Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஜனாதிபதிக்கு இ.தொ.கா நிபந்தனையற்ற ஆதரவு

Featured Replies

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும்  அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை நேற்று சந்தித்து நிபந்தனையற்ற ஆதரவை வழங்கியிருப்பதாக ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது. அமைச்சர் தொண்டமான் பெருந்தோட்ட சமூகத்திற்கு ஜனாதிபதி அளித்த உதவிக்காக நன்றி தெரிவித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வீதி, வீடமைப்பு, உள்சார் கட்டமைப்பு பிரச்சினைகளை பெருந்தோட்ட சமூகம் எதிர்கொண்டிருந்தது. அவற்றிற்கு ஜனாதிபதி தீர்வைக் கண்டுள்ளார் என அமைச்சர் தொண்டமான் கூறியுள்ளார். இதேவேளை செந்தில் தொண்டமான் ஊவா மாகாண சபை அமைச்சராக நேற்று பதவியேற்றுள்ளார்.

 

 http://thinakkural.lk/article.php?local/xq3muubexo3222687fd5c7e012176zddqu142dfb2da70e5083b3c6a7lwpcd#sthash.eVajUEQR.dpuf

. இதேவேளை செந்தில் தொண்டமான் ஊவா மாகாண சபை அமைச்சராக நேற்று பதவியேற்றுள்ளார்.

 

 http://thinakkural.lk/article.php?local/xq3muubexo3222687fd5c7e012176zddqu142dfb2da70e5083b3c6a7lwpcd#sthash.eVajUEQR.dpuf

 

இது நிபந்தனை அற்ற ஆதரவா?

  • கருத்துக்கள உறவுகள்

இதை விடப் பொழுது போக்கு, அமைச்சராக இராதக் கிருஸ்ணன் பதவி ஏற்று உள்ளார். அதில் என்ன கோதாரி இருக்கு என்று பதவி ஏற்றார் எனத் தெரியவில்லை.

இதை விடப் பொழுது போக்கு, அமைச்சராக இராதக் கிருஸ்ணன் பதவி ஏற்று உள்ளார். அதில் என்ன கோதாரி இருக்கு என்று பதவி ஏற்றார் எனத் தெரியவில்லை.

அது ஒரு time passing தான்.
  • தொடங்கியவர்

இ.தொ. கா.வின் நிபந்தனையற்ற ஆதரவு வேடிக்கையானது - சதாசிவம்

 

s.sathasivam_3.jpgஜனாதிபதி தேர்தலில் நிபந்தனையற்ற ஆதரவினை வழங்கப்போவதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்  தெரிவித்திருப்பது வேடிக்கையான செயலாகும். மலையக சமூகத்தின் தேவைகள் அதிகமாக இருக்கும் போது கண்மூடித்தனமாக இவ்வாறு தெரிவித்திருப்பது கண்டிக்கத்தக்கதாகும் என்று மத்திய மாகாண  சபை உறுப்பினர் எஸ். சதாசிவம் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்;

மலையக சமூகம் நீண்ட வரலாற்றைக் கொண்ட ஒரு சமூகமாகும். எனினும் இலங்கையில் உள்ள வேறுபல சமூகங்களுடன் ஒப்பிடுமிடத்து மலையக சமூகம் பின்தங்கிய நிலையிலேயே காணப்படுகின்றது. என்பதனை மறுப்பதற்கில்லை. அடிமை நிலையில் இருந்த இச்சமூகம் இன்னும் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் காணவில்லை என்பதும் வெளிப்படையாகும்.

அரசுடன் இணைந்துள்ள மலையக  அரசியல்வாதிகள் பாதை அபிவிருத்தி குறித்து கூடிய கவனம் செலுத்துகின்றனரே தவிர மக்களின் அடிப்படை பிரச்சினைகளை மேம்படுத்துவதிலும் பொருளாதார அபிவிருத்தியினை ஏற்படுத்துவதிலும் உரிய கவனம் செலுத்துகின்றார்களா? என்பது கேள்விக் குறியாகவே உள்ளது.

சுகாதார நிலைமைகள் மலையகத்தில் மோசமடைந்துள்ள நிலையில் சிசு மற்றும் கர்ப்பிணித்தாய் மரண வீதங்கள் அதிகரித்து காணப்படுகின்றன. வீடில்லாத பல தொழிலாளர்கள் தற்காலிக குடியிருப்புக்களில் வசித்து வருகின்றனர். தொழிலின்மை காரணமாக இளைஞர்கள் நகர்ப்புறம் நோக்கி படையெடுத்து செல்கின்றனர்.

கல்வித்துறையின் அண்மைக்கால பின்னடைவுகள் குறித்தும் பலரும் கவலை தெரிவித்து வருகின்றனர். அடிப்படை உரிமைகள் இல்லாத சமூகமாக மலையக சமூகம் வாழ்ந்து வருகின்ற நிலையில் அரசுடன் இணைந்துள்ள அரசியல்வாதிகள் அவற்றை பெற்றுக்கொடுக்க திராணி இல்லாதவர்களாக இருந்து  வருவது வேதனைக்குரியதாகும். பேரம் பேசும் சக்தி மழுங்கடிக்கப்பட்டுள்ள நிலையில் சுய இலாபம் கருதிய காய் நகர்த்தல்கள் இடம்பெற்று வருகின்றன. மலையக மக்கள் இப்போது அடகு வைக்கப்பட்டிருக்கின்றார்கள்.

இந்நிலையில் நிபந்தனையற்ற ஆதரவினை வழங்கப்போவதாக இ.தொ.கா. தெரிவித்திருப்பது அநீதியான செயலாகும். சுய இலாபங்களை விடுத்து  சமூக உரிமைகளை பெற்றுக்கொடுக்க இ.தொ.கா. முன்வர வேண்டும். சமூக மறுமலர்ச்சி கருதிய செயற்பாடுகள் அவசியம் என்றார்.

 

http://virakesari.lk/articles/2014/10/19/%E0%AE%87%E0%AE%A4%E0%AF%8A-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அண்டு தொடக்கம் இ.தொ.கா நிபந்தனை இல்லாமல்தானே ஒட்டிக்கொண்டு திரியிறது!!!!!! இப்ப என்ன புதிசாய்????

  • தொடங்கியவர்

ம.ம.மு.வும் மஹிந்தவுக்கு ஆதரவு

 

DSC03555.jpg

-ரஞ்சித் ராஜபக்ஷ

'மலையக மக்களுக்களின் நன்மை கருதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பல்வேறு அபிவிருத்திகள் செய்திருக்கின்றார். இதனால் மலையக மக்கள் முன்னணியின் ஆதரவு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கே வழங்கப்படும்' என அவர் மேலும் தெரிவித்தார். 

தாவரவியல், பூங்கா மற்றும் பொழுதுபோக்கு பிரதி அமைச்சரும் மலையக மக்கள் முன்னணியின் அரசியல்துறை தலைவருமான வி.இராதாகிருஷண்னுக்கு தலவாக்கலை கதிரேசன் ஆலய மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை (19) வரவேற்பளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

 'மலையகத்துக்கு செய்ய வேண்டிய இன்னும் சில அபிவிருத்தி திட்டங்களை ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டுவந்து கட்சியின் ஆதரவை தெரியப்படுத்தவுள்ளேன்' என்றும் அவர் இதன்போது தெரிவித்தார்.

மலையக மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில், மத்திய மாகாண சபை உறுப்பினர் ஆர்.இராஜாராம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
DSC03571.jpg

999999(2).jpg

777777(3).jpg

555555(5).jpg

DSC03576.jpg

 

 

tamilmirror.lk

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.