Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுவிஸ் பேர்ன் மாநிலத்தின் தூண் பிரதேச சபைக்கு கவுன்சிலர்களைத் தெரிவு செய்வதற்கான தேர்தல்...!!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
Dharsika-krisnanantham-301014-200-seithy

சுவிஸ்லாந்தின் பேர்ண் மாநில பிரதான எதிர்க்கட்சியான எஸ் பி கட்சிசார்பில் மாநகரசபைத் தேர்தலில் போட்டியிடும் திருமதி தர்ஷிகா கிருஸ்னாநந்தன் அவர்களை வரவேற்பதில் பெருமகிழ்வு கொள்கின்றோம். அவர் எமது தமிழ்ச் சமூகத்தின் வழிகாட்டியாகவும் புலம்பெயர் தமிழர்களை ஒன்றிணைக்கும் பாலமாகவும் இருப்பார் என்பது எமது திடமான நம்பிக்கையாகும். இவரது தந்தையார் 1995ம் ஆண்டிலே சுவிஸ் நாட்டில் தமிழ்ப் பாடசாலை ஒன்றினை உருவாக்கியும் தமிழ் கலை பண்பாட்டினை வளர்த்தெடுப்பதற்காக கலை வகுப்பினையும் முதன் முதலில் உருவாக்கியவர் ஆவார். 1998ல் தமிழ் மக்களின் ஆன்மீக இருப்பினைக் கருத்தில் கொண்டு சைவ ஆலயம் ஒன்றினையும் நிறுவியவர். புலம்பெயர் தமிழ் மக்களை ஒன்றிணைத்துத் தமிழை வளர்ப்பதில் ஈடுபாடு கொண்டவர்;.

   

'எஸ்பி' கட்சியானது பெற்றோர் வேலைக்குச் செல்லும் போது பிள்ளைகளை இலவசமாக பராமரிக்க வேண்டும் என்கிற கோரிக்கை உட்பட ஏழு கோரிக்கைகளை முன்வைத்து இம்முறை தேர்தலில் போட்டியிடுகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.

மேற்படி தேர்தலில் போட்டியிடும் திருமதி தர்ஷிகா fpU;zhde;jd; அவர்கள் சுமார் ஏழு எட்டு வயதிலிருந்தே தனது தாய் தந்தைக்காக இணைந்து சுவிஸ் காரியாலயங்களுக்கு மொழிபெயர்ப்பாளராக சென்றிருந்ததுடன் பின்னர் உறவினர்களுடன் இணைந்து சுவிஸ் காரியாலயங்களிலும் மொழிபெயர்ப்புப் பணிகளில் ஈடுபட்டிருந்தவர். அதற்குப் பின்னர் அரச காரியாலயங்களிலும் அவர் மொழிபெயர்ப்பாளராக செயற்பட்டிருந்தார்.

இவர்; பிரதேச தமிழ் மக்களின் மதம் மற்றும் இந்துமதம் கலாச்சாரம் தொடர்பான ஆலோசகர் பட்டியலில் ஓர் ஆலோசகராக தூண் மாநகரசபையில் இணைக்கப்பட்டுள்ளார்.

திருமதி தர்ஷிகா fpU;zhde;jd; அவர்கள் கணக்கியலாளராக பயின்று பட்டம்பெற்று மாநிலக்காவல்துறை அதாவது கன்டோன்பொலீஸ் மொழி பெயர்ப்பாளராகவும் சிவில் மற்றும் உயர்நீதிமன்ற மொழி பெயர்ப்பாளராகவும் இருக்கின்றார். அதேநேரத்தில் சுவிஸ் பிள்ளைகளுக்கு இந்துமதம் தொடர்பான விளக்கங்களையும் இவர் வழங்கிவருபவர். இதனால் இவரது பணிகள் தொடர்பாக பல சுவிஸ் பத்திரிகைகள் மற்றும் தொலைக்காட்சிகளால் விபரிக்கப்பட்டு பாராட்டினையும் பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதன்பின்னர் தூண் மாநகரசபையின் வெளிநாட்டவர்களுக்கான பொறுப்பாளர் இவரது செயல்களைப் பாராட்டி 'பொதுக் காரியாலயங்களில் ஈடுபடுவதற்கு அரசியல் ரீதியாக செயற்பட வேண்டுமென்று' இவருக்கு வழங்கிய ஊக்கத்தினைத் தொடர்ந்து தான் எஸ்பி கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டதாக திருமதி தர்ஷிகா fpU;zhde;jd; அவர்கள் தெரிவித்துள்ளார். மற்றும் 'இனிமேலாவது நான் நீ என்று பிரிந்து நிற்காமல் நாம் அனைவரும் ஒன்றுபட்டு ஒற்றுமையாக செயற்பட வேண்டுமெனவும் நான் நீ என்று சிந்தித்தபடியினால் தான் தமிழ் மக்களாகிய நாம் தற்போது இத்தகைய நிலையில் நிற்கின்றோம்' என்றும் கூறியதுடன் 'இனியாவது புலம்பெயர் நாடுகளில் நாம் என்று சிந்திப்போம்' எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

எமக்கு ஒரு புலம்பெயர் அரசியல் தேவைப்படுகிறது. நாம் எமது நாட்டில் சென்று வாழ முடியாது. ஆனால் நாம் ஈழநாட்டின் தமிழர்கள் என்ற பெயருக்கும் புலம் பெயர்ந்து வாழும் தமிழ்மக்களின் இணைவிற்கும் தன்மண் வாசனையைப் புலம் பெயர்ந்த நாட்டில் சுவைப்பதற்கும் தான் யார் எனச்சிந்திப்பதற்கும் இந்த அரசியல் தேவை. எனக் குறிப்பிடுகிறார் திருமதி தர்ஷிகா கிருஷ்ணானந்தன் அவர்கள். மேற்படி வழித்தோன்றலில் இருந்து கரம்விரிக்கும் திருமதி தர்ஷிகா கிருஷ்ணானந்தன் அவர்களை உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்க ஐரோப்பிய ஒன்றியம் பெருமகிழ்வுடன் ஆதரிப்பதுடன் புலம்பெயர்நாட்டில் தமிழ்மகளின் வெற்றிக்கு ஒத்துழைப்புத்தந்து வரலாற்றில் தங்கள் வெற்றி பதிவுற எம்தமிழ் உறவுகளுக்கு அழைப்பு விடுக்கிறது.

 

எம் தமிழ் வாழ்வதற்குக் கரம் கொடுப்போம்

 

-உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கம்-

 

http://www.seithy.com/breifNews.php?newsID=119702&category=TamilNews&language=tamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.