Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆட்டோ சாரதியின் தற்கொலையும் நோர்வேயும்

Featured Replies

ஆட்டோ சாரதியின் தற்கொலையும் நோர்வேயும்

[11 - October - 2006] [Font Size - A - A - A]

கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆங்கில வாரப்பத்திரிகையொன்றின் முன்பக்கத்தில் படத்துடன் வெளியான செய்தியொன்றை வாசித்தபோது சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுசரணைக்கு எதிராகத் தென்னிலங்கையில் நடத்தப்பட்டு வரும் ஆர்ப்பாட்டங்களில் சம்பந்தப்பட்டவர்கள் தீக்குளித்துத் தற்கொலை செய்கின்ற அளவுக்கு `தீவிரவாதிகளாக' மாறிவிட்டார்களோ என்று நினைக்க வேண்டியிருந்தது. இலங்கையின் தேசிய நலன்களுக்கு நோர்வே துரோகமிழைப்பதாக ஆத்திரமடைந்த ரேமண்ட் பெரெய்ரா என்ற 45 வயதான இரத்மலானையைச் சேர்ந்த ஆட்டோ சாரதி கடந்த வியாழக்கிழமை கொழும்பு வார்ட் பிளேஸில் நோர்வே தூதரகத்துக்கு முன்பாக தனக்குத்தானே தீமூட்டித் தற்கொலை செய்ய முயற்சித்ததாகவும் ஆஸ்பத்திரியில் அவர் மரணமடைந்ததாகவும் அச் செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது. நோர்வே தூதரகத்தை நோக்கி ஜனதா விமுக்தி பெரமுனை (ஜே.வி.பி.) ஆர்ப்பாட்டப் பேரணி நடத்தியதற்கு மறுநாள் இடம்பெற்ற இச்சம்பவம் முதற்தடவையாக ஒருவர் நோர்வேக்கு எதிரான இயக்கத்தில் தனக்குத்தானே தீமூட்டிய சம்பவமாக அமைந்ததாகவும் தீவிர தொழிற் சங்கவாதியான அவர் ஜே.வி.பி.யுடனோ அல்லது வேறு எந்த அரசியல் கட்சியுடனோ தொடர்புடையவரல்ல என்ற போதிலும், முதல்நாள் ஜே.வி.பி.யின் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டார் என்றும் அப்பத்திரிகைச் செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.

மூன்று பிள்ளைகளின் தந்தையான பெரெய்ரா நோர்வேயை வெள்ளைப் புலிகள் என்று குற்றஞ்சாட்டும் வாசகங்கள் அடங்கிய சுவரொட்டிகளை எடுத்து வந்ததாக நேரில் கண்டவர்களை மேற்கோள்காட்டிச் செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது. `நோர்வேயைக் கடுமையாகக் கண்டனம் செய்யும் எனது தந்தையார் இலங்கையில் இருந்து நோர்வே வெளியேற்றப்பட வேண்டும் என்று விரும்பினார். நாட்டை நேசித்த அவர் இராணுவத்தில் நான் சேருவதை விரும்பினார்' என்று பெரெய்ராவின் மகன் சுரேஷ் ஷமாரா கூறியதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

மறு நாளான திங்கட்கிழமை இன்னொரு ஆங்கிலப் பத்திரிகை நோர்வேயின் செயற்பாடுகளுக்கு ஆட்சேபம் தெரிவித்து பெரெய்ரா தனக்குத் தானே தீ மூட்டவில்லையென்றும் பட்ட கடனைச் செலுத்த முடியாததால் விரக்தியடைந்தே அவர் அவ்வாறு செய்து கொண்டதாக மரண விசாரணையின் மூலம் தெரிய வந்திருப்பதாகவும் முன்பக்கச் செய்தி வெளியிட்டது. நிதிக் கம்பனியொன்றின் ஊடாக கொள்வனவு செய்த முச்சக்கர வண்டிக்கான மாதாந்தத் தவணைப் பணத்தைச் செலுத்த முடியாமலும் நெருக்கடியை எதிர் நோக்கிய பெரெய்ரா ஜே.வி.பி.யினர் ஆர்ப்பாட்டம் நடத்திய தினம் மது அருந்தி விட்டு இரத்மலானை வீட்டில் இருந்தாரே தவிர, ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்கவில்லை. அத்துடன், அவர் எந்தவிதமான அரசியல் தொடர்புமற்றவர் என்று மனைவி மரண விசாரணை அதிகாரியிடம் தெரிவித்ததாகவும் அச் செய்தியில் கூறப்பட்டது.

நேற்று செவ்வாய்க்கிழமை பிறிதொரு ஆங்கிலத் தினசரி `கடன் பளு காரணமாக மரணம்' என்ற தலைப்பில் பெரெய்ராவின் தற்கொலை பற்றிச் செய்தி வெளியிட்டது. நண்பர் ஒருவரிடம் கடனாக வாங்கிய பணத்தை பெரெய்ராவினால் திருப்பிக் கொடுக்க முடியவில்லை. சம்பவத்திற்கு முதல் நாள் அவரது வீட்டுக்கு வந்த நண்பர் கடனைத் திருப்பிச் செலுத்தத் தாமதமாவது குறித்து பெரெய்ராவிடம் ஆத்திரத்தை வெளிக் காட்டினார். மறு நாள் காப்புறுதித் தவணைப் பணத்தைச் செலுத்துவதற்காக வீட்டை விட்டு சென்ற அவர் தீ மூட்டித் தற்கொலை செய்து கொண்டார். கடனைத் திருப்பிச் செலுத்த இயலாததால் அவர் தற்கொலை செய்ததாக பொலிஸார் நம்புகின்றனர் என்று அந்தச் செய்தியில் கூறப்பட்டிருந்தது.

ஞாயிற்றுக்கிழமை ஆங்கில வாரப் பத்திரிகை பெரெய்ராவின் தற்கொலைக்கு முற்று முழுதாக அரசியல் காரணத்தை கற்பிக்கும் தொனியிலேயே செய்தியை வெளியிட்டிருந்தது. மீண்டும் சமாதானப் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதற்கான முயற்சிகளில் சர்வதேச சமூகத்தின் உதவியுடன் நோர்வே தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கின்ற இன்றைய சந்தர்ப்பத்தில், நோர்வேயின் செயற்பாடுகள் மீது ஏற்கனவே பேரினவாதச் சக்திகளினால் தெரிவிக்கப்பட்டு வரும் வெறித்தனமான குற்றச்சாட்டுகளுக்கு வலுச் சேர்க்கும் வகையிலும் சிங்களமக்கள் மத்தியில் சமாதான முயற்சிகள் தொடர்பில் மேலும் குரோத உணர்வைத் தூண்டிவிடும் நோக்கிலும் இச் செய்தி வெளியிடப்பட்டிருக்கிறது என்றே சந்தேகிக்க வேண்டியிருக்கிறது. கடன் பளு காரணமாக தனக்குத்தானே தீமூட்டிக் கொண்டு பரிதாபகரமாக மரணமடைந்த பெரெய்ராவின் மரணத்தை மிகவும் வெறுக்கத்தக்கமுறையில் ஓர் அரசியல் தொனியுடனான செய்தியாக்குவதில் அந்த வாரப்பத்திரிகை கடைப்பிடித்த அணுகுமுறை அநாகரிகமானது என்பதே எமது அபிப்பிராயம். தென்னிலங்கையில் மக்களை சமாதான முயற்சிகளுக்கு எதிராகத் திருப்புவதில் எந்தளவு தூரத்துக்கு பத்திரிகைகள் பிற்போக்குத் தனமாகச் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றன என்பதை உணர்த்தும் இன்னொரு உதாரணம் இதுவாகும்.

நேற்றைய தினம் உலக உள ஆரோக்கிய தினமாகும் (ஙிணிணூடூஞீ ?ஞுண?ச்டூ ஏஞுச்டூ?ட ஈச்தூ).அத்தினத்திற்கான தொனிப்பொருள்` விழிப் புணர்வைக் கட்டியெழுப்புதல் - ஆபத்தைக் குறைத்தல்; உளநோயும் தற்கொலையும்' என்பதாகும். உள ஆரோக்கியக் குறைபாடுகளினால் தற்கொலை செய்து கொள்பவர்களின் எண்ணிக்கை உலகில் கடுமையாக அதிகரித்திருப்பதன் காரணத்தினால், அத்தகைய தற்கொலைகளைத் தடுக்கும் நோக்கில் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவே இத்தடவை அந்தத் தொனிப் பொருளில் உலக உள ஆரோக்கிய தினம் அனுஷ்டிக்கப்பட்டது. பெரெய்ராவின் தற்கொலையும் அது தொடர்பில் செய்தி வெளியிடுவதற்கு அந்த ஆங்கில வாரப் பத்திரிகை கொண்ட அணுகு முறையும் தற்கொலையைநாடுபவர்களை விட, உள ஆரோக்கியம் பாதிக்கப்பட்டவர்கள் பலர் ஊடகத்துறையில் இருக்கிறார்களோ என்ற சந்தேகத்தைத் தவிர்க்க முடியாமல் கிளப்புகின்றன.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.