Jump to content

ஆன்ட்ராய்டில் தமிழ் மொழி


Recommended Posts

 

android.jpg

உலக மக்களிடையே ஸ்மார்ட் போன் பயன்படுத்தும் வழக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கின்றது. ஆன்ட்ராய்ட், ஆப்பில், பயர் பாக்ஸ் உள்ளிட்ட செயலிகள் (Mobile Application) ஸ்மார்ட் போன்கள் இயங்குவதற்கு உதவுகின்றன. குறிப்பாக கூகுள் நிறுவனத்தின் ஆன்ட்ராய்ட் இயங்குதளம் கொண்ட ஸ்மார்ட் போன்கள் வளர்ந்துவரும் நாடுகளின் மக்களால் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. 

நம் இந்தியாவிலும் ஆன்ட்ராய்ட் ஸ்மார்ட் போன்கள் மக்களின் மனதில் முக்கிய இடம் பிடித்துள்ளது. விளையாட்டு (Games), இணையம் (Internet) மற்றும் சமூக வலைத்தளங்கள் (Social Networking Sites) போன்ற பயன்பாட்டிற்கு மட்டுமல்லாமல் மொழி சார்ந்த பல்வேறு செயலிகளும் ஆன்ட்ராய்ட் இயங்குதளத்தில் கிடைக்கின்றன. 

குறிப்பாக தமிழ் மொழிக்கும் அதன் வளர்ச்சிக்கும் பயனுள்ள வகையிலான செயலிகளும் ஆன்ட்ராய்ட் செயலிகள் உருவிலுள்ளன. அதனை தமிழ் மொழி மீது பற்றுகொண்ட ஆர்வலர்களும், நிறுவனங்களும் வடிவமைத்து தமிழ் மக்களின் பயன்பாட்டிற்காக கூகுள் ப்ளே ஸ்டோரில் பதிவேற்றம் செய்துள்ளனர். 

இக்கட்டுரையின் மூலம் தமிழ் மொழிக்கு பயனளிக்கும் குறிப்பிட்டச் சில செயலிகளை குறித்துக் காண்போம்...

ஆன்ட்ராய்ட் போனில் தமிழ் எழுதவும், படிக்கவும் 

ஆன்ட்ராய்ட் செயலிகள் மூலம் ஸ்மார்ட் போன்களில் தமிழை எழுதவும், படிக்கவும் இயலும். 

tamil%2Bunicode.png

Tamil Unicode Keyboard (https://play.google.com/store/apps/details?id=com.KM.TK&hl=en)ஆன்ட்ராய்ட் செயலியின் மூலம் தமிழ்ச் சொற்களை ஆங்கிலத்தில் தட்டச்சுச் (Type) செய்து Cnv எனப்படும் Convert பொத்தானை அழுத்துவதின் மூலம் அச்சொல்லை தமிழ் எழுத்தாக மாற்றாலாம். இது Phonetics (பனடிக்ஸ்) அடிப்படையில் செயல்படுகின்றது. உதாரணமாக AMMAA என ஆங்கிலத்தில் தட்டச்சு செய்து CNV பொத்தானை அழுத்துவதன் மூலம் அம்மா என மாறிவிடும். 

அதே போல் Opera mini ஆன்ட்ராய்ட் செயலியை  பயன்படுத்தி தமிழ் மொழியை படிக்கலாம். 

அதுமட்டுமல்லாமல் பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் தமிழ் அறிஞர்களும், புலவர்களும் எழுதிய செய்யுள்கள், பாடல்கள், புதினங்கள் மற்றும் நூல்கள் முதலியவற்றையும் ஆன்ட்ராய்ட்  செயலிகளின் மூலம் படிக்கலாம்.

 

thirukkural.jpg
 
திருக்குறள் 

வள்ளுவரால் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட திருக்குறளை ஆன்ட்ராய்ட் போன்களில் படிக்க Thirukkural E-Book - Tamil (https://play.google.com/store/apps/details?id=shasunder.tirukural.ebook) என்ற செயலியை ஸ்மார்ட் போன்களில் நிறுவிக் கொள்வதன் மூலம் திருக்குறளை படித்து பயன் பெறலாம். இணைய இணைப்பின்றி பயன்படுத்தக்கூடிய வகையில் இந்த செயலியை வடிவமைத்துள்ளனர் இதன் வடிவமைப்பாளர்கள்.

avvai%2Bnoolga.jpg
அவ்வை நூல்கள் 

சங்கக்கால பெண்பால் புலவரான அவ்வையார் அவர்கள் எழுதிய ஆத்திச்சூடி, கொன்றைவேந்தன், மூதுரை மற்றும் நல்வழி போன்ற நூல்களை ஆன்ட்ராய்ட் போனில் வாசிக்க Avvai Noolgal (https://play.google.com/store/apps/details?id=com.avvai.nools&hl=en) செயலி உதவுகின்றது. குறப்பாக அச்செயலியில் "தேமதுரத் தமிழோசை உலகமெல்லாம் பரவும்வகை செய்தல் வேண்டும்"என்ற டேக் லைன் கொடுக்கப்பட்டுள்ளது. இதனையும் இணைய வசதியின்றி பயன்படுத்தலாம்.

kamba%2Bramayanam.png

கம்ப இராமாயணம் 

இந்தியாவின் பழம் பெருமை வாய்ந்த இதிகாச நூலான இராமாயணத்தை கம்பர் தமிழ் மொழியில் மொழியாக்கம் செய்தார். அந்நூலை இன்றுவரை தமிழகத்தில் இயங்கும் கல்வி நிலையங்களில் பயிலும் மாணவர்கள் வாசித்து வருகின்றனர். அப்படிப்பட்ட புகழ் கொண்ட கம்ப இராமாயணத்தை ஆன்ட்ராய்ட் செயலியில் படிக்க உதவுகின்றது Kamba Ramayanam in Tamil (https://play.google.com/store/apps/details?id=com.whiture.apps.tamil.ramayanam) செயலி.

bharathiyar.png
பாரதியார் படைப்புகள்

மகாகவி பாரதி அவர்கள் எழுதிய நூல்களாக பகவத் கீதை, சந்திரகையின் கதை, தேசிய கீதங்கள், ஞானப் பாடல்கள், கண்ணன் பாட்டு, குயில் பாட்டு, விநாயகர் நான்மணிமாலை மற்றும் பாரதியாரின் சுயசரிதை உட்பட பாரதியின் தமிழ் பணிகள் அனைத்தையும் படிக்க உதவுகின்றது Mahakavi Bharathiyar Full Work (https://play.google.com/store/apps/details?id=com.varnaa.studio&hl=en) செயலி.

bharathidasan.png

பாரதிதாசன் நூல்கள் 

புதுச்சேரியில் வாழ்ந்த பாரதிதாசன் அவர்கள் செய்யுள் மற்றும் கவிதைகள் அனைத்தும் எளிய நடையில் கதை போல் விவரிக்கப்பட்டிருக்கும். அவர் எழுதிய நூல்களை ஆன்ட்ராய்ட் போனில் வாசிக்க Bharathidasan tamil Poems (https://play.google.com/store/search?q=BHARATHIDASAN%20KAVITHAIGAL%20FULL%20WORK&c=apps&hl=en) என்ற செயலி உதவுகின்றது.

 
மேற்கூறிய தமிழ் நூல்கள் மட்டுமின்றி மேலும் பல தமிழ் நூல்கள், புதினங்கள், அறிஞர்களின் சுயசரிதைகள் உளிட்டவையும் ஆன்ட்ராய்ட் செயலி வடிவில் இணையத்தில் கிடைக்கின்றன. அவற்றை பயன்படுத்தவும், அதன் விவரங்களை அறியவும் Tamil Android (https://www.facebook.com/tamilandroid) என்ற முகநூல் பக்கத்தை பார்க்கவும்.
yosi.png

தமிழ் யோசி 

இந்த ஆன்ட்ராய்ட் செயலியின் (https://play.google.com/store/apps/details?id=com.handheldapplication.yosi&hl=en) மூலம் விடுகதைகள், புதிர்கள், பழமொழிகள், சிந்தனைகள் மற்றும் பாடல்களை ஸ்மார்ட் போன் மூலம் அறிந்துக் கொள்ளலாம். அதுமட்டுமல்லாது கல்வி அறிவையும் இந்த செயலியின் மூலம் மேம்படுத்திக் கொள்ளலாம்.

unnamedCAOCPSVO.png

தமிழ் அகராதி 

ஆங்கிலம் மற்றும் தமிழியில் இயங்ககூடிய வகையிலான அகராதியை ஆன்ட்ராய்ட் செயலியில் கிடைக்கின்றன. Tamil Dictionary (https://play.google.com/store/apps/details?id=com.dictionary.ta&hl=en) என்ற செயலியின் மூலம் இணைய வசதியின்றி அகராதியை பயன்படுத்தி அர்த்தங்களை தெரிந்துக் கொள்ளலாம்.

சங்கப்பலகை 

ஸ்மார்ட் போன்களின் மற்றொரு இயங்கு தளமாகிய ஆப்பிள் செயலியில் சங்கப்பலகை செயலி (https://itunes.apple.com/us/app/sangapalagai/id591043265?mt=8) இயங்குகின்றது. அதன் மூலம் தமிழ் படைப்புகள் அனைத்தையும் அறிந்துக் கொள்ளலாம்.

logo4.jpg
 
www.openreadingroom.com என்ற இணைய தளத்தின் மூலமாகவும் தமிழ் நூல்களை இணையம் மூலம் அறியலாம். நவீன யுகத்தில் ஸ்மார்ட் போன் செயலிகளின் மூலம் தமிழ் நூல்கள் அனைத்தும் நமது கைகளினுள் இருப்பது தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு நிச்சயம் உதவும்.

 

http://mozhyee.blogspot.ch/2014/08/blog-post_30.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • வவுனியா மாவட்டத்தின் வாக்களிப்பு நிலைவரம்! ஒன்பதாவது ஜனாதிபதி தேர்தலிற்கான வாக்குப்பதிவுகள் இன்று காலை 07.00 மணி முதல் ஆரம்பமாகி சுமுகமான முறையில் இடம்பெற்று வருகின்றது.   வவுனியா மாவட்டத்தில் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாக்களிப்பதை அவதானிக்க கூடியதாக உள்ளதுடன், இராஜாங்க அமைச்சர் கே.கே.மஸ்தான் வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினை செலுத்தியிருந்தார். https://athavannews.com/2024/1400351   ##################  ##################    ###################     மலையக பெருந்தோட்ட மக்கள் ஆர்வத்துடன் வாக்களிப்பு!   இலங்கையின் 9வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட தெரிவு செய்வதற்கான வாக்களிப்பு இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமாகி தற்போது இடம்பெற்று வருகின்றது. குறிப்பாக மலையகத்தை பொருத்தவரை பெருந்தோட்ட மக்கள் உட்பட அனைவரும் வாக்களிப்பு நிலையங்களுக்கு சென்று தங்களுடைய வாக்குகளை பயன்படுத்துவதை காணக்கூடியதாக இருக்கின்றது. அதன்படி நுவரெலியா-மஸ்கெலியா தேர்தல் தொகுதியில் 347,646 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.aகொத்மலை தேர்தல் தொகுதியில் 88219 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். அத்துடன் 90,990 வாக்காளர்கள் வலப்பனை தேர்தல் தொகுதியில் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதோடு ஹங்குராங்கெத்த தேர்தல் தொகுதியில் 78,437 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். நுவரெலியா மாவட்டத்தில் 534 வாக்களிப்பு நிலையங்களில் வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளனர். மேலும், 52 வாக்கு எண்ணும் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்குகளை எண்ணுவதற்காக நுவரெலியா காமினி தேசிய கல்லூரியில் 41 வாக்கு எண்ணும் நிலையங்களும், நுவரெலியா மாவட்ட செயலகத்தில் தபால் வாக்குகள் எண்ணுவதற்காக 11 வாக்கு எண்ணும் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதேபோல் மத்திய மாகாணத்தில் கண்டி, மாத்தளை போன்ற பகுதிகளிலும் ஊவா மாகாணத்தில் பதுளை, பண்டாரவளை ஆகிய பகுதிகளிலும் வாக்களிப்பு மிகவும் நீதியாகவும் சுதந்திரமான முறையிலும் நடைபெற்று வருவதாக தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் தெரிவிக்கின்றன. https://athavannews.com/2024/1400359 #################  ##################    ################### மன்னாரில் அமைதியான முறையில் வாக்களிப்புகள் ஆரம்பம்! மன்னாரில் 9 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி தேர்தலுக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி ஆகிய நிலையில் இன்றைய தினம் காலை 7 மணி முதல் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்புகள் இடம்பெற்று வருகின்றது. இன்னிலையில் வன்னி மாவட்டம் மன்னார் தேர்தல் தொகுதியில் 98 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்புகள் இடம்பெற்று வருகின்றது. மன்னார் மாவட்டத்தில் 90 ஆயிரத்து 607 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர் என்றும் மன்னார் மாவட்டத்தில் உள்ள வாக்களிப்பு நிலையங்களுக்கு உள்ளூர் மற்றும் வெளிநாட்டு தேர்தல் கண்காணிப்பு குழுவினர் சென்று வாக்களிப்பை அவதானித்து வருகின்றனர். குறிப்பாக ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்புக் குழுவினர் விஜயம் செய்து கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் மன்னார் மாவட்டத்தில் அமைதியான முறையில் வாக்களிப்புகள் இடம் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1400362
    • ஜனாதிபதி தேர்தல்-யாழ். மாவட்டத்தில் பொதுமக்கள் ஆர்வத்துடன் பங்கேற்பு! ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்கெடுப்பில் பொதுமக்கள் யாழ்ப்பாண மாவட்டத்தில் ஆர்வத்துடன் பங்கேற்று வருகின்றனர். அதன்படி இன்று காலை 7 மணிக்கு வாக்களிப்பு ஆரம்பமான நிலையில் வாக்குச் சாவடிகளில் பொதுமக்கள் வரிசையில் நின்று ஜனநாயக கடமையில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தல் தினத்தில் வன்முறைகள் மற்றும் சட்டமீறல்களை கட்டுப்படுத்துவதற்காக பொலிஸார் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன் தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளன. https://athavannews.com/2024/1400368
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.