Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மீண்டும் ஓர் ஆபத்தான சூழலை அரசாங்கம் ஏற்படுத்தி வருகிறது – ஆனந்தன்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
மீண்டும் ஓர் ஆபத்தான சூழலை அரசாங்கம் ஏற்படுத்தி வருகிறது – ஆனந்தன்!

 

 

anathan-MP-300x223.jpg“சாத்வீக போராட்டங்களை இரும்புக்கரம் கொண்டு அடக்க முற்பட்டதால்தான் ஆயுதப்போராட்டம் வெடித்தது. யுத்தம் முடிந்து ஐந்து வருடங்கள் கடந்திருக்கும் நிலையில் மீண்டும் ஓர் ஆபத்தான சூழலை அரசாங்கம் ஏற்படுத்தி வருகிறது. இதனை உடன் நிறுத்த வேண்டும். இல்லையெனில் இதற்காக எதிர்காலத்தில் அரசாங்கம் பெரும் விலை கொடுக்க வேண்டியிருக்கும் ” – இவ்வாறு எச்சரித்திருக்கிறார் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன்.

வுனியா மாவட்ட பிரஜைகள் குழுவின் ஏற்பாட்டில் நடைபெற்ற அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தும் கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இதனைத் தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் – வவுனியா மாவட்ட பிரஜைகள் குழு ஒழுங்கு செய்த கூட்டத்தை தடுத்து நிறுத்தப் பல தொலைபேசி அழைப்புக்கள் பிரஜைகள் குழுவுக்கு வந்தன என அறிகின்றேன். வட மாகாணத்தில் காணாமல் போக செய்யப்பட்டவர்கள், அரசியல் கைதிகளின் அனைத்து குடும்பத்தவர்களதும் தொலைபேசி இலக்கங்கள் இராணுவம், பொலிஸ், புலனாய்வுத்துறையினரிடம் உள்ளன.

இவர்களின் முழுமையான பெயர்ப் பட்டியல்களும் அவர்களிடம் இருக்கின்றன. இதை வைத்துக்கொண்டுதான், அவர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக இந்த பிரஜைகள் குழுவின் கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்து கொள்ளக்கூடாது என அச்சுறுத்தல் விடுக்கின்றனர். இதனையும் தாண்டி இங்கு வருகை தந்தவர்கள் கைது செய்யப்பட்டவர்களின் விடுதலைக்காக குரல் கொடுத்துள்ளார்கள்.

அதற்கு அப்பால் இந்த பிரஜைகள் குழுவின் தலைவர் மிகவும் மோசமாக தாக்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் சேரக்கப்பட்டிருக்கிறார். ஜனநாயக ரீதியாக இடம்பெறுகின்ற இந்தப் போராட்டங்களைக் கூட இந்த அரசாங்கம் துப்பாக்கிமுனை கொண்டு மாத்திரம் அடக்கவில்லை. இரும்புக்கரம் கொண்டு மிகவும் மோசமாக தாக்கவும் செய்கிறது. எங்களுடைய ஆரம்பகால தலைவர்களின் சாத்வீக போராட்டங்களை அரசாங்கம் அடக்க முற்பட்டதன் விளைவாகத்தான் கடந்த முப்பது வருட காலம் இந்த நாட்டில் பெரும் யுத்தம் ஒன்றுக்கு முகம்கொடுக்கவேண்டியிருந்தது.

அந்த யுத்தத்துக்குப் பிற்பாடு, ஐந்து வருடங்கள் கடந்தும் கூட இந்த அரசாங்கம் ஜனநாயகப் போராட்டங்களை குழப்பி வருகிறது – அடக்க முற்படுகிறது – இது ஒரு ஆபத்தான விளைவைத்தான் எதிர்காலத்தில் ஏற்படுத்தும். யுத்தம் முடிந்து ஐந்து வருடங்கள் கடந்த நிலையில் சிறையில் இருக்கக்கூடிய அனைத்து அரசியல் கைதிகளுக்கும் பொது மன்னிப்பு வழங்கி, அவர்கள் தங்கள் குடும்பங்களுடன் சேர்ந்து இயல்பான வாழ்க்கையை வாழ விடுவதற்கு அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும்.

இதேபோன்று சட்டவிரோதமாக செயற்பட்டு தாக்குதல்களை நடத்துபவர்களை சட்டத்தின் முன் நிறுத்தவேண்டும். எதிர்காலத்தில் தமிழ் மக்கள் தமது உரிமைக்காக ஜனநாயக ரீதியாக போராடும்போது அதனை இரும்புக்கரம் கொண்டு தடுப்பது நிறுத்தப்படவேண்டும். இல்லையென்றால் எதிர்காலத்தில் இதற்காக அரசாங்கம் பெரும் விலை ஒன்றைக் கொடுக்கவேண்டி ஏற்படும்.” – என்றார்.

http://tamilleader.com/?p=42567

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.