Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஹரியானா/மகாராஷ்டிராவில் கொடி நாட்டிய பாஜக ...

Featured Replies

19-bjp-flag326-600.jpg
 
 
மும்பை: சிவசேனாவுடனான கூட்டணியை முறித்துக் கொண்ட போதிலும் மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் பாஜக தான் அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. பல ஆண்டுகளாக காங்கிரஸ் ஆட்சி செய்து வந்த மகாராஷ்டிராவில் அண்மையில் சட்டசபை தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பாஜக தனது 25 ஆண்டுக கால கூட்டணி கட்சியான சிவசேனாவின் உதவியின்றி போட்டி இட்டுள்ளது. மகாராஷ்டிராவிலும் மோடி அலை வீசுகிறது என்பதை நிரூபிக்க பாஜக விரும்பியது.
 
தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகிறது. இதில் மொத்தமுள்ள 288 தொகுதிகளில் பாஜக இதுவரை 91 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. மேலும் 32 இடங்களில் முன்னிலையில் உள்ளது. சிவசேனாவோ 47 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. மேலும் 14 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முன்னதாக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தனது கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவில் தெரிவித்துள்ளதாவது, மகாராஷ்டிராவில் மோடி அல்ல அவரது அப்பாவால் கூட சிவசேனாவின் ஆதரவு இன்றி வெற்றி பெற முடியாது என்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தான் பாஜக மகாராஷ்டிராவில் அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

Read more at: http://tamil.oneindia.com/news/india/bjp-leads-maharashtra-even-without-shiv-senas-help-213243.html


 

 

சன்டிகர்: ஹரியானாவில் முதல் முறையாக பாஜக ஆட்சியமைக்கிறது. காங்கிரஸை வீழ்த்தி தனிப்பெரும்பான்மையுடன் அக்கட்சி ஆட்சியைப் பிடித்துள்ளது. 90 உறுப்பினர்களை கொண்ட ஹரியானா சட்டசபைக்கு தேர்தல் நடைபெற்றது. கடந்த 15ம் தேதி நடந்த வாக்குப்பதிவில் 73 சதவீத வாக்குகள் பதிவாகின. இந்நிலையில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகிறது. இதில் பாஜக 45 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது, 2 இடங்களில் முன்னிலையில் உள்ளது. இந்திய தேசிய லோக் தளம் 19 இடங்களிலும், காங்கிரஸ் 15 இடங்களிலும், பிற கட்சிகள் 5 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.
 
தேர்தல் கருத்துக்கணிப்புகளின்படி ஹரியானாவில் பல ஆண்டுகாலம் நடந்த காங்கிரஸ் ஆட்சிக்கு பாஜக முற்றுப்புள்ளி வைத்துள்ளது. இந்திய தேசிய லோக் தள தலைவர் ஓம் பிரகாஷ் சவுதாலாவின் பேரன் துஷ்யந்த் தான் போட்டியிட்ட தொகுதியில் தோல்வி அடைந்துள்ளார். இந்த தேர்தலில் தங்கள் கட்சி 40 இடங்களில் வெற்றி பெறும் என்று துஷ்யந்த் தெரிவித்தார். ஆனால் அந்த கட்சி வெறும் 19 இடங்களையே கைப்பற்றியுள்ளது.

Read more at: http://tamil.oneindia.com/news/india/assembly-polls-haryana-may-see-end-decade-long-congress-rul-213249.html


Read more at: http://tamil.oneindia.com/news/india/assembly-polls-haryana-may-see-end-decade-long-congress-rul-213249.html

 

  • கருத்துக்கள உறவுகள்

மகாராஷ்டிராவில்....
சிவசேனா, பா.ஜ.க. வின் வாக்குகளை பிரிக்கும் போது.....
காங்கிரஸ் சைக்கிள் காப்பிலை, முன்னுக்கு வந்து விடுமோ.... என்று அச்சப் பட்டேன்.
நல்ல வேளை... அப்படி ஒன்றும் நடக்கவில்லை. :)

  • கருத்துக்கள உறவுகள்

2 மாநில சட்டசபை தேர்தலில் மோடி அலை பா.ஜ அமோக வெற்றி கருத்துகள்

 

Tamil_News_587516427041.jpg

00:25:32 Monday 2014-10-20

 

Thala 55: 3 songs ready
 
morevideo_ventuno.jpg

புதுடெல்லி : மக்களவைத் தேர்தலில் பெற்ற மிகப் பெரிய வெற்றியைத் தொடர்கிறது பாஜ. அரியானாவில் 90 தொகுதிகளுக்கு நடந்த சட்டப் பேரவை தேர்தலில் 47 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப் பெரும்பான்மையுடன் முதல் முறையாக ஆட்சி அமைக்கிறது.மகாராஷ்டிராவில் உள்ள 288 தொகுதிகளில் 122 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப் பெரும் கட்சியாக உயர்ந்து அந்த மாநிலத்திலும் கூட்டணி ஆட்சி அமைக்க முயற்சி மேற்கொண்டுள்ளது. 25 ஆண்டுகள் கூட்டணியில் இருந்த சிவசேனா ஆதரவு கிடைக்குமா என்று எதிர்பார்க்கப்பட்ட நேரத்தில், எதிர் தரப்பில் இருந்து தேசியவாத காங்கிரஸ் கட்சி நிபந்தனையற்ற ஆதரவை வெளியில் இருந்து தருவதாக அறிவித்துள்ளது.இதன் மூலம் கடந்த 15 ஆண்டுகளாக மகாராஷ்டிராவில் இருந்த காங்கிரஸ் கூட்டணி அரசு, 10 ஆண்டுகளாக அரியானாவில் இருந்த காங்கிரஸ் ஆட்சி முடிவுக்கு வருகிறது. இரண்டு மாநிலங்களிலும் காங்கிரஸ் மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டது.

மக்களவை தேர்தலில் மிகப் பெரிய வெற்றியைப் பெற்று மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ஆட்சி அமைத்தது பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி. அதைத் தொடர்ந்து நடைபெற்ற சில மாநில சட்டப் பேரவை இடைத் தேர்தலில் பாஜவுக்கு பின்னடைவு ஏற்பட்டது.

இந்நிலையில் மகாராஷ்டிரா, அரியானாவுக்கான சட்டப் பேரவை தேர்தல் கடந்த 15ம் தேதி நடந்தது. பிரதமர் மோடி சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டார். மகாராஷ்டிராவில் 27 பிரசார கூட்டங்களிலும், அரியானாவில்11 பிரசார கூட்டங்களிலும் பங்கேற்று தீவிர பிரசாரம் மேற்கொண்டார். 

மகாராஷ்டிராவில் சிவசேனா உடனான கூட்டணி முறிந்ததால், இரு மாநிலத்திலும் தனித்தே போட்டியிட்டது பாஜ. இரு மாநிலங்களிலும் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை அறிவிக்காமலேயே, பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. இதனால், தேர்தல் முடிவை அறிந்து கொள்ள நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது.

2 மாநிலங்களின் சட்டசபை தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகின. தொடக்கம் முதலே பாஜ இரு மாநிலங்களிலும¢ முன்னிலை பெற்று வந்தது.

அரியானாவில்: அரியானாவில் மொத்தம் உள்ள 90 தொகுதிகளில் பாஜ 47 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது. கடந்த 2009 தேர்தலில் 4 தொகுதிகளில் மட்டுமே வென்ற பாஜவின் வாக்கு சதவீதம் 24 சதவீதம் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த தேர்தலில் 9.05 சதவீதமாக இருந்த பாஜவின் வாக்கு சதவீதம் 24 சதவீதம் உயர்ந்து தற்போது 33.2 ஆக உள்ளது.சவுதாலாவின் இந்திய தேசிய லோக் தளம் கட்சி 20 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆளும் கட்சியாக இருந்த காங்கிரஸ் 15 தொகுதிகளுடன் மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டது.கடந்த மே மாதம் நடைபெற்ற மக்களவை தேர்தலில் மாநிலத்தில் உள்ள 10 தொகுதிகளில் பாஜ 7 தொகுதிகளில் வென்றது. காங்கிரஸ் 1, இந்திய தேசிய லோக் தளம் 2 தொகுதிகளில் வென்றன. இந்த வெற்றியின் தாக்கத்தை சட்டசபை தேர்தலிலும் பா.ஜ. தக்க வைத்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

மகாராஷ்டிராவில்: மகாராஷ்டிராவில் உள்ள 288 தொகுதிகளில் பாஜ 257 தொகுதிகளில் நேரடியாக போட்டியிட்டது. 23 தொகுதிகளில் பாஜ சின்னத்தில் கூட்டணி கட்சிகள் போட்டியிட்டன. 25 ஆண்டு காலம் இருந்த சிவசேனா உடனான கூட்டணி முறிந்ததால் பாஜ தனித்து போட்டியிட்டது. அதேபோல் 15 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணியும் முறிந்து தனித் தனியாக போட்டியிட்டன.

நான்கு முனைப்போட்டியுடன், ராஜ் தாக்கரேயின் மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா கட்சியும் போட்டியில் இருந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தற்போது 288 தொகுதிகளில் பாஜ, 122 தொகுதிகளை கைப்பற்றியுள்ளது. 1990க்குப் பிறகு மாநிலத்தில் ஒரு கட்சி 100க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றிப் பெறுவது இதுவே முதல் முறையாகும். பெரும்பான்மைக்கு 145 எம்எல்ஏக்கள் தேவை. பெரும்பான்மை பலம் இல்லாதபோதும், தனிப் பெரும் கட்சி என்ற நிலையில் ஆட்சியை அமைக்க பாஜ தயாராக உள்ளது. 

பழைய கூட்டணி கட்சியான சிவசேனாவின் ஆதரவு கிடைக்குமா என்ற பேச்சுக்கள், எதிர்பார்ப்புகள் இருந்தன.சிவசேனா கட்சி 63 இடங்களில் வெற்றிப் பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளது. காங்கிரஸ் கட்சி 42 தொகுதிகளுடன் மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டது. தேசியவாத காங்கிரஸ் 41 தொகுதிகளில் வென்றது. கடந்த தேர்தலில் 13 தொகுதிகளில் வென்ற ராஜ் தாக்கரேயின் மகாராஷ்டிர நவநிர்மான் சேனாவுக்கு ஒரு இடம் மட்டுமே கிடைத்துள்ளது.

தேசியவாத காங்கிரஸ் ஆதரவு

இந்நிலையில் யாரும் எதிர்பாராத திருப்பமாக, எதிர் தரப்பில் இருக்கும் சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சி, பாஜவுக்கு ஆதரவு தருவதாக அறிவித்தது. அக்கட்சியின் மூத்த தலைவர் பிரபுல் படேல், “மாநிலத்தின் நலனுக்காக பாஜ அரசு அமைய நிபந்தனை இல்லாத ஆதரவை வெளியில் இருந்து தரத் தயாராக உள்ளோம்Ó என்று வெளிப்படையாக அறிவித்தார். மகாராஷ்டிராவில் சிவசேனாவுடன் சேர்ந்து கூட்டணி ஆட்சிமைக்க பா.ஜ. கட்சியின் மூத்த தலைவர் அத்வானி ஆதரவு தெரிவித்துள்ளார். கட்சித் தலைமை கேட்டுக் கொண்டால், இதற்கான முயற்சியில் ஈடுபடவும் தயார் என்று அறிவித்துள்ளார்.

இதனிடையில் இரு மாநில தேர்தல் முடிவுகள், மகாராஷ்டிரத்தில் எந்தக் கட்சியின் ஆதரவைப் பெறுவது, புதிய முதல்வர்கள் உள்ளிட்டவை குறித்து பாஜவின் ஆட்சி மன்றக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்று பாஜ தேசிய தலைவர் அமீத் ஷா தெரிவித்துள்ளார். இரண்டு மாநிலங்களில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சிக்கு இந்த தோல்வி பெரும் அதிர்ச்சியை தந்துள்ளது.

தேர்தல் முடிவு சுவாரசியங்கள்

இரு மாநில தேர்தல் முடிவுகளில் பல சுவாரசியமான தகவல்கள் வெளியாகியுள்ள. அதில் குறிப்பிடத்தக்கவை:

* பிரபல தொழிலதிபரும், காங்கிரஸ் தலைவருமான நவீன் ஜிண்டாலின் தாயார் சாவித்ரி ஜிண்டால் அரியானாவில் தோல்வி அடைந்தார்.

* மகாராஷ்டிரா முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான நாரா யண் ரானே முதல்முறையாக தனது தேர்தல் தோல்வியை சந்தித்தார். 1990 முதல் 6 முறை எம்.எல்.ஏ. வாக இருந்துள்ளார் ரானே.

* அரியானா அமைச்ச ரும், 6 முறை சட்டப் பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ரேவாரி அஜய் சிங் யாதவ், 3வது இடத்தையே பிடித்தார்.

* மத்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவரா ஜின் சகோதரி வந்தனா சர்மா தோல்வி அடைந்தார்.

* அரியானாவின் முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் சவுதாலாவின் பேரன் துஷ்யந்த் சவுதாலாவும் தோல்வி அடைந்தார்.

http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=114215

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.