Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் மக்களின் அரசியலை சிதைத்தழிக்கப் போகும் சிறிலங்காவின் முதலீட்டிற்கான அபிவிருத்தி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் 2009 இல் இன அழிப்பு யுத்தம் முள்ளிவாய்க்காலில் முடிவடைந்த கையோடு வடக்கு கிழக்கு தொடர்பில் சிறிலங்கா மற்றும் பிற அரசாங்கங்களால் அதிகளவில் பயன்படுத்தப்பட்டும் வார்த்தைகள் அபிவிருத்தி மற்றும் முதலீடுகள். இங்கு அபிவிருத்தி மற்றும் முதலீடு என்ற அளவுகோலில் இருக்க கூடிய அரசியலானது தமிழினத்திற்கு மிக மோசமான பின்னடைவுகளையும் தமிழினத்தின் அரசியல் மீது மிக நாசுக்காக மோசமான தாக்கங்களையும் கொண்டுவருகின்றது என்பதை ஈழ உள்நாட்டு மற்றும் புலம்பெயர் பிரதிநிதிகள் நுணுக்கமாக திறனாய்வு செய்வதோடு இன்றைய அபவிருத்தி மற்றும் முதலீட்டில் உள்ள எதிர்கால அரசியல் நோக்கம் தொடர்பில் மக்களுக்கு விளக்கமளிப்பது சம்மந்தமாக விரைவாக கவனம் செலுத்த வேண்டும்.

வடக்கு கிழக்கு தாண்டி ஒட்டுமொத்த இலங்கையிலும் இன்று நடந்துகொண்டிப்பது முதலீட்டிற்கான அபிவிருத்தியே ஆகும்.

அபிவிருத்தி என்றால் என்ன முதலீட்டிற்கான அபிவிருத்தி என்றால் என்ன?

உலக பொருளாதார வளர்ச்சி மற்றும் பிராந்திய அரசியல் நிலமைகளை கொண்டு அபிவிருத்திக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நாடு முதலில் உட்கட்டமைப்பு அபிவிருத்தியையே மேற்கொள்ளும். அரச மற்றும் தனியார் நிர்வாக கட்டமைப்புகள் சீரமைக்கபட்டு சேவைகள் மக்களுக்கு சரியான முறையில் கிடைக்கிறதா என்ற உறுதிப்படுத்தலே அபிவிருத்தி என்ற அளவு கோலின் முக்கிய அம்சமாகும். ஆனால் சிறிலங்காவைப் பொறுத்தவரை அரசாங்கம் காட்டும் அபிவிருத்தி அளவு கோலானது பொருளியல் ரீதியான கணக்கு மாத்திரமே. பொருளியல் ரீதியான சுட்டிகள் மாத்திரமே. அப்படியானால் இந்தப் பொருளியல் சுட்டிகள் எப்படி கணிக்கப்படுகின்றன? இதனால் தமிழினத்தின் அரசியலுக்கு ஏற்படப்போகும் தாக்கம் என்ன?

ராஜபக்ச அரசாங்கம் பொறுப்பேற்றதன் பின்னர் சிறிலங்காவின் கல்வித்துறை நீதி நிர்வாகத்துறை மருத்துவத்துறை என மக்களுக்கு சேவைகளை வழங்கக் கூடிய எல்லாத்துறைகளுமே பாரிய வீழ்ச்சியை கண்டிருக்கும் இன்றைய நிலையில் பொருளியல் சுட்டிகள் காட்டும் வளர்ச்சி எது என்ற சந்தேகம் இப்போது பலருக்கு கட்டாயம் எழும். அதற்கான விடை சிறிலங்காவில் இன்று நடப்பது முதலீட்டிற்கான அபிவிருத்தி என்பதே. இது நிஜமான அபிவிருத்தி அல்ல. இந்த முதலீட்டிற்கான அபிவிருத்தி அரசியல் போராட்டம் செய்துகொண்டிருக்கும் ஒரு இனத்தின் மீது எப்படி தாக்கத்தை செலுத்தப்போகிறது என்பதே ஆய்விற்கு உட்படுத்தப்பட வேண்டிய ஒன்று.

இந்த முதலீட்டிற்கான அபிவிருத்தி என்பது வெறுமனே சிறிலங்கா அரசால் மாத்திரம் திட்டமிடப்பட்ட ஒன்றாக தெரியவில்லை. 2009 போரில் சிறிலங்கா அரசிற்கு பல வழிகளிலும் இராணுவ பலனாய்வு மற்றும் அரசியல் உதவிகளை செய்த நாடுகளின் கூட்டுத்திட்டம் தான் இந்த முதலீட்டிற்கான அபிவிருத்தி என்பதாக தெரிகிறது.

வீதிப்புனரமைப்புகள் துறைமுகப் புனரமைப்புகள் துறைமுக உருவாக்கங்கள் விமான நிலைய புனரமைப்புகள் மற்றும் உருவாக்கங்கள் அதிவேக வீதி உருவாக்கங்கள் அதிவேக தொடரூந்து உருவாக்கங்கள் என்பன அரசாங்க உட்கட்டமைப்பில் அபிவிருத்தியை காட்டாது என்றபோதும் ஏன் இவற்றிற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றன? வங்கிகள் வைத்தியசாலைகள் பாடசாலைகள் பல்கலைக்கழகங்கள் போக்குவரத்து துறைகள் அத்தியாவசிய உணவு கொள்வனவு நிலையங்கள் என அன்றாட உட்கட்டமைப்பு நிர்வாகங்கள் மிக மோசமான தரத்தில் இருக்கும் போது வெளிநாடுகள் ஏன் வீதிப ;புனரமைப்புகள் துறைமுக விமானநிலைய வர்த்தக கட்டுமானத்திற்கு பில்லியன் கணக்கில் கடன் கொடுக்கின்றன என்பதும் அரசாங்கம் ஏன் இப்படியான துறைகளில் அதிக கவனம் செலுத்துகிறது என்பதுமே இன்று தமிழர்களின் அரசியலில் தாக்கம் செலுத்துப்போவதற்கான காரணங்கள்.   

முதலீட்டிற்கான அபிவிருத்தியும் முதலீடுகளும் எப்படி தமிழர் அரசியலில் தாக்கம் செலுத்தப்போகின்றன!!

தமிழர்களுடைய அரசியல் போராட்டமானது பிராந்திய அரசியல் மற்றும் பொருளாதார நிலைகளில் அதிக செல்வாக்கு செலுத்துகின்றமையே 2009 இல் இன அழிப்பு போர் முடிவடைந்தும் இன்னமும் எந்தவொரு அரசியல் சமரசத்திற்கான முன்னெடுப்புகளும் எடுக்கப்படாமல் இருக்கிறது. ராஜபக்ச அரசாங்கத்தைப் பொறுத்தவரை இன அழிப்பு போரில் நேரடியாக மற்றும் மறைமுகமாக பங்கேற்ற அரசுகளுக்குடன் செய்யப்பட்ட திரை மறைவு ஒப்பந்தங்கள் அல்லது பேசப்பட்ட விலைகளை செய்து முடித்தாக வேண்டும் இல்லையேல் அந்தந்த நாடுகளுகளுடனான பனிப்போரிற்கு தயாராக வேண்டும். இருப்பினும் தனது சுய பாதுகாப்பு மற்றும் நீண்டகால அரசியல் நோக்கில் கருத்தில் கொண்டு ராஜபக்ச அரசு மேற்குலக மற்றும் ஆசிய றாடுகளுடன் பனிப்போரிற்குதயாராக இல்லை என்பதே இன்றுவரை நடந்து கொண்டிருக்கும் சம்பவங்களை வைத்து நாம் அனுமானிக்க கூடிய முடிவு. இந்த நிலையில் மேற்குலக நாடுகள் ராஜபக்ச அரசு மீது அழுத்தங்கள் பிரயோகிப்பது போலான தோற்றப்பாடுகளை வருடாவருடம் அரங்கேற்றிவருவதற்கான காரணம் இந்த 'முதலீட்டிற்கான அபிவிருத்தியை' வேகமாக செய்வதற்கே.

முதலீட்டிற்கான அபிவிருத்திகளானது முற்றுமுழுதாக வெளிநாடுகளால் நிதி வழங்கப்பட்டு வெளிநாட்டு நிறுவன ஆலோசனைகளுடன் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதாவது பில்லியன் டாலர் கணக்கில் பல நாடுகள் சிறிலங்காவில் கொட்டிவைத்திருக்கிறன. இந்த பில்லியன் டாலர் கணக்கிலான பணத்தையும் எந்த உத்தரவாதத்தில் இந்த நாடுகள் இலங்கையில் கொட்டியுள்ளன? இங்குதான் அரசியல் இருக்கிறது. இந்த வெளிக்கட்டுமானங்கள் விரைவில் முடிந்தவுடன் தமது வர்த்தகத்திற்கான சந்தைக்காக இன்னும் பில்லியன் கணக்கில் கொட்டப்போகின்றன. இலங்கை ஒரு சந்தையாக மாற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது. பொருட்கள் இறக்கி ஏற்றும் இடமாக உருவாக்கபட்டுக் கொண்டிருக்கிறது. இதற்கு பல நாடுகள் பில்லியன் கணக்கில் பணத்தை இறைத்துக் கொண்டிருக்கிறன. இந்த பணத்திற்கான பாதுகாப்பு உத்தரவாதத்தை அந்தந்த நாடுகளோ அல்லது ஒரு கூட்டமைக்கபட்ட பாதுகாப்பு குழுவோ வழங்கப்போகிறது.

பணத்தை இறைத்துள்ள நாடுகள்தான் எதிர்காலத்தில் சிறிலங்காவின் அரசியல் தலமையை தீர்மானிக்கப்போகின்றன. தவிர உள்நாட்டு அரசியல் நிலைகளால் தமது முதலீடுகளுக்கு பங்கம் விளையுமாக இருந்தால் அந்த அரசியல்களை வேரோடு அழிக்கவும செய்வார்கள் அந்த முதலீட்டாளர்கள்

சிறிலங்காவின் தென் பகுதியை பெருமளவு தமது கட்டுப்பாட்டில் கொண்டு வந்திருக்கும் வெளிநாட்டு முதலீட்டு முகவர்கள் இன்று வடக்கு கிழக்கு பகுதியை முக்கிய மையமாக வைத்து நகர்ந்து கொண்டிருக்கிறார்கள் அல்லது சிறிலங்கா அரசின் திட்டத்தின்படி செயற்பாடுகள் நகர்த்தபட்டுக் கொண்டிருக்கிறன. வீதி புகையிரதம் துறைமுக புனரமைப்பு என மாயையை உருவாக்கியபடி மக்கள் நிலங்களுக்குள் புகுவதற்கு தயாரான நிலையில் இருக்கிறன இந்த முதலீட்டு முதலைகள். அவர்கள் செய்யப்போகும் முதலீடுகளால் மக்களின் உட்கட்டமைப்போ வாழ்வாதாரமோ அபிவிருத்தியாக போவதில்லை. மாறாக ஏற்படப்போகும் பணப்புழக்கத்தால சிறிலங்காவின் பொருளியல் சுட்டிகளில் ஏற்றங்கள்; உருவாகும். அதுவே அபிவிருத்தியாக மக்களிடம் காட்டப்படும்.

வடக்கு கிழக்கில் வெளிநாட்டு முகவர்கள் செய்யப்போகும் பில்லியன் கணக்கிலான டாலர்களுக்கும் அவர்களே பாதுகாப்பு உத்தரவாதத்தை மேற்கொள்வார்கள். தமிழ் மக்களின் அரசியல் விடுதலைப் போராட்டமானது தமது முதலீடுகளை பாதிக்காமல் இருப்பதற்கு அவர்களே பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யப்போகிறார்கள். அவர்கள் செய்யப்போகும் பாதுகாப்பு ஏற்பாடானது தமிழ் மக்களின் அரசியல் தளத்தை ஆட்டம்காண வைக்கும். ஏதிர்காலத்தில் புரட்சி பற்றியதான எண்ணக்கருவை முற்றாக அழிப்பதோடு முப்பதுவருட போராட்ட நினைவுகளை அழிப்பதற்கும் அதன் நோக்கத்தை சிதைப்பதற்கும் முதலீட்டாளர்கள் என்ன விலை கொடுக்கவும் தயாராக இருப்பார்கள்.

இப்போது நடப்பது முதலீடுகளுக்கான அபிவிருத்தி மட்டும் தான் என்பதை மக்கள் உணர்ந்து சுதாகரிப்பதற்கு முன்னரே தமிழ் மக்களைச் சுற்றியும் தமிழ் மக்களிடையேயும் வெளிநாட்டு முதலீடுகளை திணிப்பதே இன்று சிறிலங்கா அரசு போட்டிருக்கும் திட்டம்.

பொருளியல் ரீதியாக சதிவலை பின்னப்பட்டு தமிழ் மக்களின் உரிமைப்போராட்டம் சிறைப்பிடிக்கபட்டால் அதில் இருந்து மீண்டுவருவதற்கு சரியான தலமையும் சீராக கட்டமைக்கபட்ட போராட்டமும் நீண்டகாலமும் எடுக்கும் என்பது அனைவரும் அறிந்ததே.

இன்று சிறிலங்கா இராணுவத்தால் எந்தவொரு அரசியல் ரீதியிலான சாத்வீக போராட்டங்களையும் கட்டுப்படுத்த முடியும் என்ற நிலையே காணப்படுகிறது. நீதிமன்றம் சென்று வெல்வது என்பது சிறிலங்காவில் நடைமுறைக்கு சாத்தியமற்ற விடையமாக காணப்படுகிறது. அதாவது இன்று எந்தவொரு மக்கள் போராட்டத்தையும் தமது இராணுவம் கட்டுப்படுத்தும் என்ற பாதுகாப்பு உத்தரவாத்தை முதலீட்டாளர்களுக்கு சிறிலங்கா அரசு வழங்கியிருக்கிறது. சிறிலங்கா அரசின் இந்த இராணுவ உத்தரவாதம் ஏதாவது ஒரு வழியில் சரிவை சந்திக்காவிடில் எதிர்காலத்தில் தமிழ் மக்களின் அரசியலானது பொருளியல் காரணிகளால் பலமாக சிறைபிடிக்கபடவிருக்கிறது என்பதே உண்மை.

துலாத்தான்

01-10-2014

 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/112245/language/ta-IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.