Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பனிச்சங்கேணி ஆக்கிரமிப்பு முயற்சி முறியடிப்பு

Featured Replies

பனிச்சங்கேணி ஆக்கிரமிப்பு முயற்சி முறியடிப்பு: 50 இராணுவத்தினர் பலி- 5 போராளிகள் வீரச்சாவு- 2 பொதுமக்கள் பலி: சி.எழிலன்

[வெள்ளிக்கிழமை, 6 ஒக்ரொபர் 2006, 18:46 ஈழம்] [திருமலை நிருபர்]

மட்டக்களப்பில் தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதியான பனிச்சங்கேணி பிரதேசத்தை ஆக்கிரமிக்க முயன்ற சிறிலங்கா இராணுவத்தினரின் முன்நகர்வு முயற்சி முறியடிக்கப்பட்டது. இச்சமரில் 50 இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளனர். ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 5 போராளிகள் வீரச்சாவடைந்துள்ளனர் என்று திருகோணமலை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் சி.எழிலன் தெரிவித்துள்ளார்.

இந்த மோதல் சம்பவம் குறித்து "புதினம்" இணையத்தளத்தின் செய்தியாளருக்கு சி.எழிலன் கூறியதாவது:

பனிச்சங்கேணி பகுதியை நோக்கி இன்று வெள்ளிக்கிழமை காலை 4.20 மணியளவில் சிறிலங்கா இராணுவத்தினர் ஒரு தாக்குதல் நடவடிக்கையைத் தொடங்கினர்.

இந்தத் தாக்குதல் நடவடிக்கையில் பெருந்தொகையான இராணுவத்தினரும் அவர்களுடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவினரும் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

எங்களின் முன்னரங்கப் பகுதிகளுக்குள் ஊடுருவி தாக்குதலைத் தொடங்கிய அதே நேரத்தில் மட்டக்களப்பு காகித ஆலை சிறிலங்கா இராணுவ முகாமிலிருந்து வாகரை பிரதேசம் நோக்கி எறிகணைகள், பல்குழல் பீரங்கிகள் வீசப்பட்டுக் கொண்டிருந்தன.

அந்தத் தாக்குதல்களுடன் டாங்கிகள் மற்றும் பவள் கவச வாகனங்கள் சகிதம் ஒரு முன்னேற்ற நகர்வினை சிறிலங்கா இராணுவத்தினர் மேற்கொண்டனர். இதற்குப் பதில் நடவடிக்கையை எமது போராளிகள் மேற்கொண்டனர். தொடர்ந்து அந்தப் பிரதேசத்தில் மோதல்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. இந்த மோதல்கள் நடைபெற்றுக் கொண்டிருந்த போதே பிற்பகல் 1 மணியளவில் பனிச்சங்கேணி பகுதிக்கு வந்த கடற்கலங்களிலிருந்து குவிக்கப்பட்ட கடற்படையினர் அப்பகுதியில் ஒரு தரையிறக்க நடவடிக்கையை மேற்கொண்டனர். இந்தத் தரையிறக்க நடவடிக்கையை எமது தமிழீழ கடற்படையினர் முறியடித்தனர்.

இதனையடுத்து சிறிலங்கா கடற்படையினரின் தரையிறக்க நடவடிக்கையானது பின்வாங்கப்பட்டது.

அதன் பின்னர் சிறிலங்கா விமானப் படையின் கிபீர் விமானங்கள் அந்தப் பகுதிகளில் தொடர்ச்சியாக 4 முறை வான்குண்டுத் தாககுதல்களை நடத்தின. இந்தத் தாக்குதல் நடவடிக்கை மாலை 5 மணி வரை தொடராக நீடித்தது.

ஊடுருவிய சிறிலங்கா இராணுவத்தினரையும் அவர்களுடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவினரையும் விரட்டியடிக்கும் தாக்குதல்களில் எமது படையினர் ஈடுபட்டனர். சிறிலங்கா இராணுவத்துக்கு கணிசமான இழப்புக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. எமது தரப்பில் 5 போராளிகள் வீரச்சாவைத் தழுவியுள்ளனர்.

இந்தத் தாக்குதலிலில் கொல்லப்பட்ட சிறிலங்கா இராணுவத்தினர் மற்றும் துணை இராணுவக் குழுவினரது உடல்களை நாங்கள் கைப்பற்றியுள்ளோம். மொத்தம் 50 இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களின் ஆயுத தளபாடங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. காயமடைந்திருந்த சிறிலங்கா இராணுவத்தைச் சேர்ந்த ஒருவரை நாங்கள் கைது செய்துள்ளோம்.

இது ஒரு மிக மோசமான ஆக்கிரமிப்பு நடவடிக்கை என்று இன்று காலை 7 மணிக்கே இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவின் திருகோணமலை மாவட்டத்தினருக்கு தெரியப்படுத்தினேன்.

சிறிலங்கா இராணுவத்தினரின் இந்த வலிந்த தாக்குதல் தொடங்கிய நிலையில் உடனடியாக மக்களை அங்கிருந்து பாதுகாப்பான பிரதேசங்களுக்கு நகர்த்தினோம். ஆகையால் மக்களுக்கு பாரிய இழப்பு ஏற்படவில்லை. இந்தத் தாக்குதலில் 2 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 5-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். பாதுகாப்பான இடங்களுக்கு நகர்த்தியமையால் மக்களுக்கான இழப்பு குறைக்கப்பட்டது.

சிறிலங்கா இராணுவத்தினரின் தொடர்ச்சியான எறிகணைத் தாக்குதல்கள் நடைபெற்ற நிலையில் முன்னரங்க காவலரண் பகுதிகளிலிருந்து மக்கள் ஏற்கெனவே வெளியேறியிருந்தமையாலும் பெரிய அளவிலான இழப்புக்கள் தவிர்க்கப்பட்டன.

பனிச்சங்கேணி பிரதேசம் முற்று முழுதாக தொடர்ந்து எமது கட்டுப்பாட்டிலேயே உள்ளது. சிறிலங்கா இராணுவத்தினரை அவர்களது நிலைகளுக்கு விரட்டியடித்துள்ளோம்.

இப்படியான நகர்வு முயற்சிகளை சிறிலங்கா இராணுவத்தினர் பலமுறை மேற்கொண்டு வந்தனர். ஆனால் இந்தப் பிரதேசங்களைக் கைப்பற்றும் நோக்கிலான ஒரு பெரிய அளவிலான ஆக்கிரமிப்பு நடவடிக்கையை இன்று மேற்கொண்டனர். அதனை முற்று முழுதாக முறியடித்துள்ளோம்.

சில ஊடகங்கள் சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவினர் தாக்குதல் நடத்தியதாக கூறியுள்ளன. அந்தக் குழுவினரிடம் விமானங்கள், பவள் கவச வாகனங்கள், டாங்கிகள் மற்றும் கடற்கலங்கள் உதவியுடன் அந்தக் குழுவினர் தாக்குதல் நடத்துவார்களேயானால் சிறிலங்கா இராணுவத்தினது பலவீனத்தை இதனூடாக உணர்ந்து கொள்ளக் கூடியதாக இருக்கும். சிறிலங்கா இராணுவத்தினரே இந்தத் தாக்குதலை மேற்கொண்டனர் என்பதற்கு சான்றாக அவர்களது உடல்களும் கைது செய்யப்பட்ட நபரும் உள்ளனர்.

கைப்பற்றப்பட்ட உடல்களை ஒப்படைப்பது தொடர்பாக மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்ட கண்காணிப்புக் குழுவினரைத் தொடர்பு கொண்டு தெரிவித்திருக்கிறோம். மேலும் சிறிலங்கா இராணுவத்தினர் ஊடுருவி மேற்கொண்டமையை பார்வையிட வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளோம். இன்று அவர்கள் வருவதாக இருந்தார்கள். அவர்கள் வருவதற்கான பாதை இல்லாமையால் நாளை வருவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இன்றைய தாக்குதல்களால் மாங்கேணியூடான போக்குவரவு இன்று பாதிக்கப்பட்டிருந்தது. நாளை இந்தப் போக்குவரவு சீராகும் என்று கருதுகிறோம். அப்படி சீராகவில்லையெனில் வாகரையில் இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு பாரிய நெருக்கடியை அது ஏற்படுத்தும் என்றார் சி.எழிலன்.

புதினம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.