Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'தேவை - சிறிலங்கா மீது பொருளாதாரத் தடை

Featured Replies

சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்குத் தயார் என்று அடிக்கடி சொல்லிக் கொள்கின்ற சிறிலங்கா அரசு தொடர்ந்தும் பிரகடனப்படுத்தாத போரை மேற்கொண்டு வருவதோடு மட்டுமல்லாது பொருளாதார தடைகளையும் தமிழ் மக்கள்மீது பிரயோகித்து வருகின்றது.

போர் தருகின்ற அல்லல்களையும் பொருளாதார தடைகள் கொடுக்கின்ற இன்னல்களையும் எதிர்கொள்கின்ற தமிழ்ப் பொதுமக்கள்மீது போக்குவரத்துத் தடைகளையும் உணவு மருந்துத் தடைகளையும் சிறிலங்கா அரசு இரக்கமின்றி விதித்து வருகின்றது. இவை மூலம் தமிழ் மக்களின் வாழ்வாதாரத்தை சிதைத்து அவர்களை பட்டினி மூலமும், நோய்நொடி மூலமும் அழித்து விடுவதற்கான முயற்சிகளை சிறிலங்கா அரசு மேற்கொண்டு வருகின்றது.

தமிழீழப் பகுதிகளில் அளப்பரிய புனர்வாழ்வுப் பணிகளை மேற்கொண்டு வருகின்ற தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் வங்கிக் கணக்குகளை சிறிலங்கா அரசு முடக்கி வைத்திருப்பதன் அடிப்படைக் காரணமும் தமிழ் மக்களின் அடிப்;படை வாழ்வியலைக் குலைப்பதற்காகத்தான்!.

தமிழ் மக்கள் மீது சிறிலங்கா அரசு மேற்கொள்கின்ற பொருளாதார உணவு மருந்துத் தடைகள் புதிதானவை அல்ல. சிறிலங்காவின் முன்னைய அரசுகளும் இவற்றை காலத்துக்குகாலம் மேற்கொண்டே வந்திருக்கின்றன. தம்முடைய உரிமைக்காகவும், சுதந்திரத்திற்காகவும் போராடுகின்ற தமிழினத்தை முற்றாக அழித்தொழிப்பதற்காக சிங்கள பௌத்த பேரினவாத அரசுகள் இந்தக் கொடுமைகளை தொடர்ந்தும் செய்து வருகின்றன. இந்தக் கொடுமைகளுக்குக் காலம் காலமாக எமது தமிழினம் முகம் கொடுக்க வேண்டியதாகவே உள்ளது.

இத்தகைய நாசகாரக் கொடுமைகளுக்கு எதிராகக் குரல் எழுப்புவதோடு மட்டுமல்லாது, ஜனநாயக வழியில் ஒரு பரந்து பட்ட போராட்டத்தை மிகச் சரியான செயற்பாடுகள் மூலம் புலம் பெயர்ந்த தமிழீழ மக்கள் முன்னெடுத்துச் செல்லணே;டிய வேளை இதுவாகும். இந்த முக்கியமான பரந்து பட்ட ஜனநாயகம் போராட்டம் குறித்து சிந்தித்து தர்க்;கிப்பதுதான் இந்தக் கட்டுரையின் நோக்கமாகும்.!

தமிழர் தாயகத்தின் மீது சிறிலங்கா அரசுகள் ஏற்படுத்தியுள்ள பொருளாதாரத் தடைக்கு ஒப்பான ஒரு பொருளாதார தடையை சிpறிலங்காமீது சர்வதேச சமூகம் விதிக்க வேண்டும். இதற்கான ஓர் ஏது நிலையை உருவாக்கின்ற ஒரு முன்முயற்சியை புலம்பெயர்ந்த தமிழீழ மக்களாகிய நாம் ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டும்.

இதற்குரிய வழிமுறைகள் குறித்து நாம் தர்க்கிப்பதற்கு முன்பு பொருளாதார தடை குறித்துச் சில விடயங்களை நாம் சுட்டிக்காட்ட விழைகின்றோம்.

உலக நாடுகள் பொதுவாக மற்றைய நடுகள் மீது பலவிதமான பொருளாதாரத் தடைகளை விதித்து வந்ததையும் விதித்து வருவதையும் நாம் காணக் கூடியதாக உள்ளது. இவற்றிற்கு அரசியல் மற்றும் இராணுவ ரீதியான காரணங்கள் உண்டு. அக்காரணங்கள் சரியாக இருக்கலாம். பிழையாகவும் இருக்கலாம். இவற்றை நாம் இப்போது ஆராய முன்வரவில்லை. இந்த உலக நாடுகள் மற்றைய நாடுகளுக்கு பொருளாதார தடைகளை விதிக்கும்போது அவை அந்த அரசை நடத்துகின்ற ஆட்சியாளர்களைப் பாதிப்பதில்லை. அந்தத் தடைகள் அந்த நாட்டின் பொதுமக்களைத்தான் நேரடியாகவும் உடனடியாகவும் பாதிக்கின்றன. பொதுமக்கள் மீதான இந்தத் பாதிப்புக்கள் ஈற்றில் ஆட்சியாளர்களுக்கு ஒரு நெருக்கடியை கொடுப்பதுண்டு. இதனால் பொருளாதாரத்தடை என்பது ஓர் உத்தியாக உலக நாடுகளால் இன்று பயன்படுத்தப் படுகின்றது.

உலக நாடுகள் மற்றைய நாடுகள்மீது பயன்படுத்துகின்ற பொருளாதார தடை உத்தியின் அடிப்படை நோக்கம் அந்த நாடுகளின் ஆட்சியாளர்களை தங்கள் வழிக்குக் கொண்டு வருதலாகும். ஆனால் சிpறிலங்கா அரசு மேற்கொள்ளுகின்ற பொருளாதார தடை உத்தியின் நோக்கம் இன்னமொரு தேசிய இனமான தமிழினத்தை அழிக்கின்ற இன அழிப்பு நோக்கமாகும். இங்கே புலம் பெயர்ந்த தமிழீழ மக்களாகிய நாம் மேற்கொள்ள வேண்டிய மேற்கொள்ளப் போகின்ற சிpறிலங்கா மீதான பொருளாதாரத் தடைக்குரிய செயற்பாடுகள் சிங்கள மக்களை அழிப்பதற்குரிய நோக்கத்தைக் கொண்டதல்ல. மாறாக சிங்கள ஆட்சியாளர்களின் மீது நியாயமான நெருக்கடியை உருவாக்குவதன் மூலம் அவர்களின் தமிழின அழிப்பை நிறுத்துவதேயாகும்.

சரியாக சொல்லப்போனால் ஐக்கிய நாடுகள் சபை உட்படப் பல உலக நாடுகள் சரியான காரணங்களுக்காக மேற்கொண்ட பொருளாதாரத் தடைகளைத்தான் புலம் பெயர்ந்த தமிழீழ மக்களாகிய நாம் ஒருங்கிணைந்து சிறிலங்கா மீது மேற்கொள்ள வேண்டும். இதற்கு முன்னுதாரணமாக மகாத்மா காந்தி பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்திற்கு எதிராக மேற்கொண்ட பொருளாதாரத் தடை முயற்சிகளை நாம் பின்னர் தர்க்க்pப்போம்.

நாம் இப்போது கூறிய கருத்துக்களின்படி சிறிலங்கா மீதான பொருளாதாரத் தடை முழு அளவில் வலுப்பெறும்போது சிங்களப் பொதுமக்கள்தான் முதலில் பாதிக்கப்படுவார்கள் என்ற எண்ணம் எமக்கு எழக்கூடும். அது குறித்த சில யதார்த்தமான விடயங்களை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.

முன்னர் போரினால் மிகப்பெரிய அழிவுகளையும் மிகப்பெரிய நெருக்கடிகளையும் பாரி;ய பொருளாதாரப் பிரச்சனைகளையும் சிங்கள மக்கள் சந்தித்தபோதுதான் அவர்கள் சமாதானத்திற்காக வாக்களித்தார்கள். அதன் காரணமாக சமாதானம் வந்து அவர்களுக்கு, அதாவது சிங்கள மக்;களுக்கு சுகமான வாழ்க்கையும் வசதியும், நிம்மதியும் கிட்டியது. ஆனால் சிங்கள மக்களுக்குக் கிட்டிய சுகமான வாழ்க்கையும் வசதியும் தமிழ் மக்களுக்கு கிட்டவேயில்லை. ஆனால் சுகமான வாழ்க்கையிலும் வசதியிலும் நிம்மதியிலும் இளைப்பாறிய சி;ங்களமக்கள் அடுத்த தேர்தலின்போது யுத்தத்தை நாடிய கடும்போக்காளர்களுக்குத்தான

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் சிட்னியிலும், மெல்பர்னிலும் இருக்கிற சில தமிழ் கடைகளை அனுகி இப்படி யொரு அறப்போரில் ஈடுபடப் போகிறோம், உங்களுக்குத் தெரியுமா என்று கேட்டேன்.

அப்படி யொன்றும் எனக்குத் தெரியாதே என்று சொன்னார்கள்.

தெரிந்து கொள்ளுங்கள், அறிந்து கொள்ளூங்கள், உங்களை கொஞ்சம் மாற்றிக்கொள்ளுங்கள், அப்படி இல்லாவிட்டால் உங்களுக்குத் தான் கேடு வரப் போகிறது என்று சொல்லிவிட்டு வந்தேன்.

  • தொடங்கியவர்

சொலுவது சரிவராது முதலில் தேசியத்துக்கு எதிரான பத்திரிகைகளை இலவசமாக விநயோகிக்கும் கடைகளை புரக்கணிப்போம் 50 சதம் பெற்றோலை பொருட்படுத்தாமல் தேசியத்துக்கு ஆதரவாண உண்மையான கடைகளை ஊக்குவிப்போம்.மெல்பேனில் சிங்களவர்கள் தமிழ் கடைகளை நாடுவது மிக மிக குறைவு தூரம் பார்க்காமல் சிங்களக்கடைகளை நாடுவது சில சிங்கள நண்பர்கள் சொல்லக்கேட்டிருக்கிறேன்.ஏன் எம்மவரால் இதை செய்யமுடியாது யோசியுங்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

naatham20040331.jpg

08.10.06 அன்று தமிழீழ தேசிய தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய நிலவரத்தில் பங்குபற்றியவர்கள்: தமிழீழ பொருண்மிய மேம்பாட்டு நிறுவனப் பொறுப்பாளர் கரிகாலன், தமிழீழ பொருளாதார ஆய்வாளர்களில் ஒருவரான பாலகிருஸ்ணன் ஆகியோரின் கருத்தாடலை கேற்க அழுத்தவும்

"புலம் பெயர் தமிழர்கள் சிறிலங்கா வங்கிச் சேவைகளைத் தவிர்த்தல்"

இது எப்படி சாத்தியமாகும், ஒவ்வொரு வருடமும் 17 கோடி ரூபாக்கள் எம்மிடமிருந்து சிங்கள அரசுக்கு அன்னிய செலவானி செல்கிறதாம், இதை எப்படி தவிர்த்து கொள்வது, அதற்கான மாற்று வழிமுறை என்ன?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.