Jump to content

அகர்வுட் முதலீட்டு சுரண்டலை தவிர்ப்பதற்கு வாடிக்கையாளர் விழிப்புணர்வுகள் கட்டாயம்


Recommended Posts

உலகின் மிகப் பெறுமதி வாய்ந்த மரங்களுள் நறுமணமிக்க அகர்வுட்டும் ஒன்றாகும். இன்று உலகிலுள்ள மிக விலையுயர்ந்த வாசணைத்திரவியங்களில் இந்த அகர்வுட் நறுமணமே பயன்படுத்தப்படுகிறது. அதன் மருத்துவ குணங்களுக்கு பயன்படுத்தப்படுவதுடன், மத்திய கிழக்கு நாடுகளில் தூபம் மற்றும் எண்ணெய் வகைகளிலும் பயன்படுத்தப்படுகின்றன.
 
தென்கிழக்காசியா நாடுகளில் பரந்து காணப்படும் எகியுலேரியா மரங்களில் அகர்வுட் பிசின்கள் காணப்படுகின்றன. இந்த மரங்கள் தொடர்ச்சியாக பூஞ்சண பங்கசுக்கள் மற்றும் Phialophora parasitica இனால் தாக்கப்பட்டு, அதற்கு பதிலாக நறுமணமிக்க பிசின்களை உற்பத்தி செய்யத் தொடங்குகின்றன. இது பிசின் வகை உலக அரங்கில் மிக பெறுமதி வாய்ந்ததாக காணப்படுகிறது. 
 
இந்த அம்சங்கள் உற்பத்திக்கான கேள்வியை அதிகரித்துள்ளதுடன், அகர்வுட் தரத்திற்கமைய மரத்தின் பெறுமதி தீர்மானிக்கப்படுகிறது.
 
அமெரிக்காவின் மின்னேசொடா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ரொபர்ட் பிளான்செட்டே மற்றும் அவரது குழுவினர் இணைந்து ஆய்வுகள் மற்றும் அபிவிருத்தி செயற்பாடுகள் ஊடாக நிரூபிக்கப்பட்ட தொழில்நுட்பமான CA Kits(Cultivated Agarwood) இனை வடிவமைத்துள்ளனர்.
 
இந்த CAKit முறை மூலம் ஒவ்வொரு அகர்வுட் மரங்களிலும் அதன் செயற்பாடு செயல்முறை விரைவுப்படுத்தப்பட்டு அகர்வுட் பிசின்கள் பெறுவது உறுதிபடுத்தப்படுகிறது.
 
வணிக நோக்கிலான மற்றும் பொருளாதார ரீதியில் பெருமளவு பயன் தரக்கூடிய அகர்வுட் அறுவடை பெறும் குறிக்கோளுடனே இந்த ஒற்றை காப்புரிமை அகர்வுட் ஊக்குவிப்பு தொழில்நுட்பம் வடிவமைக்கப்பட்டது.
 
குழு பிரதம நிறைவேற்று பணிப்பாளரான எச்.கே.ரோஹன கருத்து தெரிவிக்கையில், 'சதாஹரித பிளாண்டேஷன்ஸ் நிறுவனம் இலங்கையில் பிரத்தியேக காப்புரிமையை கொண்டுள்ளதுடன், இதற்கான காப்புரிமையை சதாஹரித பிளான்டேஷன்ஸ் நிறுவனம் மட்டுமே கொண்டுள்ளது. ஏனைய முறைகள் CA Kit இற்கான காப்புரிமை மீறலாக கருதப்படுகிறது. ஏனெனில் CA Kit காப்புரிமை அகர்வுட்டினை தூண்டுவதற்கான அனைத்து முறைகளையும் உள்ளடக்கியுள்ளது' என்றார்.
 
உயர் தரமான அகர்வுட் சாரத்தை பெறும் நோக்கில் இந்த தொழில்நுட்பத்தில் சதாஹரித நிறுவனம் அதிகளவு முதலீடு செய்துள்ளது. மேலும் தெற்காசியாலிலேயே மிகப்பெரிய கன்றுகள் வளர்ப்பு பண்ணையாக கருதப்படும் அதன் இங்கிரிய கன்றுகள் வளர்ப்பு பண்ணையின் ஊடாக அகர்வுட் மர விநியோகத்தின் வளர்ச்சி மற்றும் நிர்வாகம் ஆகியவற்றை சதாஹரித ஒன்றிணைத்து வருகிறது. 
 
'சதாஹரித மூலம் இலங்கையில் இறக்குமதி செய்யப்படும் வணிக நோக்கிலான எகியுலேரியா விதைகள் வியட்நாம்; விவசாய திணைக்களம் மூலம் அங்கீகரிக்கப்பட்டு சான்றளிக்கப்பட்டுள்ளன. சான்றளிக்கப்பட்ட செய்கை செயல்முறைக்கமைய உயர் அறுவடை பெறப்படுகிறது' என சதாஹரித பிளாண்டேஷன் லிமிடெட்; நிறுவனத்தின் தலைவர் சதீஷ் நவரத்ன தெரிவித்தார்.
 
அகர்வுட் முதலீடுகளின் போது குறுகிய காலத்தில் அதிக விளைச்சல் மற்றும் உயர் தரமான மரத்தை பெறுவதற்கு நோய்த்தடுப்பு உபகரணங்கள் பயன்படுத்துதலை ஊக்குவிக்கும் தீய சக்திகளை வாடிக்கையாளர்கள் நம்புவதை தவிர்க்க வேண்டும்.
 
சதாஹரிதவுடன் முதலீடுகளை மேற்கொள்ளும் முதலீட்டாளர்களுக்கு அகர்வுட் மரங்களின் பராமரிப்பு தொடர்பில் இலவச நிபுணர் அறிவுரை மற்றும் வழிகாட்டல்கள் வழங்கப்படுகின்றன. மேலும் இந் நிறுவனம் அறுவடையை திரும்பப்பெறும் வாக்குறுதியையும் அளித்துள்ளது.
 
கடுமையான தரக் கட்டுப்பாடு மற்றும் சர்வதேச தரங்களுடன் ஒழுங்கமைதல் காரணமாக சதாஹரித எந்தவித வாடிக்கையாளர் முறைப்பாடுகளையும் பெறவில்லை. இந் நிறுவனம் ISO தரச்சான்றிதழை பெற்றுள்ளதுடன், 'தேசிய பசுமை விருதுகள் 2012' இல் தங்க விருதை வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

aga2.jpg

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இன்றைய உலகில், மதத்தை வைத்து பிழைப்பவர்களும் அதை விற்று பிழைப்பவர்களுமுண்டு. மதத்தின் புனிதம், மனித நேயம் எல்லாம் மரணித்து வெகுகாலமாகிவிட்டது. இந்து தமிழர் கட்சி தலைவர், ராம ரவிக்குமார் கிறிஸ்தவர்களை சாடியிருக்கிறார். ஒன்று இவர்களின் லாப நோக்கு அல்லது நிர்வாக திறன் இன்மையே காரணம் என்பதை ஒத்துக்கொள்ள தயாரில்லை. அங்கே முழங்கினால் இங்கே சச்சியர் வீட்டில் அடை மழைபெய்யும். கிறிஸ்தவர்களை வாங்கு வாங்கென்று வாங்குவார். ஆனால் தமிழக அரசு, இது ஒரு ஊர்ஜிதமற்ற குற்றச்சாட்டு என்றும் இவர்கள் கூறும் நிலையத்தில் கோவில் பிரசாதம் (லட்டு) செய்ய பொருட்கள் கொள்வனவு செய்வதில்லையென்றும் ஆதாரத்துடன் வெளியிட்டிருக்கிறது. 
    • அம்பாறையில் தேர்தல் நிலவரம்! அம்பாறை  மாவட்டத்தின்  திகாமடுல்ல  தேர்தல் தொகுதியில்  30 வீதம் வாக்குப்பதிவுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான சிந்தக அபேவிக்ரம தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” அம்பாறை மாவட்டத்தில் 5,55,432 பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர். சம்மாந்துறை, பொத்துவில், அம்பாறை, கல்முனை ஆகிய தேர்தல் தொகுதிகளில் வாக்காளர்கள் வாக்களிப்பதற்கான 528 வாக்களிப்பு நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டிருந்தன. அம்பாறை மாவட்டத்தின் திகாமடுல்ல தேர்தல் தொகுதியில் 4 ஆசனங்களுக்காக 39 வேட்பாளர்கள் அரசியல் கட்சிகளாகவும் பல சுயேட்சைகளாகவும் களமிறங்கி உள்ளனர். இத்தேர்தலில் கல்முனை தேர்தல் தொகுதியில் 82,830 பேரும் சம்மாந்துறை தேர்தல் தொகுதியில் 99727 பேரும் பொத்துவில் தேர்தல் தொகுதியில் 1,84,653 பேரும் அம்பாறை தேர்தல் தொகுதியில் 188222 பேரும் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். அம்பாறை மாவட்டத்தில் 184 அம்பாறை வாக்களிப்பு நிலையங்கள், 93 சம்மாந்துறை வாக்களிப்பு நிலையங்கள், 74 கல்முனை வாக்களிப்பு நிலையங்கள் மற்றும் 177 பொத்துவில் வாக்களிப்பு நிலையங்கள் உட்பட 528 வாக்களிப்பு நிலையங்கள் நிறுவப்படவுள்ளன. அத்துடன் சுதந்திரமானதாகவும் நடுநிலையாகவும் தேர்தலை நடத்துவதற்கான சகல நடவடிக்கையும் தேர்தல் திணைக்களம் முன்னெடுத்துள்ளது” இவ்வாறு மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான சிந்தக அபேவிக்ரம தெரிவித்துள்ளார். இதே வேளை தமிழ் தேசிய கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் தனது வாக்கினை விவேகானந்தா மகா வித்தியாலயத்தில் அமைந்துள்ள வாக்களிப்பு நிலையத்தில் செலுத்தியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1400420
    • யாழில் தேர்தல் நிலவரம்! யாழ்ப்பாணத்தில் இன்று  மக்கள் ஆர்வமாக வாக்களித்து வரும் நிலையில்,நண்பகல் 12 மணி வரையிலான காலப்பகுதியில் 35 வீதமான வாக்களிப்பு இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் மாலை 04 மணி வரையில் வாக்களிக்க முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1400414
    • பின்னாலை... ரணில்,  காஸ் சிலிண்டருடன் சத்தமே  இல்லாமல்  போறார். . 😂 
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.