Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிரிக்கெட்டின் செல்வாக்கை கடந்து இலங்கையில் கால்பந்து துறையை முன்னிலைப்படுத்த எதிர்பார்ப்பு : பீபா தலைவர் பிளட்டர்

Featured Replies

கிரிக்கெட்டின் செல்வாக்கை கடந்து இலங்கையில் கால்பந்து துறையை முன்னிலைப்படுத்த எதிர்பார்ப்பு : பீபா தலைவர் பிளட்டர்
 

 

இலங்கை கால்பந்தாட்ட அபிவிருத்தியில் எனக்கு அதிருப்தி காணப்படுகின்ற போதிலும் இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் 75 வருட பூர்த்தி விழா உட்பட மற்றைய வைபவங்களில் கலந்துகொள்ள சந்தர்ப்பம் கிடைத்ததையிட்டு பெருமகிழ்ச்சி அடைகின்றேன் எனத் தெரிவித்துள்ள சர்வதேச கால்பந்தாட்ட சங்கங்கள் சம்மேளனத்தின் தலைவர் ஜோசப் செப் பிளட்டர், இலங்கையில் கிரிக்கெட்டின் செல்வாக்கை கடந்து கால்பந்து துறையை முன்னிலைப்படுத்த எதிர்பார்த்திருப்பதாகவும் குறிப்பிட்டார்.

 

கடந்த முதலாம் திகதி பிரத்தியேக விமானம் மூலம் இலங்கைக்கு வருகை தந்திருந்த சர்வதேச கால்பந்தாட்ட சங்கங்கள் சம்மேளனத் தலைவர் ஜோசப் செப் பிளட்டர் ஜனாதிபதியுடனான சந்திப்பு, வடக்கு விஜயம் ஆகியவற்றை நிறைவு செய்த பின்னர் கடந்த செவ்வாய்க்கிழமை மாலை தாஜ்சமுத்திரா ஹோட்டலில் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டிருந்தார்.

இச்சந்திப்பில் இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர் ரஞ்சித் ரொட்ரிக்கோ, ஆசிய கால்பந்தாட்ட கூட்டு சம்மேளனத்தின் தலைவர் ஷேக் சல்மான் பின் இப்ரஹிம் அல் கனீபா ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.

இதன்போது உரையாற்றுகையிலேயே ஜோசப் செப் பிளட்டர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 

அவர் தொடர்ந்தும் கூறுகையில்,

இலங்கை கால்பந்து சம்மேளனம் 75 ஆண்டு பூர்த்தி விழாவைக் கொண்டாடிக்கொண்டிருக்கின்றது. ஆனால் இலங்கையில் கால்பந்தின் அபிவிருத்தி போதுமானளவில் காணப்படவில்லை.

கால்பந்து முன்னணி விளையாட்டாக உருவாகவில்லை. இதற்கான காரணம் என்னவென்று புரியவில்லை. முதலில் சிறந்த தேசிய அணியொன்று உருவாக்கப்படுவது அவசியம்.
இந்தியாவில் கிரிகெட்டின் வளர்ச்சிப்போக்கு அபரிமிதமாகவுள்ளது. இதன் தாக்கம் இலங்கையிலும் உள்ளது. கிரிக்கெட்டை தவறான விளையாட்டு எனக் கூறவில்லை. ஆனால் கால்பந்தாட்டம் உலகில் அதிகளவானோரால் விரும்பப்படும் விளையாட்டாகும். 90 நிமிடங்களில் முடிவைத் தெரிந்து விடலாம்.

 

ஆகவே இலங்கையில் கிரிக்கெட்டின் செல்வாக்கை கடந்து  கால்பந்து துறையை முன்னிலைப்படுத்த எதிபார்க்கின்றேன். பீபாவைப்பொறுத்தவரையில் இலங்கையின் கால்பந்து வளர்ச்சிக்கும் எதிர்காலச் செயற்பாடுகளுக்கும் பக்கபலமாக இருக்கும்.

 

கால்பந்தால் முடியும்

குறிப்பாக யாழ்ப்பாணத்திற்கு சென்று காலபந்தாட்டப் பயிற்சி நிலையத்தை திறந்துவைக்கக் கிடைத்த வாய்ப்பு என்னை உணர்ச்சிவசப்பட வைத்தது.
அங்கு சுமார் 250 சிறார்கள் கால்பந்தாட்ட விளையாட்டை நடனம் மூலம் பிரதிபலிக்கச் செய்ததை என்னைப் பெரிதும் கவர்ந்தது.
வடக்கிலும் தெற்கிலும் உள்ள மக்களை கால்பந்தாட்டத்தால் இணைக்க முடியும்.

 

பக்கபலம்

கோல் திட்டங்கள் மற்றும் அபிவிருத்தித் திட்டங்கள் யாவும் சர்வதேச கால்பந்தாட்ட சங்கங்கள் சம்மேளனத்தின் நேரடி கண்காணிப்பில் நடத்தப்படுகின்றன.
இந்த திட்டங்களுக்கு வழங்கப்படும் நிதி உதவிகள் வெறுமனே முடக்கி வைக்கப்படக்கூடாது. மாறாக உரிய திட்டங்களுக்கு முறையாக பயன்படுத்தப்பட வேண்டும்.
அவ்வகையில் இலங்கையில் கால்பந்தாட்ட அபிவிருத்திக்கு சர்வதேச கால்பந்தாட்ட சங்கங்கள் சம்மேளனமும் ஆசிய கால்பந்தாட்ட கூட்டுச்சம்மேளனமும் எந்நேரமும் உதவத் தயாராக இருக்கின்றது.

பீபாவைப் பொறுத்தவரையில் தற்போது இலங்கைக்கு வழங்கப்பட்ட நிதியை போதுமானதெனக் கருதவில்லை. அதற்குரிய வேலைத்திட்டங்கள் நிறைவு பெற்றதும் மேலும் தேவைப்பட்டால் தொடர்ந்தும் வழங்குவதற்கு தயாராகவுள்ளோம். அதாவது பரிசுத்த வேதாகமத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது போல 'கேளுங்கள் உங்களுக்கு கொடுக்கப்படும்" என்ற நிலையில் நாம் இருக்கின்றோம்.  இலங்கையின் கால்பந்து வளர்ச்சிக்கு நாம் என்றுமே பக்க பலமாக இருப்போம்.

 

நம்பிக்கை

ஆசியா கால்பந்தாட்டத்திலும் பொருளாதாரத்திலும் பலமிக்க பிராந்தியமாகத் திகழ்கின்றது. சீனா, ஜப்பான், தென்கொரியா, அரபு நாடுகள் என்பன இந்த இரண்டு துறைகளிலும் பலசாலிகளாக விளங்குகின்றன.

ஆனால் இந்தியா கிரிக்கெட்டை விரைவாக முன்னிலைப்படுத்திக் கொண்டு செல்லும் நாடாக காணப்படுகின்றது. வெகுவிரைவில் இந்தியாவையும் கால்பந்தாட்டத்தில் புகழ்பெற்ற நாடாக உயர்த்த எண்ணியுள்ளோம்.

தற்போது அங்கு இந்தியன் சுப்பர் லீக் போட்டிகள் நடத்தப்படுகின்றன. அதேபோன்ற போட்டிகள் இலங்கையிலும் நடத்தப்படுவதற்கு இங்கு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படுவது பாராட்டத்தக்கது. 17 வயதின் கீழ் உலகக் கிண்ண காலப்ந்தாட்டப் போட்டிகள் இந்தியாவில் 2017 இல் நடைபெறவுள்ளன. அதன் மூலம் இப் பிராந்தியத்தில் கால்பந்தாட்டம் புகழ்பெறும் என நம்புகின்றேன். இந்தப்போட்டியில் 24 அணிகள் பங்கு பற்றவுள்ளதோடு 52 போட்டிகள் நடைபெறவுள்ளன.

 

மேலும் நிதி

சர்வதேச சம்மேளனத்தின் உறுப்பு நாடுகளுக்கு பிரேஸில் உலகக் கிண்ணப் போட்டிகளின் முடிவில் 250,000 டொலர்கள் மேலதிக கொடுப்பனவாக வழங்கப்பட்டன. அடுத்தாண்டு ஜனவரி மாதத்தில் புதுவருடத்தில் மேலும் 500,000 டொலர்கள் பீபா உறுப்பு நாடுகளுக்கு வழங்கப்படவுள்ளது.
 
ஒழுக்கத்தை மீற முடியாது

அதேநேரம் பீபாவில் இடம்பெற்ற ஊழல் தொடர்பாக அமெரிக்காவின் முன்னாள் வழக்கறிஞர் மைக்கல் கார்ஷியாவின் எழுத்து மூல அறிக்கையை வெளியிடப்படுமா என கேள்வியெழுப்பட்டபோது அதனை நிராகரித்த பிளட்டர், பீபாவின் ஒழுக்கத்தை தாண்டி பதில் வழங்கமுடியாது எனவும் குறிப்பிட்டார்.

ஆசிய கால்பந்தாட்ட கூட்டுச் சம்மேளனத்தின் தலைவர் ஷேக் சல்மான் பின் இப்ரஹிம் அல் கனீபா கூறுகையில்,

இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் 75 ஆவது ஆண்டு நிறைவுக் கொண்டாட்டத்தில் பங்கெடுக்கின்றமை எனக்கு மகிழ்ச்சியளிக்கின்றது. இது இலங்கைக்கான என்னுடைய முதல் விஜயமாகவுள்ளது. ஆசிய வலயத்தில் இலங்கை  விளையாட்டுத்துறையில் முக்கியமானதொரு நாடாக இருக்கின்றது. நாம் தொடர்ந்தும் அதன் வளர்ச்சிக்கு துணையாக இருப்போம் என்றார்.

இலங்கை கால்பந்து தலைவர் ரொட்ரிக்கோ கூறுகையில்,

சர்வதேச கால்பந்தாட்ட சங்கங்கள் சம்மேளனத் தலைவராக 1998 இல் செப் பிளட்டர் தெரிவானதிலிருந்து இதுவரை 11.35 மில்லியன் டொலர்கள் இலங்கைக்கு கிடைத்துள்ளது. எனது தலைமையில் மிக குறுகிய காலத்தில் பல்வேறு அபிவிருத்திகளை கண்டுள்ளது. தொடர்ந்தும் உள்ளூர் கால்பந்து துறையினரை வளர்ச்சியடையச் செய்வதற்காக பல்வேறு பயிற்சிகள் உள்ளிட்ட செயற்பாடுகளை மேற்கொள்ளவுள்ளோம். தொடர்ந்தும் இலங்கை கால்பந்தை சர்வதேச மட்டத்திற்கு கொண்டு செல்லும் இலக்குநோக்கி அர்பணிப்புடன் பயணிப்போம் என்றார்.

இதேவேளை சர்வதேச கால்பந்தாட்ட சங்கங்கள் சம்மேளனம், ஜேர்மன் தூதரகம் ஆகியவற்றின் நிதி உதவியுடன இலங்கையின் வட பகுதியில் அமைக்கப்பட்ட நல்லிணக்கத்தைப் பிரதிபலிக்கும் அரியாலை கால்பந்தாட்ட பயிற்சி நிலையம் மற்றும் விளையாட்டு மைதானத் தொகுதியை செப் பிளட்டர் உத்தியோகபூர்வமாக செவ்வாயன்று முற்பகல் திறந்து வைத்தார். இந்த வைபவத்தில் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே, ஜேர்மன் தூதுவர் டாக்டர் ஜேர்ஜன் மோர்ஹார்ட், இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத் தலைவர் ரஞ்சித் ரொட்றிகோ, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் சர்வதேச மற்றும் ஆசிய கால்பந்தாட்ட கூட்டுச் சம்மேளன உறுப்பு நாடுகளின் தலைவர்கள், பிரதிநிதிகள் ஆகியோரும் திறப்பு விழா வைபவத்தில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

 

http://www.virakesari.lk/articles/2014/12/04/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.