Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழகத்தில் நேற்றும் பரவலாக வன்முறைகள்! – இயல்பு நிலை பாதிப்பு.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தில் நேற்றும் பரவலாக வன்முறைகள்! – இயல்பு நிலை பாதிப்பு.

[Monday 2014-09-29 09:00]
busfire-300-news.jpg

சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூர் நீதிமன்றம்,ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறை தண்டனை வழங்கியதை கண்டித்து மாநிலம் முழுவதும் பல இடங்களில் அதிமுகவினர் நேற்றும் கடையடைப்பு, பஸ்சுக்கு தீ வைப்பு, கல்வீச்சு என கலவரத்தில் ஈடுபட்டனர். இதனால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. பல இடங்களில் ஆங்காங்கே சாலைமறியல், ஆர்ப்பாட்டம் மற்றும் சிறு சிறு தாக்குதல் சம்பவங்கள் தொடர்ந்தன. இதனால், பல மாவட்டங்களில் 50 சதவீதத்துக்கும் மேலான கடைகள் அடைக்கப்பட்டன. போக்குவரத்தும் தடைபட்டது.

  

விருதுநகர் மாவட்டத்தில் நேற்று மதியம் காரியாபட்டி பஸ் ஸ்டாண்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அரசு பஸ்சுக்கு விஷமிகள் சிலர் தீ வைத்தனர். இதனால் பதற்றம் ஏற்பட்டது. பஸ் தீ வைக்கப்பட்ட சம்பவத்தை அடுத்து, மாவட்டத்தில் பெரும்பாலான பஸ்கள் நிறுத்தப்பட்டன. மாவட்டத்தில் விருதுநகர், ராஜபாளையம், திருவில்லிபுத்தூர், சிவகாசி, அருப்புக்கோட்டை உள்ளிட்ட அனைத்து நகரங்களிலும் பஸ் போக்குவரத்து மிகவும் குறைவாகவே இருந்தது. பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டதால், சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.

 

தேனி மாவட்டத்தில் நேற்று காலையில் வழக்கம் போல் கடைகள் திறக்கப்பட்டன. பின்னர் அதிமுகவினர் பஸ் மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர். ஊர்வலமாக வந்து கடைகளை அடைக்க செய்தனர். இதையடுத்து வாகன போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டத்தில் பெரும்பாலான நகரங்களில் கடைகள் அடைக்கப்பட்டன. காலை 10 மணி வரை பஸ்கள் இயக்கப்படவில்லை. அதன் பின்னர் மிகவும் குறைந்த எண்ணிக்கையிலேயே பஸ்கள் இயக்கப்பட்டன. கீழச்சேவல்பட்டியில் அரசு பஸ் மீது மர்மநபர்கள் சிலர் கல்வீசி தாக்கினர். ஈரோடு மாவட்டத்தில் 3 இடங்களில் அரசு பஸ்கள் மீது கற்கள் வீசப்பட்டன.

 

கோவை பெரிய நாயக்கன்பாளையம் அருகே உள்ள நாயக்கன்பாளையத்தில் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தை மூடும்படி மிரட்டிய அதிமுகவினர் அலுவலகத்தில் இருந்த காங்கிரஸ் வட்டார துணைத்தலைவர் சின்ராஜ் (45) என்பவரை உருட்டுக் கட்டை, இரும்பு கம்பியால் தாக்கினர். இதில், சின்ராஜின் மண்டை உடைந்தது. அருகில் இருந்தவர்கள் சின்ராஜை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். குமரி மாவட்டத்தில், நேற்று 2வது நாளாக ஒரு சில இடங்களில் அதிமுகவினர் போராட்டம் நடத்தினர். இதனால், கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.

 

நாகர்கோவில், மார்த்தாண்டம் உள்ளிட்ட பகுதிகளில் கடைகள், வர்த்தக நிறுவனங்கள் அடைக்கப்பட்டு இருந்ததுடன் நகை கடைகள், ஜவுளிக்கடைகள் அனைத்தும் மூடப்பட்டு இருந்தன. பஸ்கள் சரிவர ஓடாததால், பயணிகள் பாதிக்கப்பட்டனர். பணிமனைகளுக்கு பணிக்கு சென்ற டிரைவர்களும் திருப்பி அனுப்பப்பட்டனர். தூத்துக்குடியில் அதிமுகவினர் பஸ் மீது கல்வீசி தாக்கியதன் எதிரொலியாக நேற்று மாலை முதல் மீண்டும் பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம் பட்டு பஸ் நிலையத்தில் உள்ள பாஜ கொடிக்கம்பத்தை நேற்று அதிமுகவினர் சேதப்படுத்தினர். அப்போது அங்கு வந்த பாஜவினருக்கும், அதிமுகவினருக்கும் தகராறு ஏற்பட்டு மோதி கொண்டனர். போலீசார் தடியடி நடத்தி அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

 

இதே போல வேப்பூர் செக்கடி கிராமத்தில் நேற்று காலை திமுக கொடிக்கம்பத்தில் உள்ள கல்வெட்டை அதிமுகவினர் சேதப்படுத்தி உள்னர். அப்போது திமுகவினர் அதை தடுத்ததால் இருதரப்பினரும் இடையே மோதல் ஏற்பட்து. இதில் காயம் அடைந்த திமுகவினர் 2 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். சொத்து குவிப்பு வழக்கு தீர்ப்பையடுத்து, அதிமுகவினர் மிரட்டல் காரணமாக கோவில்பட்டியில் நேற்று 2வது நாளாக கடைகள் அடைக்கப்பட்டன. இது தொடர்பாக, கவர்னருக்கு வியாபாரிகள் சங்கம் சார்பில் பேக்சில் புகார் அனுப்பப்பட்டுள்ளது.

 

தமிழகத்தில் நிலவும் அசாதாரண சூழ்நிலையால், கிருஷ்ணகிரியில் இருந்து ஓசூர் எல்லை வழியாக கர்நாடக செல்லும் பஸ்கள் நிறுத்தப்பட்டன. இதனால் பெங்களூர், மாலூர், கோலார் போன்ற நகரங்களுக்கு செல்லும் பயணிகள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகினர். இதுமட்டுமின்றி, ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்த பண்ணாரி சோதனைச்சாவடி வழியாக கர்நாடக மாநிலம் செல்லும் பேருந்துகளும் நிறுத்தப்பட்டன.

 

திண்டுக்கல் மாவட்டம், சின்னாளபட்டி பூஞ்சோலையிலிருந்து தேவாங்கர் மேல்நிலைப்பள்ளி செல்லும் சாலையில் உள்ள ஜவுளி கடை எதிரே, மக¢கள் அதிகம் நடமாட்டம் உள்ள பகுதியில் நேற்று மதியம் 3 மணிக்கு மர்மநபர்கள் சிலர் பாட்டிலில் பெட்ரோல் ஊற்றி திரி வைத்து அதை பற்ற வைத்து விட்டு தப்பினர். அப்போது சாரல் மழை பெய்து கொண்டிருந்ததால் பெட்ரோல் குண்டு வெடிக்காமல் தீ அணைந்து விட்டது. இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. சின்னாளபட்டி போலீசார், சம்பவ இடத்திற்கு வந்து, வெடிக்காத பெட்ரோல் வெடிகுண்டை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்தால் இப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

 

கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகள் வரத்து குறைந்ததாலும், வன்முறைக்கு பயந்து மக்கள் வராததாலும் வெறிச்சோடி காணப்பட்டது. பெங்களூர் சிறப்பு நீதிமன்றம், சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேருக்கு சிறைத் தண்டனை விதித்தது. இதனால் ஏற்பட்ட வன்முறை காரணமாக போக்குவரத்து முடங்கியது. சென்னையை பொறுத்தவரை நேற்று இரண்டாவது நாளாக பல பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தது. இருப்பினும், போலீஸ் பாதுகாப்புடன் ஒரு சில கடைகள் திறக்கப்பட்டன.

 

கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி, பூக்கடை, மளிகை கடை உள்ளிட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இதனால் நாள்தோறும் மார்க்கெட்டில் மக்கள் கூட்டம் அலைமோதும். கோயம்பேடு மார்க்கெட் நேற்று வழக்கம்போல் திறக்கப்பட்டது. ஆனால் நேற்று இங்கு குறைந்த அளவிலான மக்களே வந்திருந்தனர். அதுவும் ஞாயிற்றுக் கிழமைகளில் அளவுக்கு அதிகமான மக்கள் இங்கு வந்து செல்வது வழக்கம். ஆனால், நேற்று ஜெயலலிதாவின் சொத்து குவிப்பு வழக்கு தீர்ப்பு எதிரொலியாக கோயம்பேடு மார்க்கெட்டில் மக்கள் கூட்டம் குறைந்து காணப்பட்டது. இதனால் கோயம்பேடு மார்க்கெட் நேற்று முழுவதும் வெறிச்சோடி காணப்பட்டது.

 

இந்நிலையில், சென்னையில் ஓரளவுக்கு பதற்றம் தணிந்ததால் நேற்று காலை குறைந்த அளவில் மாநகர பஸ்கள் இயக்கப்பட்டன. அதேபோல், புறநகர் ரயில்களும் குறைந்த அளவிலேயே இயக்கப்பட்டன. தென்மாவட்ட எக்ஸ்பிரஸ் ரயில்கள் நேற்று வழக்கம்போல் சென்னை வந்தது. மக்களிடம் ஏற்பட்ட பயம் காரணமாக, அண்ணாசாலை, தேனாம்பேட்டை, மயிலாப்பூர், ராயப்பேட்டை, எழும்பூர், கிண்டி, சைதாப்பேட்டை, அண்ணா மேம்பாலம், அடையாறு, தாம்பரம் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் வாகன நெரிசல் இன்றி காணப்பட்டது.

 

எப்போதும் பரபரப்பாக காணப்படும் தி.நகரில் நேற்று பெரும்பாலான கடைகள் திறக்கப்படாததால் அங்கு மக்கள் கூட்டம் இன்றி காணப்பட்டது. பரபரப்பாக காணப்படும் பாண்டிபஜாரில் நேற்று இரண்டாவது நாளாக கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டன. இதனால் அப்பகுதி மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடியது. சென்னை உள்ளிட்ட பல இடங்களில் கடைகள் திறக்கப்படாததால் பால், காய்கறிகள், அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட் களை பெற முடியாமல் பொதுமக்கள் தவித்தனர்.

 

ஞாயிற்று கிழமைகளில் மெரினா கடற்கரையில் வழக்கமாக மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படும். ஆனால், பஸ்கள் சரியாக இயக்கப்படாததால் நேற்று மெரினாவிலும் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது. வண்டலூர், கிண்டி உயிரியல் பூங்கா உள்ளிட்ட பொழுதுபோக்கு இடங்கள் நேற்று முழுவதும் மக்கள் கூட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

http://www.seithy.com/breifNews.php?newsID=117721&category=IndianNews&language=tamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.