Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அடுத்த ஐ.பி.எல்., எப்போது

Featured Replies

அடுத்த ஐ.பி.எல்., எப்போது
நவம்பர் 04, 2014.

 

புதுடில்லி: எட்டாவது ஐ.பி.எல்., தொடர் வரும் 2015, ஏப். 8ம் தேதி துவங்குகிறது.

கடந்த 2008 முதல் இந்திய கிரிக்கெட் (பி.சி.சி.ஐ.,) போர்டால், இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.,) ‘டுவென்டி–20’ தொடர் நடத்தப்படுகிறது. அடுத்த ஆண்டு நடக்க உள்ள எட்டாவது தொடருக்கான தேதியை ஐ.பி.எல்., ஆட்சிமன்றக்குழு அறிவித்துள்ளது. இதன்படி, ஏப்.8 முதல் மே 24 வரை தொடர் நடக்கவுள்ளது.

 

தவிர, வீரர்களை மாற்றிக் கொள்வதற்கான கெடு வரும் டிச. 12ல் முடிகிறது. இதன்படி, மும்பை வீரர்களான மைக்கேல் ஹசி, பிரவீண் குமாரை அணி நிர்வாகம் விடுவித்தது. இவர்கள் எட்டாவது ஐ.பி.எல்., தொடருக்கான ஏலத்தில் இடம் பெறுவர். உன்முக்த் சந்த் (ராஜஸ்தான்), வினய் குமார் (கோல்கட்டா) மும்பை அணியில் இடம்பெறவுள்ளனர்.
 

http://sports.dinamalar.com/2014/11/1415119291/NextIPLCricketDateIndia.html

  • 3 weeks later...
  • தொடங்கியவர்

அணி மாறிய அப்துல்லா
நவம்பர் 21, 2014.

 

புதுடில்லி: ராஜஸ்தான் வீரர் இக்பால் அப்துல்லா, பெங்களூரு அணிக்கு மாறினார்.

இந்திய கிரிக்கெட்டின் ‘ஆல் ரவுண்டர்’ இக்பால் அப்துல்லா, 24. தேசிய போட்டிகள் எதிலும் பங்கேற்காத இவர், ஐ.பி.எல்., தொடரில் கோல்கட்டா அணிக்காக (2008–2013) விளையாடினார். பிறகு கடந்த ஆண்டு ராஜஸ்தான் அணியில் இணைந்தார்.

இம்முறை வரும் 2015 ஏப்., 8 முதல் மே 24 வரை, எட்டாவது ஐ.பி.எல்., தொடர் நடக்கவுள்ளது. இதற்கான ஏலத்துக்கு முன், ஐ.பி.எல்., அணிகள் வீரர்களை மாற்றிக்கொள்வது, விடுவிக்கும் முறைகள் தற்போது நடக்கிறது.

இதன் படி, கோல்கட்டா அணியில் இருந்து மன்விந்தர் பிஸ்லாவை பெற்றுக் கொண்ட பெங்களூரு அணி, பார்த்திவ் படேலை மும்பைக்கு அனுப்பியது.

இந்த வரிசையில் தற்போது, ராஜஸ்தான் வீரர் இக்பால் அப்துல்லா, பெங்களூரு அணியில் இணைந்தார்.

 

http://sports.dinamalar.com/2014/11/1416590866/cricketindia.html

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

ஏலத்தில் யுவராஜ், கெய்ல்
நவம்பர் 30, 2014.

ஐ.பி.எல்., தொடரில் அதிக விலை கொடுத்து வாங்கப்பட்ட வீரர்கள், சரியான திறமை வெளிப்படுத்தாததை அடுத்து, யுவராஜ், பீட்டர்சன், தினேஷ் கார்த்திக், கெய்ல் உள்ளிட்ட பலர், அணியில் இருந்து இந்த வாரம் கழற்றி விடப்படவுள்ளனர்.

கடந்த 2008ல் துவங்கப்பட்ட இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.,) ‘டுவென்டி–20’ தொடர், பல்வேறு சர்ச்சைகளை கடந்து வெற்றிகரமாக நடக்கிறது.

எட்டாவது ஐ.பி.எல்., தொடர் 2015, ஏப்., 8 முதல் மே 25 வரை நடக்கவுள்ளது. இதற்கான வீரர்கள் ஏலம் அடுத்த ஆண்டு ஜனவரியில் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

கடைசித் தேதி:

இதற்கு முன், ஐ.பி.எல்., அணிகள் தங்களுக்குள் வீரர்களை மாற்றிக் கொள்வது, அணியில் இருந்து விடுவிப்பது போன்ற வேலைகளில் ஈடுபட்டுள்ளன. இதற்கான கடைசித் தேதி வரும் டிச., 5.

 

கழற்ற முடிவு:

இதனிடையே, அதிக விலை கொடுத்து வாங்கியும், அணிக்காக போதிய திறமை வெளிப்படுத்தாத வீரர்களை கழற்றி விட்டு, புதிய வீரர்களை தேர்வு செய்யும் வேலைகளும் நடந்து வருகின்றன.

இதன் படி, யுவராஜ் சிங், தினேஷ் கார்த்திக், பீட்டர்சன், அமிஸ் மிஸ்ரா போன்றவர்கள், அடுத்த ஆண்டு அணியில் இருந்து விடுவிக்கப்பட்டு, ஏலத்துக்கு வருவர் என்று தெரிகிறது.

அதாவது, பெங்களூரு வீரர் யுவராஜ் சிங், ரூ. 14 கோடிக்கு வாங்கப்பட்டார். இவர், 14 போட்டிகளில் 376 ரன்கள் மட்டும் தான் எடுத்தார்.

 

காரணம் என்ன:

இதனால், யுவராஜ் சிங்கை ஏலத்தில் விட்டு, மீண்டும் குறைந்த விலைக்கு ஏலத்தில் எடுக்கும் திட்டமும் வைத்துள்ளதாக தெரிகிறது. இருப்பினும், இதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. ஒருவேளை ஏலத்தில் எடுக்கப்படாமலும் போகலாம்.

 

அதிக பணம்:

ஏனெனில், கடந்த ஆண்டு பெங்களூரு அணி தனது முழு ஏலத்தொகையையும் (ரூ. 60 கோடி) செலவு செய்தது. யுவராஜ் சிங்கை விடுவித்தால் ரூ. 14 கோடி, இந்த ஆண்டு கூடுதலாக சேர்க்கப்படும் ரூ. 3 கோடியுடன் சேர்த்து, மொத்தம் ரூ. 17 கோடி கையில் இருக்குமாம்.

இதேபோல, டில்லி அணி தினேஷ் கார்த்திக் (ரூ. 12.5 கோடி), பீட்டர்சனை (ரூ. 9 கோடி) விடுவிப்பதால், கிடைக்கும் ரூ. 22 கோடியுடன், கூடுதலாக 3 என, மொத்தம் ரூ. 25 கோடி வைத்திருக்கலாம்.

இதனால், 2015 ஏலத்தில் அதிக வீரர்களை எடுக்க வாய்ப்பு ஏற்படும். இதனால், யுவராஜ் சிங், கெய்ல் போன்ற வீரர்களின் ஐ.பி.எல்., எதிர்காலம் கேள்விக்குறியாக மாறியுள்ளது.

 

http://sports.dinamalar.com/2014/11/1417327479/yuvrajcricketindia.html

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

மும்பை அணியின் தலைமை பயிற்சியாளரானார் பொண்டிங்
 

 

எதிர்வரும் 2015 ஆம் இடம்பெறவுள்ள 8 ஆவது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டித் தொடருக்கான மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் அணித் தலைவர் ரிக்கி பொண்டிங் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுவரை மும்பை அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த ஜோன்ரைட் இளம் வீரர்களின் திறமையை மேம்படுத்தும் பணியை மேற்கொள்வுள்ளார்.

 

http://www.virakesari.lk/articles/2014/12/11/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D
 

  • தொடங்கியவர்

ஐ.பி.எல்., இந்திய வீரர்களுக்கு ‘கல்தா’
டிசம்பர் 15, 2014.

 

புதுடில்லி: யுவராஜ் சிங் (பெங்களூரு), புஜாரா (பஞ்சாப்), தினேஷ் கார்த்தி (டில்லி), முரளி விஜய் (டில்லி) உள்ளிட்ட இந்திய வீரர்கள், ஐ.பி.எல்., அணிகளில் இருந்து விடுவிக்கப்பட்டனர். இதனால் அடுத்தாண்டு நடக்கவுள்ள ஏலத்தின் மூலம் தேர்வாகி, மீண்டும் ஐ.பி.எல்., தொடரில் விளையாடும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.           

இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.,) ‘டுவென்டி–20’ தொடர் ஆண்டு தோரும் நடத்தப்படுகிறது. அடுத்த ஆண்டுக்கான 8வது ஐ.பி.எல்., தொடர் வரும் ஏப்., 8ம் தேதி முதல் மே 24ம் தேதி வரை நடக்கவுள்ளது. இதற்கு முன், ஒவ்வொரு அணிகளும் தங்கள் அணியில் இடம் பெற்றுள்ள வீரர்களை தக்கவைத்துக் கொண்டு, மற்ற வீரர்களை விடுவித்தது. வேறு அணிகளில் இருந்து வீரர்களை வாங்கிக் கொள்ளவும் அனுமதிக்கப்பட்டது. இதற்கான கடைசி நாளாக கடந்த டிச., 12ம் தேதி நிர்ணயிக்கப்பட்டது.     

      

இதன்படி, கடந்த சீசனில் அதிகபட்சமாக ரூ. 14 கோடிக்கு ஏலம் போன யுவராஜ் சிங்கை, பெங்களூரு அணி கழற்றிவிட்டது. இதனால் இவர், ஏலத்தில் பங்கேற்று மீண்டும் ஐ.பி.எல்., தொடரில் விளையாடும் வாய்ப்பு பெறலாம். கடந்த சீசனில் ராஜஸ்தானுக்காக விளையாடிய சுழற்பந்துவீச்சாளர் இக்பால் அப்துல்லாவை பெங்களூரு அணி வாங்கியது. விக்கெட் கீப்பர் பார்த்திவ் படேலை விடுவித்த பெங்களூரு அணி, கோல்கட்டா அணிக்காக விக்கெட் கீ்ப்பராக செயல்பட்ட மன்விந்தர் பிஸ்லாவை வாங்கியது.           

பார்த்திவ் படேலை மும்பை அணி வாங்கியது. மும்பை அணியில் இருந்து மைக்கேல் ஹசி, பிரவீண் குமார், ஜாகிர் கான் கழற்றிவிடப்பட்டனர்.

 

அதேவேளையில் ராஜஸ்தானிடம் இருந்து உன்முக்த் சந்த், கோல்கட்டாவிடம் இருந்து வினய் குமாரை மும்பை அணி வாங்கியது. ஹர்பஜன் சிங்கை மும்பை அணி தக்கவைத்துக் கொண்டது.     

 

பஞ்சாப் அணிக்காக விளையாடிய புஜாரா, பாலாஜி, முரளி கார்த்திக் உள்ளிட்டோரும் விடுவிக்கப்பட்டனர். அதேவேளையின் சேவக்கை தக்கவைத்துக் கொண்டது.     

டில்லி அணியில் இடம் பெற்றிருந்த கெவின் பீட்டர்சன், தினேஷ் கார்த்திக், முரளி விஜய், லட்சுமி ரத்தன் சுக்லா விடுவிக்கப்பட்டனர். கேதர் ஜாதவ், மனோஜ் திவாரியை தக்கவைத்துக் கொண்டது.

 

http://sports.dinamalar.com/2014/12/1418662611/IPLCricketIndianPlayersAuctionYuvrajSingh.html

  • தொடங்கியவர்

ஐபிஎல் அணிகளிலிருந்து கெவின் பீட்டர்சன், யுவராஜ், ஜாகீர் கான் உள்ளிட்டோர் விடுவிப்பு

 

டெல்லி டேர் டெவில்ஸ், ஆர்.சி.பி. உள்ளிட்ட ஐபிஎல் அணிகள் தங்கள் அணிகளிலிருந்து முக்கிய வீரர்களை விடுவித்துள்ளது.

 

டெல்லி டேர் டெவில்ஸ் அணி கெவின் பீட்டர்சன், தினேஷ் கார்த்திக், முரளி விஜய், உனட்கட், ராஸ் டெய்லர், லஷ்மி ரத்தன் சுக்லா, ராகுல் ஷர்மா, வெய்ன் பார்னெல், ஜேம்ஸ் நீஷம், சித்தார்த் கவுல், ராகுல் ஷுக்லா, ஷரத், மிலிந்த் குமார் ஆகியோரை அணியிலிருந்து விடுவித்துள்ளது.

 

டுமினி, மொகமது ஷமி, குவிண்டன் டி காக், மனோஜ் திவாரி, கூல்டர் நைல், இம்ரான் தாஹிர், கேதர் ஜாதவ், மயங்க் அகர்வால், ஷாபாஸ் நதிம், சவுரவ் திவாரி ஆகியோரை தக்க வைத்துள்ளது

சில வீரர்களை விடுவிப்பதன் மூலம் பணம் மிச்சப்பிடிக்கப்பட்டு புதிய வீரர்கள் மீது முதலீடு செய்ய முடியும் என்று டெல்லி அணியின் தலைமை செயல் அதிகாரி ஹேமந்த் துவா கூறியுள்ளார்.

 

ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு:

கடந்த ஐபிஎல் ஏலத்தின் போது யுவராஜ் சிங்கை 14 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்த ராயல் சாலஞ்சர்ஸ் அணி அவரை தற்போது விடுவித்துள்ளது. இத்தனைக்கும் யுவராஜ் சிங் அதிக ரன்கள் எடுத்த 2-வது ராயல் சாலஞ்சர்ஸ் வீரர் ஆவார். 376 ரன்களை 34 என்ற சராசரியுடன் 3 அரைசதங்களுடன் எடுத்துள்ளார். இவர் தவிர முத்தையா முரளிதரன், ஆல்பி மோர்கெல், ரவி ராம்பால், சச்சின் ரானா, ஜகதி, தன்மய் மிஸ்ரா.

 

சென்னை சூப்பர் கிங்ஸ்:

டேவிட் ஹஸ்ஸி, ஜான் ஹேஸ்டிங்ஸ், பென் ஹில்பென்ஹாஸ், உள்ளூரைச் சேர்ந்த ஆல்ரவுண்டர் விஜய் சங்கர் ஆகியோரை நீக்கியுள்ளது.

 

மும்பை இந்தியன்ஸ்:

மும்பை இந்தியன்ஸ் அணி ஜாகீர் கான் உட்பட 8 வீரர்களை விடுவித்துள்ளது. பிராக்யன் ஓஜாவையும் சேர்த்து விடுவித்துள்ளது மும்பை இந்தியன்ஸ். மேலும் ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் பென் டன்க், வெஸ்ட் இண்டீஸின் இடதை கை ஸ்பின்னர் சண்டோகி, உள்நாட்டு வீரர்களான ஜலஜ் சக்சேனா, சி.எம். கவுதம், அபூர்வ் வான்கடே, மற்றும் சுசாந்த் மராத்தே. பார்த்திவ் படேலை ராயல் சாலஞ்சர்ஸிலிருந்து மும்பை வாங்கியதால் அந்த அணியில் இருந்த அதிக விக்கெட் கீப்பர்களை மும்பை வெளியேற்றியுள்ளது.

 

சன் ரைசர்ஸ்:

சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி 10 வீரர்களை விடுவித்துள்ளது. ஆரோன் ஃபின்ச், டேரன் சாமி, இந்திய வீரர்களான அமித் மிஸ்ரா, இர்பான் பத்தான், ஜேசன் ஹோல்டர், ஜிம்பாவே விக்கெட்-கீப்பர் பேட்ஸ்மென் பிரெண்டன் டெய்லர், உள்நாட்டு வீரர் வேணுகோபால் ராவ், பிரசாந்த் பரமேஸ்வரன், அனிருதா ஸ்ரீகாந்த், மன்ப்ரீத் ஜுனேஜா ஆகியோரை விடுவித்துள்ளது.

 

கிங்ஸ் லெவன் பஞ்சாப்:

புஜாரா, எல்.பாலாஜி, முரளி கார்த்திக் ஆகியோர் விடுவிக்கப்பட்டனர்.

 

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்:

ஜாக் காலிஸ், தேவவரத தாஸ், சயன் மோண்டல்.

 

ராஜஸ்தான் ராயல்ஸ்:

பிராட் ஹாட்ஜ், கெவின் கூப்பர், அன்கிட் சர்மா, அமித் சர்மா, அங்குஷ் பெய்ன்ஸ்

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%90%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%86%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%95%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/article6697997.ece?homepage=true

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.