Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

‘புலிப்பார்வை’– விமர்சனம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு படம் எப்படி எடுக்கப்படக் கூடாது என்பதற்கான சகல கூறுகளுடன் எடுக்கப்பட்டுள்ள படம் ‘புலிப்பார்வை’.

 

ஒளிப்பதிவு, காட்சி அமைப்பு, பின்னணி இசை என்று அனைத்து அம்சங்களும் மிகவும் நேர்த்தியாக கையாளப்பட்ட காட்சிகள், இப்படத்தில் இரண்டே இரண்டு காட்சிகள் தான் இருக்கின்றன. ஒன்று – படத்தின் ஆரம்பத்தில் வரும் காட்சி. அடுத்தது – இடைவேளை முடிந்து படம் மீண்டும் ஆரம்பிக்கும் இடத்தில் வரும் காட்சி. இந்த இரண்டு காட்சிகளிலும் நடித்த நடிகர்களுக்கு வசனங்கள் இல்லை என்றாலும், அவர்கள் இவ்விரு காட்சிகளிலும் சிறப்பாக நடித்து தங்கள் திறமையை வெளிபடுத்தி இருந்தார்கள். ஆனால், இந்த இரண்டு காட்சிகளையும் அனைத்து திரைப்படங்களிலும், தேவையென்றால் இணையத்தில்கூட பார்க்கலாம். இந்த இரண்டு காட்சிகளும் “புகைபிடிக்கக் கூடாது புகைப்பிடித்தல் உடல் நடலத்திற்கு கேடு” என்று கூறும் அரசாங்க சுகாதாரத் துறையின் விளம்பரப் படக் காட்சிகளே. இவற்றை ‘புலிப்பார்வை’ படத்துடன் இணைத்து இருப்பதால் இந்த இரண்டு விளம்பர காட்சிகள் மட்டுமே படத்தில் திரைப்படத்திற்கான சகல அம்சங்களுடன் இருக்கின்றன.

’புலிப்பார்வை’ திரைப்படம் பற்றிய சர்ச்சை ஏற்படக் காரணம், சர்வதேச அரசியல் நிகழ்வுகளில் தெற்காசிய பிராந்தியத்தின் மிகவும் முக்கியமான அரசியல் தளத்தையும், அதன் பின்னால் நடைபெற்ற நிகழ்வுகளையும் குறித்து பேசும் படம்; அதுவும் இருவேறு நாடுகளில் வாழும் ஒரு தேசியஇன மக்களின் அரசியலை பேசுகிற படம் என்பதால் தான்.

 

இப்படிப்பட்ட மிக முக்கியமான அரசியலை பேசும் படத்தின் திரைக்கதையை, இயக்குனர் பிரவீன் காந்தி போன்ற அரைவேக்காடுகள் படைக்கவே முடியாது. இருந்தும், அவருக்கு திரைப்படம் ஆக்கும் வசதி வாய்ப்புகள் அளிக்கப்பட்டிருப்பதன் பின்னால் ஓர் அரசியல் இருக்கிறது. அந்த அரசியலைப் பார்த்தாலே, ‘இத்திரைப்படம் தமிழர்களின் அரசியலை சரியான விதத்தில் பேசியிருக்கிறதா?’ என்பது புரியும்.

 

‘இலங்கைக்கும் புலிகள் இயக்கத்திற்கும் சண்டை நடந்து, புலிகள் இயக்கம் அழிக்கப்பட்டதானது, அங்கிருக்கும் தமிழர்களுக்கும் இலங்கைக்குமான பிரச்சனை இல்லை’ என்பதாக விஷமத்தனமாக கட்டமைத்து, ‘இந்தியாதான் அங்கிருக்கும் ஈழத்தமிழர்களின் பிரச்சனையை தீர்த்து வைக்கக்கூடிய சர்வரோக நிவாரணி’ என்றும், போரில் இலங்கைக்கு உதவி புரிந்த இந்தியாவை புனித பிம்பமாக சித்தரித்து, ‘இலங்கைக்கு எதிரான நிலையில்தான் இந்தியா இருக்கிறது’ என்றும் சொல்லுகிற அரசியலை முன்வைக்கிறது இப்படம்.

 

படத்தின் முதல் காட்சியாக, ஒரு தாக்குதல் நடத்துவது தொடர்பான புலிகளின் ஆலோசனைக் கூட்டத்தை காட்டுகிறார்கள். அதில் ஒரு கதாபாத்திரம் – அந்த கதாபாத்திரத்தை பிரவீன் காந்தியே ஏற்று நடித்திருக்கிறார் –“சிங்களவனின் எலும்புகளை நம் மண்ணிற்கு உரமாக போட வேண்டும்” என்று பேசுகிறது. அதாவது, புலிகள் இயக்கத்தினர் தங்கள் நோக்கத்தில் மிகவும் தீவிரமாக இருக்கிறார்கள் என்பதை காட்டுவதற்காக இந்த காட்சி. ஆனால், இதே படத்தில் மிக அதிகமாக சிங்கள் ராணுவ அதிகாரிகளுக்கு வசனங்கள் பேசும் வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. இருந்தும், அவர்கள் தங்களது இனவெறியை வெளிப்படுத்தும் வகையில் பேசுகிற வசனம் என்றால், சிறுவன் பாலச்சந்திரனை பிடித்த பிறகு “புலிகளின் பிள்ளைகள் கருவிலேயே அழிக்கப்பட வேண்டியவர்கள்” என்று பேசுகிற ஒரு வசனம் மட்டுமே.

ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது, இலங்கை ராணுவத்தினர் தங்களின் நாட்டை தக்க வைத்துக் கொள்ள போராடுவதாகவும், புலிகள் இயக்கத்தினர் தங்களின் தலைவரை காப்பாற்ற மட்டுமே போராடுவதாகவும் கதைக்களம் இருக்கிறது. தனி தமிழீழத்தின் அத்தியாவசியத்தை உணர்த்தும் வகையில் எந்த காட்சி அமைப்பும் இல்லை. போராளியின் காதலியாக வரும் பெண், போரினால் அங்கு மக்கள் எப்படி பாதிக்கப்படுகிறார்கள் என்பதை காட்டும் வகையிலேயே சித்தரிக்கப்பட்டு இருக்கிறார்.

 

மேலும், சர்வதேச போர் குற்ற விசாரணை என்ற பெயரில் “புலிகள் இயக்கமும் போர் குற்றம் புரிந்தது. அது குறித்தும் விசாரணை செய்ய வேண்டும்” என்று கோருபவர்களுக்கு, இந்த படத்தின் கட்டமைப்பு மிக சாதுர்யமாக வேறொரு கோணத்தை எடுத்துக் கொடுக்கிறது. இதுவரை வெளிவந்துள்ள சர்வதேச அறிக்கைகளில் “புலிகள் போர் நடவடிக்கைகளில் பொதுமக்களை பயன்படுத்தினார்கள்” என்றும், “பதுங்கு குழிகள் வெட்ட பொது மக்களை உபயோகித்தனர்” என்றும் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளன. அடுத்த கட்டமாக, “கண்ணிவெடிகளை அகற்ற பொது மக்களை உபயோகித்தனர் புலிகள்” என்று இன்னொரு கோணத்தில் புலிகள் இயக்கம் மீது புதிய குற்றச்சாட்டு வைக்க, சர்வதேச அரங்கிறகு ஒரு புது விஷயத்தை இப்படம் மூலம் எடுத்துக் கொடுக்கிறார்கள்.

 

படத்தின் கதாநாயகியாக வருபவர், தனது வயிற்றுப் பிழைப்பிற்காக கண்ணிவெடி அகற்றும் பணியை செய்தார் என்று சித்தரிக்கிறது கதையமைப்பு. இது படத்தின் சில காட்சிகளை மாற்றுவதால் மாற்றப்படக்கூடிய விஷயம் இல்லை ஒட்டுமொத்த கதையின் அடித்தளமே, கதாநாயகி செய்து வரும் இந்த வேலை பற்றிய விஷ்யம் தான். மேலும், கதாநாயகி தன் காதலனுக்கு காதல் பரிசாக கண்ணிவெடியை தோண்டி எடுத்து வந்து கொடுக்கிறார்!

 

’nominees கண்ணிவெடி’ என்பது சர்வதேச அளவில் மிகவும் பயங்கரமான ஆயுதமாக பார்க்கப்படும் ஒரு விசயம். இதனால் பெரும்பாலும் பாதிக்கப்படுபவர்கள் பொதுமக்களே. எனவே சர்வதேச அளவில் கண்ணிவெடிக்கு எதிரான இயக்கங்கள் உண்டு. 1997ஆம் ஆண்டு இவ்வாறான ஒரு இயக்கத்திற்கு நோபல் பரிசுகூட கொடுக்கப்பட்டது (ICBL). ஆனால் இத்திரைப்படத்தில் கண்ணிவெடி என்பதை பொதுமக்கள் கையாளுவதாகவும், அதற்கு புலிகள் இயக்கத்தினர் காசு கொடுப்பது போலவும் படமாக்கி இருக்கிறார்கள்.

 

 

“இன்று வரை ஈழத்தில் பொது மக்களை மீள் குடியேற்றத்திற்கு அனுமதிக்காதது ஏன்?” என்ற கேள்விக்கு, “அங்கு கண்ணிவெடிகள் இருக்கின்றன. அவற்றை அகற்றும் வேலை நடந்து வருகிறது. எனவே மக்களை குடியமர்த்த முடியாது” என்ற பதிலை, போர் முடிந்து 5 ஆண்டுகளுக்குப் பிறகும் இலங்கை அரசு கூறிவருகிறது. இவற்றை எல்லாம் கணக்கில் எடுக்காமல் ப்ரவீன் காந்தி தெற்காசிய பிராந்தியத்தின் ஒரு அரசியல் நிகழ்வை படமாக்க முயற்சி எடுத்திருப்பது, அவரின் கத்துக்குட்டித்தனத்தின் அடையாளம் மட்டும் இல்லை. நமக்கு எதிரான அரசியலை முன்னிறுத்த இத்தகையை கத்துக்குட்டிகளையும் நமது அரசியல் எதிரிகள் உபயோகிப்பார்கள் என்பதற்கு சிறந்த உதாரணம் இந்த படம்.

 

 

அனைத்து திரைப்பட அம்சங்களுடன் கூடிய ‘இனம்’ படத்தில் ஒரு கதாபாத்திரம் கண்ணிவெடியின் மீது உட்கார்ந்து இருப்பார். நகர்ந்தால் உயிர் போய்விடும் என்பதால், அவருக்கு உணவை தூரத்திலிருந்து நீண்ட குச்சியில் கொடுப்பார்கள். படம் முழுவதும் அவர் அங்குதான் அமர்ந்து இருப்பது போல் காட்டியிருப்பார்கள். அந்த கதாபாத்திரம் என்பது கண்ணிவெடியின் ஆபத்தை நம் கண்முண் விவரிக்கும் ஒரு கதாபாத்திரம். அதேநிலையில் தான் இங்கும் கதாநாயகியின் கதாபாத்திரம் கண்ணிவெடி குறித்த சர்ச்சையை மேலும் விரிவடைய வைக்கிறது.

படத்தின் இறுதிக் கருத்தாக, “ஈழத்தமிழர்களின் பிரச்சனைகளுக்கு விடிவாக இந்தியாவே இருக்க முடியும். அதை தவிர வேறு யாரும் இருக்க முடியாது” என்றும், போர் காலகட்டத்தில் இந்தியா பலமுறை இலங்கை அரசை எச்சரித்தது போலவும் காட்சிகள் சித்தரிக்கபப்பட்டுள்ளது. இலங்கை அமைச்சர்களும், ராணுவத்தினரும் “இந்தியாவுடன் இணைந்தே நாங்கள் போரை நடத்தினோம்” என்று உலக அரங்கில் பகிரங்கமாக ஒத்துக் கொண்ட பிறகும், அதை மறைத்து, ஏதோ இந்தியா இந்த போருக்கு எதிராக நின்றது போலவும், சிறுவன் பாலசந்திரனை இலங்கை கொலை செய்த நிகழ்வு, இந்தியாவுக்கும் இலங்கைக்கும் மேலும் பகையை உருவாக்கும் என்பது போலவும் சித்தரித்துள்ளார்கள். இது இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரின் கூற்றாக இருக்கலாம்; ஆனால் சமகால அரசியலைப் பற்றி பேசுகிற ஒரு திரைப்படம் என்பது உள்ளதை உள்ளபடி கூற வேண்டும். ஏனென்றால் அரசியல் நிகழ்வுகளைத் திரித்து சித்தரிப்பது என்பது, தவறான வரலாற்றை மக்கள் முன்பாக கொண்டு சேர்க்கும்.

 

 

திரைப்படத்தின் இயக்குனர் படத்தின் ஆரம்பத்தில், “இது உங்களுக்கான படம்” என்கிறார். ஆனால், சில கதாபாத்திரங்களை தமிழ் திரையுலகின் கதாநாயகர்கள் வழிபாட்டின்கீழாக அமைத்துவிட்டால் மட்டும் அது மக்களுக்கான படம் ஆகிவிடாது. மக்களின் அரசியலை தெளிவாக விளக்கக் கூடியதாக இருக்க வேண்டும்.

 

 

படத்தில் இந்திய ஆதரவு நிலை எடுத்ததற்கு, ஒரு மாவீரர் நாள் உரையில் பிராபகரன் பேசிய பேச்சை ஆதாரமாக சுட்டிக் காட்டுகிறார் பிரவீன் காந்தி. இறுதிப்போர் காலகட்டத்தில், 2008ஆம் ஆண்டு பிரபாகரன் நிகழ்த்திய மாவீரர் நாள் உரையில், தங்களுக்கு ஆதரவு அளித்துவரும் தமிழக தலைவர்கள் மற்றும் இந்திய அளவிலான தலைவர்களுக்கு நன்றி தெரிவித்தாரே தவிர, இந்தியாவிற்கு நன்றி தெரிவிக்கவில்லை. மேலும், சர்வதேச நாடுகள் தங்களுக்கு எதிராக நிற்பதை குறிப்பிட்டிருக்கிறார். அதில், “இந்தியா புலிகளுக்கு எதிராக இல்லை” என்று அவர் எங்குமே கூறவில்லை. இதன் பின்னாலுள்ள அரசியலை புரிந்து கொள்ளாமல் குருட்டாம்போக்கில் தமிழர்களின் அரசியலை பேசுகிறார் பிரவீன் காந்தி.

 

 

பிரவீன் காந்தியின் கத்துக்குட்டித்தனம் மிக நாசூக்காக பார்ப்பனியத்தின் வேலையை செய்கிறது. ஒட்டுமொத்த திரைப்படத்தில், படத்தின் பெரும்பாலான காட்சிகளில் வரும் சிங்கள ராணுவ வீரர்கள் அமைதியான போக்கை கடைப்பிடிப்பதாகவும், கதையின் அடிநாதமாக கதாநாயகி வாழ்வாதரத்திற்காக கண்ணிவெடி அகற்றும் வேலை செயவதாகவும், சிறுவன் பாலச்சந்திரனை சுட்டுக் கொன்றதற்கு, அவனது தைரியமான மனநிலை தான் காரணமே தவிர, சிங்கள இனவெறி காரணம் இல்லை என்பதாகவும் இதில் சித்தரிக்கப்பட்டுள்ளன. படத்தில் மிக அதிகமான காட்சிகளில் விஷத்தைத் தடவிவிட்டு, ஒரு சில காட்சிகளில் மட்டும் வழக்கமான தமிழ் சினிமாவின் மசாலா காட்சியமைப்புகளின் கீழாக ஒருவரை மிகப் பெரிய போராளியாக சித்தரித்துவிட்டால், இங்கிருப்பவர்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்ற நினைப்பில் இப்படத்தை எடுத்திருக்கிறார்கள். இந்த படம் இப்படியே வெளியாவதற்கு எந்த தகுதியும் இல்லை.

 

 

ஆனால், ‘கருத்துரிமை’ என்று பேசுபவர்களுக்காக ஒன்று செய்யலாம். கதாநாயகி கண்ணிவெடி அகற்றுதலை படத்தில் இருந்து நீக்க வேண்டும். அடுத்து, மிக முக்கியமாக, சிங்கள கொடியை கிராபிக்ஸில் மறைத்தது போல், புலிக் கொடியையும், புலிச் சின்னத்தையும் மறைத்துவிட வேண்டும். சிங்களக் கொடியை பயன்படுத்தாமல், அதை மறைத்து எப்படி இந்தியாவின் அரசியலை முன்னிருத்துகிறீர்களோ, அதேபோல் புலிகள் இயக்கத்தின் அடையாளங்களையும் பயன்படுத்த வேண்டியது இல்லை. அப்படி அதை பயன்படுத்துவது உங்களின் வியாபார நோக்கமே அன்றி, தமிழினத்தின் மீதான பாசமாகவோ, உணர்வாகவோ தெரியவில்லை. மேலும் இப்படி ஒரு கேடு கெட்ட படத்தின் மூலமாக மக்களுக்கு தமிழீழ விடுதலை போராட்டத்தையும் போராளிகளையும் கொண்டு சேர்க்க வேண்டிய தேவை, தமிழக அரசியல் களத்தில் இல்லை.

 

http://heronewsonline.com/pulipaarvai-review/

‘புலிப்பார்வை’ – சிங்களவனின் நரிப்பார்வை!

  • கருத்துக்கள உறவுகள்

எங்கே இந்த படத்திற்கு சீமானோட சேர்ந்து ஆதரவு கொடுத்தவர்களது சத்தத்தைக் காணோம்?????????????????

  • கருத்துக்கள உறவுகள்

நான் இப்படத்திற்கு ஆதரவு வழங்கியிருக்கவில்லை..! :D இந்த ஆள் புரிதல் இல்லாமல் படம் எடுக்கிறார் என்பதை ஏற்கனவே சொல்லியிருந்தேன்.. :o

என்ன பெரும் தலைவர் பச்சமுத்து பரிவேந்தர் ...சில ஈழ்த்தமிழரின் தற்போதிய தலைவர் சீமான் ஆதரவுடன் வந்த படம் கண்டிப்பா ஈழம் பிடிக்கும் படமாத்தான் இருக்கு ...

 

இது திட்டமிட்ட விமர்சனம் போல இருக்கு ஏனெனில் சீமானே பார்த்து ஓகே சொன்ன படம் எப்படி நரிபார்வை ஆகும் .

பாக்கியராசன்.சே அவர்கள் முன்னர் இப்படத்தின் கதையை எழுதிய போதே அதை சுட்டிக்காட்டி யாழில் விமர்சனம் வைத்திருந்தேன்.

இந்த படமே பிழை. கதையில் பெரியளவில் மாற்றத்தை கொண்டுவர முடியாது என்பது தெரிந்தும் சீமான் அண்ணா இதற்கு ஆதரவு கொடுத்தது அவரது சுயநல அரசியல்.

அதேநேரம் சீமான் அண்ணாவின் போராட்டங்களை மதிக்கிறேன்.

Edited by துளசி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.