் ஆஜராகி வந்த அரசு சிறப்பு வக்கீல் ஆச்சார்யா பதவியை இராஜினாமா செய்தார். அதே மாதம் 29-ம் திகதி அரசு சிறப்பு வக்கீலாக பவானிசிங் நியமிக்கப்பட்டார்.

13.8.2013-ம் திகதி அன்று இந்த வழக்கில் அரசு தரப்புடன் தி.மு.க. விடுத்த கோரிக்கையை அப்போது நீதிபதியாக இருந்த பாலகிருஷ்ணா ஏற்றுக்கொண்டார்.

அரசு சிறப்பு வக்கீல் பவானிசிங் குற்றம் சாட்டப்பட்டு உள்ளவர்களுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும், அவரை நீக்க வேண்டும் என்று கோரி 23.8.2013-ம் திகதி கர்நாடக ஐகோர்ட்டில் தி.மு.க. மனு தாக்கல் செய்தது.

அதைத்தொடர்ந்து 26.8.2013-ம் திகதி அரசு சிறப்பு வக்கீல் பவானிசிங்கை நீக்கி கர்நாடக அரசு உத்தரவிட்டது. இதை எதிர்த்து அவர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். கர்நாடக அரசின் உத்தரவை இரத்து செய்த நீதிபதிகள், இந்த வழக்கில் அவர் தொடர்ந்து ஆஜராகி வாதாட நீதிபதிகள் அனுமதி வழங்கினார்.

அதைத்தொடர்ந்து ஜெயலலிதா தரப்பு வக்கீல் குமார் தனது இறுதி வாதத்தை தொடங்கினார். 25 நாட்கள் அவர் வாதிட்டு தனது தரப்பு நியாயங்களை எடுத்து வைத்தார். அதைத்தொடர்ந்து சசிகலா சார்பில் வக்கீல் மணிசங்கர் 9 நாட்களும், சுதாகரன் மற்றும் இளவரசி ஆகியோர் சார்பில் வக்கீல் அமித் தேசாய் 8 நாட்களும் ஆஜராகி வாதிட்டனர். அரசு சிறப்பு வக்கீல் பவானிசிங் 15 நாட்கள் இறுதி வாதம் செய்தார். அரசு தரப்பு மற்றும் எதிர்தரப்பு இறுதி வாதம் நிறைவடைந்ததை அடுத்து கடந்த 20-ம் திகதி தீர்ப்பு வழங்கப்படும் என்று தனிக்கோர்ட்டு நீதிபதி ஜான் மைக்கேல் குன்கா அறிவித்தார். ஆனால் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள முதல் நபரான ஜெயலலிதா தமிழக முதலமைச்சராக இருப்பதால் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்றும், பாதுகாப்பு கருதி தனிக்கோர்ட்டை பெங்களூர் பரப்பன அக்ரஹாராவுக்கு மாற்ற வேண்டும் என்றும் ஜெயலலிதா சார்பில் தனிக்கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

பெங்களூர் நகர பொலிஸ் கமிஷனர் எம்.என்.ரெட்டியும் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வசதியாக தனிக்கோர்ட்டை பரப்பன அக்ரஹாராவுக்கு மாற்றுமாறு யோசனை தெரிவித்ததால் நீதிபதி ஜான் மைக்கேல் குன்கா தனிக்கோர்ட்டை பரப்பன அக்ரஹாராவுக்கு மாற்றி உத்தரவிட்டார். வழக்கு ஆவணங்களை மாற்ற வசதியாக வழக்கின் தீர்ப்பை செப்டம்பர் 27-ம் திகதிக்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

(நன்றி நக்கீரன்)

 

  • கருத்துக்கள உறவுகள்

8796622185577080_77861340_114144956.jpg

இன்று விடுதலையாவாரா ஜெயலலிதா..?

October 1, 2014  06:30 am

lg-share-en.gif
 
சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் ஜெயலலிதாவின் பிணை மனு மீதான விசாரணை இன்று புதன்கிழமை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

முன்னதாக இந்த வழக்கை செவ்வாய்கிழமை காலை விசாரித்த நீதிபதி, பிணை மனுவை ஒக்டோபர் 6ம் திகதி வரை ஒத்திவைத்தார். இந்த உத்தரவை பெங்களுரு உயர்நீதிமன்றத்தின் விடுமுறைக்கால சிறப்பு அமர்வு செவ்வாயன்று பிறப்பித்துள்ளது. 

ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பவானி சிங், நேற்று இந்த மனு தொடர்பில் விடுமுறைக்கால சிறப்பு அமர்வின் நீதிபதி ரத்னகலா முன்பாக ஆஜரானார். 

இந்த பிணை கோரும் மனு மீதான விசாரணையிலும் அரசு தரப்பு வழக்கறிஞராக ஆஜராக தான் நியமிக்கப்பட்டுள்ளதாக தனக்கு தகவல் மட்டுமே வந்ததாகவும், ஆனால் கர்நாடக மாநில அரசிடமிருந்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் தனக்கு அளிக்கப்படவில்லை என்றும் வழக்கறிஞர் பவானி சிங் நீதிமன்றத்தில் தெரிவித்தார். 

ஜெயலலிதா தரப்பில் வழக்கறிஞர் ராம்ஜெத்மலானியும் ஆஜரானார் என்று செய்திகள் தெரிவிக்கின்றன. அரசு தரப்பில் அதிகாரபூர்வ பிரதிநிதித்துவம் தேவை என்பதை கருத்தில் கொண்டு கர்நாடக உயர்நீதிமன்றத்தின் விடுமுறைக்கால சிறப்பு அமர்வு இந்த மனு மீதான விசாரணையை எதிர்வரும் ஒக்டோபர் 6ஆம் திகதிக்கு ஒத்திவைத்தது. 

இதற்கு எதிராக உயர்நீதிமன்ற பதிவாளரிடம் ஒரு மனுவை ஜெயலலிதாவின் வழக்கறிஞர்கள் அளித்தனர். அதையடுத்து இந்த மனு இன்று சிறப்பு அமர்வு முன் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த வழக்கில் முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா, அவரது நெருங்கிய தோழி சசிகலா மற்றும் சசிகலாவின் நெருங்கிய உறவினர்களான சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு கடந்த சனிக்கிழமையன்று நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை அளிக்கப்பட்டது. ஜெயலலிதாவுக்கு 100 கோடி ரூபாயும், மற்ற மூவருக்கும் தலா 10 கோடி ரூபாயும் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. 

தீர்ப்புக்குப் பிறகு, நால்வரும் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களின் பிணை கோரும் மனுக்கள் திங்களன்று பெங்களூரு உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.