Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

5 வயது சிறுவனின் தோற்றத்தில் 19 வயது இளைஞர் -வாழ நினைத்தால் வாழலாம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிலாபம் திண்ணனூரான்

 

இவரின் வயது பத்தொன்பது தெமட்டகொடை, ஞானவிமல வீதியில் வசிக்கும் ஜே.எம். ரிகாஸ் ஒரு மாற்றுத் திறனாளி. இவரின் பேச்சு மழலைபேச்சாக இருக்கும் பளிச்சென பிரகாசிக்கும் கொண்ட முகம். எந்தநேரமும் கள்ளம்கபடமற்ற சிரிப்பு அவரின் முகத்தை கௌவிக்கொண்டுள்ளது. 

குழந்தைப் பருவத்தில்  ஏனைய குழந்தைகளைப் போல ஓடி ஆடி விளையாடியவர் இவர். ஆனால், தனது ஐந்து வயதில் அரச வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சென்ற தருணத்தில் இவரின் உடலினுள் செலுத்தப்பட்ட ஊசிமருந்த ஒவ்வாமையினால் இவரின் உடலின் சில தாக்கங்களுக்குள்ளானது.

114Untitled-1.jpg

அதன் பாதிப்பு இவரின் உடல் வளர்ச்சியை தடை செய்தது இன்று இவரின் முழு உயரம் மூன்று அடிகளும் இரண்டு அங்குலமேயாகும். நடக்க இயலாது. முள்ளந்தண்டு முற்று முழுதாக பழுதாகிவிட்ட நிலையில் கை விரல்கள் செயல் இழந்து இருப்பதால் எப்பொருளையும் இவரால் தூக்க இயலாது. கால்கள், கைகள் விரல்களின் மூட்டுக்கள் கரைந்து பெரிதும் அவதிப்படுகிறார்.

 

வலி இவரின் உடல் வலிமையை குறைத்துவிட்டது.
இதனால் எழுந்து நிற்க இயலாது. கழுத்தை திருப்ப இயலாது. இவ்வாறு பல உடல் உபாதைகளுடன் ஐந்து வயதுக்குழந்தையின் உருவத்தில் ரிகாஷ் சக்கர நாற்காலியுடன் வாழ்கின்றார். ஆனாலும் இவர் ஒரு சுய தொழில் வர்த்தகராக விளங்குகிறார். இவரின் பேச்சு இனிமையானது. சிரித்த முகத்துடன் ரிகாஸ் எம்முடன் உரையாடுகையில் பாடகர்களின் குரலைப்போன்று கணீரென ஒலித்தது அவரின் குரல்.  

114DSC05983.jpg
அவருடன் முதலில் நாமே பேச்சைத் தொடுத்தோம். சக்கர நாற்காலியின் உட்கார்ந்தவாறு நாங்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்தார் ரிகாஸ்.
'ஐந்தாம் வகுப்புவரை தனியார் சர்வதேசப் பாடசாலையில் ஆங்கில மொழியில் படித்தேன். நாங்கள் பெரிய வசதியான குடும்பம் அல்ல. எனது வாப்பா ஆட்டோ சாரதியாக உள்ளார். எனது நிலையைக் கண்டு அப்பாடசாலை நிர்வாகம் எனக்கு இலவசமாகவே கல்வி கற்க உதவினர். பாடசாலைக்கு என்னை வாப்பாவோ, அல்லது உம்மாவோ அழைத்துச் செல்ல வேண்டும். அதற்கு வாகன வசதி வேண்டும். 

114DSC05973.jpg
பாடசாலையில் தொடர்ந்து உட்கார்ந்து படிக்க இயலவில்லை. மாற்றுத்திறனாளிக்கான மலசலகூட வசதி இருக்கவில்லை. விரல்கள் முறையாக செயல்படாமையினால் வகுப்பு நடக்கும் தருணத்தில் விரைவாக எழுத இயலாது. எனக்கு ஆசிரியர்கள் முழு ஒத்துழைப்பை வழங்கினார்கள். பாடசாலை முடியும்வரை எனக்கு உம்மா, அல்லது வாப்பாவின் உதவித் தேவை. இதனால் படிப்பை ஐந்தாம் ஆண்டுடன் கைவிட வேண்டி ஏற்பட்டது' என ரிகாஸ் தெரிவித்தார். அப்போது அவரின் கல்வி ஏக்கத்தை எம்மால் உணர முடிந்தது. 

தனது இனிமையான குரலில் தனது கதையை தொடர்;ந்தார் ரிகாஸ். 'சிறிதுகாலம் மருந்து மாத்திரைகளுடன் வீட்டோடு இருந்தேன். பின்னர் ஒரு அன்பரின் நிதி உதவியோடு சிறுகடை ஒன்றை வாடகைக்கு எடுத்தேன். எனது வாழ்க்கையில் எதிர் நோக்கும் சவால்களைத் தன்னம்பிக்கையோடும் மனஉறுதியோடும் சந்திக்க எண்ணினேன். நானும் வாழ்க்கையில் வெல்ல வேண்டும் என உறுதி கொண்டேன். 

ஏனையோர் வளர்ச்சியடைவதைப் போல் வளர்ச்சிப் பெற இயலாத நிலையிலும், எனது குடும்பத்தினரின் உதவியோடு கற்றல் உபகரணங்கள், சி.டீ, பென்சி பொருட்கள் அடங்கிய சிறுவர்த்தகத்தை ஆரம்பித்தேன். வீட்டிலிருந்து உம்மாவோடு வர்த்தக நிலையத்திற்கு போவேன். என்னை தூக்கியே வர்த்தக நிலையத்திற்குள் கொண்டுச் செல்ல வேண்டும். காசாளர் கதிரையில் தூக்கியே உட்கார வைக்க வேண்டும்.

எனது வாடிக்கையாளர்கள் அவர்களுக்குத் தேவையான பொருட்களை அவர்களே எடுத்துக் கொள்வார்கள். விலைகளைக் கூறி நான் பணத்தை பெற்றுக் கொள்வேன். என்னால் சுயமாக இயங்க இயலாது. மற்றுமொருவரின் உதவி; தேவை. விடிந்ததும் படுக்கையை விட்டுசுயமாக எழும்ப இயலாது. விழித்ததும் முழு உடலும் வலியைக் கொடுக்கும். அதுமிகவும் கொடுமையான வலி. வலியோடு வாழப்பழகிக் கொண்டேன். நித்திரைக் கொள்ளும் போது மட்டுமே வலி தெரியாது எனவும் ரிகாஷ் தெரிவித்தார்.

இவரின் உடல் உபாதைகளுக்காக அரச மருத்துவமனையில் இருவாரங்களுக்கு ஒரு தடவை  ஊசி மருந்து ஏற்றப்படுகிறதாம். இதன் விலை எண்பதாயிரம் ரூபா என தெரிவிக்கப்பட்டதாம். இலவசமாகவே  இவருக்கு இம்மருந்து வழங்கப்படுகிறது. ரிக்காஸின் முள்ளந்தண்டு பாதிக்கப்பட்டுள்ளதால், இம்முள்ளந்தண்டை அகற்றிவிட்டு பிளாஸ்டிக் முள்ளந்தண்டுமாற்ற வேண்டுமென வைத்தியர்கள் சிபார்சு செய்துள்ளனர். இவ்வாறான சிகிச்சையை மேற்கொள்ள சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவ மனையிலேயே மேற்கொள்ள முடியுமாம்.

 

உறவினர்களின் நிதி உதவியுடன் ரிகாஸ் அம்மருத்துவமனைக்கு பெற்றோரால் அழைத்துச் செல்லப்பட்டார். இவரை பரிசோதனை செய்த வைத்தியர்கள் முள்ளந்தண்டு மாற்று சத்திர சிகிச்சைக்கு இந்தியப்பணத்தில் பத்து லட்சம் ரூபா கேட்டனராம்.  பொருளாதார சிக்கலுடன் வாழும் இவரின் பெற்றோர் இதனால் திகைத்துப் போயுள்ளனர்.
இன்று சக்கர நாற்காலியை இயக்க தனது கைகளில் சக்தி இல்லாது உள்ளார். இவருக்கு இன்று மின்னியக்க சக்கர நாற்காலி அவசியத் தேவையாக உள்ளதாம். இவரின் உம்மா இவ்விபரத்தை கூற, ரிகாஸ் மீண்டும் உரையாடலைத் தொடர்ந்தார்.

'முன்பு போல் இப்போது வர்த்தக நிலையத்திற்கு போவதில்லை. எனது நானா கவனித்துக் கொள்கிறார். வீட்டில் இருந்து பலரை குழப்புவது தான் எனது வேலைகிவிட்டது. எதற்கும் கவலைப்படக்கூடாது. எனக்கு மனக்கஷ்டம் இல்லை. இறுதிவரை சந்தோசமாக வாழ வேண்டும். அடுத்தவர்களை முடிந்தளவு கேலிப்பேசி சந்தோசப்படுத்துவேன். அவர்களின் சந்தோசமே எனது சந்தோசமாகும். உடலின் பல்வேறு நிலைகள் இயல்பாக செயல்படாமையினால் நான் கவலைக்கொள்வதில்லை. எனக்கு எந்நேரமும் அனைவருடனும் மகிழ்வுடன் சிரித்துப் பேச வேண்டும். என்பதே கொள்ளையாகும்.

 

என்னை ஆத்தரைடிஸ் நோயே தாக்கியுள்ளதாக வைத்தியர்கள் தெரிவிக்கிறார்கள். அதை பெரிதாக எண்ணவில்லை. இதை தாழ்வாக எண்ணவுமில்லை. தர்மத்தோடு வாழ்ந்தால் தர்மமாக வாழலாம்' என்றார் ரிக்காஷ்.

 

அவரின் கடையில் ஏராளமான சினிமா இறுவெட்டுகள் (சி.டிகள் இருந்தன) 
உங்களுக்கு பிடித்த நடிகர் நடிகை யார் என கேள்வி எழுப்பினோம்.
'நடிகர் தனுஷ் எனக்குப்பிரியமான நடிகர். அவரின் நடிப்பும், நடனமும் எனக்கு வெகுவாகப் பிடிக்கும். நடிகைகளில் ஸ்ருதிஹாசனை ரொம் ரொம்ப பிடிக்கும் அவரின் நடிப்பும், அழகுமட்டுமல்ல, அவரின் ஒவ்வொரு அசைவும் கதைகளைச் சொல்லும் என்றார் கூச்சத்தோடு. அவரின் கூச்சமும் வெட்கமும் கலைந்த பின்னர் மீண்டும் பேச்சைத் தொடுத்தோம். 
'உங்களின் பொழுது போக்குகள் என்ன?'

'முன்புபோல் வர்த்தகநிலையப் பக்கம் போவதில்லை. என்னால் இயலாது உள்ளது. கையடக்க தொலைப்பேசிமூலம் குறுஞ்செய்திகளை அனுப்பி நண்பர்களை குழப்புவேன். 'தாம்' விளையாடுவேன் புதிய பாடல்களை கேட்டுரசிப்பேன். அண்ணனுக்கு ஓய்வுகிடைக்கும் போது இருவரும் சேர்ந்து காலி முகத்திடலுக்குப் போவோம். தனுஷ் நடித்த படங்கள் வெளியானால் தியேட்டரில் படம் பார்ப்பேன். இவ்வாறு நான் செயல்படுவதால் நான் தனிமைப்படுத்தப்படுவதில்லை. இதனால் எனக்கு எவ்வித கவலையும் இல்லை. என்றார்' அவர்.

ரிகாஸ் பத்தொன்பது வயதில் மாற்றுத்திறனாளியாக இருந்தாலும் சிங்களம் , தமிழ், ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளிலும் நல்ல தேர்ச்சியைக் கொண்டுள்ளார். தன் முழு உடலும் உபாதைகளை கொடுத்தாலும் நோன்பு மாதத்தில் நோன்பை தவறாது அனுஷ்டிப்பாராம். முன்பெல்லாம் பள்ளிவாசலுக்கு தொழுகைக்காக சென்றவரால் தற்போது உடல் வலி தடையாக இருப்பதால் வீட்டிலேயே தொழுகையை மேற்கொள்வதாக தெரிவித்தார்.

114DSC05989.jpg
வாசகர்களுக்கு என்ன கூற  விரும்புகிறீர்கள் என அவரிடம் கேட்டோம்.
'நான் மாற்றுத்திறனாளி என்பதை மறந்து விட்டேன். எனக்கு நல்ல வாப்பா, உம்மா, உம்மம்மா, சகோதர, சகோதரிகள், உறவினர்கள், நண்பர்கள் என அனைவரையும் இறைவன் கொடுத்துள்ளார். முதலில் இறைவனுக்கு நன்றி சொல்ல வேண்டும். மருத்துவமனைக்கு செல்லும் வகையிலும் என்மீது டாக்டர்கள், தாதிகள் பெரும் அன்பை பொழிவார்கள். அதுவும் இறைவன் கொடுத்த வரமே. தாதிகளையும் குழப்புவேன். அவர்களின் அன்பான ஆதரவு எனக்கு சில நேரங்களில் வியப்பைத் தரும். அவர்களின் மனிதநேயம் சில தருணங்களில் என்னை அழவைத்துவிடும். எனது குடும்பம் பொருளாதார ரீதியில் பின்தங்கிய குடும்பம். நான் உழைத்து வாழவேண்டும் என்று விரும்புகிறேன்.

எனது சிகிச்சைக்கு பணம் தேவை. அதை எவ்வாறு, யாரிடம் பெறுவது என்பதுதான் என் முன் நிற்கும் கேள்வியாகும். பிறர் உதவி இல்லாது நான் வீதிகளில் பயணிக்க வேண்டும். எனது கைகளில் வலு இல்லாமையினால் சக்கர நாற்காலியை இயக்க முடியாது உள்ளது இதனால் எலெக்ரோனிக் சக்கர நாற்காலி தேவை. இதன் மூலம் எனது சிறு தேவைகளை பூர்த்திசெய்துக் கொள்ளலாம். இவ்வாறு பிரச்சினைகளையும், உடல் வலியையும் தாங்கிக் கொண்டு வாழ்கின்றேன்' என்றார். ரிக்காஷ். 
மனவேதனையுடன் அவரிடம் விடை பெற்று இரண்டே அடிகளை முன் வைத்திருப்போம். ரிகாஸின் குரல் எம்மை அழைத்தது. 

'நீங்கள் திருமணம் முடித்து விட்டீர்களா? இல்லாவிட்டால் சொல்லுங்கள் நல்ல மணமகள் ஒருவரை பார்ப்போம்' என எங்கள் மீது அவர் கூறியபோது, அசைந்தே விட்டோம். என்னத்தான் அவர் கவலைகளை சுமந்துகொண்டு வாழ்ந்தாலும் அவரின் வேடிக்கைப் பேச்சு மற்றவர்களின் கவலைகளை துரத்திவிடுகிறது

(படங்கள் ஜே.பி.பி.புஷ்பராஜா.)

- See more at: http://www.metronews.lk/feature.php?feature=114&display=0#sthash.WGr6DHNU.dpuf

 

Edited by பிழம்பு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.