Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐ.பி.எல்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை நீக்கலாம்- உச்சநீதிமன்றம் அதிரடி! டோணிக்கும் குட்டு!!

Featured Replies

ஐ.பி.எல்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை நீக்கலாம்- உச்சநீதிமன்றம் அதிரடி! டோணிக்கும் குட்டு!! 

 

டெல்லி: பெட்டிங், பிக்ஸிங்கில் என பல முறைகேடுகளில் சிக்கியுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை ஐ.பி.எல். போட்டிகளில் இருந்து நீக்கலாம் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் அதிரடியாக கூறியுள்ளனர். மேலும் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தில் துணைத் தலைவராகவும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டனாகவும் டோணி செயல்படுவது கவலைக்குரியதும் என்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

6வது ஐ.பி.எல் போட்டிகளில் பெட்டிங், ஸ்பாட் பிக்ஸிங் முறைகேடுகள் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. உச்சநீதிமன்ற உத்தரவுப்படி நீதிபதி முகுல் முட்கல் தலைமையிலான குழு விசாரணை நடத்தி அறிக்கையைத் தாக்கல் செய்தது. ஐ.பி.எல்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை நீக்கலாம்- உச்சநீதிமன்றம் அதிரடி! டோணிக்கும் குட்டு!! இந்த அறிக்கையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிர்வாகி குருநாத் மெய்யப்பன், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ராஜ்குந்த்ரா உள்ளிட்டோர் மீது குற்றம்சாட்டப்பட்டிருந்தது.

 

அத்துடன் கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் என். சீனிவாசனுக்கு இதில் நேரடித் தொடர்பு இல்லாவிட்டாலும் அவர் இந்த புகார்கள் குறித்து அக்கறை கொள்ளவில்லை என்று புகார் கூறப்பட்டிருந்தது. குருநாத் மெய்யப்பன் சென்னை அணி நிர்வாகி அல்ல, சென்னை அணியின் ஆதரவாளர் என்றே கூறப்பட்டு வந்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமும் (பிசிசிஐ) இதே கருத்தை கூறி வந்தனர். ஆனால் முகுல் கமிட்டியோ குருநாத் மெய்யப்பன், சென்னை அணி நிர்வாகி என்று ஆணித்தரமாக பதிவு செய்தது. இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில் இன்று இது தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்றது. அப்போது பிசிசிஐ சார்பில் ஆஜரான வழக்கறிஞர், முகுல் முட்கல் கமிட்டி தெரிவித்துள்ளபடி குருநாத் மெய்யப்பன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிர்வாகிதான் என்பதை ஏற்றுக் கொள்வதாக தெரிவித்தார்.

 

அத்துடன் முட்கல் கமிட்டி அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு உரிய தண்டனை வழங்க தனி குழு நியமிக்கப்படும் எனவும் பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது. கேப்டன் டோணிக்கு குட்டு இதனைத் தொடர்ந்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் கூறியதாவது: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாகவும், இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் துணைத் தலைவருமாக கேப்டன் டோணி இரட்டை பந்தம் கொண்டுள்ளது ஏன்? இது கவலையளிக்க கூடியது. பிசிசிஐ-யின் ஆயுள் முடிந்து விட்டது. ஒரு முறையான, நியாயமான வாரியமே இருக்க வேண்டும். தற்செயலான சூழ்நிலைகளால் நிர்பந்திக்கப்பட்ட கிரிக்கெட் வாரியம் இருக்கக்கூடாது. இந்தியா சிமெண்ட்ஸுக்கு சிக்கல் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் உண்மையான உரிமையாளர்கள் யார்? போர்டை அமைத்தவர்கள் யார் யார்? சென்னை சூப்பர் கிங்ஸ் அணி என்ற ஒன்றில் ரூ.400 கோடி முதலீடு செய்யும் முடிவை எடுத்தது யார்? சென்னை சூப்பர் கிங்ஸ், இந்தியா சிமெண்ட்ஸ் பங்குதாரார் உரிமை பற்றிய விவரங்கள், குறிப்பாக என். சீனிவாசன் அவரது குடும்பத்தினருக்கு இதில் உள்ள பங்கு ஆகிய விவரங்களை தெரிவிக்க வேண்டும் இவ்வாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

 

சென்னை அணியை நீக்கலாம்... அத்துடன் பல ஒழுங்கீனங்கள் இருக்கும் நிலையில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் ஏன் அதன் விதிகளின் படி செயல்பட்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை தகுதி இழப்பு செய்யக்கூடாது? இதற்கு வேறு எந்த ஒரு விசாரணையுமே தேவையில்லையே.. முட்கல் கமிட்டி அறிக்கையின்படியே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை நீக்கலாம் என்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் காட்டமாக தெரிவித்துள்ளனர். சீனிவாசன் போட்டியிட முடியாது.. மேலும் இது தொடர்பான அனைத்து சர்ச்சைகளுக்கும் தீர்வு காண வேண்டும் என தெரிவித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு தேர்தல் நடத்த அனுமதி வழங்கினர்.

 

எனினும் முட்கல் கமிட்டி அறிக்கையில் இடம் பெற்றுள்ளவர்கள் தேர்தலில் போட்டியிடக் கூடாது என நீதிபதிகள் நிபந்தனை விதித்தனர். ஜாம்பவான் சென்னை அணி இதனால் ஐ.பி.எல். போட்டிகளில் இருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தகுதி நீக்கம் செய்யப்படும் நிலைமையை எதிர்கொண்டிருக்கிறது. அதேபோல் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் தேர்தலில் என். சீனிவாசன் போட்டியிட முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது. ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணிக்கு நிகரான அணியாக திகழ்வது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிதான். 2010, 2011 ஆகிய இரண்டு ஆண்டுகள் தொடர்ந்து சாம்பியன் பட்டம் வென்ற அணி. வலிமை வாய்ந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ஐபிஎல் போட்டிகளில் இருந்து வெளியேற்றப்பட்டால் ஒட்டுமொத்த ஐ.பி.எல். போட்டிகளுக்கே பின்னடைவாக இருக்கும் என்பதே விளையாட்டு ஆர்வலர்களின் கருத்தாக இருக்கிறது.

 

Read more at: http://tamil.oneindia.com/news/india/ipl-spot-fixing-sc-observes-that-chennai-super-kings-must-be-disqualified-215781.html

  • தொடங்கியவர்

சென்னை அணியை நீக்கலாம்: சுப்ரீம் கோர்ட் அதிரடி
நவம்பர் 27, 2014.

 

புதுடில்லி: ‘பல முறைகேடுகளில் ஈடுபட்டது அம்பலமான நிலையில், மேலும் விசாரணை எதுவும் நடத்தாமல் ஐ.பி.எல்., தொடரில் இருந்து சென்னை அணியை தகுதிநீக்கம் செய்யலாம். அணியின் உரிமையாளர்கள்  விவரத்தை சமர்ப்பிக்க வேண்டும். சூதாட்ட விசாரணையில் இடம் பெற்றவர்கள் பி.சி.சி.ஐ., தேர்தலில் இருந்து விலகி இருக்க வேண்டும்,’ என, சுப்ரீம் கோர்ட் அதிரடியாக தெரிவித்தது. இதையடுத்து மீண்டும் பி.சி.சி.ஐ., தலைவராகும் சீனிவாசனின் கனவு தகர்ந்தது.                              

ஆறாவது ஐ.பி.எல்., தொடரில் (2013) நடந்த ‘ஸ்பாட் பிக்சிங்’ எனப்படும் கிரிக்கெட் சூதாட்டம் குறித்து சுப்ரீம் கோர்ட் விசாரிக்கிறது. இதுகுறித்து ஓய்வு பெற்ற நீதிபதி முகுல் முத்கல் குழு, தனது 35 பக்க இறுதி விசாரணை அறிக்கையை சமர்ப்பித்தது.  

                                                                                  

இதில் குற்றம் சுமத்தப்பட்ட 13 பேரில், வீரர்களை தவிர்த்து 4 பேரின் செயல்பாடு குறித்த விவரத்தை மட்டும் கோர்ட் வெளியிட்டது. இதன் மீதான விசாரணை தற்போது நடக்கிறது. இதில், பி.சி.சி.ஐ., தலைவராக இருந்த சீனிவாசன் மீது கடுமையான கருத்துக்களை, கோர்ட் தெரிவித்தது.                              

இந்த வழக்கு நேற்று சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் டி.எஸ்.தாக்கூர், கலிபுல்லா ஆகியோர் அடங்கிய ‘ஸ்பெஷல் பெஞ்ச்’ முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘சென்னை அணி நிர்வாகிகளில் ஒருவர் தான் சீனிவாசனின் மருமகன் குருநாத் மெய்யப்பன் என முத்கல் குழு அறிக்கையில் குறிப்பிட்டதை ஏற்கிறோம்,’ என, பி.சி.சி.ஐ., சார்பில் தெரிவிக்கப்பட்டது.             

                                   

இதுகுறித்து ‘ஸ்பெஷல் பெஞ்ச்’ கூறியது:                             

பி.சி.சி.ஐ., விதிமுறைப்படி, சென்னை அணி பல முறைகேடுகளில் ஈடுபட்டது முத்கல் அறிக்கையில் அம்பலமானது. இதுவே போதுமான நிலையில், மேலும் விசாரணை எதுவும் நடத்தாமல் சென்னை அணியை தகுதிநீக்கம் செய்யலாம். சீனிவாசனுக்கு முக்கியமானது அவரது தலைவர் பதவியா அல்லது சென்னை அணியா? இவர், ஆதாயம் தரும் இரட்டை பதவிகளில் இருப்பது தெளிவாகிறது. சென்னை அணியை வாங்க ரூ. 400 கோடி முதலீடு செய்வது என்ற முடிவை எடுத்தது யார்?, சென்னை அணி மற்றும் சீனிவாசனுக்கு சொந்தமான இந்தியா சிமென்ட்ஸ் இயக்குனர்கள் தொடர்பான விவரங்களை கோர்ட்டில் சமர்ப்பிக்க வேண்டும். குருநாத்திற்கு தொடர்பு இல்லை என்றால், அணியின் உரிமையாளர் யார்? வீரர்களை தேர்வு செய்தது கம்பெனியா? அணியை கட்டுப்படுத்தியது யார் என்பது போன்ற விவரங்களை அறிய விரும்புகிறோம். திட்டமிட்டபடி வரும் டிச.17ல் இந்திய கிரிக்கெட் போர்டின் (பி.சி.சி.ஐ.,) பொதுக்குழுவை நடத்தலாம். புதிதாத தேர்தல் நடத்தி தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகளை தேர்வு செய்யலாம். இதில், முக்கல் குழுவில் குற்றம் சுமத்தப்பட்ட நபர்கள் இடம் பெறக் கூடாது.                            

இவ்வாறு ‘ஸ்பெஷல் பெஞ்ச்’ தெரிவித்தது.             

                

இவ்வழக்கின் அடுத்தகட்ட  விசாரணை வரும் டிச.1ல் நடக்கும்.                             

சென்னைக்கு ஆபத்து: ஐ.பி.எல்., தொடர் விதிமுறைப்படி, அணி உரிமையாளர்கள் ‘பெட்டிங்’, ‘பிக்சிங்’ செய்வது போன்ற முறைகேடுகளில் ஈடுபடக்கூடாது. இதை மீறும் பட்சத்தில் அந்த அணி தொடரில் இருந்து நீக்கப்படும். முத்கல் அறிக்கையில் குருநாத் மெய்யப்பன் ‘பெட்டிங்கில்’ ஈடுபட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர், சென்னை அணி நிர்வாகிகளில் ஒருவர் என, பி.சி.சி.ஐ., தற்போது கோர்ட்டில் ஒப்புக் கொண்டுள்ளது. தையடுத்து, சுப்ரீம் கோர்ட் கருத்துப்படி  சென்னை அணி, ஐ.பி.எல்., தொடரில் இருந்து விரைவில் நீக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. முத்கல் அறிக்கையில் சீனிவாசன் பெயரும் இடம் பெற்றிருப்பதால், அவர் மீண்டும் பி.சி.சி.ஐ., தேர்தலில் போட்டியிட முடியாது. மொத்தத்தில் சீனிவாசனுக்கு இரட்டை ‘அடி’ விழுந்துள்ளது.

 

இதுவரை நீக்கப்பட்ட அணிகள்                 

ஐ.பி.எல்., தொடர் 2008ல் துவங்கப்பட்ட போது, 8 அணிகள் இருந்தன. 2011ல் கொச்சி, புனே அணிகள் சேர்க்கப்பட்டன. பின், 3 அணிகள் பல்வேறு காரணங்களுக்காக நீக்கப்பட்டன.

 

இதன் விவரம்:                 

* அணி உரிமையாளர்கள் விவரத்தை சரியாக தெரிவிக்கவில்லை என்ற காரணத்துக்காக, கொச்சி டஸ்கர்ஸ் கேரளா அணி, 2011, செப்., 19ல்  நீக்கப்பட்டது.  

                

* வீரர்களுக்கு சம்பளம் தராத நிலையில், அணியை விற்க முன்வராத டெக்கான் சார்ஜர்ஸ் அணி உரிமம் 2012, செப்., 14ல் ரத்தானது. பின், இது ஐதராபாத் பெயரில் தற்போது தொடரில் பங்கேற்கிறது.           

      

* பி.சி.சி.ஐ., யுடன் ஏற்பட்ட நிதி நிர்வாக குளறுபடிகளால், ஐ.பி.எல்., தொடரில் இருந்து விலகிக் கொள்வதாக (2013, மே 21) புனே அறிவித்தது. 5 மாதத்துக்குப் பின், அக்., 26ல் அணி உரிமம் ரத்து செய்யப்பட்டது.            

     

தற்போது  ‘பெட்டிங்’ பிரச்னையில் சிக்கியுள்ள சென்னை, ராஜஸ்தான் அணிகளின் உரிமம் ரத்தாகும் என்று தெரிகிறது.       

          

வெட்ட வெளிச்சமானது                 

சுப்ரீம் கோர்ட் விளாசியது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் கீர்த்தி ஆசாத் கூறுகையில்,‘‘ இவ்வளவு விஷயங்கள் நடந்த பின்பும், ஏன் கண்களை மூடிக் கொண்டிருக்க வேண்டும். பி.சி.சி.ஐ., மற்றும் ஐ.பி.எல்., கட்டுப்பாட்டுக்குழு, நிர்வாக பதவிகளில் உள்ளவர்கள், பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள். இவர்களில் பலரும் ஆதாயம் தரும் வகையில் இரண்டு பொறுப்புகளில் உள்ளது, தற்போது வெட்ட வெளிச்சமாகி உள்ளது,’’ என்றார்.         

        

எங்களது தவறு தான்                 

தடை செய்யப்பட்ட முன்னாள் ஐ.பி.எல்., தலைவர் லலித் மோடி கூறியது:                 

சென்னை அணியை சீனிவாசன் வாங்க அனுமதித்த விஷயத்தில் நாங்கள் தவறு செய்து விட்டோம். இதில், ஆதாயம் தரும் வகையில் அணியை வைத்திருப்பது குறித்து பிரச்னை ஏற்படும் என, உணர்ந்திருந்தோம்.           

       

இதுகுறித்து கேள்வி எழுப்பிய என்னை நீக்கி, மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால், ஐந்து ஆண்டுக்குப் பின், இப்படி பிரச்னை வரும் என்று எதிர்பார்த்திருக்க மாட்டர்.                  

முத்கல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள அனைவரும், அடுத்து கிரிக்கெட்டில் பங்கேற்கக் கூடாது. இதை உடனடியாக அமல்படுத்த வேண்டும். இது தான் சரியான முடிவு. மீண்டும் விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை.                 

இவ்வாறு லலித் மோடி கூறினார்.    

              

சேர் வாடகை ரூ. 1600                 

பி.சி.சி.ஐ., நிர்வாகம் குறித்து லலித் மோடி கூறுகையில்,‘‘ ஒவ்வொரு மாநில சங்கங்களுக்கும் ரூ. 50, 60 மற்றும் 70 கோடி வரை உதவித் தொகை தருகின்றனர். இங்கு தான் பிரச்னையே துவங்குகிறது. இந்தப் பணம் எப்படி செலவாகிறது என்பதை வருமான வரித்துறையினர் விசாரிக்க வேண்டும். பெரும்பாலான பணத்தை அப்படியே ஒதுக்கிக் கொள்கின்றனர். சேர் ஒன்றுக்கு வாடகை ரூ. 1600 வரை தருகின்றனர்,’’ என்றார்.

 

தோனிக்கு ‘கிடுக்கிப்பிடி’     

முத்கல் குழு விசாரணையில், ‘குருநாத் மெய்யப்பன் அணி நிர்வாகி அல்ல,’ என, சென்னை அணி கேப்டன் தோனி தெரிவித்திருந்தார். தற்போது, குருநாத் நிர்வாகி தான் என, பி.சி.சி.ஐ., கோர்ட்டில் ஒப்புக் கொண்டுள்ளது. இதனால், விசாரணையில் பொய்யான தகவல் தெரிவித்த தோனிக்கு தொல்லை ஏற்பட்டுள்ளது. தவிர, இவர், இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனத்தின் துணைத் தலைவராகவும் உள்ளார்.           

இதுகுறித்து நேற்று கேள்வி எழுப்பிய சுப்ரீம் கோர்ட்,‘ சென்னை அணி கேப்டன், இந்தியா சிமென்ட் நிறுவன ஊழியர் என, இரண்டு பதவிகளில் இருப்பது பெரும் கவலை தருகிறது,’ என, தெரிவித்தது. 

           

நடவடிக்கை எடுப்போம்           

பி.சி.சி.ஐ., தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் கூறுகையில்,‘ எங்கள் தரப்பில் ஒரு குழு அமைத்து, முத்கல் கமிட்டியில் குற்றம் சுமத்தப்பட்ட நபர்கள் மீது தேவையான நடவடிக்கை எடுப்போம்,’ என, தெரிவிக்கப்பட்டது.    

       

அடுத்து என்ன           

ஐ.பி.எல்., தொடரில் சென்னை வெற்றிகரமான அணியாக திகழ்ந்தது. இதுவரை நடந்த 7 தொடர்களில் 2010, 2011ல் சாம்பியன் ஆனது. மற்ற 5 தொடர்களிலும், அரையிறுதிக்கு முன்னேறியது. சாம்பியன்ஸ் லீக் தொடரிலும் 2010, 2014ல் சாம்பியன், 2013ல் அரையிறுதி என, அசத்தியது. சென்னை அணி நீக்கப்பட்டால், ஐ.பி.எல்., தொடர் விறுவிறுப்பாக இருக்குமா என்று கேள்வி எழுந்துள்ளது. இதற்கு பதிலாக புதிதாக வரும் அணி எது என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது. சென்னை அணி நீக்கப்பட்டால், இந்த அணியின் தோனி, ரெய்னா உள்ளிட்ட முன்னணி வீரர்கள், அடுத்த ஐ.பி.எல்., தொடருக்கான ஏலத்தில் பங்கேற்க வேண்டும். இவர்கள் எந்த அணிக்கு வேண்டுமானாலும் செல்லலாம்.

 

http://sports.dinamalar.com/2014/11/1417106908/IPLCricketFixingSrinivasanBCCISupremeCourtChennaiSuperKings.html

  • தொடங்கியவர்

சென்னை சுப்பர் கிங்ஸ் அணியை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் : இந்திய உயர் நீதிமன்றம்
2q3zuhf.jpg

 

இண்டியன் பிறீமியர் லீக் அணியான சென்னை சுப்பர் கிங்ஸ் அணியை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என இந்திய உயர் நீதிமன்றம் இன்று அபிப்பிராயம் தெரிவித்துள்ளது.

 

சென்னை சுப்பர் கிங்ஸ் அணியானது இண்டியா சிமென்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமானது. இது   இந்திய கிரிக்கெட் சபையின் தலைவர் பதவியிலிருந்து ஒதுங்கியுள்ளவரும் சர்வதேச கிரிக்கெட் பேரவையின் (ஐ.சி.சி) தலைவருமான என்.ஸ்ரீனிவாசனுக்குச் சொந்தமான நிறுவனமாகும்.

 

இந்திய கிரிக்கெட் சபையின் தலைவர் பதவியிலிருந்து ஒதுங்கியுள்ளவரும் சர்வதேச கிரிக்கெட் பேரவையின் (ஐ.சி.சி) தலைவருமான என்.ஸ்ரீனிவாசனின் இண்டியா சிமென்ஸ் நிறுவனமே சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளர் .

ஸ்ரீனிவாசனின் மருமகனான குருநாத் மெய்யப்பன், ஐ.பி.எல். போட்டிகளில் இடம்பெற்றதாக கூறப்படும் ஆட்டநிர்ணய சதி தொடர்பான குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ளார்.

இந்திய அணியின் தலைவர் மஹேந்திர சிங் டோனியே சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்கும் தலைவர்  என்பது குறிப்பிடத்தக்கது.

- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=7907#sthash.TKRbuRdL.dpuf

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.