Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தண்டிக்க காத்திருந்தார்கள் செய்து முடித்துவிட்டார்கள

Featured Replies

'நாங்கள் அங்கே வருவோம் என எங்களுக்காக அவர்கள் காத்திருந்தார்கள்- எங்களைக் கடுமையாகத் தண்டிப்பதற்காக- செய்து முடித்தார்கள்" இவ்வாறு முகமாலையில் கடந்த புதன்கிழமை இடம்பெற்ற சமர் தொடர்பாக யாழ். குடாநாட்டிலுள்ள இராணுவ அதிகாரி ஒருவர் கூறியிருக்கிறார்.

முகமாலையில் வலிந்த தாக்குதல் நடத்துவதற்காக புலிகளின் நிலைகளுக்குள் நுழைந்த படையினருக்கு ஏற்பட்ட கதி சிங்கள ஆட்சித் தலைவரை சினமடைய வைத்திருக்கிறது. இராணுவ ஆய்வாளர்களை அவர்கள் கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாகக் கொண்டிருந்த நிலைப்பாட்டை மீள்பரிசீலனை செய்யத்து}ண்டியிருக்கிறது. அதிலும் சிறிலங்கா இராணுவம் கைக்கொள்ளும் இராணுவ உத்திகளை மாத்திரமல்ல. அடிப்படைத் தந்திரோபாயம் சரியானது தானா? அவ்வாறானதொரு தந்திரோபாயம் அவர்களிடம் இருக்கிறதா? என்ற கேள்வியைக்கூட எழவைத்திருக்கிறது.

சம்புூரைச் சிறிலங்கா இராணுவம் ஆக்கிரமித்த போது இவ்வாறே தமிழர் தாயகத்தின் முழு நிலப்பரப்பையும் கைப்பற்றி வெற்றி கண்டுவிடும் வலு இராணுவத்திற்கு ஏற்பட்டு விட்டது எனக் கருதியவர்கள் இப்போது முகமாலையை, பளையை ஏன் ஆனையிறவைக் கைப்பற்றுவது கூடத் தேவைதானா? எனக் கேள்வி எழுப்புகின்றனர்.

இராணுவ hPதியாக இவர்கள் எழுப்பும் கேள்வி ஒருபுறமிருக்க இந்தத் தாக்குதல் தோல்வியின் பின் அரசியல் hPதியாக என்ன விளைவைக் கொண்டு வரப்போகிறது என்பது குறித்தும் அவர்களின் கருத்து மாறுபட்டதாகவே அதாவது உண்மை நிலைக்குப்புறம்பான தாகவே இருக்கின்றது.

விடுதலைப் புலிகள் சமாதான முயற்சிகளுக்கு முன்வருவது குறித்து தென்பகுதியிலுள்ள எந்தத்தரப்புமே எப்பொழுதுமே சரியானதொரு கருத்தை அல்லது மதிப்பீட்டைக் கொண்டிருப்பதில்லை. சமாதான முயற்சிகளுக்கு அல்லது பேச்சுவார்த்தைகளுக்கு முன்வருவது புலிகள் பலவீனப்பட்ட நிலையிலேயே அல்லது தம்மை மீளமைத்துக் கொள்ள அல்லது பலப்படுத்திக் கொள்ளவே என்பது அவர்களின் அடிப்படைக்கருத்தாகும். அத்துடன் அண்மையில் புலிகளுக்கு ஏற்பட்ட தோல்வியே அவர்கள் பேச்சுக்கு வரக்காரணம் என்பது அவர்களது திடமான முடிவாகும். இதனை சிறிலங்கா சனாதிபதி மகிந்த ராஜபக்ச 'அவர்களைப் பேச்சுவார்த்தை மேசைக்கு வரவழைக்க நடவடிக்கை எடுத்திருக்கிறோம்" எனக் குறிப்பிட்டார்.

இந்நிலையில் வடக்கே முகமாலை, பளை ஆனையிறவெனக் கைப்பற்றி அல்லது அப்பகுதிகள் மீது அழுத்தத்தை ஏற்படுத்தினால் புலிகள் சரணாகதியடைந்து பேச்சுக்கு வந்து விடுவர் என்பதே அரசியல்வாதிகளின் சிந்தனையாகும்.

எனவே அவ்வாறானதொரு வெற்றியுடன் பேச்சுவார்த்தை மேசைக்குச் சென்றால் கூட புலிகளைத் தமது நிபந்தனைகளுக்குகெல்லாம் உட்பட வைக்கலாம் என அவர்கள் கருதுகின்றனர்.

அவ்வாறில்லாவிடின் புலிகள் பேச்சுவார்த்தை மேசைக்கு வருவதற்கு நிபந்தனைகளை விதிக்க வேண்டும். அதனைக் காரணம் காட்டிப் பேச்சுவார்த்தைகளுக்குச் சொல்லாது தவிர்த்துவிடவும் அவர்கள் இந்த நடவடிக்கை உதவும் என நினைத்தனர்.

உண்மையிலேயே இணைத்தலைமை நாடுகள் பேச்சுக்கான திகதிகளையும் இடத்தையும் தன்னிச்சையாக அறிவித்த போது புலிகள் பேச்சுவார்த்தைகளுக்கு நிபந்தனைகளை விதிப்பார்கள். அதன் மூலம் புலிகள் மீது பழி போட்டு விட்டு பேச்சுவார்த்தையிலிருந்து விலகிக் கொள்ளலாம் என மகிந்த அரசாங்கம் எதிர் பார்த்தது.

புலிகள் முக்கியமாக படையினர் கைப்பற்றிய சம்புூர் பகுதியிலிருந்து வெளியேற வேண்டுமென நிபந்தனையை முன்வைப்பார்கள் என அரசாங்கம் எதிர்பார்த்தது. எனவே தாம் கைப்பற்றிய பகுதியிலிருந்து வெளியேறும் பேச்சுக்கு இடமேயில்லை என அது திட்டவட்டமாக மறுத்துக் கொண்டிருந்தது. குறைந்தபட்சம் கிழக்கிலிருந்து தளபதிகள் வன்னிக்கு வர உலங்குவானு}ர்தி வசதிகளையாவது புலிகள் கேட்பர் என அரசாங்கம் எதிர்பார்த்ததைச் சிறிலங்காவின் பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெலவின் பேச்சு வெளிப்படுத்தியது. ஆனால் இவ்வாறு புலிகள் நிபந்தனை எதுவும் விதிக்காதது அரசாங்கத்திற்கு ஏமாற்றத்தையே ஏற்படுத்தியது எனலாம்.

அத்துடன் புலிகள் எந்த நிபந்தனையையும் விதிக்காதது அரசாங்க தரப்பு தான் வைத்திருந்த மூன்று நிபந்தனைகளையும் கூட கைவிட வேண்டிய நிலையை ஏற்படுத்தியது ஆனால் பேச்சுக்களிலிருந்து புலிகளை விலகச் செய்வதற்கான ஏற்பாடுகளில் அது இறங்கத்தவறவில்லை.

விடுதலைப் புலிகள் பேச்சுவார்த்தைக்கு நிபந்தனைகள் எதனையும் விதிக்காவிட்டாலும் ஒரு குறிப்பிட்ட விடயத்தை வலியுறுத்தியே வந்தனர்- அதாவது சிறிலங்கா இராணுவம் வலிந்த தாக்குதல்களைத் தொடர்ந்து நில ஆக்கி;ரமிப்பைத் தொடருமாயின் சமாதான முயற்சிகளிலிருந்து விலகுவதாக வெளிப்படையாக அறிவித்து விட்டுமுழு அளவிலான யுத்தத்தை தாம் நடத்துவோம் எனத் தொடர்ந்தும் கூறிவந்தனர்.

இந்நிலையிலும் கூட சிறிலங்கா அரசாங்கம் புலிகளின் மீது வலிந்த தாக்குதலை நடத்தி வந்ததுடன் அது புலிகளின் தாக்குதலுக்குப் பதிலடி என்றும் கூறிவந்தது. அத்துடன் உண்மையிலேயே யார் வலிந்த தாக்குதலை நடத்தினர் என்பதைக் கண்காணிக்க போர் நிறுத்தக் கண்காணிப்புக்குழுவையும் அது அனுமதிக்க மறுத்தது.

இந்தவகையில் மட்டுமல்ல 'இறைமையுள்ள அரசு என்ற வகையில் தனக்குப் போர் நிறுத்தத்தை மீறும் உரிமை இருக்கின்றது" என்ற மேலாண்மை வாதத்தை முன்வைத்து தமிழ் மக்கள் மீது தினமும் குண்டுவீச்சுகளை யும் படுகொலைகளையும் புரிந்து வந்ததுஃ புரிந்து வருகின்றது.

இந்நிலையில் பனிச்சங்கேணி மீது மேற்கொண்ட ஆக்கிரமிப்பு நடவடிக்கை தோல்வியடைய வடக்கே முகமாலையுூடாக ஓர் ஆக்கிரமிப்பை பேச்சுவார்த்தைக்கென குறிப்பிட்ட நாட்களுக்கு முன்னர் மேற்கொண்டு பேச்சுவார்த்தை மேசைக்கு புலிகளை வரவிடாது செய்தல் அல்லது பலமான நிலையிலிருந்து பேச்சுவார்த்தைகளை நடத்துதல் என்பதே சிறிலங்கா அரசின் திட்டமாக இருந்தது.

இணைத்தலைமை நாடுகள் பேச்சுவார்த்தைக்கான நாளை ஒக்ரோபர் முற்பகுதியில் என அறிவிக்க மகிந்த ஒக்ரோபர் இறுதிக்கு அதனைத் தள்ளி வைத்தமைக்கு இரண்டு காரணங்களை இவ்வகையிலே கூறலாம். ஒன்று இணைத்தலைமை நாடுகளின் தாளத்திற்கு தாம் ஆடவில்லை எனக் காட்டுவது. அதாவது தரகரின் வேலை திருமணம் பேசுவதே தவிர நாள் குறிப்பதல்ல என்ற பிரதமர் ரட்ணசிறியின் வாதம், இரண்டாவது இராணுவ நடவடிக்கைக் கான கால அவகாசம.;

ஆனால் முகமாலை நடவடிக்கையின் தோல்வி மகிந்தவின் சிந்தனைக்கு மாறானதாக அமைந்து விட்டமை இப்பொழுது படைத்தளபதிகள் மீது அவரைச்சினங்கொள்ள வைத்து விட்டது. இப்பொழுது முகமாலைத் தோல்வி அவர்களின் நோக்கங்கள் இரண்டையும் முற்றாகச் சிதறடித்துவிட்டது.

அதாவது புலிகள் தமது படைவலுவை ஆட்சியாளர்களுக்கும் சர்வதேசத்துக்கும் நிரூபிக்க அரசாங்கமே வழி வகுத்துக்கொடுத்து விட்டது.

ஆனால் இத்துடன் விவகாரம் முடிந்து விடவில்லை அதாவது அரசாங்கம் இத்துடன் ஆக்கிரமிப்புச் சிந்தனையைக் கைவிட்டு விட்டது என்று கூறிவிட முடியாது என்பது ஒன்று. மற்றையது சில ஆய்வாளர்கள் புலிகள் முன்னர் கூறியதற்கு தவறான அர்த்தத்தைப் புரிந்து கொள்ள முயல்கின்றார்கள் போலவே தெரிகின்றது.

அதாவது பேச்சுவார்த்தை குறித்து மறு பரிசீலனை செய்வோம் எனப் புலிகள் கூறி வந்ததை இப்போது புலிகள் வெற்றியடைந்து விட்டமையால் பேச்சுக்கு வரமாட்டார்கள் என அர்த்தம் கொள்வதாகவும் தெரிகின்றது.

சமாதான முயற்சிகளில் என்றாலும் சரி யுத்த களத்திலென்றாலும் சரி தமிழ் மக்களின் போராட்டத்தையும் விடுதலைப் புலிகளையும் இன்று வரையும் இனவாதிகள் சரி வரப்புரிந்து கொள்ளவில்லை என்பதையே சிங்கள ஆட்சியாளர்கள் இனவாதிகள் ஆய்வாளர்கள் என்போரின் செயற்பாடுகளும் கூற்றுக்களும் வெளிப்படுத்துகின்றன.

அதாவது தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தைப் பயங்கரவாதமாகவும் அதற்குத் தலைமை தாங்கும் விடுதலைப் புலிகளைப் பயங்கரவாதிகளாகவும் கருதுவதுடன் அதனை இராணுவ நடவடிக்கை மூலம் அழித்துவிட முடியும் என்ற அடிப்படையிலும் செயற்படும் வரை இவர்களின் ஆத்திரமும் அழிவும் தொடர்கதையாகவே இருக்கப் போகின்றது.

அல்லி மலர் இயக்கமும் விமல் வீர வன்ச வின் உளவுரண் ஊட்டும் உரைகளும் அழிவுப் பாதையையே காட்டும்.

நன்றி: ஈழநாதம் 16.10.06

http://www.tamilnaatham.com/articles/2006/.../velavan/17.htm

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு வகையில் பேச்சுவார்த்தையை குழப்புவதற்கு திட்டம்போட்ட அரசாங்கத்தை அழிவில் இருந்து காப்பாற்றியிருப்பதே விடுதலைப்புலிகளின் பேச்சுவார்த்தை ஆர்வம்தான் என்பது தெட்டத்தெளிவாகிறது..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.