Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாலியல் தொழிலாளர்களுக்கு புனர்வாழ்வளிக்கும் நடவடிக்கை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எம்.ஜே.பிஸ்ரின் முஹம்மத்

 

பாலியல் தொழி­லா­ளர்­க­ளாக செயற்­ப­டு­ப­வர்­களில் அதி­க­மா­ன­வர்கள் முழு மன­துடன் இந்த தொழி­லி­லுக்கு வந்­த­வர்கள்  இல்­லை­யென்­பது உண்மை. ஏதோ ஒரு விதத்தில் இந்த தொழி­லுக்கு தள்­ளப்­ப­டு­கின்ற பெண்கள் அவற்­றி­லி­ருந்து விடு­பட முடி­யாமல் தொடர்ந்தும் இந்தத் தொழிலில் தம்மை ஈடு­ப­டுத்திக் கொண்­டி­ருக்­கின்­றனர்.

117china.jpg
அநா­த­ர­வாக  சுற்­றித்­தி­ரியும் அல்­லது பொது இடத்தில் தேவை­யின்றி தரித்து நிற்கும் பெண்­களை கைது செய்து நீதி­மன்­றத்தில் ஆஜர்­ப­டுத்­தப்­பட்ட பின்னர் அவர்­க­ளுக்கு புனர்­வாழ்வு அளிக்கும் வகையில் மேல் மாகாண சமூ­க­சேவை திணைக்­க­ளத்தின் கீழ் இயங்­கி­வ­ரு­கின்ற கங்­கொ­ட­வில மெத்­செ­வன என்ற அரச நிறு­வனம் செயற்­பட்டு வரு­கி­றது. 

அநா­த­ர­வான நிலையில் வீதி­க­ளி­லி­ருந்து கைது செய்­யப்­பட்ட பின்னர் நீதி­மன்­றத்தில் ஆஜர்­ப­டுத்­தப்­பட்டு நீதி­மன்­றத்தால் இந்­நி­று­வ­னத்­துக்கு அனுப்­பட்ட சுமார் 170 பெண்கள் இந்த நிறு­வ­னத்தில் தற்­போது புனர்­வாழ்வு பெற்று வரு­வ­தாக மேல் மாகாண சமூக சேவை திணைக்­க­ளத்தின் பணிப்­பாளர் ஷிரோ­மாலி தெரி­விக்­கின்றார்.

இவர்­களில் பாலியல் தொழி­லா­ளர்கள், கண­வனால் கைவி­டப்­பட்­ட­வர்கள், வீட்டை விட்டு வெளி­யேறி அநா­த­ர­வா­ன­வர்கள், மன­நோ­யா­ளிகள் என பல்­வேறு வகையில் சமூ­கத்தில் இருந்து அநா­த­ர­வாக்­கப்­பட்ட பெண்கள் இங்கு புனர்­வாழ்வு பெற்று வரு­கின்­றனர்.

ஒவ்­வொ­ரு­வ­ருக்கும் அவர்­க­ளது தேவை­க­ளுக்­க­மைய புனர்­வாழ்வு அளிக்­கப்­பட்டு வரு­வ­தாக  ஷிரோ­மாலி தெரி­வித்தார். குறிப்­பாக, பாலியல் தொழிலில் ஈடு­பட்டு இந்­நி­று­வ­னத்­துக்கு நீதி­மன்­றத்தால் அனுப்பப்­பட்ட பெண்­க­ளுக்கு கைத்­தொ­ழில்கள் பழக்­கப்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றன. அவ்­வாறு புனர்­வாழ்வு பெற்ற பல பெண்கள் தற்­போது வேறு தொழில்­களைப் புரி­கின்­றனர்.

பெரும்­பாலும் 18 வய­துக்கு மேற்­பட்ட பெண்­களே இங்கு புனர்­வாழ்வு பெற்று வரு­கின்­றனர் என அவர் தெரி­வித்தார். இங்­கி­ருக்­கின்ற சில பெண்­க­ளுக்கு தமது அடிப்­படை தேவை­களை எவ்­வாறு செய்து கொள்­வது என்று கூட தெரி­யா­த­வர்­க­ளாக இருக்­கின்­றனர். இவ்­வா­றா­ன­வர்­க­ளுக்கு இவை தொடர்­பான ஆலோ­ச­னை­களும் வழி­காட்­டல்­களும் வழங்­கப்­ப­டு­கின்­றன.
சில பெண்கள் தகாத முறையில் கரு­வுற்று தமது கரு­வுக்கு யார் காரணம் என்­பது கூட தெரி­யாத நிலையில் இங்கு அனுப்பப்­ப­டு­கின்­றனர்.

117unnamed-%281%29.jpg

இவர்­க­ளுக்கு ஒரு குழந்­தையை எவ்­வாறு பெற்று வளர்ப்­பது போன்ற அடிப்­படை வழி­காட்­டல்கள் வழங்­கப்­ப­டு­கின்­றன.இவ்­வாறு இங்கு நீதி­மன்­றத்தால் அனுப்பப்­ப­டு­கின்ற பெண்­க­ளுக்கு பல்­வேறு வகையில் புனர்­வாழ்வு அளிக்­கப்­ப­டு­கி­றது.

பல்­வேறு வகை­யானோர்

இலங்கை பாலியல் தொழி­லா­ளர்கள் தொடர்பில் பல வரு­டங்கள்  ஆய்வு மேற்­கொண்டு அது குறித்து பேரா­சி­ரியர் நந்­த­சேன ரத்­னா­யக்க, சிங்­கள மொழியில் வெளி­யிட்ட “இலங்­கையின் பாலியல் தொழி­லா­ளிகள்“ என்ற நூலில் பாலியல் தொழி­லா­ளர்­களை ஆறு வகை­யாக வகைப்­ப­டுத்­தி­யுள்ளார்.

வீதி­யோர பாலியல் தொழி­லா­ளர்கள்: 

மிகவும் வறு­மை­யான குடும்­பங்­களைச் சேர்ந்த இவர்கள், அசுத்­த­மாக காணப்­ப­டு­ப­வர்கள். வீதி­யோ­ரங்­களில் நின்று குறைந்த விலையில் பாலியல் தொழிலில் ஈடு­ப­டு­ப­வர்கள். இவர்கள் சிறிய அறை­க­ளுக்கு, வீடு­க­ளுக்கு, தாம் தங்­கி­யி­ருக்கும் அறை­க­ளுக்கு, பூந்­தோட்­டங்­க­ளுக்கு, கடற்­க­ரை­க­ளுக்கு அழைத்துச் சென்று அவர்­களைத் தேடி­வ­ரு­கின்­ற­வர்­க­ளுடன்  பாலியல் செயற்­பா­டு­களில் ஈடு­ப­டு­கின்­றனர்.

மசாஜ் நிலையப் பாலியல் தொழி­லா­ளர்கள்: 

இங்கு பணி­பு­ரி­ப­வர்கள் பொது­வாக காரி­யா­ல­யங்­களில் பணி­பு­ரியும் பெண்­களை போல் நேர்த்­தி­யாக உடை­ய­ணிந்து இருப்­பார்கள். வெளி­யி­டங்­களில் இவர்கள் மசாஜ் நிலை­யங்­களில் பணி புரி­ப­வர்­க­ளாக தம்மை அடை­யா­ளப்­ப­டுத்திக் கொள்­ள­மாட்­டார்கள். இங்கு பணி­பு­ரி­ப­வர்கள் வெளி­வா­ரி­யான பாலியல் செயற்­பா­டு­க­ளி­லேயே  அதிகம் ஈடு­ப­டு­ப­வர்­க­ளாக இருப்­பார்கள். அதா­வது பாலியல் சிற்­றின்ப செயற்­பா­டு­க­ளி­லேயே அதிகம் ஈடு­ப­டு­வார்கள்.

117mosco.jpg
விப­சார விடு­தியில் பணி­பு­ரியும் பாலியல் தொழி­லா­ளர்கள்: 

இங்­கி­ருக்­கின்ற பாலியல் தொழி­லா­ளர்கள் தமது வாடிக்­கை­யா­ளர்­க­ளுடன் நெருக்­க­மான உற­வு­களைப் பேணி இருப்­பார்கள். அவர்­க­ளுடன் வெளியில் செல்­வார்கள். வாடிக்­கை­யா­ள­ருடன்  பல நாட்கள் தங்­கி­யி­ருப்­பார்கள். இங்கு பணி புரி­ப­வர்கள் ஒழுங்­காக ஆடை­ய­ணிந்து நேர்த்­தி­யாகக் காணப்­ப­டு­வார்கள்.

உயர்­மட்ட பாலியல் தொழி­லா­ளர்கள்:

 
இவர்கள் தனி­யாக பாலியல் தொழிலில் ஈடு­ப­டு­ப­வர்கள். இவர்கள் நாட்­க­ளுக்­கான கொடுப்­ப­னவை பெற்றுக் கொள்­ப­வர்கள். இவர்கள் அதி­க­மாக வெளி­நாட்­ட­வ­ருக்கு சேவை வழங்­கு­ப­வர்­க­ளா­கவே காணப்­ப­டு­வார்கள். அதி­லேயே அதிகம் நாட்­ட­மு­டை­ய­வர்­க­ளாக இருப்­பார்கள்.

தம்மை நாடி­வ­ரு­ப­வர்­க­ளுக்கு  வழி­காட்­டி­யாக, செய­லா­ள­ராக இவர்கள் கடமை புரி­ப­வர்­க­ளாக இருப்­பார்கள். இது தொடர்பில் இவர்கள் பத்­தி­ரி­கை­களில் விளம்­ப­ரங்­க­ளையும் பிர­சு­ரித்து தமக்­கான வாடிக்­கை­யா­ளர்­களை பெற்றுக் கொள்ளக் கூடி­ய­வர்­க­ளாக இருப்­பார்கள்.

கிரா­மிய பாலியல் தொழி­லா­ளர்கள்: 

கிரா­மப்­பு­றங்­க­ளி­லி­ருந்து நகரப் புறங்­க­ளுக்கு வந்து இவர்கள் பாலியல் தொழிலில் ஈடு­ப­டு­கின்­றனர். குறிப்­பாக, வாராந்த சந்தை தினங்கள், முக்­கிய நிகழ்­வுகள் இடம்­பெறும் போது நகரப் புறங்­க­ளுக்கு சென்று பாலியல் தொழில்­களில் ஈடு­ப­டு­வார்கள்.

ஆண் பாலியல் தொழி­லா­ளர்கள்: 

பாலின மாற்றம் செய்து கொண்ட ஆண்கள் பாலியல் தொழிலில் ஈடு­ப­டு­கின்­றனர். 2013 காலப் பகு­தியில் கொழும்பு, கொழும்பை அண்­டிய பிர­தே­சத்தில் இவ்­வா­றான 218 பேர் காணப்­பட்­டுள்­ளனர்.

கரை­யோர சிறு­வர்கள் (Beach Boys)என அடை­யா­ளப்­ப­டுத்­தப்­ப­டு­ப­வர்கள் பெரும்­பாலும் வெளி­நாட்­ட­வர்­க­ளுக்கு தமது சேவையை வழங்­கு­கின்­றனர். அதி­க­மாக வழி­காட்­டிகள் என்ற தோர­ணை­யி­லேயே இவர்கள் தமது தொழிலை செய்து வரு­கின்­றனர்.

பாலியல் தொழி­லா­ளர்கள் ஏன் உரு­வா­கின்­றனர்? 

சிலரை வறுமை இந்த தொழி­லுக்கு தள்ளி விடு­கின்­றது, சிறு­வ­யதில் பாலியல் ரீதி­யாக துஷ்­பி­ர­யோ­கத்­துக்கு உள்­ளாக்­கப்­ப­டு­ப­வர்கள் விரக்தி நிலைக்கு ஆளாகி இத்­தொ­ழிலில் ஈடு­ப­டு­கின்­றனர். காத­லரால் கைவி­டப்­படல், கண­வனால் பாலியல் தொழிலில் ஈடு­பட வைத்தல் போன்ற கார­ணங்­களால் பெண்கள் பலர் பாலியல் தொழி­லா­ளர்­க­ளாக மாறு­கின்­றனர். 

117unnamed-%282%29.jpg
தகாத உற­வினால் கரு­வு­று­கின்ற சில பெண்கள் சமூ­கத்­தி­லி­ருந்து ஓரங்­கட்­டப்­ப­டு­கின்­றனர். இவ்­வா­றான சந்­தர்ப்­பங்­களில் தமக்­கான தொழில்­களை இவர்கள் தேடு­கின்­றனர். இதன்­போது  நண்­பர்­களால், வேறு யாரா­வது ஒரு­வரால் அறி­மு­கப்­ப­டுத்­தப்­ப­டு­கின்ற இத்­தொ­ழிலில் வேறு வழி­யில்­லாமல் இந்தப் பெண்கள் தள்­ளப்­ப­டு­கின்­றனர்.

கொழும்பு புறக்­கோட்டை பகு­தியில் பாலியல் தொழி­லா­ளர்கள்

பொது­வாக பிர­தான நக­ரங்­க­ளி­லேயே அதி­க­மாக பாலியல் தொழி­லா­ளர்­களின் செயற்­பா­டு­களை காணக் கூடி­ய­தாக உள்­ளது. அந்த வகையில் கொழும்பு புறக்­கோட்டை பகு­தியில் இவர்­களை அதி­க­மாக  காண முடியும்.இங்கு பெரும்­பாலும் வீதி­யோர பாலியல் தொழி­லா­ளர்­களே காணப்­ப­டு­வ­தாக பொலி­ஸாரின் தக­வல்கள் தெரி­விக்­கின்­றன.இவர்கள் தமது வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்கு  500 ரூபா  முதல் 1500 ரூபா­வுக்கு தமது சேவையை வழங்­கு­வ­தாக கூறப்­ப­டு­கி­றது.

இந்தப் பிர­தே­சத்தில் 18 வயது முதல் 60 வய­துக்கு இடைப்­பட்ட பாலியல் தொழி­லா­ளர்கள் காணப்­ப­டு­வ­தாக பொலிஸார் தெரி­விக்­கின்­றனர்.
கொழும்பு புறக்­கோட்டை பகு­தி­யி­லுள்ள பாலியல் தொழி­லா­ளர்­க­ளுக்கு குடும்ப வாழ்க்­கை­யொன்று இல்லை. பெரு­வா­ரி­யாக வெளிப் பிர­தே­சங்­க­ளி­லி­ருந்து கொழும்­புக்கு வரு­கின்ற ஆண்­களை அதி­க­மாக இவர்கள் கவர்­கின்­றனர். 

தம்­மிடம் வரு­கின்­ற­வர்­களை புறக்­கோட்டை பகு­தியில் உள்ள லொட்ஜ் அறை­க­ளுக்கு அழைத்துச் செல்­கின்­றனர். இவர்­க­ளுக்­காக சில தர­கர்­களும் காணப்­ப­டு­கின்­றனர். இது ஒரு வலை­ய­மைப்பைப் போல இந்த பிர­தே­சத்தில் நடப்­ப­தாக பொலிஸார் தெரி­விக்­கின்­றனர்.

சேவை நாடு­நர்­களின் பொருட்­களை, பணப்­பை­களை இவர்கள்  திரு­டுதல் போன்ற பல சம்­ப­வங்­களும் இப்­பி­ர­தே­சங்­களில் இடம்­பெ­று­கின்­றன.
பொலி­ஸாரால் கைது செய்­யப்­பட்டு நீதி­மன்­றத்தில் ஆஜர்­ப­டுத்­தப்­பட்­டாலும் நீதி­மன்­றத்­தி­லி­ருந்து வெளியே வந்த அடுத்த கணம் இவர்கள்  வீதியில் நிற்­ப­தாக  பொலிஸ் உத்­தி­யோ­கஸ்தர் ஒருவர் தெரி­வித்தார்.

117peru-s4reutersmedia.jpg
இந்தப் பிர­தே­சத்தில் உள்ள சில பாலியல் தொழி­லா­ளர்கள் ஒரு நாளைக்கு 10,000 முதல் 12,000 வரையில் உழைப்­ப­தாக தெரி­வித்தார். புறக்­கோட்டை பிர­தே­சத்தில் நாட்­டா­மை­க­ளுக்­கான சேவை வழங்­கு­வ­தற்­கான தனி­யாக சில பாலியல் தொழி­லா­ளர்கள் இருப்­ப­தா­கவும் அவர் தெரி­வித்தார்.
பர­வ­லாகக் காண முடி­யா­வி­டினும் இந்தப் பிர­தே­சத்தில் பாலின மாற்றம் செய்­து­கொண்ட சிலரும் பாலியல் தொழிலில் ஈடு­ப­டு­வ­தா­கவும் பொலிஸார் தெரி­வித்­தனர்.

சட்­டமும் தண்­ட­னையும்

பாலியல் தொழில் என்­பது இலங்­கையின் சட்­டத்­துக்கு அமைய குற்­ற­மா­கவே கரு­தப்­ப­டு­கின்­றது. ஆனாலும் இன்று இலங்­கையில் சுமார் 40,000 பாலியல் தொழி­லா­ளர்கள் இருப்­ப­தாக கணிக்­கப்­பட்­டுள்­ள­தாக பொலிஸ் ஊட­கப்­பேச்­சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்­சகர் அஜித் ரோஹண தெரி­விக்­கின்றார்.

விப­சார விடு­தி­யொன்றை நடத்­து­வ­ருக்கு முன்னர்  பழைய சட்­டத்­துக்கு அமைய 1000 ரூபா அப­ராதம் விதிக்­கப்­பட்­டது. சட்­டத்தில் கொண்­டு­வ­ரப்­பட்ட மாற்­றத்­துக்கு அமைய தற்­போது 20,000 ரூபா வரையில் தண்­டப்­பணம் விதிக்க முடியும்,  சிறைத் தண்­ட­னையும் வழங்­க­மு­டியும் என அவர் தெரி­வித்தார்.

முதல் முறை­யாக பாலியல் தொழில் செய்து கைது செய்­யப்­பட்­ட­வ­ருக்கு 50 முதல் 100 வரையில் தண்டம் விதிக்­கப்­ப­டு­கின்­றது. இது பழைய சட்ட ஏற்­பாட்­டுக்கு  அமை­யவே விதிக்­கப்­ப­டு­கின்­றது. இந்த சட்­டத்தில் திருத்தம் கொண்­டு­வர வேண்­டி­யுள்­ளது எனவும் அவர் தெரி­வித்தார்.

தொடர்ந்தும் நாம் பாலியல் தொழில் ஈடு­ப­டு­ப­வர்­களை கைது செய்­வ­தற்­கான வேலைத்­திட்­டங்­களை முன்­னெ­டுத்து வரு­கின்றோம் என்றும் பொலிஸ் பேச்­சாளர் தெரி­விக்­கின்றார்.

கைது செய்­வ­தி­லுள்ள சிர­மங்கள்

பாலியல் தொழிலில் ஈடு­ப­டுதல் என்ற விதத்தில் ஒரு பெண்ணைக் கைது செய்­வ­தென்­பது மிகவும் கடி­ன­மான விட­ய­மாகும். பொலிஸ் தரப்­பி­லி­ருந்து ஒற்றர் ஒரு­வரை அனுப்பி, ஒற்­ற­ருடன் பாலியல் தொழில் புரியும் பெண் பணத்­துக்­காக பாலியல் செயற்­பாட்டில் ஈடு­படத் தயா­ராக இருக்கும் நிலை­யி­லேயே பாலியல் தொழில் என்ற ரீதியில் அந்தப் பெண்ணைக் கைது செய்­ய­மு­டியும்.

ஆனால், அதி­க­மாக பாதை­யோ­ரத்தில் நிற்­கின்ற இந்தப் பெண்கள் பொது­வாக "எந்தத் தேவையும் இல்­லாமல் மக்கள் நட­மாட்டம்  அதி­க­மாக உள்ள இடத்தில்  தரித்­தி­ருத்தல், அவ்­வாறு தரித்­தி­ருந்­த­மைக்­கான காரணம் கேட்டால் சொல்ல முடி­யாது இருத்தல்" என்ற குற்­றச்­சாட்டின் அடிப்­ப­டை­யி­லேயே  கைது செய்­யப்­ப­டு­கின்­றனர். 

இவர்­களைக் கைது செய்ய முயற்­சிக்கும் போது பொலிஸார் பல அசௌ­க­ரி­யங்­களை எதிர்­நோக்­கு­கின்­றனர். பொலிஸார்,  இவர்­களை கைது செய்ய பல மணி நேரம் இவர்­களை அவ­தா­னித்­தி­ருக்க வேண்­டி­யுள்­ளது. 

கைது செய்ய முற்­படும் போது இவர்கள் பாதையில் ஆடை­களை களைதல், கூச்சல் இடுதல் போன்ற விட­யங்­களில் ஈடு­ப­டு­கின்­றனர். எனவே, இவர்­களை கைது செய்யும் போது பல அசௌ­க­ரி­யங்­க­ளுக்கு பொலிஸார் முகம் கொடுக்க நேரி­டு­கின்­றது.

பொலி­ஸா­ரி­ட­மி­ருந்து தப்­பித்துக் கொள்ள இவர்கள் இதனை ஒரு உத்­தி­யாக பயன்­ப­டுத்­து­வ­தாக பொலிஸார் கூறு­கின்­றனர். பெரும்­பாலும் இவர்­களை பெண் பொலி­ஸாரே கைது செய்­கின்­றனர்.

கொழும்பு புறக்­கோட்டை பொலிஸ் பிரிவில் கடந்த 2012 ஆம் ஆண்டு இவ்­வா­றான 356 பெண்­களும், 2013 ஆம் ஆண்டு 600 பெண்­களும், இவ்­வ­ருடம் கடந்த மாதம் 31 ஆம் திகதி வரையில் 463 பேரும் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர்.

இவ்­வாறு கைது செய்­யப்­பட்ட அனை­வரும் புறக்­கோட்டை பொலிஸ் பிரிவில் வசிப்­ப­வர்­க­ளல்ல. வேறு பிர­தே­சங்­களில் இருந்து புறக்­கோட்டை பகு­திக்கு வந்­த­வர்கள். இவர்கள் தேவை­யின்றி தரித்து நிற்றல் என்ற குற்­றச்­சாட்டின் கீழே  கைது செய்­யப்­பட்­டுள்­ளனர்.

சரா­ச­ரி­யாக ஒரு பெண் பாலியல் தொழி­லாளி ஒரு நாளைக்கு சரா­ச­ரி­யக 4, 5 ஆண்­க­ளுடன் உறவில் ஈடு­ப­டு­வ­தாக பாலியல் நோய்கள் மற்றும் எயிட்ஸ் நோய்த் தடுப்பு பிரி­வினால் கடந்த வருடம் ஒரு இடத்தில் தங்­கி­யி­ருந்து பாலியல் தொழிலில் ஈடு­ப­டு­ப­வர்கள் தொடர்பில் மேற்­கொள்­ளப்­பட்ட ஆய்வில் தெரி­ய­வந்­துள்­ளது.

அதிக கேள்­வி­யுள்ள ஒரு பாலியல் தொழி­லாளி 10, 12 பேரு­டனும் ஒரு நாளைக்கு தொடர்பு வைத்­தி­ருப்­ப­தாக அவ்­வாய்வின் போது தெரிய வந்­துள்­ள­தான அப்­பி­ரிவின் பணிப்­பாளர் வைத்­திய அதி­காரி சிசிர லிய­னகே தெரி­விக்­கின்றார்.

இவ்­வாய்­வுக்கு  அமைய இலங்­கையில் ஒரு நாளைக்கு சரா­ச­ரி­யாக 40,000 ஆண்கள் பாலியல் தொழி­லா­ளர்­களை நாடிச் செல்­வ­தாக அவ்­வாய்வு குறிப்­பி­டு­கின்­றது என அவர் தெரி­வித்தார்.

பாலியல் தொழி­லா­ளர்­களால் பரவும் சமூக நோய்­களை தடுப்­பது எப்­படி?

பாலியல் நோய்கள் மற்றும் எயிட்ஸ் நோய்த் தடுப்பு பிரிவின் பணிப்­பாளர் வைத்­திய அதி­காரி சிசிர லிய­னகே இது தொடர்பில் தெரி­விக்கும் போது கடந்த வருடம் ஒரு இடத்தில் தங்­கி­யி­ருந்து பாலியல் தொழிலில் ஈடு­ப­டு­ப­வர்கள் தொடர்பில் மேற்­கொள்­ளப்­பட்ட ஆய்­வுக்கு அமைய அவ்­வா­றான பாலியல் தொழி­லா­ளர்கள் 12,000 பேர் இலங்­கையில் காணப்­ப­டு­வ­தாகத் தெரி­விக்­கின்றார்.

117fser.jpg
2010 ஆம் ஆண்டு மேற்­கொள்­ளப்­பட்ட ஆய்­வுக்கு அமைய  15,000 முதல் 20,000 பேர்  வரை இருப்­ப­தாக தெரி­யவந்­த­தாக அவர் தெரி­வித்தார். தற்­போது தொலை­பே­சி­யூ­டா­கவும், சமூ­க­வலைத் தளங்­களின் ஊடா­க­வுமே பாலியல் தொழி­லா­ளர்கள் தமது சேவை நாடு­நர்­க­ளுடன் தொடர்பை ஏற்­ப­டுத்திக் கொள்­வதால் ஒரு இடத்தில் தங்­கி­யி­ருந்து பாலியல் தொழிலில் ஈடு­ப­டு­ப­வர்­களின் எண்­ணிக்­கையில்  குறைவு ஏற்­பட்­டுள்­ள­தாகத் தெரி­வித்தார்.
ஓர் இடத்தில் தங்­கி­யி­ருந்து பாலியல் தொழில் ஈடு­ப­டு­கின்ற பெண் பாலியல் தொழி­லா­ளர்­களில் 0.2 வீத­மா­ன­வர்­க­ளுக்கு எச்.ஐ.வி தொற்று ஏற்­பட்­டுள்­ள­தா­கவும் ஏனைய பாலியல் நோய்கள் 3–5 வீத­மா­ன­வர்­க­ளுக்கு தொற்­றி­யுள்­ள­தா­கவும் டாக்டர் சிசிர லிய­னகே தெரிவித்தார்.

"பாலியல் தொழிலில் ஈடு­ப­டு­ப­வர்கள் எம்­மிடம் நோய்கள் தொடர்பில் ஆலோ­ச­னைகள் கேட்­டு­வரும் போது நாம் எமது சேவை­களை அவர்­க­ளுக்கு வழங்­கு­கின்றோம்.

பொது­வாக, நாம் பாலியல் தொழி­லா­ளர்­க­ளிடம் ஆணு­றை­களை பயன்­ப­டுத்­து­மாறு கேட்­கின்றோம். 80 வீத­மான பாலியல் தொழி­லா­ளர்கள் ஆணுறை பயன்­ப­டுத்தும் ஆண்­க­ளுக்கே தமது பாலியல் சேவை­களை வழங்­கு­கின்­றனர். எமது பிரிவால் அவர்­க­ளுக்கு ஆணு­றைகள் இல­வ­ச­மாக வழங்­கப்­ப­டு­கின்­றன.

பொது­வாக எம்­மிடம் வரு­ப­வர்­க­ளுக்கு நாங்கள் 6 மாதங்­க­ளுக்கு  ஒரு முறை வந்து பரி­சோ­த­னை­களை மேற்­கொள்­ளு­மாறு வலி­யு­றுத்­து­கின்றோம். வச­தி­ப­டைத்த பாலியல் தொழி­லா­ளர்கள் தனியார் துறை­யி­லேயே தமது மருத்­துவ சேவை­களை பெற்­றுக்­கொள்­கின்­றனர்.
எவ்­வாறு  இருந்­தாலும், இவ்­வா­றான தொழிலில் ஈடுபடுபவர்கள் ஆணுறை களைப் பாவிப்பதனூடாக சமூக நோய்களில் இருந்து தம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும் என அவர் தனது ஆலோசனையை முன்வைத்தார்.

 

- See more at: http://www.metronews.lk/feature.php?feature=117&display=0#sthash.cL1KKLzq.dpuf

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.