Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சர்வதேச கால்பந்தாட்ட சங்கங்கள் சம்மேளன தலைவர் செப் பிளட்டர் இலங்கை வருகிறார்

Featured Replies

சர்வதேச கால்பந்தாட்ட சங்கங்கள் சம்மேளன தலைவர் செப் பிளட்டர் இலங்கை வருகிறார்

 

7780Sepp-Blatter-FIFA350_zps656aa98b.jpg

சர்­வ­தேச கால்­பந்­தாட்ட சங்­கங்கள் சம்­மே­ளனத் (ஃபீஃபா) தலைவர் செப் பிளட்டர், அடுத்த மாதம் முதலாம் திகதி இலங்­கைக்கு வருகை தர­வுள்ளார். அவர் இலங்­கைக்கு வருகை தரும் மூன்­றா­வது விஜயம் இது­வாகும்.

இலங்கை கால்­பந்­தாட்ட சம்­மே­ள­னத்தின் தற்­போ­தைய கால்­பந்­தாட்ட இல்­லத்தைத் திறந்து வைக்­க­வென 2002 இல் இங்கு வரு­கை ­தந்த பிளட் டர், 2007 இல் சுனாமி நிதியத் திட்­டங்­க­ளையும் பார்­வை­யிட வருகை தந்­தி­ருந்தார்.


இலங்கை கால்­பந்­தாட்ட சம்­மே­ள­னத்தின் 75 வருட பூர்த்தி விழா கொண்­டாட்­டங்­களில் கலந்து சிறப்­பிக்கும் வகையில் அவர் வருகை தரு­கின்றார்.

 

தனது 36 மணித்­தி­யால இலங்கை விஜ­யத்­தின்­போது, ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க் ஷவை சந்­தித்து கலந்­து­ரை­யா­ட­வுள்ள செப் ப்ளட்டர், யாழ்ப்­பாணம், அரி­யா­லையில் அமைக்­கப்­பட்­டு­வரும் கால்­பந்­தாட்ட விளை­யாட்டுத் தொகு­தியை டிசம்பர் 2ஆம் திகதி காலை சம்­பி­ர­தா­ய­பூர்­வ­மாக திறந்து வைப்பார்.

அன்­றைய தினம் மாலை கொழும் பில் நடை­பெ­ற­வுள்ள இலங்கை கால்­பந்­தாட்ட சம்­மே­ள­னத்தின் 75 வருட பூர்த்தி விழாவில் கலந்துகொண்டு இலங்­கையின் கால்­பந்­தாட்ட விற்­பன் ­னர்கள் மூவ­ருக்கு நினைவுச் சின் ­னங்கள் வழங்கி கௌர­விக்­க­வுள் ளார்.


அத்­துடன் அன்­றைய தினம் இலங்கை கால்­பந்­தாட்ட அணி வீரர்­க­ளுக்­கான ஜேர்­சியும் அறி­மு­கப்­ப­டுத்­தப்­படும்.

இந்த வைபவம் இலங்கை கால் பந்தாட்ட சம்மேளனத் தலைவர் ரஞ் சித் ரொட்றிகோ தலைமையில் நடை பெறும்.

- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=7780#sthash.QzuhXXHr.dpuf

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

பிபா தலைவரின் இலங்கை விஜயம் உள்ளூர் கால்பந்து துறைக்கு உந்துசக்தி : ரஞ்சித் ரொட்ரிக்கோ
 

 

நாம் 75 ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடவுள்ள நிலையில் சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் (FIFA) தலைவர் ஜோசப் பிளட்டரின் இலங்கை விஜயமானது உள்ளூர் கால்பந்து துறைக்கு உந்துசக்தியை கொடுப்பதாக அமைந்துள்ளதென இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் தலைவர் ரஞ்சித் ரொட்ரிக்கோ தெரிவித்தார்.

இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று புதன்கிழமை சம்மேளனத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் தலைவர் ரஞ்சித் ரொட்ரிக்கோ மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 

இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் தலைவர் ஜோசப் பிளட்டர் உள்ளிட்ட குழுவினர் எதிர்வரும் டிசம்பர் மாதம் முதலாம் திகதி எமது நாட்டுக்கு விஜயம் செய்யவுள்ளனர்.
ஆசிய கால்பந்து கூட்டமைப்பின் தலைவர், கட்டார் கால்பந்து கூட்டமைப்பின் தலைவர் மற்றும் ஜப்பான், கொரியா, தாய்லாந்து, பாகிஸ்தான், பங்களாதேஷ், ஐக்கிய அரபு இராச்சியம் ஆகிய நாடுகளின் பிபா, ஆசிய கால்பந்தாட்ட கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் அதிகாரிகளும் இக்குழுவில் வருகைதரவுள்ளனர்.
சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் தலைவர் ஜோசப் பிளட்டரின் இலங்கை விஜயம் தொடர்பில் நாம் பெருமை அடைகின்றோம். இவரது விஜயம் உள்ளூர் கால்பந்து துறைக்கு  உந்துசக்தி கொடுப்பதாக அமைந்துள்ளது.

 

நாம் மிக குறுகிய காலத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளோம். மறுசீரமைப்பு நிகழ்ச்சித் திட்டத்தை முன்னெடுத்துவருவதுடன் அதனை எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில் நிறைவுக்கு கொண்டு வரவுள்ளோம்.
ஆசிய கால்பந்தாட்ட  கூட்டமைப்பு மற்றும் ஆசியாவிலுள்ள சில நட்புக் கழகங்கள் ஆகியவற்றிடமிருந்து எமக்கு கணிசமான கொடுப்பனவுகளை பெற்றுக்கொள்ள முடிந்தது. விளையாட்டுத்துறை அமைச்சும் எமக்கு  மிகவும் ஆதரவாக செயற்பட்டது.
அதேவேளை, கார்கில்ஸ் சிலோன் பி.எல்.சி. மற்றும் டயலொக் ஆக்சியாட்டா பி.எல்.சி. போன்றனவும் எமக்கு கைகொடுத்தன.
சர்வதேச கால்பந்து சம்மேளனம் மற்றும் ஆசிய கால்பந்து கூட்டமைப்பு ஆகியவற்றுடன் சுமுகமான உறவை வைத்திருந்ததால் இலங்கையின் தேசிய மற்றும் கீழ்மட்டத்திலுள்ள கால்பந்து துறையின் அபிவிருத்திக்கான நிதியுதவிகளையும் அவர்கள் எமக்கு வழங்கியுள்ளனர்.

இதனால் நாட்டின் முக்கிய நகரங்களில் சிறந்த கால்பந்து மைதானங்கள் அமைக்கப்படுகின்றன. இளைய திறமையான வீரர்களை தேசிய ரீதியில் இணைத்துக் கொள்வதை இலக்காகக் கொண்டு நாடளாவிய ரீதியில் கால்பந்து பயிற்சி மையங்களை விரிவுபடுத்தும் செயற்பாட்டை மேற்கொண்டுள்ளோம்.

நாம் 75 ஆவது ஆண்டு நிறைவை கொண்டாடும் இவ்வேளையில் பிளட்டரின் பிரசன்னம் மிக முக்கிய தேவைப்பாடாகவுள்ளது.
36 மணித்தியாலம் இலங்கையில் தங்கியுள்ள பிளட்டர் குழுவினர் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்ளவுள்ளதுடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவையும் சந்திக்கவுள்ளனர்.
இக் குழுவினர் யாழ்.அரியாலைப் பகுதியில் கால்பந்து மைதானம் திறப்பு, தேசிய கால்பந்து அறக்கட்டளையை அறிமுகம் செய்து வைத்தல், 75 ஆவது ஆண்டு நிறைவுக்கான நினைவுச் சின்னம் வெளியீடு, எமக்குச் சொந்தமான 3 கால்பந்து ஜாம்பவான்களின் அளிக்கைகள், தேசிய கால்பந்து சீருடை அறிமுகம் போன்ற பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்ளவுள்ளனர்.

டிசம்பர் மாதம் 2 ஆம் திகதி காலை யாழ். அரியாலைப் பகுதியில் 16 இலட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள கால்பந்து மைதானம் திறந்து வைக்கப்படவுள்ளது. இதில் பிளட்டர் குழுவினருடன் யாழ் மாவட்ட கால்பந்து சங்கத்தினர், இராணுவத்தினர், பொலிஸார் மற்றும் அரசியல் பிரமுகர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.

இதேவேளை அன்று மாலை 6 மணியளவில் கொழும்பு தாஜ்சமுத்திரா ஹோட்டலில் 75 ஆவது ஆண்டை சிறப்பிக்குமுகமாக விருந்துபசார நிகழ்வொன்றும் இடம்பெறவுள்ளது. அதனைத் தொடர்ந்து இரவு 10 மணியளவில் கொழும்பு சினமன் லேக்சைடில் தேசிய கால்பந்து சீருடை அறிமுக நிகழ்வும் இடம்பெறவுள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.

 

http://www.virakesari.lk/articles/2014/11/27/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%89%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B0%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D

  • தொடங்கியவர்

ஃபீஃபா தலைவர் ஸெப் பிளட்டர் இலங்கை வந்தடைந்தார்
2014-12-01 20:21:38

1enlt.jpg
சர்வதேச கால்பந்தாட்டச் சங்கங்களின் சம்மேளனத்தின் (ஃபீஃபா) தலைவர் ஸெப் பிளட்டர் இன்று இலங்கை வந்தடைந்தார். அவரை இலங்கை கால்பந்தாட்டச் சம்மேளனத்தின் தலைவர் ரஞ்சித் ரொட்றிகோ விமான நிலையத்தில் வரவேற்றார்.

35i6538.jpg

யாழ் அரியாலையில் கால்பந்தாட்ட மைதானத்தை நாளை திறந்துவைக்கவுள்ள ஸெப் பிளட்டர், இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் 75 ஆவது ஆண்டு விழாவிலும் கலந்துகொள்ளவுள்ளார்.

- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=7949#sthash.TgXEdPkX.dpuf

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.